​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 14 October 2016

சித்தன் அருள் - 470 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

அனைத்து உயிர்களின் கூட்டுக்குள் இருப்பது எல்லாமே, இறை சக்திதானப்பா. அவைகள் அங்கு சிறிய, சிறிய பிழைகள் செய்யும் பொழுது, விலங்காக, விருக்ஷமாக, முனிவராக, தேவராக, கந்தர்வனாக, மனிதராக உருமாற்றம் அடைகிறது. மற்றபடி ஒரு சிங்கத்தின் உடலில் கூட ஒரு உயர்ந்த முனிவரின் ஆன்மா இருக்கலாம். ஒன்று சாபத்திற்காக அல்லது மனித தேகம் எடுத்தால் மாயையில் சிக்கிவிடுவோம் என்பதற்காக, சிங்கமாகவோ, புலியாகவோ, மானாகவோ இருக்கலாம், என்று அப்பிறவியை எடுக்கலாம். இன்னும் சில தேவர்கள், முனிவர்கள், தங்கள் கர்மாவை எப்படி கழிப்பார்கள் தெரியுமா? மெதுவாக கீழிறங்கி வந்து மானாக பிறவி எடுப்பார்கள். பல அசுரர்கள் புலிகளாக சபிக்கப்பட்டிருப்பார்கள். அந்த புலிகளின் முன்னால் திரிந்து, ஆசை காட்டி, தன்னைக் கொல்ல வைப்பார்கள். அப்படி, அவர்கள் அழிய நேர்ந்தால் போதும். பல ஜென்ம தோஷங்கள் அந்த ஒரு பிறவியிலேயே கழிந்துவிடும். இப்படியெல்லாம் எத்தனையோ சூட்ச்சுமங்கள் உள்ளன. மனித சரித்திரமோ, சிந்தனையோ இதனை ஏற்றுக் கொள்ளாது. ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், இறைவன், மனிதனுக்கு விசித்திரமான அறிவைக் கொடுத்திருக்கிறான்.

3 comments:

  1. Indru iyyavin photo migavum arumaiyaaga ullathu. Kandu kalithathil magizhchi. Om agatheesaya namaha

    ReplyDelete