​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 6 October 2016

சித்தன் அருள் - 461 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறினால் என்ன நடக்கும்? வெறும் எதிர் மறையான எண்ணங்களையும், கருத்துக்களையும் நாங்கள் கூறுவதால் என்ன பலன்? அப்படி கூறிக் கூறி அந்த விதியை, ஏன்? எமது வாக்கால் உறுதிப்படுத்த வேண்டும்? என்று தான் பரிகாரங்களைக் கூறிக்கொண்டு இருக்கிறோம். நாடி வருகின்ற மனிதர்களுக்கு அத்தனை சாதகமான விதியம்சம் இல்லை என்பதை புரிந்து கொண்டு இறைவன் அருளால் நாங்கள் கூறுகின்ற பரிகாரங்களை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு சென்றால், எதிர்காலம் அனைவருக்குமே சுபிக்ஷமாக இருக்கும்.

3 comments:

  1. ஐயா வடபழனியில் பாலமுருகன் என்பவர் ஜீவ நாடி தற்போது பார்கிறாரா என்பதை அருள் கூர்ந்து தெரியப்படுத்தவும்

    ReplyDelete
  2. “அப்படி கூறிக் கூறி அந்த விதியை, ஏன்? எமது வாக்கால் உறுதிப்படுத்த வேண்டும்? என்று தான் பரிகாரங்களைக் கூறிக்கொண்டு இருக்கிறோம்.”
    In my case, above is true. Many times, I get nadi readings saying that shortly I will face some problems, but the Rishi will not give details of what that problem is, he will straight-away prescribe the parihara (remedy) to be carried out by me. I need not enquire what was the expected problem.

    ReplyDelete
  3. Its True sir, Parihar given my Maharishi always help to vanish the problems or the intensity of that issue just lowered as per the Past Karma. Its amazing that many big issues having very simple parihara, but suppose to do it very seriously.

    ReplyDelete