​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 17 August 2024

சித்தன் அருள் - 1663 - அன்புடன் அகத்தியர் - மாதம்பே முருகன் கோயில்!









22/7/2024 அன்று நந்தியம்பெருமான் முருகனை அழைத்த வாக்கு!!!

முருகா !!! வா ! வா ! என்று அழைத்த ஸ்தலம் மாதம்பே முருகன் கோயில் கொழும்பு ரோடு புத்தளம். ஸ்ரீலங்கா. 

ஆதி குருவான மகேஸ்வரனை வணங்கி மனதில்!!!

தோன்றுவதெல்லாம் இடமே முருகா !! உந்தன் இடமே!!!

உந்தன் இடமே!!! ஈசனுக்கும் பின் பார்வதி தேவிக்கும் என் மனதில் நீயும் பின் குடிகொண்டு கணபதியின் பேரருளாலே சொல்கின்றேன் பின் நந்தியனே!!!!!!!!!

அடையன் இடையன்
இதைப்போல் உருவாகும் என்பது 

என்பது என்ன கேள்வி 
கேட்டாலும் முருகா !!
உனை பாட மனம் இல்லையோ!!!!!

மனமிருந்து தத்தளிக்கும் 
மனிதர்களுக்கு இடமில்லையோ ??

இடமில்லையோ ??

உலகத்தில் ஏற்றோர் பின் தாழ்வோர்.... தாழ்வு பணிந்து 
ஏற்றோர் இடமில்லையே!!!

முருகா !! உன் நிலை தன் நிலை அறிந்து மக்களை 
தன் பக்கத்தில் ஈர்த்து
முருகா !! உன்னை காண 
ஓடோடி வந்து! ஓடோடி வந்து !
மனிதனை மனிதனைக் காண 
ஓடோடி வா!!!

முருகா!! உன் திருநாமம் கொண்டு மனிதன் இயங்குகின்ற பொழுதுள்!!

கலியுக வரதனே வா !! வா!!!

முத்து குமரனே வா வா

அல்லல் அறுக்கும் கலியுக வரதனே வா!! வா !! 

மனிதனுக்கு அருள் ஈந்து கொடுக்க வா வா !

வா வா முருகா ! குழந்தை !

குழந்தை வடிவாக வா வா !

மனிதனின் மனதை மாற்ற ஓடோடி வா! முருகா !!

முருகா! ஞானத்தை அள்ளித் தர வா வா !!

முருகா! குறைகளை போக்குவாய் முருகா !

முருகா ! முருகா !!

அடியேனுக்கு அருள் தருவாய் முருகா !!

மனிதனுக்கு ஏற்றங்கள் தருவாய்! முருகா !

குறை உள்ள உலகில் குறை இல்லாத வாழவைக்கும் முருகா !

மனிதனை மனிதன் விழுங்கும் இவ்வுலகத்தில் !!...

 இவ்வுலகத்தில் குறையில்லாத முருகா 
குகனே வா வா !!

குழந்தை வா வா !!

குழந்தை ரூபத்திலே இருந்து மனிதனுக்கு எல்லாம் பின் குருவாக இருந்து கலியுகத்தை காக்க வா வா !!

வா !வா !முருகா!! உந்தனையே பணிந்து பணிந்து உள்ளுருகும் பக்தர்களுக்கு எல்லாம் அருள் தருவாய் !
அருள் தருவாய் வா! வா! முருகா !!

குகனே செந்தில் ஆண்டவனே!!
பழனியில் வீற்றிருக்கும் குழந்தாய் !!

உனைக் காண இன்னும் ஓடோடி வருவார்கள் முருகா !!

முருகா!! முத்துக்குமரனே! என் பிள்ளையே !!

வருவாய்! நலன்கள் அருள்வாய்!!

இன்னும் இன்னும் இத் தேசத்தில் இன்னும் குறைகள் நிறைந்த வாழ்க்கை மனிதன் வாழ போகின்ற நேரத்தில் 
முருகா!!

 மனிதனின் பின் பாவங்கள் நீயே! ஏற்று உன்னை நம்பினோர் உன்னை 
நம்பி நம்பி வந்து 

வருவோரை கைவிடமாட்டாய் கைவிட மாட்டாய்!! குழந்தாய் !!

குழந்தை மனதிலே இருந்து யான் பல பல மக்களுக்கு உரைக்கும் சித்தர்களும் எண்ணிலடங்கா ஜீவராசிகளுக்கும் இன்னும் பன்மடங்கு உயர்வை தா தா முருகா!

முருகா! முருகா! 
முத்து குமரா !
வடிவேலா! சிங்காரவேலா !
அமுத வடிவானவனே !
வள்ளி தெய்வானையோடு அன்பாக பறந்திட்ட முருகா !!

ஓடோடி வா  ! முருகா !
ஓடோடி வா ! முருகா !
மக்கள் நலனை கருதி ஓடோடி வா ! முருகா !
மக்கள் கவலைகள் பின் போக்க ஓடோடி வா! முருகா !

மக்கள் பின் பாவத்தை கலைக்க ஓடோடி வா! முருகா!

மனிதனுக்கு புத்திகள் கீழ்நோக்கி செல்லச் செல்ல 
மேல்நோக்கி எடுத்துச் செல்ல வா ! வா !முருகா !

கருணை மிகுந்த முருகா !!
அன்பு மிகுந்த முருகா !!
பின் பாசம் மிகுந்த முருகா !!
ஓடோடி வா மகனே !!

மகனே வா !! 
குழந்தை ரூபத்திலே!!

 குழந்தை ரூபத்திலே வந்து மனிதனை மனிதன் தின்னும் காலம்!!
 இக்கலியுகத்தை மாற்ற வா வா!!
                   

ஓடோடி வா! கலியுக வரதனே!
 கந்தா!

கந்தா !! கடம்பா!!! பின் ஈசன் ( மற்ற/ இரண்டாவது) மறுமகனே !!! 

அறிந்தும் இவைதன் புரிந்த பின் 
திருமாலின் பின் நெற்றியில் 
அமர்ந்திருக்கும் முருகனே ! வா வா !!

வா வா!! பிரம்மன் தலையில் எழுந்திருக்கும் அமைதியாய் வீற்றிருக்கும் முருகா..!!

குழந்தாய் வா வா !!
அருள்கள் தருவாய்
 வா! வா !!

பரமேஸ்வரியின் மடியில் அமர்ந்திருக்கும் முருகா !!

குகனே !சிறு குழந்தையே !வா வா !!

வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட பின் குகனே! வா வா !!

வா வா முருகா !!
அன்பிற்கு அடைக்கலம் ஆனவனே !! வா வா முருகா !!

முருகா முருகா !!
வெற்றியை தருவாய் முருகா !!

மனிதன் தவறு செய்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பின் பின் பாவங்களை போக்கி அருள்வாய் குகனே !!

குகனே வா வா !!
பல பித்து பிடித்தும் மக்களுக்கு !!...........

பின் பித்துக்களை எடுத்து பின் அறிந்தும்  பின் புரிந்தும் தவறு செய்தாயினும் அவர்களை மன்னித்து ஓடோடி ! வா முருகா !!!

 முருகா !! முருகா கலியுக வரதனே !!!

கலியுகத்தில் மக்கள் இன்னும் கீழ்நோக்கி செல்கையில் 
பல கஷ்டங்கள் பட்டு பட்டு 
எழுந்திருக்கும் பொழுது 
காப்பாற்ற வா வா !!!

மயில்மீது வா வா!! முருகா !!

 பின் சேவல் வடிவோனே
 வா வா !!!

வா வா !! அருள் தந்து பின் அணைத்து கொள்ள வா வா முருகா!! 

என் மனதில் வீற்றிருக்கும் அன்பான முருகா !!

அன்பான முருகா !!
அழகான முருகா !!

முருகா !முருகா !!
குகனே! முருகா!!

முத்துக்குமாரா! முருகா!! 

முருகனை அடிபணிந்தோர் ஏதும் வாழ்வில் எல்லையில் பின் தோல்வியுற்றாலும் ஏற்கப் பின்!!....
பின் அதனையும் அறிந்து கூட தோல்வியில் வாழ்க்கை முடிவதில்லை!!

அறிந்தேன்!!!

எப்பிறப்பு எடுத்தாலும் மனிதனுக்கு எல்லாம் பின் 
தாழ்வு நிலைகள் வந்தால் 
ஓடோடி வந்து மயில் மீது பின் வாகனத்தோடு வந்து அருள் புரிந்து பின் பன் மடங்கு உயர 
வைக்கும் முருகா வா! வா !!!

வா ! வா !குழந்தாய்!! இன்னும் 
அருள்கள் பின் ஈந்து பின் 
மக்களைக் காப்பாற்ற வா வா !!

இன்னும் மலை மேல் அமர்ந்து பின்பு யோசிக்கின்றாயே ???? முருகா...!!!

மனிதனைக் காக்க ஓடோடி வா !!!

இவ் நிலைமையில் பின் தாழ்வுகள் !!.....

பின் தாழ்வை நோக்கி இன்னும் மடிவார்கள் மனிதர்கள்...
மனிதர்கள் மடிந்து மடிந்து பின் போவார்கள்!!...........

உன்னை நம்பினோர் மடிந்து மடிந்து போகையில் !...........

உந்தனுக்கு சந்தோஷமா???? முருகா  !!????

முருகா!!!!...
உன் தாள் பணிகின்றேன் !!!!!

மலை மீது வீற்றிருக்கும் 
மயில் வாகனனே!!!!!!!!

மயில் வாகனத்தில் வந்து !!!!
பல கோடி மக்களை 
காப்பாற்றுவாய்!! முருகா!!!

முத்துக்குமரனே!!!
அடியவனை பணிந்து 
பணிந்து பணிந்து 
ஓடோடி உனை நம்பியே 
வருகின்றானே மனிதன் 
அவர்களைக் காக்க 
ஓடோடி வா !!!!!!

பல துன்பங்கள் பின் 
பல நோய்கள் பின் 
பிள்ளை வரங்கள் பின் 
எவை என்று அறிந்தும் 
அறிந்தும் அறிந்தும் கூட 
பின் நீயே கொடுப்பாய் !!

கலியுகத்தில் உன்னாலே 
காக்க முடியும் முருகா!!

முருகா முருகா !!
சேவல் கொடியோனே!!! முருகா 
அன்னையின் தந்தையின் 
அன்புக்கு வடிவான முருகா !!!

பின் கணபதியின் தலையில் 
வீற்றிருக்கும் முருகா !!

ஆனை மேல் அழகாக ஓடி வந்து மெதுவாகாயினும்
பின் காப்பாற்று! முருகா !!

முருகா !!முருகா!! வேலவன் !முருகா!! முத்துக்குமரன் !! முருகா!
விளையாட்டு முருகா !!
பின் வெவ்வேறு வடிவமாக 
வந்து வந்து இக்கலியுகத்தில்
மக்கள் அறிந்தும் பின் உண்மைகளை தெரியாமல் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் புத்தியை பின் மாற்றி அருள்வாய் குகனே !!

குகனே !!ஓடோடி வா !!
மறைந்திருந்த பொருளை பின் 
அறிந்தும் பின் அறியாமலும் 
பின் இதை என்று புரியாமலும் 
வாழ்கின்ற மனிதனை பின் காப்பாற்ற ஓடோடி வா !!!

மனிதனை பின் பள்ளத்திலிருந்து மேடேற்ற 
வா வா முருகா !!!

முருகா !! முருகா!!
முருகா முருகா !!
முத்துக்குமரா.... வடிவேலா !!!

துன்பத்தை போக்கும் பின் அன்புக்கும் கருணைக்கும் பாசத்திற்கும் பின் ஓடோடி வா !!!

மக்களைக் காப்பாற்ற ஓடோடி வா !!

அழிவு நிலைக்கு செல்கின்றது 
இவ்வுலகத்தின் நோக்கமாயினும்!!!.....

அதையும் கூட நீயும் கூட பின் அறிந்தும் கூட பின் பிரம்மாவிடம் எடுத்துக்கூறி 
பிரம்மனுக்கே பின் சாபங்கள் இருந்தபோதிலும் காப்பாற்ற பின் புகுந்த முருகா!!!

அதேபோல் மனிதனை மனிதன் குணத்தையும் பின் மாற்றி அருள் கூர்ந்து பின் மனதில் நிறுத்தி வா வா!! முருகா !!

முருகா !முருகா !!
வடிவேல்! முருகா !
முத்துக்குமரா !வடிவேலா !!
சிங்காரவேலா !!
சிங்காரவேலா !!

அழகாக வந்து பின் மாற்றத்தை உருவாக்கு!!!!

பின் உலகத்தில். 
அரிய பின் கொடிய நோய்கள் வந்து மனிதனை தாக்குகின்ற 
நேரத்தில் ஓடோடி வா!! முருகா !!!!!!
 
வா !வா ! முருகா !! 
உன்னையே நினைத்து குழந்தை வரத்தை கேட்டு 
இன்னும் நோய்களைப் போக்க 
பின் மனிதர்கள் அல்லாடும் பொழுதும் மலையின் மீது பின் நின்று பார்க்கின்றாயே ??!!!!!! முருகா !!!!

இதுதான் உன் விளையாட்டா ?????  முருகா !!!........

வா வா முருகா!!!
வடிவேல் முருகா!!
முத்துக்குமரா!!.........

உன் மேல் பாசம் பொழிந்து 
யான் உன்னை வளர்த்ததற்கு 
அறிந்தும் கூட வா வா !!! முருகா !!!!

இத் தேசம் அழியப் போகின்ற நிலையில் இன்னும்.... 

அப்பா யான் உன்னை வளர்த்தேனே!!! அதற்காக ஓடோடி வா !!!!!!

ஓடோடி வா !!!!

மனிதன் எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும் அதை மன்னித்து 
மீண்டும் அவர்களுக்கு 
புத்தியை கொடுத்து பின் 
உயர்த்தி நின்று பின் 
தேசத்தை காப்பாற்ற ஓடோடி வா !!!!

கலியுக வரதனே !! கந்தா கடம்பா!! வா வா !!!!

நின்று நின்று பின் வள்ளி தெய்வானையோடு பின் பக்க பலமாக வந்து... யாங்களும் உங்கள் பின்னே வந்து 
முருகா !!!!

முருகா!! முருகா !!!
அருள்வாய் முருகா !!!

முருகா!!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

குருநாதர் அகத்திய பெருமான் லங்கா யாத்திரைக்கு செல்க என்று உத்தரவு தந்திருந்தார்... இதில் பஞ்ச ஈஸ்வர தலங்களான 

திரு கோனேஸ்வரம் திருநகுலேஸ்வரம்
திருக்கேதீஸ்வரம் 
திரு முன்னேஸ்வரம்
நாகபூசணி தீவு ஆலயம் 
மாதம்பே முருகன் கோயில் இங்கு எல்லாம் செல்ல வேண்டும் என்று ஜீவநாடியில் உத்தரவு தந்திருந்தார்.

இதில் முருகனின் கண்டி கதிர்காமம் ஏற்கனவே கதிர்காமத்திற்கு உத்தரவு இருந்தாலும் இந்த முறை வாக்குகளில் அடுத்த முறை செல்ல சொல்லி உத்தரவு தந்தார் 

மற்றும் பஞ்ச ஈஸ்வர தலத்தில் ஒன்றான தொண்டீஸ்வரம் அங்குதான் உள்ளது .

குருநாதர் இலங்கை யாத்திரையில் இன்னும் பல புனிதமான இடங்களுக்கும் ஆலயங்களுக்கும் செல்ல வைத்து அங்கும் வாக்குகள் நல்கினார். 

இலங்கை வாக்குகளில் அனைத்திலும் இந்த உலகத்தின் மற்றும் இலங்கை தேசத்திற்கு வரும் ஆபத்து குறித்து குருநாதர் அனைத்து வாக்குகளிலும் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை வாக்குகளில் கூறியிருந்தார். 

இந்த உலகத்திற்கு பெரிய பெரிய துன்பங்கள் வரும் அதிலிருந்து காப்பாற்ற முருகனால் மட்டுமே முடியும் என்று வாக்குகளை குருநாதர் கூறியிருந்தார்

குருநாதர் நல்லூர் கந்தசாமி ஆலயத்திலும்
சிவவாக்கியர் திருக்கேதீஸ்வரத்திலும்

முருகன் வந்து அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் போல குறிப்பாகவும் வாக்குகள் தந்திருந்தார்கள்.

இதில் முத்தாய்ப்பாக மாதம்பே முருகன் கோயில்..... அதிக பழமையான காலங்களும் வரலாறும் இல்லை இந்த ஆலயம் எழுப்பி 15 வருடங்கள் ஆகின்றன. 

வள்ளி தெய்வானையோடு இந்த ஆலயத்தில் முருகன் வீற்றிருக்கின்றார். 

இந்த ஆலயத்திற்கு யாத்திரையில் கடைசியாக செல்ல முடிந்தது. 

அதற்கு முன்பாக முன்னேஸ்வரம் ஆலயத்தில் வழிபாடு செய்து விட்டு வெளியே வரும் பொழுது ராஜகோபுரத்திற்கு எதிரே அடியவர்கள் வாகனத்தை நோக்கி ஒரு செவலை நிறத்தில் ஒரு கால் ஊனமுற்ற பசு வாகனத்தினருகே வந்தது. 

முன்னேஸ்வரம் ஆலயத்தில் விஷு சித்திரை கனி போல பல்வேறு பழங்களை கோடையில் வைத்து இறைவனை பூஜிக்கும் வழிபாட்டு முறை அங்கு உள்ளது அதனால் அப்படி பூஜை செய்து திருப்பிக் கொண்டு வந்த பழங்கள் அப்படியே இருந்தது.

அந்த பழங்களை அந்தப் பசு அடியவர்களிடமிருந்து வாங்கி உண்டது. 

அடியவர்களும் அந்த பசுவினை வணங்கி விட்டு !!!

மாதம்பே முருகன் ஆலயத்திற்கு சென்று முருகனை போற்றி!!! தொழுது வணங்கிய பொழுது முருகப்பெருமான் தான் அணிந்திருந்த மாலையை பூக்களை சரசரவென கீழே சொரிந்து அருள் செய்தார். 

அதன் பிறகு ஆலயத்திற்கு உள்ளே ஓரிடத்தில் அமர்ந்து அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் அவர்கள் நாடி சுவடியை பிரித்த பொழுது... நந்தியெம் பெருமான் ஜீவனாடியில் வந்து முருகனை வா வா !!! என்று பாடலாக பாடினார். 

திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் நாடி வாசிக்கும் பொழுது தொடர்ச்சியாக சில புண்ணிய சேத்திரங்களில் அதிவேகமாக வாக்குகள் வரும் !!

மூச்சு கூட விடாமல் திரு ஜானகிராமன் அய்யா வாக்குகள் படிப்பார். சில ஆலயங்களில் ஒரு நொடிக்கு மூன்று வார்த்தைகள் வேகமாக அதி வேகமாக ஜீவனாடியில்  அக்ஷ்ரங்கள் பொன்னிற எழுத்துக்கள் வரும்!!! அவ்வளவு வேகத்தையும் ஜானகிராமன் ஐயா அவ்வளவு வேகத்தில் அதனை ஓதுவார். 

நந்தி எம்பெருமான் ஜீவ நாடியில் வந்து பாடலாக பாடுவதை அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் அய்யாவும் அவருடைய குரலும் உடல் மொழியும் மாறி பாடலாகவே பாடினார் அற்புதமாக இருந்தது அந்த கணங்களும் அனுபவமும். 

இந்த உலகத்தை காப்பாற்ற முருகா வரவேண்டும் நீ வந்து காப்பாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் வாக்குகளாக இலங்கை யாத்திரை வாக்குகள் இருந்தது. இதை அடியவர்கள் தொடர்ந்து கவனித்து படித்து வருபவர்களுக்கு புரிந்திருக்கும். 

சமீபத்தில் கூட பெங்களூரு சத்சங்கத்தில் பக்தர்கள் அனைவரும் ஆறுபடை வீடுகளுக்கும் தோரணமலை தோரணமலை செல்வதற்கு முன் குற்றாலத்தில் நீராடி சென்று முருகனை வழிபட வேண்டும் என்று வாக்குகள் தந்திருக்கின்றார். 

(பெங்களூர் சத்சங்க வாக்குகளும் விரைவில் வெளிவரும்)

முருக வழிபாடு அனுதினமும் கந்தர் அனுபூதியும் கந்த சஷ்டி கவசமும் ஓதி வர வேண்டும் என்றும் உத்தரவு தந்திருக்கின்றார் குருநாதர். 

நந்தியெம் பெருமான் வா வா என்று பாடலாக பாடி முருகனை அழைத்த இந்த வாக்கினை அனைவரும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து அவரவர் பூஜை அறையில் வைத்துக்கொண்டு முருக வழிபாட்டினை மேற்கொள்ளும் பொழுது அனுதினமும் பாடலாக பாடி பிரார்த்தனை செய்யலாம். 

அகத்தியர் பக்தர்கள் இசைஞானம் உள்ளவர்கள் இந்த பாடல் வாக்கினை இசை அமைத்து சமூக வலைத்தளங்களிலும் அடியவர்களுக்கும் பகிரலாம். நந்தியம்பெருமானின் முருகா  வா வா என அழைத்த பாடல் உலகமெங்கும் பரவட்டும். அனைத்து ஆலயங்களிலும் கூட்டுப் பிரார்த்தனைகளிலும்  ஒலிக்கட்டும்.

திருப்புகழ் முற்றோதல் நிகழ்வின் போதும் படித்து பாடி வணங்கலாம்

மாதம்பே முருகன் ஆலயத்தில் நந்தியெம்பெருமான் வாக்கு தந்த பிறகு குருநாதர் அகத்தியர் பெருமானும் வந்து அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் கந்தனும் வந்து விட்டான்... ஆசிகள் ஆசிகள் இன்னும் யான் வழி நடத்துவேன் என்று வாக்குகள் நல்கினார். 

அதற்கு முன்பு குருபூர்ணிமா அன்று நாக பூசணி ஆலயத்தில் குருநாதரிடம் குரு பூர்ணிமா தின வணக்கங்களையும் நமஸ்காரங்களையும் நன்றிகளையும் தெரிவித்த பொழுது 

அப்பனே எதை என்று கூற யான் சொல்லியதை கேட்டாலே!!!!! யான் சொல்லியவற்றை நல்முறையாக கடைப்பிடித்து வந்தாலே....அப்பனே அதுவே எந்தனுக்கு நீங்கள் காட்டும் நன்றி அப்பா..... வேறொன்றும் எங்களுக்கு தேவையில்லை அப்பனே 

மனிதர்கள் கஷ்டங்கள் இல்லாமல் வாழ யாங்கள் வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றோம் அதை கடைபிடித்தாலே போதுமானது அப்பா... என்று ஆசீர்வாதம் செய்தார். 

புதுப்புது வியாதிகள் நுண்ணுயிர்கள் தாக்குதல் கதிர் வீச்சு தாக்குதல் பூமி சுற்றும் வேகம் பூகம்பங்கள் நிலச்சரிவு மழை வெள்ளம் என தற்போது இந்த உலகத்தை வாட்டி எடுத்து வருகின்றது. 

குருநாதர் அகத்தியப் பெருமான் கூறியபடி ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்து தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்துக்கொண்டு குருநாதர் வாக்குகளில் கூறும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து ... இந்த உலகத்தில் மாற்றங்கள் ஏற்பட அனைவரும் சேர்ந்து குருநாதர் அகத்தியர் பெருமான் சொல் பேச்சு நடப்போம். 

முருகன் வரட்டும் இந்த உலகத்தை காக்கட்டும்!!!!

இலங்கை யாத்திரை குருநாதர் திருவருளால் இனிதே நடந்தேறியது!!!! சுபம் !!!!

சமீபத்தில் பெங்களூரில் நடந்த சத்சங்கத்தில் அப்பனே ஆவணி மாதம் முழுவதும் என் பக்தர்கள் அனைவரும் விநாயகர் அகவலை ஓதி வர வேண்டும் என்பேன் அப்பனே... கணபதியின் அருளும் கிட்டும் என்பேன் அப்பனே... என்று வாக்குரைத்து இருக்கின்றார்.. முழு வாக்குகள் விரைவில் வரும் பக்தர்கள் அனைவரும் குருநாதருடைய உத்தரவை சிரமேற்று விநாயகர் அகவலை படித்து... கணபதியில் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. மயில் வாஹனா! வள்ளி மனமோஹனா! மா (மயில்)
    சரவண பவ! வரமருள்வாய்! வா! மா (மயில்)

    கயிலாயம் முதல் மலைகளில் எல்லாம் களித்து
    விளையாடும் பன்னிரு கையா! முருகையா! (மயில்)

    பூர்ண சந்திரன் போலும் அறுமுகா!
    புவனம் எங்கும் நிறை மாயவன் மருகா!
    ஆரணப் பொருளே! அடிமை எனை ஆள
    வா வா வா! இராமதாசன் பணி குஹா!

    ReplyDelete
  2. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  3. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    சித்தன் அருள் 1663 - அன்புடன் நந்தியம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு

    YouTube link:-

    https://youtu.be/Rd097RwR3FY

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete