​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 30 September 2023

சித்தன் அருள் - 1444 - அகத்தியர் அடியவர் இல்லத்தில் உரைத்த பொது வாக்கு!


​​ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே, அம்மையே எம்முடைய ஆசிகள் நலங்களாக கூடிக்கொண்டு போகும். போகும் என்பேன் ஆனாலும் சில சில வருத்தங்கள் மனக்குழப்பங்கள் ஆனாலும் இவை எல்லாம் வருவது இயல்பே. இவை எல்லாம் தாண்டி சென்றால் தான் நிச்சயம் பல வழிகளில் கூட உண்மை நிலைகளை பின் அறிந்து அறிந்து அதாவது உண்மை நிலையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் சிறிது அளவாவது நிச்சயம் பின் அதாவது இறைவன் கஷ்டங்கள் கொடுக்காவிடிலும் கூட நிச்சயம் பின் உண்மை நிலையை அதாவது ஞான வழியை நிச்சயம் பின்பற்றல் ஆகாது.

இதனால்தான் நிச்சயம் யானே இருக்கின்றேன். அதனால்தான் வாக்குகள் எப்பேர்பட்ட அதாவது எப்படி பின் கொடுக்க வேண்டும் என்பவை எல்லாம் யான் உணர்ந்திருக்கின்றேன். அதனால்தான் எவை என்றும் அறியாமலே எப்பொழுது எதை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் யான்கூட எவை என்று அறிய அறிய நீங்கள் அனைவருமே ஏதாவது ஒரு பின் விதத்தில் உண்மைகள் அதாவது புரிந்து உதவிகள் அங்கும் யான் இருந்து உங்கள் பக்கத்திலேயே கவணித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இதனால் யான் உங்களுக்கு என்ன கூறுவது? நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அதனால்தான், சில சில வழிகளில் கூட உண்மை நிலைகள் இன்னும் இன்னும் செல்லச்செல்ல சில சில வழிகளில் கூட கஷ்டங்களை கொடுத்தாகினும் நிச்சயம் எப்படி இருக்கின்றார்கள் என்பதை எல்லாம் பக்குவப்படுத்தவே யான் சில சோதனைகளும் செய்தாலும் நிச்சயம் எளிதில் அனைத்தும் கொடுத்து விடுவேன். கவலைகள் இல்லை. ஆனாலும் விதியில் போராட்டங்களும் அறிந்தும் மாறி மாறி வருவது இயல்பு.

அவை எல்லாம் நிச்சயம் மாற்றி அமைத்து மாற்றி அமைத்து பக்குவப்படுத்தி அழைத்து சென்று கொண்டேதான் இருக்கின்றேன். இதனால் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.

ஆசிகள் என்பதைவிட எதை என்றும் பொறுத்துப் பொறுத்து அதனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்தைக்கூட யான் அருகில் இருந்து கவனித்துக்கொண்டேதான் இருக்கின்றேன். நிச்சயம் அதனால்தான் அறிந்தும் கூட என் பக்கத்திலேயே இருப்பவர்களைக்கூட யான் கவனித்துக் கொள்ளமாட்டேனா ? என்ன? பின் அவ்நம்பிக்கை உங்களுக்கு இல்லையே…… (நீங்கள் வேண்டி) கேட்டால்தான் யான் சொல்வதா? எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் நீங்கள் கேட்டு பெறத்தேவையே இல்லை.

எதை என்றும் அறிய அறிய எப்பொழுது எங்கு செப்ப வேண்டும்? எதனை செப்ப வேண்டும்? என்பவை எல்லாம் யான் நிச்சயம் வாக்குகளாக ஏன்? எதற்காக இப்பிறவிகள் எல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் அறியாமலும் வந்து விட்டீர்கள். இதனால் நிச்சயம் இப்பிறவியின் ரகசியத்தை எல்லாம் ஓர் நாள் உரைப்பேன். கவலைகள் இல்லை. பின் அனைத்து குருமார்களின் ஆசிகளையும் கூட உங்களுக்கு பெற்றுத் தந்தேதான் கொண்டிருக்கின்றேன்.

ஆனாலும் அறிந்தும் இருப்பினும் சில சில வினைகள் ஆனாலும் மனிதனாக பிறந்து விட்டாலே சில வினைகள் ஏன்? எதற்காக ? என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் ஏதோ ஒர் ரூபத்தில் மனிதனை பின் கவலைகள் (தொற்றிக்) கொள்ளும். ஆனாலும் அதைக்கூட யான் பாரத்திருக்கின்றேன் உங்கள் அருகில் இருந்து. ஆனாலும் அதைக்கூட மறுகணமே நீக்கி உள்ளேன். ஆனாலும் இதனால் பின் எவர்? எப்பேர்பட்டவர்கள்? எதை என்று அறிய அறிய இன்னும் பேச்சுக்கள் இவை எல்லாம் வந்த வண்ணம் (இருக்கும்).

ஏனென்றால் நிச்சயம் உலகத்தில் அறிந்தும் அறியாமலும் கூட பிறந்து விட்டு ஆனால் எப்படி எப்படி எல்லாம் வாழந்தாலும் மனிதனின் பேச்சுக்கள் நிச்சயம் எடுபடாது மனிதன் ஏதோ ஒன்றை குறை கூறியே் சென்று் கொண்டிருப்பான். இதுதான் இவ்வுலகம்.

அவை எல்லாம் நிச்சயம் சாதித்து பின் இருக்கின்றான் அகத்தியன் என்றெல்லாம் நிச்சயம் இறைவன் இருக்கின்றான் என்பவை பின் நம்பி பின் நம் தன் அதாவது கடமையை சரியாக செய்து வந்தால் இதைத்தான் யான் செய்வேன் யார் எதைச்சொன்னாலும், ஆம்
எதை என்று அறிந்து பின் இறைவன் இருக்கின்றான். எந்தனுக்கு பக்க பலமாக இருக்கின்றான். நான் தர்மத்தைத்தான் கடை பிடிக்கின்றேன். இதனால் நல்லதாகவேதான் நடக்கும் என்று யார் ஒருவன் மனதில் எண்ணி, எண்ணி தனக்கு போராட்டங்கள் வந்தாலும் சென்று கொண்டிருக்கின்றானோ அவன் தனக்கு இறைவனே வழிகள் காட்டுவான்.

தர்மத்தின் பின் வழிகள் செல்லச் செல்ல ஆனாலும் குழப்பங்களும் போராட்டங்களும் வரும். இது இயல்பே. அவை எல்லாம் தட்டிச் சென்று பின் எவை என்று அறிய அறிய பின் அதாவது பின் ஆறு. ஆறிலே ஆறு எதை என்று அறிய அறிய அதாவது நீர் சரியாக போய்க்கொண்டே இருக்கும். எத்தடைகள் வந்தாலும் பின் அடித்து நொறுக்கிச் செல்லும். அது போலத்தான் பின் தர்மம் செய்யும் பொழுது பின் பல தடங்கல்கள் இன்னல்கள் வரும் பொழுது பின் அடித்து நொறுக்கிச் சென்றால் கடைசியில் இறைவன் பாதையை அடைந்து விடலாம். இதனால் பின் தர்மம் செய்பவர்களுக்குக் கூட சில தடங்கல், தாமதங்கள் , மனக்குழப்பங்கள் எவை என்றும் அறியாமலேயே வரும். இவை எல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் கூட எப்படி பட்டு எதை என்றும் அறிய அறிய பின் சென்று கொண்டே இருந்தால் நீரைப்போல நிச்சயம் ஒர் நாள் இறைவனிடத்தில் சரணடைந்து பின் மோட்ச கதி அடைந்து விடலாம்.

இறைவனே அனைத்தும் செய்வான். இதனால் எப்பொழுது பின் வாக்குகள் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் யான் சொல்வேன்.

ஆசிகள் ஆசிகள். அனைவருக்குமே.

அடியவர் கேள்வி:- அன்னை லோபாமுத்ரா எப்பொழுது எங்களுக்கு வாக்குகள் செப்புவார்கள்?

அகத்தியர் வாக்கு:- அறிந்தும் அறிந்தும் அம்மையே எவை என்றும் அறிய அறிய அம்மையே திடீர் திடீரென்று கூற ஆனாலும் அம்மையே நிச்சயம் உண்டு அம்மையே எதை என்றும் அறிய அறிய அம்மையே நீயும் மேற்கல்வி படிப்பதற்கு அம்மையே சிறிது சிறிதாக படித்துத்தான் மேல் செல்கின்றாய் அம்மையே. அது போலந்தான் சிறுகச் சிறுகச் சொல்லி அம்மையே அனைத்தும் தெளிவு படுத்துகின்றேன் பொறுத்திருருக்க.

அடியவர்:- மகாகுரு , ஈசனுக்கும், பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் மேலே உள்ள அகத்தியப் பெருமான் இந்த இல்லத்தில வந்து எங்களுக்கு …( இந்த அடியவர் சொல்லி முடிக்கும்
முன்னரே)

அகத்தியர் வாக்கு:- அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே யார் மனது எவை என்று கூற நேற்றைய பொழுதில் சொல்லிவிட்டேன் அப்பனே இவை எல்லாம் ஒரு முறை கேள். அனைவரும் கேளுங்கள். நல்விதமாக அனைத்தும் அதிலே தெளிவு. உங்கள் கடமையை நீங்கள் செய்து கொண்டு இருந்தால் யானே உங்கள் இடத்திற்கு வந்து வாக்குகள் கூறுவேன். இதுதான் புண்ணியமப்பா.

அடியவர்:- இந்த பிறவியில குருநாதரின் திருவடியையே (எப்போதும்) சேவை செய்து இருக்க வேண்டும்.

அகத்தியர் வாக்கு:- அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே கவலையை விடு. அப்பனே யான் இருக்கின்றேன் அப்பனே. யானேதான் உனை அழைத்தேன். நீயாக வரவில்லை. அப்பனே அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே அப்படித்தானப்பா!!! நீங்கள் என்னை  தேடி வரவில்லை அப்பனை, யான்தான் அப்பனே ஏதாவது ஒரு கஷ்டத்தை (உங்களிடத்தில்) வைத்து என்னிடத்தில் வர வைத்திருக்கின்றேன் அப்பனே.

அடியவர்:- நாங்க கஷ்டத்திலேயே இருந்து விடுகின்றோம்.

அகத்தியர் வாக்கு :- அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் அப்பனே நீக்குகின்றேன். கவலைகள் இல்லை. ஆசிகளப்ப்பா!!!

அடியவர் கேள்வி:- சேவை செய்யும் சமையலில் ஏதாவது குறை உள்ளதா என்று கூற வேண்டுகின்றோம்.

அகத்தியர் வாக்கு:- அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வளவு நேரம் என்ன சொல்லிக்கொண்டு இருந்தேன் அப்பனே. நீங்கள் செய்யும் எதை என்று அறிய அறிய அனைத்திலும் எவை என்றும் புரியாமலும் யான் அருகிலே இருப்பேன் அப்பனே!!!

​ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. அமர்த நிலையில் உள்ள அகத்தியர் சிலை அருமையாக உள்ளது ஐயா வை பார்கிற மாதிரியே உள்ளது

    ReplyDelete
  2. Nanri Ayyane, Guruvadi saranam ,Thiruvadi sarnam
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  3. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
    ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி
    ஓம் முருகனுக்கு அரோகரா

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete