​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 9 September 2023

சித்தன் அருள் - 1428 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப் பெருமானின் ஒரு உத்தரவு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் மதுரையில் ஓரிடத்தில், அகத்தியப்பெருமானின் ஜீவநாடியை திரு.ஜானகிராமன் அவர்கள் வாசித்தார். எத்தனையோ பதில்களும், அறிவுரைகளும், உத்தரவுகளும் அதில் உட்கொண்டிருந்தது. அவற்றில், மிக முக்கியமான ஒரு கட்டளையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

"எம் வாக்கு வேண்டி நிற்கும் சேய்கள் முதலில், பஞ்சபூத தலங்களுக்கு சென்று, தானம், தர்மம், குறிப்பாக அன்னம் அளித்து புண்ணியத்தை சேர்த்துக் கொண்டு வந்தபின் தான் இனி நல்வாக்குகள் உரைப்போம்!" என கூறியுள்ளார்.

சமூகத்தில், குறிப்பாக மனிதர்களிடத்தில், புண்ணியபலம் குறைந்து விட்டது.  அதை விருத்தி செய்வதே தலையாய கடமையாக இருக்க வேண்டும்! எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஒவ்வொருவரும் புரிந்து, உணர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிக் கொள்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

4 comments:

  1. குருநாதர் அருளால் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு ஞானப்பதிவு 🙏

    வைணவ ஞானம்.

    https://fireprem.blogspot.com/2023/09/blog-post.html?m=0

    ReplyDelete
  2. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏
    சரிங்க ஐயா. அருகில் உள்ள சிவபெருமான் அல்லது ஏதாவது ஒரு இடத்தில் தானம் தர்மம் செய்கிறோம் ஐயா... முயற்சி செய்கிறேன் ஐயா திருத்தலங்களுக்கு செல்வதற்கு. தங்கள் அருள் வேண்டும் ஐயா.

    ReplyDelete
  3. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete