​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 14 September 2023

சித்தன் அருள் - 1430 - அன்புடன் அகத்தியர் - காமக்யா தேவி சக்தி பீடம் கௌகாத்தி அஸ்ஸாம்!






16/8/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு -வாக்குரைத்த ஸ்தலம் : காமக்யா தேவி சக்தி பீடம் கௌகாத்தி அஸ்ஸாம்.

ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நலன்கள்!!!  ஆசிகள்!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் மக்களுக்கு ஞாங்கள் எதை என்று அறிய அறிய இன்னும் ஆசிகள் எங்கெல்லாம் அப்பனே அழைத்துச் சென்று அப்பனே கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் ஆணித்தரமாக அப்பனே பின் எவை என்று அறிந்தும் அறிந்தும் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றோம்!!!

ஆனாலும் அப்பனே மனிதன் எதை என்றும் அறிய அறிய மனிதன் பின் கர்மாவிற்கே எதை என்று கூற நுழைந்து நுழைந்து அப்பனே எதை என்றும் அறியாமலே அப்பனே திரிந்து அலைந்து அப்பனே கடைசியில் பார்த்தால் அப்பனே துன்பத்தில் சிக்கி அப்பனே இறைவனே இல்லை என்று சொல்லிவிடுகின்றான் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய இறைவனை காண அப்பனே போராடி தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே உயர்ந்தவர்கள் ஆயினும் கூட அப்பனே நிச்சயம் போராடி!!!......

அதனால் அப்பனே பக்தி எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமல் கூட அப்பனே மனிதன் வாழ்ந்து கர்மாக்கள் சேர்த்து அப்பனே அவந்தன் மட்டும் கர்மத்தை சம்பாதிக்காமல் அப்பனே தன் குழந்தை எதை என்று அறிய அறிய இன்னும் உற்றார் உறவினர் எதை என்றும் அறியாமலே அவர்களை அனைவரையுமே கர்மத்தில் சேர்த்து விட்டு செல்கிறான் அப்பனே!!!    

மீண்டும் பிறவிகள். பிறந்து பிறந்து அப்பனே கஷ்டத்தை படுவதற்கு மனித பிறவியே வேண்டாமப்பா!!!!

மனித பிறவியே ஒரு எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் தான் மனித பிறவி எடுத்திட்டால் கஷ்டங்கள் என்பதையெல்லாம் அப்பனே யான் வரும் வரும் வாக்கியத்தில் கூட அப்பனே ஏனைய சித்தர்களும் கூட ஏற்கனவே உரைத்தும் விட்டார்கள். அப்பனே. 

இதனால் அப்பனே எங்கள் அருகில் நிச்சயம் அப்பனே வந்தால் சில கஷ்டங்களை ஏற்படுத்துவோம் எதை என்றும் அறிய அறிய

ஏனென்றால் அதுவும் கர்மா தான் அப்பனே அதை அனைத்தையும் அகற்றி நிச்சயம் இறைவன் பாதையில் வகுத்து இறைவனையும் காணச் செய்வோம் அப்பனே எங்கள் ஆசிகளோடு அப்பனே பிறவிப் பலன் அதாவது எதை என்றும் அறிய அறிய அப்பனே பிறவி எதற்காக வந்தோம் என்பதை எல்லாம் சுட்டிக்காட்டி அப்பனே அதற்காக எதை என்றும் அறிய அறிய பின் நல்விதமாகவே ஆண்டு நிச்சயம் அப்பனே கடை பிறப்பாக்குவோம்.அப்பனே!!

அதனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய சித்தர்களை தேடுபவர்களுக்கு கூட அப்பனே மனக்குழப்பம் இன்னும் எவை என்றும் அறிய அறிய அப்பனே சில சில வருத்தங்கள் அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே போராட்டங்கள் இவையெல்லாம் தோன்றுமப்பா!!!!

இவையெல்லாம் அப்பனே விட்டுட்டு அப்பனே சித்தர்களே நீங்கள் தான் துணை என்று வந்து விட்டால் அப்பனே யாங்கள் காப்போம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய!!! 

இதனால் அப்பனே இன்னும் இன்னும் எதை என்றும் அறியாமலே கூட அப்பனே மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே

ஆனாலும் அப்பனே அவற்றிற்கெல்லாம் நிச்சயம் தீர்வு எங்களிடத்திலே இருக்கின்றது அப்பனே

ஆனாலும் அப்பனே  பல பல வழிகளிலும் கூட பல ஜென்மங்களில் எடுத்த எதை என்று அறிய அறிய எடுத்து எடுத்து புண்ணியங்கள் செய்தவனுக்கும் கூட அப்பனே எங்கள் அருளால் அப்பனே கடை பிறப்பு கிட்டி அப்பனே பல பல கர்மாக்கள் கூட அப்பனே போக்குவோம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட 

இதனால் அப்பனே பல பல வகையிலும் கூட அப்பனே இவ்வுலகம் அழியும் நிலைக்கு சென்று கொண்டே இருக்கின்றது அப்பனே!!!

ஆனாலும் சித்தர்கள் யாங்கள் அப்பனே ஏதோ ஒரு மூலமாக எதை என்று அறிய அறிய மனிதனை காத்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே நலன்கள் ஆகவே.

அதனால் அப்பனே வெற்றிகள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே தோல்விகள் கூட அப்பனே எதற்காக தோல்விகள் எதற்காக வெற்றிகள் எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் அப்பனே நன்முறையாகவே உள்ளது எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே அலைந்து திரிந்து அதாவது அப்பனே அண்ணாமலையிலிருந்து அப்பொழுது எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் ஓர் சிறுவன் எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் ஆனாலும் தாய் தந்தையை இழந்து அங்கிருந்து அப்பனே பல வழியிலும் கூட அப்பனை எதை என்றும் அறிய அறிய பல பல திருத்தலங்களாக திருத்தலங்களாக சுற்றி திரிந்து அப்பனே எவை என்றும் தெரியாமலும் கூட அப்பனே எவை என்றும் அறியாமலும் கூட!!!

ஆங்காங்கே இருக்கும் அப்பனே எதை என்றும் புரிந்தும் புரிந்தும் அப்பனே உணவுகளுக்காக கஷ்டங்கள் பட்டு இருந்தாலும் அப்பனே ஆங்காங்கே எதை என்றும் அறிய அறிய திருத்தலங்களை எல்லாம் தரிசித்து அப்பனே அங்கேயே உறங்கி அங்கேயே உட்கொண்டு அப்பனே இறைவன் நாமத்தை பின் போதித்து எதை என்றும் அறிய அறிய அதாவது இறைவன் நாமத்தை  செப்பி செப்பி மற்றவர்களுக்கும்செப்பி அப்பனே அலைந்து திரிந்து கடைசியில் இங்கு வந்தானப்பா!!!! (காமாக்யா கோயில் அஸ்ஸாம் )

எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அதாவது அப்பனே எவை என்றும் சிறுவயதிலே தாய் தந்தை அவர்கள் எதை என்றும் தெரியாமலே எங்களுக்கும் கூட கஷ்டங்கள் என்று அண்ணாமலையிலே விட்டுட்டு !!!..............

இதனால் அப்பனே அவந்தன் எவை என்று கூட அண்ணாமலையானே எவை என்றும் கூட உணர்ந்தும் உணர்ந்தும் கூட அப்பனே நிச்சயம் தந்தையாக இருந்து... ..

ஆனாலும் வயதாக பின் ஏழு வயது பின் எதை என்று அறிய அறிய புறப்பட்டான் அப்பனே!!!!

பல பல திருத்தலங்களை கடந்து கடந்து அப்பனே பின் இங்கே வருவதற்கு அப்பனே பின் எதை என்றும் அறியாமலே ஓர் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது அப்பனே எவை என்று புரிய புரிய!!!!

பின்பு எதை என்றும் அறியாமலே இங்கு அமர்ந்திருந்தான் அப்பனே!!!

இதனால் அப்பனே எப்படி வாழ்க்கை என்பதை கூட இவ்வாறு பல பல திருத்தலங்களாக திருத்தலங்களாக சென்றோமே!!!........ எதை என்றும் அறியாமலே நம் தனக்கு சொந்த பந்தங்களே இல்லையே!!!! என்று நினைத்து எதை என்றும் அறியாமலே கடைசியில்  இவ் நதியில் கூட (பிரம்மபுத்திரா) குதிக்க ஆரம்பித்தான்!.

ஆரம்பித்த பிறகு ஆனாலும் அவன் மனது மாறியது ஏன்? நம் தன் சாக வேண்டும்?????

எதை என்றும் அறியாமலும் கூட பின் மனதை மாற்றி ஈசன் கூட!!!

மீண்டும் திருத்தலத்தில் அமர்ந்தான்!!அமர்ந்துமே அறிந்தும் கூட எதை என்றும் கூட சிந்தித்தான் இவ்வளவு வயது ஆகின்றதே இத்தனையும் கடந்து கடந்து ஏதோ இறைவன் பின் இட்டதெல்லாம் (உணவுகள்) அருந்தி பின் பின் எவை என்று கூட உண்டு களித்து விட்டோம். 

இனிமேலும் பிறவி தேவையில்லை பிறவிகள் இருந்தாலும் வீண்!!!

ஏன் எதற்காக என்று கஷ்டங்கள் பட்டது போதும் இளவயதில் இதனால் அறிந்தும் அறிந்தும் கூட எவை என்றும் புரியாமலே நிச்சயம் மீண்டும் பின் அதாவது இவ் நதிக்கு சென்றான்.

பின் அவன் மனம் எதை என்றும் அறிய அறிய நதியே எவை என்றும் புரியாமல் அம்மையே எந்தனை கூட இந்நாள் வரை அங்கும் இங்கும் அலைந்து திரிந்து எதை என்றும் அறியாமலே பின் நீங்களும் எவை என்று ஈசனாரும் எதை என்று பின் புரிந்தும் வளர்த்தீர்கள்.

ஆனாலும் இனி மேலும் என்னாலும் இங்கு எதை என்று அறியாமலே புரியாமலே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் சாகின்றேன் என்று குதித்தான்!!!!!

இதனால் எதை என்றும் அறிய அறிய அழகாக தாமரை முகத்துடன்!!!!!! எதை என்று கூட தாமரை கைகளால் அவந்தனை தூக்கி அறிந்தும் அறிந்தும் கூட அப்படியே பின் மீண்டும் எதை என்று கூட தூக்கி அதாவது வீசி எறிந்தாள் அவ் அம்மை(தேவி) இங்கே!!!!! அமர்ந்தான்!!!!

ஆனாலும் எதை என்று கூட பின் மயக்கம் எதை என்று கூட தெளிவு ஆனாலும் தெளிவு பெற்று எழுந்த பிறகு எதை என்று கூட ஏன் இங்கு ஏன் இங்கு வந்தோம்?????? எப்படி வந்தோம்?? என்றெல்லாம்!!! சிந்தித்தான்!!

எதை என்று அறிய அறிய ஆனால் மீறிய சக்தி நம் தனக்குள் உள்ளது... எதை என்றும் அறிய அறிய ஆனாலும் தியானங்கள் மேற்கொண்டான். இங்கு எதை என்றும் அறிய அறிய அதனால் பல தியானங்கள் அறிந்தும் அறிந்தும் கூட மேற்கொண்டு மேற்கொண்டு அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட எதை வந்தாலும் பின் ஆனாலும் எவை என்று கூட தியானங்கள் செய்து ஆனாலும் பின் நதியில் ( பிரம்மபுத்ராவில் வெள்ளப்பெருக்கு) பலமாக தண்ணீர் வந்தது அடித்து எவை என்று கூட அனைத்துமே.

ஆனாலும் அப்போது உள்ள நிலைமையிலும் கூட தவங்கள் அவந்தன் விடவில்லை. மீண்டும் தண்ணீர் குறைந்தது.

எதை என்றும் அறிய அறிய இதனால் எவை என்றும் புரியாமல் பெரிய ஞானி ஆகிவிட்டான் எதை என்றும் அறிந்து அறிந்து

இதனால் இங்கு வருவோருக்கெல்லாம் எதை என்று கூட ஆசிகள் கொடுத்து நோய்களை தீர்க்கும் எவை என்று கூட தண்ணீரை கொடுத்தாலே போதுமானது என்று கூட பின் அனைவருக்குமே பின் எவை என்று கூட அவன் கைகளால் தண்ணீர் கொடுத்தாலே அனைத்து நோய்களும் எவை என்று அறிய அறிய பறந்து போகும்.

இதனால் அப்பனே புரிந்து கொண்டீர்களா? எதை என்றும் அறிய அறிய கடும் தவம் எதை என்று கூட  இறைவனை நோக்கி நோக்கி!!!! அப்பனே புறப்பட்டு ஆசிகள் பெற்றால் தான் அப்பனே நீ எதுவாக எவை என்று அறிய அறிய தண்ணீரை கொடுத்தாலும் அது மருந்தாகப் போகுமப்பா!!! 

எதை என்றும் அறிந்து அறிந்து இதனால் அப்பனே பல தவசீலர்களும் கூட அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இங்கு இன்னும் அப்பனே பின் ஞானங்கள் மோட்சத்தோடு எதை என்று கூட தவழ்ந்து திரிந்து வருகின்றனர் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே எவை என்று கூட புரியாமலும் கூட அறியாமலும் கூட மனிதன் எவ் நிலைக்கு வந்தாலும் நிச்சயம் ஓரிடத்தில் பின் இறைவன் இழுப்பான் என்பேன் அப்பனே!!!

இழுப்பதற்கு எதை என்றும் அறிய அறிய சமமான பின் பலங்கள் பயன்படுத்தி இறைவனை பிடித்துக் கொண்டால் அனைத்தும் செய்வான் அப்பனே!

அப்படி இல்லை என்றாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால் அப்பனே அவ் ஞானி அனைவரையும் காப்பாற்றிக் கொண்டிருந்தான் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!

இதனால் அப்பனே மகிழ்ச்சியாக இருந்தது எவை என்றும் அறிய அறிய.

ஆனாலும் இவந்தனை எதை என்றும் அறிய அறிய அப்பனே பார்த்திட்டு அதாவது மன்னன் எதை என்றும் அறிய அறிய...

யார்?? இவன்??? 

எதை என்றும் அறிய அறிய நம்தனக்கு அதாவது மன்னனுக்கு மரியாதையே கொடுப்பதிலேயே என்று எண்ணி அவந்தனை அழைத்து வாருங்கள் என்று கூட..... 

நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் ஆனாலும் அரச சபையில் நின்றான் எதை என்றும் ஒருங்கும் அளவிற்கு கூட.

ஆனாலும் நீ யார் என்பதை கூறு என்று அரசன் கேட்க!!!

யான் ஒரு அனாதையே!!!! எந்தனுக்கு எதுவுமே தெரியாது!!!! ஆனால் மக்கள் என்னிடத்தில் வருகின்றார்கள் ஆனாலும் யானும் பின் ஏதாவது தண்ணீரை எதை என்றும் அதாவது நீரினை கூட எவை என்றும் கூற கூற தன் கைகளில் கொடுக்கும் நீர் எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் இதனைப் பற்றி அறிந்தும் அறிந்தும் கூட இதனால் நீரினை கொடுக்கின்றேன் ஆனால் சரியாகவே அனைவருக்கும் நடக்கின்றது.

ஆனால் யான் யார் என்று எந்தனுக்கு எவை என்று கூட!!!

ஆனாலும் அரசன் உன் தாய் தந்தையர் யார் என்று கூட!!!

எந்தனுக்கு தாய் தந்தையரே இல்லை!!!!! யான் பல திருத்தலங்களாக அலைந்து திரிந்து எதை என்று கூட இங்கு வந்தேன் என்று கூற!!!!

அவ் அரசனும் ஓ!!!!........ இவன் நாடோடி!!! எதை என்று கூட அதனால் இவந்தனுக்கு சொந்தம் பந்தங்கள் உற்றார் உறவினர் எதை என்றும் அறிய அறிய இதனால் எவை என்று கூட உற்றார் உறவினர் சொந்த பந்தங்கள் எல்லாம் பின் இதற்கும் கூட சொந்தம் யார் ?? பந்தம் யார்?? இதற்கும் கூட மாறுபட்ட பொருள்கள். நீங்கள் சிந்தித்தால் தெரிந்து விடும்!!!! இதையும் கூட சிந்தியுங்கள் சிறிதளவு சிந்தித்தாலே உங்களுக்கு பலன்கள் எதை என்று அறிய அறிய!!!! இதனை பற்றியும் கூட தெளிவாக யான் உரைப்பேன். 

எவை என்றும் அறிய அறிய இதனால் ஆனாலும் மன்னனோ!!!!  எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் புரியாமலும் கூட இவன் நாடோடியே!!!!!  இதனால் இவனை கொன்று குவிக்கலாம்.... இவந்தனை கொன்று குவித்தால் இங்கு கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்கிணங்க எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட இதனால் எவை என்றும் கூட..... 

ஆனாலும் அரசன் பலமாக இவன் ஒரு அனாதை!!!! இவனை பின் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட யாரும் இவந்தனுக்கு பின் ஒத்து வர மாட்டார்கள். 

இதனால் இவனை கொன்று குவித்தால் எதை என்று கூட யாரும் கண்டு கொள்ள ஆளில்லை என்று கூட. 

ஆனாலும் அழுதான் எதை என்று அறிய இத்தனை பேர்களுக்கு யான் நல்லதைத்தான் செய்தேனே இறைவா எவை என்று அறிய அறிய இப்பொழுது அவன் அனாதை என்று சொல்கின்றானே என்று எதை என்று கூட. 

பின் அழகாக ஒரு பெண்மணி வந்தாள் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இவந்தனுக்கு யான் பக்கபலமாக இருப்பேன் என்று கூற!!!! 

பார்த்ததில் எதை என்றும் அறிய அறிய அவ்ஞானி எதை என்று கூட அனைத்தும் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு தகுதி!!!!! ஆனாலும் பின் மாயை மறைத்து பின் அவ் தேவி எதை என்று அறிய அறிய பக்கத்தில் நின்றாள். 

ஆனாலும் பார்த்தான்!!! எதை என்று அறிய அறிய அம்மையே எவை என்றும் அறிய அறிய ஒரு பெண்ணாக இருந்து நிச்சயம் எதை என்றும் அறிந்தும் கூட எவை என்றும் புரிந்தும் கூட நிச்சயம் எந்தனுக்காக பின் வந்திருக்கின்றாயே!!!!!!

எவை என்று அறிய அறிய நீ வேண்டாம்!! நீ சென்று விடு!!!

ஏனென்றால் என்னை கூட எதை என்று கூட பின் பின் சாகடிப்பதற்கு இவர்கள் திட்டம் தீட்டி எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அம்மையே!!!! அதனால் நீ வேண்டாம் எதை என்று கூட நம்தனால்(நம்மால்) முடியாது!!!!

அவ் இறைவனே வந்தால் தான் நம் தனை காக்க முடியும்!!!! இறைவனும் வரப்போவதில்லை ஏனென்றால் பல பல வருடங்கள் ஆயிற்று!!! கடைசியில் வயதும் ஆகிவிட்டது எந்தனுக்கு!!

இதனால் எதுவும் எவை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய இறைவன் வரவில்லை என்று.

ஆனாலும்  அவ் அம்மையே பின் சிரித்தாள்!!!!! எதை என்று கூட!!

இதனால் அப்பனே எவை என்று புரியும் படி பல லீலைகள் இறைவன் உன்னிடத்தில் நடத்தி இருக்கின்றான் ஆனாலும் புரியாமல்!!!............

இதுதானப்பா மனிதனின் வாழ்க்கை என்று  அவ் அம்மை கூற!!!!

எதையென்று அறிய அறிய அம்மையே பின் இப்பொழுதெல்லாம் அது தேவையில்லை இறைவன் வந்தாலும் எதை என்றும் அறிய அறிய இறைவன் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் இப்பொழுது தேவையில்லை நீ சென்று விடு!!!!

நிச்சயம் யான் சாவதற்கு தயாராகவே இருக்கின்றேன் இதனால் நீ வேண்டாம்!!! வாழ போகின்றவளாக இருக்கின்றாய் நீ இதனால் சென்றுவிடு என்று கூற!!!!

ஆனாலும் மறுத்துவிட்டாள்!!! 

ஆனாலும் அரசனைப் பார்த்து !!!!அரசனே!!!! எதை என்று அறிய அறிய இவந்தனுக்கு யாரும் இல்லை என்று நினைத்து விட்டாயா????!

யான் அம்மையாக இருக்கின்றேன்!!!!

அதனால் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய நிச்சயம் இவந்தனுக்காக இவ்வூரில் எதை என்றும் அறிய அறிய அனைவரையும் கூட்டிட்டு நாளை வருகின்றேன் என்று கூற!!!!

அதற்குள்ளே அவ் அரசன் இல்லை!!!! எதை என்று அறிய அறிய அதனால் இவனுடன் சேர்த்து இப் பெண்மணியையும் கொன்று விடுங்கள் என்று தீர்ப்பு வழங்கினான்.

இதனால் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் எதை என்று கூட பின் அனைவரும் வந்தனர்.

தேவி எதை என்றும் அறியாமலே """"""""விஸ்வரூபம் !!!!!!!!!!எடுத்து எதை என்று அறிய அறிய நல் விதமாகவே அனைவருக்கும் காட்சி அளித்தாள்!!!! 

ஆனாலும் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து ஆனாலும் கண்ணீர் அவந்தனுக்கு பெருக்கெடுத்து ஓடியது!!!!!

இதனால் நம்தனை இதுவரை எத்தனை ஆண்டுகளாக அனாதையாக என்று நினைத்துக் கொண்டிருந்தோமே!!!!!!! இப்பொழுது தேவியே வந்திருக்கின்றாள் என்று தேவியே வந்திருக்கின்றாள் என்று அவந்தனுக்கு மிக்க மிக்க சந்தோஷங்கள்!!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் ஒவ்வொரு இடமும் கூட ஒவ்வொரு இடத்திலும் கூட அப்பனே இறைவன் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்!!!!

ஆனால் மனிதன் தானோ இல்லை இல்லை என்று திரிந்து கொண்டிருக்கிறான் அப்பனே !!!

எவை என்று கூட துன்பங்கள் அப்பனே இருந்தாலும் கூட இறைவன் பக்கத்திலே இருப்பான் அதை யாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம்!!!! அப்பனே

இதை நன்கு உணர்க அப்பனே!!!!

இதை நன்கு உணர்ந்துவிட்டால் அப்பனே நீ நிச்சயம் புத்திசாலி
!!!! அப்பனே புத்திசாலியாக இருந்து அனைத்தும் அப்பனே அறிவாய்!!!!

அப்படி இல்லை என்றாலும்  அப்பனே எவை என்று கூட இதனால் அப்பனே எவ்வளவு திருத்தலங்கள் எவ்வளவு எதை என்று கூட பின் ஞானி எவை என்றும் புரியாமல் அப்பனே இருந்தாலும் அப்பனே எவை என்று கூட அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் எவை என்று கூட இறைவனை வணங்குபவர்கள் அப்பனே நிச்சயம்  மோசம் போக மாட்டார்கள் அப்பனே!!!!!

நிச்சயம் இறைவன் எதை என்று கூட ஆபத்துக் காலத்தில் தக்க சமயத்தில் அப்பனே வந்து காப்பான் என்பதைக் கூட எதை என்று அறிய அறிய அப்பனே இவனுடைய எதை என்று கூட அதாவது புரிந்து புரிந்து உணர்ந்து இவ் ஞானியவன் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!

அப்பனே அவ் ஞானியானவன் எதை என்று கூட  அவ் அரசனும்  கூட.... இவ்வளவு சக்திகள் உந்தனுக்கா????

எதை என்று கூட அம்மையே இவனால் எந்தனுக்கும் ஒரு தீர்வு கிடைத்தது அதனால் இவனே அரசாளட்டும் என்று எவை என்று அறிய அறிய!!!

 ஆனாலும்  இவந்தனும் எந்தனுக்கு அரச பதவிகள் தேவையில்லை எதை என்று கூட அம்மையே உந்தன் காலடியிலேயே யான் வீற்றிருக்கின்றேன் என்று கூற!!!! 

நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து இல்லை இப்பொழுது கூட பின் எவை என்று அறிய அறிய அம்மையே எந்தனுக்கு வயதாகிவிட்டது இதனால் நிச்சயம் வேறு யாரையாவது அமைத்து விடுங்கள் என்று கூற

நிச்சயம் நீ தான் இதற்கு தகுந்தவனாக என்று ஒரு பட்டம் சூட்டினார்!!!!

அரசன் ஆகினான்!!!!!!

எதை என்று அறிய இதனால் பல திருத்தலங்களுக்கும் கூட உதவிகள் பல பல பன்மடங்கு எதை என்று கூட செய்தான்  எதை என்று கூட அவ் ஞானியே!!! 

இதனால் இப்பிறப்பில் கூட அவந்தன் பெரிய எவை என்று கூற பின் மனிதனாக பிறந்து அனைவருக்குமே உதவிகள் செய்து கொண்டிருக்கின்றான் எதை என்று அறிய அறிய!!!

அவன் யார் என்று அதை  சொன்னாலும் இப்பொழுது வேண்டாம் எதை என்று கூட கடைசியில் அனைத்தும் உணர்ந்திட்டு ஒவ்வொரு நாமத்தையும் யான் சொல்லி உரைப்பேன்  எதை என்று அறிய அறிய அவன் தான் எதை என்று அறிய அறிய என்று கூட!!!!! 

அப்பனே எவை என்றும் அறிய அறிய தெய்வம் இல்லை இல்லை என்று பிதற்றுகின்றவர்களை கூட யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!!

ஆனால் தெய்வமே அவன் பக்கத்தில் இருப்பதை உணர்வதில்லை அப்பனே!!!

நலன்களாக இதனால் அப்பனே பல வழிகளிலும் கூட பல புண்ணிய காரியங்கள் செய்தான் அப்பனே நலன்களாகவே அப்பனே இதுதானப்பா வாழ்க்கை!!!! அப்பனே இது தான் அப்பனே எவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும் எவன் ஒருவன் தாங்கிக் கொள்கின்றானோ அவன் தான் அப்பனே அனைத்தையும் பெற்று அப்பனே இறைவன் கூட காட்சி அளித்து அப்பனே மாமனிதனாக ஆகின்றான் அப்பனே!!!

மீண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே அவந்தன் இப் பிறவியிலும் அப்பனே நன் முறைகளாக திருத்தலங்களுக்கெல்லாம் அப்பனே எவை என்றும் அறியாமலே அப்பனே  இத் திருத்தலங்களுக்கெல்லாம் வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே. நலங்களாகவே.

நலன்கள் ஆகவே அப்பனே இதனால் ஆசிகள் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே தெரிந்து கொண்டு அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே உலகத்தை வெல்லுங்கள் அப்பனே நலங்களாகவே!!!

அதனால் அப்பனே கஷ்டகாலத்திலும் கூட இறைவன் பக்கத்தில் இருப்பான் எதை என்று அறிய அறிய அப்பனே இறைவன் இல்லை என்ற நினைப்பே வரக் கூடாது என்பேன் அப்பனே!!!

நலன்கள் ஆசிகள் அப்பனே இன்னும் வாக்குகள் உண்டப்பா!!!!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

காமாக்யா தேவியின் குகையில் தேவியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து ஆலய பிரகாரங்களை சுற்றி வணங்கிக் கொண்டிருந்த பொழுது கூட்டம் இருந்தாலும் அங்கே ஆலயத்திற்கு உள்ளே திருநங்கைகள் சிறு குழந்தைகள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தட்சிணை கேட்டு தட்சிணை பெறுவது வழக்கம் ஆனால் அதில் ஒரு அதில் ஒரு முதியவர் திடீரென தனித்தே தோன்றி அடியவர்களிடத்தில் வந்து அனைவருக்கும் தன் கைகளால் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார் எதுவுமே பேசவில்லை அவர் எதுவும் கேட்கவும் இல்லை அவர் ஒரு கண் அடைந்திருக்க ஒரு கண்ணில் மட்டும் பார்வை இருந்தது அவருக்கு சகோதரர்கள் அனைவரும் அவருடைய கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். அனைவரும் அவர் அருகே நின்று அவரை நெருக்கமாக சுற்றி நின்று கொண்டனர் அது ஏதோ கட்டி போட்டது போல இருந்தது சுற்றிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருக்க இவர் மட்டும் தனித்து ஒதுங்கி நெருங்கி அடியவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தார் அதன் பிறகு அங்கு இங்கு என போக்கு காட்டி மறைந்து விட்டார்.

ஆலயத்தில் தேவியின் சன்னதிக்கு வெளியே வலது பாகத்தில் குருநாதர் பொது வாக்குகள் தந்த பின் அடியவர்களிடம் சிறிது நேரம் உரையாடினார். அப்பொழுது அந்த முதியவரைப் பற்றியும் கூறினார் வந்தது என்னுடைய சீடன் புலத்தியனே!!

வந்து அனைவருக்கும் ஆசிர்வாதம் செய்து விட்டு சென்று விட்டான் என்று கூறினார் மெய் சிலிர்த்துப் போய்விட்டது அடியவர்களுக்கு நேரடியாக வந்து தலையில் கை வைத்து முதுகில் தட்டி கொடுத்து ஆசீர்வாதம் செய்ததை நினைத்து குருநாதர்க்கும் புலத்திய மகரிஷிக்கும் மகரிஷிக்கும் நன்றிகள் கூறினர்.

அடியவர்களோடு குருநாதர் உரையாடிய தொகுப்பு இங்கே!!!

எதை என்று அறிய அறிய யான் வந்துவிட்டாலே தேவியையும் வரவழைப்பேன் என்பேன் அப்பனே.... அனைவருக்குமே ஆசிகள் என்பேன் அப்பனே!!!

இந்த உலகம் மிகவும் அழிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது குருவே மக்கள் அனைவரும் கஷ்டப்படுகின்றார்கள் அவர்களுக்கு மந்திர உபதேசம் ஏதாவது உபதேசித்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வழியை கூறுங்கள் என்று கேட்டதற்கு!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய இப்பொழுது தான் இதன் விளக்கத்தை யான் சொன்னேன் அப்பனே!!!!

ஒருவன் எவ்வாறெல்லாம் திரிந்து ஞானத்தை பெற்று அப்பனே இறைவியே காட்சியளித்தாள் என்பதையெல்லாம் இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய கவலைகள் இல்லை அப்பனே எவை என்று கூற ஒருவனை பற்றி சொன்னேன் அப்பனே அவந்தனுக்கு எவ்வளவு ஞானங்கள் அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே அதனால் திரிந்தாலே போதுமானதப்பா !!!

எவையென்று அறிய அறிய பின் திரிவது அப்பனே 100 மடங்கு!!! பலன் அப்பனே 

மந்திரத்தை அதாவது அப்பனே ஒரு மந்திரத்தை ஒரு தடவை சொன்னால் அப்பனே எதை என்று அறிய அறிய சற்று குறைவு தான் அப்பனே!!!

எதை எதை என்று அறிய அறிய அதாவது திருத்தலங்களுக்கு சென்று சென்று வணங்கினால் அப்பனே ஆயிரம் மடங்கிற்கு சமம் என்பேன் அப்பனே!!!

(வீட்டில் இருந்து மந்திர ஜெபங்கள் செய்வதை காட்டிலும் திருத்தலங்கள் திருத்தலங்களாக சென்று தரிசனம் செய்வது ஆயிரம் மடங்கு பலன் தரும் என்பதை குருநாதர் இங்கு தெளிவுபடுத்துகின்றார்)

அதனால் சென்று கொண்டு தான் இருக்கின்றது அப்பனே இருப்பினும் பாலாம்பிகை தேவியின் மந்திரத்தை செப்பினாலே போதுமானது என்பேன் அப்பனே!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே அங்கு போ இங்கு போ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.

அப்பனே கவலைகள் இல்லை அப்பனே இப்பொழுதுதான் ஒருவனைப் பற்றி சொன்னேன் ஒருவன் ஏழ்மை நிலையிலிருந்து அப்பனே அரசன் ஆனான் என்று சொன்னேன் அப்பனே!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே ஏறு முகம் தான் என்பேன் அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு கஷ்டங்கள் பட்டால் பின் தோல்விகள் என்று நினைத்து விடாதீர்கள் என்பேன் அப்பனே!!!

ஒவ்வொரு படியும் கூட அப்பனே ஏறிக்கொண்டே இருக்கின்றீர்கள் அப்பனே அப்பனே ஒவ்வொரு படியையும் ஏறும் பொழுது சற்று சறுக்கலாமே தவிர ஆனாலும் கீழே விழவில்லை மேல்நோக்கி தான் சென்று கொண்டிருக்கின்றீர்கள் அனைவருமே!!!!

இவ் தேவி நிச்சயம் கொடுப்பாள்  அப்பனே நீங்கள் இவ்வளவு அலைகின்றீர்களே!!!!!! உங்களுக்கே இவ்வளவு கஷ்டங்கள் என்று சொல்கிறீர்களே அப்பனே ஏதும் அலையாதவர்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

அப்பனே எவை என்று கூற எவை என்று புரிய அனைவருமே எவை என்று கூட ஒவ்வொரு நினைப்புடன்  தான் வந்து கொண்டிருந்தார்கள் எதை என்று அறிய அறிய இதனால் உங்கள் நினைப்பெல்லாம் அவள் தனக்கு தெரிந்து விட்டது. சில விஷயங்களை நீக்கி நல்விதமாகவே மாற்றமடைய செய்வாள்.

எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய எதை என்றும் அறியாமலே முதியவன் வந்தானே எதை என்று கூட என் சீடனும் அவன் புலத்தியன். எதை என்று அறிய அறிய முதியவன் வடிவத்தில் வந்து ஆசீர்வதித்து விட்டான் அனைவருக்குமே.

காமக்யாதேவி ஆலயத்தில் தாந்த்ரீக முறைப்படி பூஜை நடைபெறுகின்றது உயிர் பலியும் கொடுக்கப்படுகின்றது இதனைப் பற்றி குருநாதர் இடம் கேட்ட பொழுது

அப்பனே எதை எதை என்று அறிய அறிய இப்போதைக்கு   இது தேவையில்லை என்பேன் அப்பனே இவையெல்லாம்.

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே ஈசனும் பார்வதியும் எதை என்று அறிய அறிய வந்து வாக்குகள் இன்னும் பலமாக செப்புவார்கள் என்பேன் அப்பனே. உலகம் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது அப்பனே நிச்சயம் அவர்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள் அப்பனே.

அப்பனே பார்த்திட்டு மனிதன் எப்படி வாழ்கின்றான் என்பதை கூட பார்த்துட்டு அப்பனே அதற்கு தகுந்தார் போல அவர்கள் வாக்கு உரைப்பார்கள் என்பேன் அப்பனே !!பொறுத்திருக!!

குருநாதர் கூறிய நுண்ணுயிரி பற்றி கேட்ட பொழுது

அப்பனே ஆசீர்வாதங்கள் அப்பனே ஆசிர்வாதம் பெறும் இடத்தில் ஆசீர்வாதத்தை தான் பெற்றுச் செல்ல வேண்டும் அதனால் ஆசிர்வாதத்தை பெற்றுச் செல்லுங்கள் அப்பனே!!!

ஆசிகள்!! ஆசிகள்!!! அனைவருக்குமே அப்பனே!!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அஸ்ஸாம். இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலம். அங்கே பிரம்மபுத்திரா நதியின் தென் கரையில் அமைந்திருக்கும் கௌகாத்தி நகரில் `நீல் பர்வதம்' என்னும் மலைமீது அமைந்திருக்கிறது காமாக்யா கோயில். சக்திதேவியின் சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமான தலம் இது. சக்தி தேவியின் 51 சக்தி பீடங்களில் முக்கியமானது காமாக்யா யோனி பீடம்.

தன் மகளான தாட்சாயினிக்கும் தன் மருமகன் சிவபெருமானுக்கும் முறையான அழைப்பு விடுக்காமல் பெரும் யாகம் செய்கிறான் தட்சன்.  நியாயம் கேட்பதற்காகச் சென்ற தாட்சாயினியை அவமரியாதை செய்துவிடுகிறான். இதனால் கோபம் கொண்ட தாட்சாயினி, யாகம் நிறைவடையாமல் அழியுமாறு சபிக்கிறாள். பிறகு அதே யாகத் தீயில் விழுந்துவிடுகிறாள். தட்சனின் ஆணவத்தை அடக்கி, அவனுடைய யாகத்தை அழிப்பதற்காக வீரபத்திரரை அனுப்புகிறார் சிவபெருமான். வீரபத்திரர் தட்சனின் யாகத்தை அழித்து, அவன் தலையையும் கொய்துவிடுகிறார். மனைவியின் உடலைத் தன் தோளில் போட்டுக்கொண்டு சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடுகிறார். தாட்சாயினியின் உடல் சிவபெருமானின் தோளில் இருக்கும்வரை அவரது ஊழித் தாண்டவம்  நிற்காது என்பதை அறிந்த விஷ்ணு, தனது சக்ராயுதத்தை ஏவி தாட்சாயினியின் உடலைத் துண்டாக்குகிறார். அந்த உடல் 51 துண்டுகளாகச் சிதறி பூமியில் விழுகிறது. சக்தி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களே 'சக்தி பீடங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. 51 சக்தி பீடங்களில் முதன்மையானது 'மகா காமாக்யா' தேவி கோயில். `தாட்சாயினியின் யோனி விழுந்த சக்தி பீடம் இது’ என்று புராணங்கள் கூறுகின்றன. 

தேவியின் அங்கம் விழுந்ததும், மலை நீல நிறமாக மாறியதாம். அதனால்தான் இந்த மலையை, `நீல் பர்வதம்' என்றும் `நீலாச்சல்' என்றும் அழைக்கிறார்கள். தரையிலிருந்து 700 அடி உயரத்தில் மகா காமாக்யா தேவியின் கோயில் வனங்கள் சூழக் காணப்படுகிறது.

தேவியின் யோனி விழுந்த இந்தத் தலத்துக்கு காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம்... எனப் பல பெயர்கள் இருக்கின்றன. இந்த நீலாச்சல் மலையில்தான் `மகா வித்யாக்கள்’ என அழைக்கப்படும்  காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமவதி, பகளாமுகி, மாதங்கி, கமலா என 10 தேவிகளின் கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா ஆகிய தேவிகளுக்கு காமாக்யா கோயிலுக்கு உள்ளேயே சந்நிதிகள் இருப்பது கூடுதல் சிறப்பு

இந்தத் தலத்திலிருக்கும் அம்பிகையைக் காமேஸ்வரி,  காமரூபிணி, காம, காமாக்யா என்றெல்லாம் அழைக்கிறார்கள். இந்தத் திருத்தலத்தில் சக்தி தேவிக்கு உருவம் கிடையாது. தேவியின் யோனியே சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறது.

நீலாச்சல் மலைமீது ஏறினால், மூன்று பெரிய கோபுரம், அவற்றைச் சுற்றிலும் சிறிய நான்கு கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது கோயில். கோயிலின் மேற்குப் பகுதியில் பலிபீடம் இருக்கிறது. இங்கு தேவிக்கு தினமும் ஓர் ஆட்டை பலி கொடுத்து அதன் தலையைக் கருவறையில் வைத்த பிறகுதான் தினசரி நித்ய பூஜையைத் தொடங்குகிறார்கள். வருடத்தில் மகாநவமி அன்று எருமையைப் பலியிடுகிறார்கள்.

காமாக்யா கோயிலைக் கட்டிய விஸ்வகர்மாவின் சிலையும் இருக்கிறது. 
கோயிலின் கருவறை இயற்கையாக அமைந்த மலையின் குகைக்குள் இருக்கிறது. நீலாச்சல் மலையின் சிறிய ஊற்றில் நீர் வழிந்து ஓடியபடி இருக்கிறது. அந்த ஊற்றில் நீருக்குள் மூழ்கியபடி தேவியின் யோனி பாகம் இருக்கிறது. 108 செம்பருத்தி மலர்களால் ஆன மாலையை தேவிக்கு பிரத்யேகமாகச் சூட்டி வணங்கி வேண்டிக்கொள்கிறார்கள்.
காமாக்யா தேவியின் மாதவிலக்குக் காலமான நான்கு நாள்கள் சக்தி பீடத்தை சிவப்பு வஸ்திரத்தால் மறைத்துவிடுவார்கள். ஆனால், தமிழ் மாதக் கணக்குபடி ஆனி மாதம் வரும் மாதவிலக்கு நாள்களில் மட்டும் சக்தி பீடத்தில் வழிபாடுகள் நடைபெறும். அன்றைய தினம் பக்தர்களும் யோகிகளும் ஆயிரக்கணக்கில் வந்து தேவியை வழிபடுகின்றனர்.

கும்பமேளா திருவிழாவைப் போன்றே அம்புபச்சிமேளா மிகவும் பிரசித்திபெற்றது. திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளாவில் நதியில் நீராடினால் என்ன பலன்கள் கிடைக்குமோ, அதே அளவு பலன்கள் அம்புபச்சிமேளா அன்று தேவியின் யோனி பீடத்தை வணங்கினால் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காமாக்யா கோவிலின் தினசரி வழக்கம் காலை 5.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிக்கு அதன் வாயில்களை மூடுவதோடு முடிவடைகிறது. காலை 8 மணிக்கு பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோயில் கதவுகள் திறக்கப்படும், அதற்கு முன் ஸ்னான மற்றும் நித்ய பூஜைகள் நடைபெறும், கதவுகள் திறந்தவுடன் வழிபாடு செய்யலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete