​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 September 2023

சித்தன் அருள் - 1434 - அந்தநாள் .. இந்த வருடம் - கோடகநல்லூர்!

 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அந்த நாள் இந்த வருடம் - கோடகநல்லூரில் பெருமாளுக்கு அகத்தியப்பெருமான் செய்கிற அபிஷேக ஆராதனை, சோபகிருது வருடம், ஐப்பசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரமும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகிற நாளில், (26/10/2023) வியாழக்கிழமை அன்று செய்திட உத்தரவாகியுள்ளது.

அன்றைய தினம் ஆராதனை செய்தாலும், கோவிலுக்கு வெளியே நின்றாலும், ஆத்மார்த்தமாக இருந்தால் அனைவருக்கும், அகத்தியப்பெருமானும், பெருமாளும், அருள் புரிவார்கள் என தெரிவித்துள்ளார்.

அனைவரும் சென்று பூசையில் கலந்து கொண்டு அவர் அருள் பெறுக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  3. வணக்கம் அய்யா. கோடகநல்லூரில் பூஜை தொடங்கும் நேரம் தெரிய படுத்த வேண்டுகிறோம். நன்றி.

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  5. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete