​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 11 September 2023

சித்தன் அருள் - 1429 - அன்புடன் அகத்தியர் - அருள்மிகு ஆனந்த வள்ளி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.நும்பல்.சென்னை







சமீபத்தில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ஆலய பொது வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம்.அருள்மிகு ஆனந்த வள்ளி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.நும்பல்.சென்னை

ஆதி ஈசனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன்.

நல்முறையாக இவ்வுலகத்தில் மாற்றங்கள் பின் ஏற்பட்டாலும்..அவைதன் மனிதன் நிச்சயமாய் தடுத்துக் கொள்வான்.என்பேன் வரும் வரும் காலங்களில்.

எதை இவ்வாறின்றி வருவது எதனை செய்வது எதனை செய்ய கூடாது?? என்பவையெல்லாம் மனிதனுக்கு தெரியாது தெரியாமல் போகும் என்பேன் அப்பனே

எதை என்று உணர்த்துவதற்கு வழிகள் இல்லை அப்பனே......இன்னும் சொல்லப்போனால் அப்பனே உலகத்தில் அப்பனே மிஞ்சுவது ஏதுமில்லை அப்பனே வரும் காலங்களில் அப்பனே எவை என்று கூறாத அளவிற்கும் கூட மனிதனுக்கு ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் வரும்!!! 

இது கலியுகத்தின் தீர்ப்பு என்பேன்!!! அப்பனே!!!! 

அவை மட்டுமில்லாமல் எதையெதையோ என்று ஆனாலும் அப்பனே இதனால் தான் யான் பின் பல யுகங்களில் அப்பனே எப்படி பின் வாழ்ந்தால் பின் இறைவன் தரிசனம் எப்படி கிடைக்கும் என்பதை எல்லாம் ஆராய்ந்து பல திருத்தலங்களை உருவாக்கினோம் சித்தர்கள் யாங்கள். 

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது அப்பனே பண தேவைக்காக பணத்தின் பின்னே செல்கின்றான் மனிதன் ஆனால் அப்பனே பணத்தின் வழியாக வருவது என்னவென்றால் ஆனால் கடைசியில் அப்பனே நோய்கள் நொடிகளே!!!!! 

ஆனாலும் அவற்றுக்கெல்லாம் அப்பனே எதை என்று தெரியாமல் கூட மனிதர்கள் வாழ்ந்து வாழ்ந்து வருகின்றார்கள் என்பேன் அப்பனே.

இவையன்றி கூற கூற அப்பனே இன்னும் மனிதர்களுக்கு பக்திகள் வரவில்லை என்றுதான் யான் சொல்வேன் அப்பனே!!!!

ஏனென்றால் அப்பனே பின் பொய்யான பக்திகள் அப்பனே எதையென்று கூட இதனால் அப்பனே பின் இவ் தேசத்திலும் அப்பனே எவை என்று கூறாத அளவிற்கும் கூட முதலில் கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டே இருக்கும்.

ஆனாலும் அப்பனே அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே முதலில் இங்குதான் அழிவுகள் ஏற்படும் என்பது யான் கணித்தேன்!!!!

ஆனாலும் நல்விதமாகவே அப்பனே இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அப்பனே பின் விண்ணப்பம் வையுங்கள் அப்பனே நிச்சயம் இறைவன் வழி விடுவான் என்பேன் அப்பனே!!!!

இப்படியே சென்று கொண்டிருந்தால் அப்பனே பின் மனிதன் நிச்சயமாய் இவ் பின் இதனையும் ஒன்றும் இல்லாமல் அப்பனே இதனை சுற்றியுள்ள பின் அனைவரும் கஷ்டத்திற்கு தான் ஆளாவார்கள் என்பேன். 

எதனால் சொல்வது என்றால் அப்பனே பின் ஒழுக்கங்கள் இல்லைப்பா!!! பின் நேர்மைகள் இல்லையப்பா!!! தாழ்ந்தே செல்கின்றது என்பேன்.

இதனை எவ்வாறு உணர்த்துவது என்பதை கூட ஆனாலும் அப்பனே பின் எங்கள் உலகம் எதை என்றும் கூறும் அளவிற்கு கூட யாங்கள்  எப்படி அமைப்பது ?? என்பதை கூட ஆராய்ந்து நிச்சயம் மாற்றி விடுவோம் அப்பனே.

ஆனாலும் அப்பனே பொய்களப்பா!!!!! பொய்களப்பா எதை என்று கூற!!!!

கூற கூற அப்பனே பின் இவ் பக்தனே காண வருவதற்கு சிக்கல்கள்!!!

சிக்கல்கள் என்பதை கூட பின் எதனை வருவது என்பதை கூட தெரியாமல் வந்து கொண்டே இருக்கும்!!!

ஏனைய சித்தர்கள் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்..... ஆனாலும் அப்பனே பலத்த பின் பக்தர்களுக்கும் நிச்சயமாய் அடிகள் பலமாகவே உண்டு என்பதை நிச்சயமாய் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!!

ஆனாலும் இதையன்றி கூற ஆனாலும் அப்பனே இன்னும் கூட அப்பனே எதை என்று கூறாமல் விட்டுக் கொண்டே சென்றால் அப்பனே அனைத்திற்கும் இவை என்று அப்பனே அழிவுகள் மூலம் நிச்சயம் அழிந்து கொண்டே போகும் என்பேன் அப்பனே.

இதனால் தான் அப்பனே சிறிது யான் நிச்சயம் என் பக்தர்களுக்கும் அள்ளி தருவேன் கஷ்டங்களை!!!!  சொல்லி விட்டேன் அப்பனே!!! 

அகத்தியன் அகத்தியன் என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றியும் பிழைப்பையும் நடத்தி வருகின்றான் அப்பனே. 

இவை எவை என்று சொல்ல??????? 

இதனால் அப்பனே யானே நிச்சயம் அவர்களுக்கும் தண்டனைகள் நிச்சயம் கொடுப்பேன் அப்பனே 

அதனால் சொல்லி விட்டேன் இப்பொழுதே. 

யான் அகத்தியனை வணங்கினேனே!!!! அகத்தியனுக்கு பூஜைகள் செய்தேனே!!!! அகத்தியனுக்கு பல வழிகளிலும் எதை எதையோ செய்தேனே!!!!

ஆனால் அகத்தியன் என்னை ஏமாற்றி விட்டானே என்று நிச்சயம் சொல்லி சொல்லாதீர்கள் அப்பனே செப்பி விட்டேன் அப்பனே.

ஆனால் நீ என்ன செய்தாய்?? என்பதை கூட உன் மனசாட்சிக்கு தெரியும் அப்பனே

இதனால் கடைசி முறை எச்சரிக்கின்றேன் அப்பனே திருந்திக் கொள்!!!!! அப்பனே திருந்திக்கொள்!!!!

அதை விட்டுவிட்டு அப்பனே பொய்யானவை எல்லாம் பின் ஏற்படுத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம்.

அப்பனே ஆனால் ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே பிறக்கும்பொழுதே இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் அழகாகவே பின் எவை என்று கூறாமலே அனுப்பி வைத்து விடுகின்றான் அப்பனே!!!!

ஆனால் இடையில் மாற்றவல்லது எப்படி மாறும் அப்பனே!!!

ஆனாலும் விதியின் பாதை அப்பனே எப்படியாவது மாற்றினால் கூட அப்பனே பின் இரு மடங்கு கஷ்டங்கள் நிச்சயம் வரும் என்பேன் அப்பனே.

அதனால் கஷ்டத்தை கஷ்டம் மூலமே அனுபவித்தால் தான் அப்பனே பிறவி கடல் பிறவி பெருங்கடலை நீந்தி செல்லலாம்......

அதை விட்டுவிட்டு அப்பனே எதை எதையோ செய்து கொண்டிருந்தால் நிச்சயம் ஆகாது என்பேன் அப்பனே.

ஆனாலும் உண்மையான பக்திகளை நிச்சயம் காட்டுபவர்களுக்கு இறைவன் இக்கலி யுகத்தில் தரிசனம் நேரடியாகவே பின் கிடைக்கும் என்பேன்.

இப்படித்தான் அப்பனே மனிதன் மனிதனையே ஏமாற்றுவான் அப்பனே பொய் சொல்லி திரிவான் அப்பனே இன்னும் கூட அப்பனே!!!

சுவடிகள் மூலம் அப்பனே இப்படி எவை என்று கூட அப்படி என்றெல்லாம் அப்பனே பொய் சொல்லி திரிவானப்பா!!!

திரிவானப்பா!!! நம்பி விடாதீர்கள் அப்பனே மோசம் போய் விடாதீர்கள் அப்பனே!!!!

மோசம் போகின்றவர்களை அப்பனே யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே.

எவை எதை என்று மீறும் பின் யானும் திரிந்து கொண்டே இருக்கின்றேன் இவ்வுலகத்தில் அப்பனே. 

பின் நம்பி நம்பி அகத்தியன் சுவடியை பார்த்து பார்த்து அது நடக்கும் இது நடக்கும் என்றெல்லாம் பின் சொல்லிக் கொண்டிருந்தார்களே ஒன்றும் நடக்கவில்லையே என்று கூட பிதற்றுபவர்களும் மனிதர்கள் ஏராளம் அப்பனே.

அதனால் உண்மையைச் சொல்லுங்கள் அப்பனே பொய் கூறாதீர்கள் அப்பனே!!!

அப்பனே பக்தி என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் கூட யான் தெரிவித்து விடுகின்றேன் அப்பனே.

ஒரு கிராமத்தில் அழகான கிராமத்தில் அப்பனே பின் ஏதும் இல்லாமல் அப்பனே பின் ஓர் துறவி இருந்தான்.

அவன் எப்பொழுதும் கூட இறைவனையே நினைத்துக் கொண்டிருந்தான். இறைவா இறைவா என்றெல்லாம்.

ஆனாலும் அப்பனே அவந்தனுக்கு யாரும் இல்லை உற்றார் உறவினர் சொந்த பந்தங்கள் அப்பனே பின் ஏன்? உணவிற்குக் கூட கஷ்டங்கள்!!!! ஆடைக்கு கூட கஷ்டங்கள்!!!

அப்பனே இவ்வாறு இருக்க ஆனாலும் ஈசன் மீது பற்று அவந்தனுக்கு சிறிது கூட அப்பனே எவ்வாறு என்பதைக் கூட!!!

ஆனாலும் அப்பனே ஈசனை அழைத்துக் கொண்டே இருந்தான் நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்று கூட!!

ஆனாலும் திறமைகள் அதிக அளவு மேம்பட மேம்பட ஆனாலும் இறைவன் கூட இன்னும் கஷ்டங்களைக் கொடுப்போம்!!!!! எவ்வாறு தாங்கிக் கொள்கின்றான் என்று!!!

ஆனாலும் அதிக அளவில் கஷ்டங்கள் கஷ்டங்கள் கொடுத்து கொடுத்து!!!

ஆனாலும் அப்பொழுதும் கூட பின் இறை நாமத்தை மறக்கவில்லை.... நமச்சிவாயா நமச்சிவாய என்றே கூறிக் கொண்டிருந்தான்.

ஆனாலும் இதனையும் என்று அறியாமலே பின் பார்வதி தேவியும் இவ்வாறு உன் பக்தன் உன்னையே அழைத்துக் கொண்டிருக்கின்றானே!!!!!
நீ என்ன செய்தாய்??? அவந்தனுக்கு என்று!!!!!

ஆனாலும் பின் ஈசன் பார்வதி தேவியை பார்த்து பின் அவந்தனுக்கு பின் பல பக்குவங்கள் கொடுத்து விட்டேன்!!!! பல பக்குவங்கள் கொடுத்துவிட்டு அனுபவங்களையும் கொடுத்து விட்டேன்.

ஆனால் இப்பொழுது அவனிடம் நீ சென்று அவன் என்ன சொல்கின்றான்?? என்று பார்!!!! என்று ஈசன் பார்வதி தேவியிடம்!!!!! 

ஆனால் பார்வதி தேவியோ மாறுவேடத்தில் சென்றாள்.

அன்னம்!!!!

அன்னத்தை ஏந்தி துறவியாரே!!!!!இப்படி நமச்சிவாயா நமச்சிவாயா என்று சொல்லிக் கொண்டே இருந்தால் காலங்களும் வீணாக போகின்றது.

வீணாகப் போகின்றது ஆனாலும் உந்தனுக்கு ஏதும் நடக்கவில்லையே!!!

அதனால் ஏன் நமச்சிவாயா நமச்சிவாயா என்று கூவிக் கொண்டிருக்கின்றாய்????????? என்று!!!! 

பின் ஆனால் வந்தது பார்வதி தேவி!!!!! பார்வதி தேவி என்று தான்  அறியவில்லை!!!!

ஆனாலும் அத்துறவி பின் இவ்அம்மையை நோக்கினான்!!!! யான் சிவனே சிவனே என்று கூட பின் என் மனமார்ந்த இறைவனை அழைத்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.

இப்பொழுது புரிகின்றதா நீ அன்னத்தை எடுத்து வந்தாயே அதுவும் கூட திருவிளையாடல் தான் ஈசனின் என்று.

அப்பொழுது பார்வதி தேவி தெரிந்து கொண்டாள். 

ஓ!!!!!!!  இது இப்படிப்பட்டதா பக்தி என்று கூட!!!

பின் பார்வதி தேவியும் பின் இதை என்று அறியாத அளவிற்கும் கூட யான் இவையன்றி கூட இவ்வழியிலே பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் துறவியே!!!!

ஆனாலும் நீயோ பின் உண்ண உணவில்லை!!! உடுக்க ஆடை இல்லை!!!

ஆனாலும் நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம் கூவிக்கொண்டு இருக்கின்றாய்.

ஆனாலும் கூவிக்கொண்டு இருப்பதை எப்படி எதை என்று கூட யான் கத்திக் கொண்டிருக்கின்றேனே என்பதை கூட ஏன் முழு மனதாக ஏன் ஈசன் தரவில்லை????

ஆனாலும் அத்துறவி சொன்னான்!!!!!

அம்மையே பின் ஈசனை அழைப்பதற்கே ஒரு அருகதை வேண்டும்!!!!!

அவ் அருகதையை எந்தனுக்கு கொடுத்திருக்கின்றானே அதுவே பெரும் பாக்கியம்!!!!

அவந்தனை யான் அழைத்துக் கொண்டிருக்கின்றேன்!!!

அதுவே போதும் என்று கூற!!!

பின் மகனே!!!! என்று உடனடியாக ஈசன் இரங்கி விட்டான்!!!!

பார்வதி தேவி மாறுவேடத்தில் இதையன்றி..... இதனால் துறவியே உந்தனுக்கு என்ன வேண்டும்? என்று கேட்க.

பின் ஈசனே!!!! பார்வதி தேவியே!!!! பின் நீங்கள் இருவரும் பின் என் தாய் தந்தையராக இருங்கள் அதுவே போதுமானது என்று கூற!!!!

அத் துறவியை கட்டி தழுவிக் கொண்டனர் இருவரும்!!!!!


அப்பனே இவைதான் பக்தி மற்றவைகளெல்லாம் பக்திகள் ஆகாது!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

இவையன்றி கூற அப்பனே அதனால் எக்கஷ்டங்கள் வந்தாலும் இறைவனை அப்பனே பற்றி கொண்டு இருந்தாலே போதுமானது.

நிச்சயம் இறைவன் அன்போடு அணைத்துக் கொள்வான் அப்பனே!!!

அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே!!!

அப்பனே ஒருவன் பின் ஏழை குடிலில் பிறந்து பின் வறுமையாகவே வாழ்ந்து வந்தான்!!!!

ஆனால் அவந்தனுக்கு ஈசன் மீது பற்று அதிகம்!!!

ஈசனையே நாடி நாடி கொண்டிருந்தான் அப்பனே!!!

ஈசனே அனைத்தும்!!!!!

ஈசனே உலகம்!!!!!! என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆனாலும் அவனை பின் சனியவன் பிடிக்க வந்தான்.

ஆனாலும் சனியவனுக்கு சிறிது யோசனை!!!!

ஆனாலும் இவந்தன் ஈசனிடத்திலே இருக்கின்றானே!!!! எப்படி இவந்தனை பிடிக்க வேண்டும்???? என்று கூட... 

ஆனால் சிறிது தயங்கினான் சனியவனும்.

எப்படி பிடிக்கப் போகின்றோம்?? என்று!!!

ஆனாலும் சரி எதை என்று கூறாத அளவிற்கும் கூட அப்பனே இவையன்றி கூற இதனையும் பின் மறுக்காமல் சனீஸ்வரனும் அப்பனே பின் ஈசனிடம் சென்று விட்டான் அப்பனே.

ஆனாலும் ஈசனும்!!!.......

சனியவனே!!!!! வா !!!! வாரும் ஐயா!!! என்று கூட அழகாக அழைத்தான்.

அப்பனே இதையன்றி ஆனாலும் சனியவனே !!! ஈசனை பார்த்து எவை எவை என்று நினைக்கும் பொழுது ஐயா !!! வேண்டுகோள் !!!ஒரு வேண்டுகோள் என்று!!!!

பின் ஈசனும் தெரிவித்துவிடு!!!! சனியவனே!!!! என்று கூற!!!

ஆனாலும் அனைத்தும் இவ்வுலகத்தை காக்கும் நீ எவை எதனையும் என்று அறியாத அளவிற்கும் கூட உண்டு திறன்கள்.

அதனால் பின் உன்னையே நமச்சிவாயா நமச்சிவாயா என்று ஒருவன் பின் எண்ணிக்கொண்டே இருக்கின்றான்.

ஆனாலும் என் கடமையை யான் செய்ய வேண்டும்.
அவனை பிடிக்கப் போகின்றேன் என்று ஈசனிடம் பின் சனீஸ்வரனும் கூறினான்!!!

ஆனால் ஈசனோ!!! தன் கடமையை செய் என்று அழகாக கூறிவிட்டான்.

ஆனாலும் மிக்க சந்தோசம் சனியவனுக்கு!!!

பின் ஈசனுக்கு பக்தனாக இருந்தாலும் பின் பிடிக்க சொன்னானே என்று கூட மனதில். ஆனால் பிடித்து விடுவோம் என்று கூட!!!

ஆனாலும் ஈசனின் திருவிளையாடல்.

ஆனாலும் பின் அவ் மனிதன் எவை என்று கூட அவ் மனிதன் கூட பக்திமயமாகவே இருந்து பின்... ஓடோடி வந்து விட்டான் சனியவன் பிடிப்பதற்கு!!!!

ஆனால் பின் பின் பிடிக்க நேரிடும் பொழுது திடீரென்று ஈசனை பிடித்துக் கொண்டான்.அவ் மனிதன்!!! 

ஆனால் பின் சிறிது நேரம் பின் எதை என்று கூட கூறாத அளவிற்கு பொறுத்திருந்தான் சனியவன்!!! 

எப்பொழுதும் கூட ஈசன் இடத்தில் வந்து விடுவான் ஈசனிடம் சென்று பின் எதை என்று கூட அங்கே சென்றாலும் நம்தனக்கு தரித்தரம்!!!! இவந்தனை பிடித்தாலும் தரித்திரம் வந்துவிடுமோ??? என்று கூட!!! 

இதனால் பின் இத்தலத்திலே பின் அதனையும் உணர்ந்து உணர்ந்து இத்தலத்தில் ( ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் நும்பல் சென்னை) தான் அதுவும் நடந்தது!!!!! இன்று உரமாக கூறுவேன் யான்!!!

ஆனாலும் பின் உள்ளே பூசைகள் செய்து கொண்டிருந்தான். ஆனாலும் பின் சரியாக சனீஸ்வரனும் பின் பின் பின் பின்னாக சிறிது நேரம் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து மீண்டும் மீண்டும் காலங்கள்.

ஆனாலும் ஈசனோ அவன் மனதை மாற்றி இங்கேயே தங்கு!!! என்று கூட!!!.....

இதனால் பின் அவ்பக்தன் கருவறையிலே தங்கினான்!!!

ஆனாலும் சனீஸ்வரன் காத்துக் கொண்டிருந்தான் எப்படியாவது நிச்சயமாய் வெளியே வருவான் அங்கிருந்து பின் பிடித்துக் கொள்வோம் என்று கூட!!!

ஆனால் களைத்துப் போனான் சனியவனும்!!!! களைத்துப் போய் பின் உறங்கி விட்டான்.

ஆனாலும் அப்பொழுது அவந்தன் வெளியே வந்து திரும்பவும் பின் ஈசன் எதை எதை என்று கூட அழகாக உண்டு விட்டு பூக்களையும் பறித்து விட்டு பின் மீண்டும் உள்ளே மீண்டும் உள்ளே நுழைந்தான்!!!!

அப்பொழுதுதான் சனீஸ்வரன் திகைத்தான் பின் இன்னும் கூட உள்ளே தான் இருக்கின்றானா என்று!!!! எண்ணி!!! 

ஆனாலும் சனியவனுக்கும் கூட பின் வரட்டும்!!!! வரட்டும் வெளியே வரட்டும் என்று கூட!!!!

பின்பும் கூட அவந்தனும் உள்ளேயே பூஜைகள் செய்து கொண்டிருந்தான்!!!

இதனால் பல பல பல பல தினங்களும் பின் மாறிக்கொண்டே போய்க்கொண்டே இருந்தது.

ஆனாலும் அவந்தனை சனியவனால் பிடிக்கவே முடியவில்லை!!!!

இதனால் பின் தயங்கி சோர்ந்து போய் மீண்டும் ஈசனிடம் சென்றான் சனீஸ்வரன்.

ஐயனே!!! இதை என்று கூட உன் பக்தனை பின் என்னால் பிடிக்க முடியவில்லையே!!!!.... ஆனால் நீயோ கடமையைச் செய் !!!என்று கூட சொல்லி விட்டாய்!!!!

ஆனால் என்னால் பிடிக்க முடியவில்லை என்று கூற!! 

இதனால் பின் ஈசனும் சொன்னான் உண்மையான பக்தியும் அன்பும் இருந்தால் நிச்சயம் பிடித்து விடாதே சனியவனே!!!! என்று கூறி அனைத்தும் கொடு !!!என்று கூட இத்தலத்திலே நிச்சயம் இதை என்று கூற பின் அவந்தனுக்கும் அனைத்தும் அளித்தான்!!

இதையன்றி கூற  அவன் பின் ஆதி சங்கரன் என்று அழைத்துக் கொள்ளலாம்!!!

இதனால் அவந்தனுக்கு எப்படி எல்லாம் இங்கே பல வருடங்களாக சங்கரனும் தங்கி சென்று தான் இருந்தான்.

அவந்தனுக்கும் பல ஆசிகள் தந்துவிட்டான் ஈசன்!!!!

நல்முறையாகவே உண்டு உண்டு ஏற்றங்கள் என்பதற்கிணங்க அதனால் இன்னும் சொல்லப்போனால் எதை எதை என்று கூட யானும் ( அகத்திய பெருமான்) பல மாதங்களாக இங்கு தங்கி தங்கி பின் இருந்தேன்!!!பின் இவ்வூரிலே!!!! எப்படி எல்லாம் அநியாயங்கள் நடக்கும் என்பதை கூட முன்பே கணித்து விட்டேன்!!!

முதலில் அழிவுகள் வருவது இங்கிருந்து தான் வரும் என்பேன் சொல்லி விட்டேன்.

அழிவுகள் பின் கடந்து வந்து கொண்டே இருக்கின்றது நிச்சயம் அழிவுகள் வரும் வரும் என்பதை கூட ஆணித்தரமான ஒன்று!!!

ஒன்று!!! ஆனாலும் பக்திகள் இல்லையப்பா இவ் ஊரில் கூட!!!!!

இன்னும் கீழ்நோக்கியே செல்கின்றது!!!!! பொய்யான பக்திகள் உண்மையில்லை!!!!

உண்மையில்லை என்பதற்கிணங்க..... ஏதோ எதை என்று இறைவனை வணங்கினால் என்று கூட பின் இறைவனை வணங்கினால் எதை என்று அனைத்தும் கொடுத்து விடுவோம் என்ற எண்ணம்.

ஆனாலும் நிச்சயம் செல்லாது என்பேன்!!!

இது சித்தர்களின் ஆட்சி வரப்போகின்றது எதையென்று கூற யாங்களே பின் வழியும் நடத்துவோம்!!!! நிச்சயம் இவ்வுலகத்திற்கு பின் விடிவெள்ளி உண்டு!!!!

உண்டு!!!! எவரெவரை ?? தேர்ந்தெடுக்க வேண்டும்!!! எவரெவரை தேர்ந்தெடுத்து அவரவர் மூலம் நன்மைகள் செய்ய வேண்டும் என்பவையெல்லாம் யாங்கள் யோசித்து  விட்டோம்!!!!!

அதனால் நிச்சயம் நிச்சயம் மனிதர்களை நம்ப போவதில்லை!!!!

உண்மையான பக்திகள் உள்ளவன் கூட பொய்கள் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான்.

ஆனாலும் பல இவையன்றி கூற என் பக்தர்களை பார்த்தேன். பின் சுவடியை படிக்கின்றார்களா என்று கூட!!!!

ஆனாலும் சுவடிகளை படிக்கின்றார்களே பொய்களப்பா பொய்கள் பின் எவை என்று கூற அழகாக பொய்கள் சொல்லி கொண்டிருக்கின்றார்கள்.

இதையன்றி கூற எப்படியப்பா ??? பின் கடைக்காலங்களில் உங்களுக்கும் குடும்பங்கள் இருக்கின்றது என்பதை தெரியாமல் பின் பூசைகள் செய்தோம் அவை செய்தோம் இவை செய்தோம் என்றெல்லாம் பிழைப்பு நடத்தி!!!............. காசுக்காகவே!!!..... அப்பனே

அப்படியெல்லாம் நிச்சயம் இருந்து விடாதீர்கள் அப்பனே!!!!

ஒருவருக்கு நல்வழி காட்டுங்கள் அப்பனே அவ் நல்வழி காட்டினால்.... பெரும் புண்ணியமப்பா!!!

இயலாதவனுக்கு அப்பனே இதை என்று கூற தன்னால் முடிந்தவற்றை அப்பனே கொடுத்தாலே இறைவன் நிச்சயமாய் இறங்கி வருவான்!!!!

ஆனாலும் கண்ணப்ப நாயனாரும் அப்பனே அனைவரின் எதையன்றி அப்பனே..... அவனுடைய வாழ்க்கையும் நிச்சயம் அனைவரும் அறிந்ததே!!!!!!!

அதனால் தன்னிடம் இருந்ததை அப்பனே அவந்தன் இறைவனுக்கு கொடுத்தான்!!!! இறைவன் காட்சி அளித்தான்!!!

அதனால் அப்பனே இறைவன் உந்தனுக்கு எதை என்று கூட இறைவன் உன்னிடத்தில் இருந்து ஏதும் கேட்கவில்லை அப்பனே அன்பு ஒன்றைத்தான் கேட்கின்றான்!!!!

அதைக் கூட கொடுக்க முடியவில்லை, அப்பனே!!!!

அப்படி எதை என்று பின் இவற்றின் மூலம் அன்பு என்பதைக் கூட யான் அழகாக பின் கதையிலே கூறிவிட்டேன் அப்பனே.

இறைவனை இறைவா இறைவா என்று கூறிக் கொண்டே இருங்கள்!!!

உந்தனுக்கே தெரியும் அனைத்தும்!!!!! எந்தனுக்கு என்ன கொடுக்க வேண்டும்??? என்று கூட பின் அதை கொடுங்கள் போதுமானது என்பதை கூட.

இதனால் அப்பனே பல பல வழிகளில் வந்த அரசர்களும் அப்பனே இவ்வாலயத்தை வந்து நோக்கி அப்பனே பல வெற்றிகளையும் குவித்துள்ளார்கள் என்பேன் அப்பனே.

இதுவும் சாலச் சிறந்தது என்பேன் அப்பனே!!!!

ஆனால் தற்போது நிலைமைகள் மாறிவிட்டது அப்பனே!!!!

இறைவனை நம்புவதும் இல்லை தான் போன போக்கிலே சென்று கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே பின் அவ்வாறு பின் கடைசியில் கேட்டது நடந்தால் இறைவனை நோக்கி வருவதா?????????? அப்பனே!!!!

நியாயமா ????? அப்பனே!!!!!! இவையெல்லாம்!!!!!????........

அதனால் முதலில் இருந்தே அப்பனே இறைவனை பற்றிக் கொள்ளுங்கள் அப்பனே!!!!

கடைக் காலங்களில் அப்பனே இறைவா இறைவா என்றெல்லாம் சொல்லாதீர்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!
இறைவன் ஒன்றும் செய்ய மாட்டான் அப்பனே!!!!!

அதனால் முதலிலே நேர்மையை கடைப்பிடித்து அப்பனே உண்மையான பக்தியை கடைப்பிடித்து வந்தாலே போதுமானது என்பேன் அப்பனே!!!!

உயர்வான இடத்திற்கு செல்வீர்கள் என்பேன் அப்பனே!!!!

அதனால் தாம் தான் அப்பனே இவை என்று கூட அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் அப்பனே!!! பல வழிகளிலும் அன்னத்தை நீங்கள் அழகாகவே அப்பனே பின் எடுத்து செய்திருக்கின்றீர்கள் அப்பனே!!!!

அப்பொழுது யான் கூட வந்து வாங்கி உட்கொண்டேன் அப்பனே லோபா முத்திரையோடு !!!! அதனால் உங்கள் அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் என்பேன் அப்பனே!!!

அதனால் அப்பனே புண்ணியத்தை தேடி க்கொண்டே சென்றால் அப்பனே நிச்சயம் உயர்ந்து செல்வீர்கள் என்பேன் அப்பனே.

அதனால் இறைவன் எதை என்று கூட பின் கொடுக்க நினைத்தாலும் அப்பனே சிறிது காலம் எதை என்று கூட சோதனைகளை கொடுத்தாலும் இறைவா இறைவா என்பதை மறந்து விடாமல் அப்பனே சொல்லி க்கொண்டே இருந்தால் அப்பனே அனைத்தும் இறைவன் கொடுப்பான் அப்பனே!!!! இதுதான் எதையென்று கூட!!!

அதனால் விதியினை மாற்றும் சக்தி இவ்வுலகத்தில் எவருக்கும் இல்லை அப்பனே!!! நன்றாக தெரிவித்து விட்டேன்!!!!

ஏமாந்து விடாதீர்கள் அப்பனே!!!!

அதைச் செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் என்றெல்லாம் அப்பனே பின் அனைத்தும் பணத்திற்காகவே அப்பனே!!! 

பணம் எங்கிருக்கின்றதோ அங்கு நிச்சயமாய் இறைவன் இருக்க மாட்டான் என்பேன் அப்பனே!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அன்பை மட்டும் தான் இறைவன் எதிர்பார்க்கின்றான் அதை மட்டும் கொடுங்கள் அப்பனே!!!! 

போதுமானது அப்பனே!!!

நேர்மையாகவே எதை எதை என்றும் உலகிற்கு இன்னும் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் தரித்திர மனிதர்கள் அப்பனே என்னையும் வணங்கி அகத்தியா அகத்தியா என்றெல்லாம் கூறி அப்பனே இனியும் பொய் சொல்லி கொண்டு திரிந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே 

அவர்களை எல்லாம் அப்பனே எப்படி தண்டிப்பது????!?! என்று கூட!!!!

ஆனாலும் பின் கருணை உள்ளத்தோடு தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!! 

திரும்பவும் அப்பனே நிச்சயம் இதேபோல் செய்து கொண்டிருந்தால் அப்பனே மக்களை இவையன்றி கூற என்னை வைத்து ஏமாற்றி ஆனால் மக்களை ஏமாற்றுகின்றீர்களே!!!! மனிதர்களே....... இது பொய்களப்பா!!!!

அதனால் நிச்சயம் நம்பி விடாதீர்கள்!!!!!

எதையன்றி கூற நம்பி விட்டால்.. இறைவனை நம்புங்கள்!!!! திருத்தலங்களுக்குச் செல்லுங்கள் அமைதியாக தியானங்கள் மேற்கொள்ளுங்கள்!!!! நிச்சயமாய் இறைவன் வழியும் வகுப்பான்!!!!

அதை விட்டுவிட்டு அப்பனே அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்றெல்லாம் கூறிக் கொண்டிருப்பது தவறே என்பேன் அப்பனே!!! அது இறைவனுக்கே சாத்தியம் இல்லை என்பேன். அப்பனே. 

ஒன்றைக் கேட்கின்றேன் மனிதா!!!!

அனைத்தும் செய்கின்றாய் நீ என்ன இறைவனா????? எதை என்று கூற நீ சாதாரண மனிதனே!!!! அதனால் மனிதனை மனிதன் ஏமாற்றத்தான் கற்று உணர்ந்திருக்கின்றாய். 

இதனால் அப்பனே சரியாகவே தெரிந்து கொள் உன்னால் நிச்சயம் ஏதும் செய்ய இயலாது.

ஆனால் பிழைத்துக் கொள் இதுதான் உண்மை.

ஆனாலும் பிழைத்துக் கொண்டாலும் தற்போது நிலைமையில் அப்பனே அவ் தண்டனை கடைசியில் நீ அனுபவிக்க வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே அனைவருக்கும் கூட!!!

இதையன்றி கூற அதனால் அப்பனே நேர்மைகள் இல்லையப்பா அப்பனே கலியுகத்தில் அப்பனே அநியாயங்கள் தான் மிஞ்சப் போகின்றது என்பதை கூட யாங்கள் அறிந்து விட்டோம்.

அதனால் ஒவ்வொரு சித்தனும் அப்பனே நல்முறையாக ஆங்காங்கே எதையன்றி கூட பொய்யானதை எல்லாம் தடுத்து நிறுத்தி நேர்மையானதை ஏற்படுத்தி செய்வார்கள் அப்பனே.

நிச்சயம் இது நடக்கும் என்பேன் அப்பனே.

உண்மையானவர்களை நிச்சயம் யாங்களே அழைத்து கொள்வோம். 

கொள்வோம்!!!! அவர்களுக்கும் ஆசிகள் உண்டு என்போம் அப்பனே எதை என்று கூட அதனால் இன்னும் வாக்குகளும் தித்திக்கும் என்பேன் அப்பனே!!!!

நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் யாங்களே வருவோம்..தம் தன் இல்லத்திற்கு!!!!

இதை பல வாக்குகளிலும் செப்பி விட்டேன்!!!!

உண்மை இல்லை என்றால் அப்பனே யாங்கள் உங்களுக்கு எப்படி வாக்குகள் உரைப்பது ??! என்பதை கூட தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே நலமாகவே.

உண்டு உண்டு ஆசிகள் அதனால் அப்பனே இத்திருத்தலத்தில் அப்பனே ஆதிசங்கரனும் பல பேர்களுக்கு இவ்வாறு நடக்க வேண்டும் என்பதை அறிந்து இங்கே பல வழிகளில் மக்கள் வந்தனர்.

அவந்தனும் பல மக்களுக்கு பல சேவைகள் செய்தான் இப்படி இதையன்றி இப்படி பின் சென்றால் நலமாகவே நடக்கும் நடக்கும் என்று கூட.

ஆனால் பின் கடைசியில் பின் மனிதன் எவை என்று உணராமலே அப்பனே பின் அனைவரும் பிழைத்துக் கொள்வார்கள்!!....... என்பதற்கு ஏற்ப ஆதிசங்கரனையும் விரட்டி விட்டனர்!!!

அப்பனே இதுதான் பக்தியா ??????

கூறிக் கொள்ளுங்கள் அப்பனே இதை என்று நினைத்துக் கொள்ளுங்கள் இன்னும் பல ஆலயங்கள் இங்கே இருக்கின்றது அப்பனே 

ஒவ்வொரு இடத்தையும் யான் ஏற்படுத்தி விட்டேன் அப்பனே!!!

ஆனால் அங்கெல்லாம் பொய்கள் தான் நடந்து கொண்டிருக்கின்றது அப்பனே.

இதை முதலில் தீர்க்க வேண்டும் அப்பனே!!!

ஆனால் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் தற்போது நிலைமைக்கு !!!

ஆனால் பக்தனாகவே இருந்து திருடனாகவே இருக்கின்றான் அப்பனே அதுதான் அப்பனே வேதனைக்குரியது!!!!

அப்பனே பின் பின் எதை என்று இன்னும் பல விளக்கங்கள் உண்டு என்பேன் அப்பனே.

இவ்வாலயத்திலும் பல சக்திகள் அப்பனே பின் தொடர்ந்து வழிபட்டு வந்தாலே எம்முடைய ஆசிகள் கிடைக்கும் என்பேன்.... சித்தர்களும் வழி வகுப்பார்கள் என்பேன்.

அப்பனே பின் எப்படி சனீஸ்வரன் அப்பனே எதை என்று கூட அவந்தனையும் பிடிக்க ஆனால் விட்டு விட்டான் கடைசியில்.

அதனால் திருத்தலத்திற்கு வருபவர்களுக்கும் சனீஸ்வரன் நிச்சயம் தாக்க மாட்டான் என்பேன் அப்பனே.

நல் உள்ளத்தோடு உயர்ந்த எண்ணத்தோடு இருங்கள் அப்பனே போதுமானது என்பேன்!!!

அவை விட்டுவிட்டு இறைவா இறைவா அனைத்தும் செய்து விட்டு இறைவா இறைவா என்று கூவிக் கொண்டிருந்தாலும் நிச்சயம் இறைவன்  பின் செவியால் உன் நாமத்தை கேட்கவும் கேட்கப் போவதும் இல்லை செப்பி விட்டேன் அப்பனே. 

அதனால் இன்னும் நலன்கள் ஏற்பட ஏற்பட இப்புவியில் அப்பனே யாங்களே பல வழிகளில் நன்மைகள் செய்வோம் என்பேன்.

ஈசனே நிச்சயம் மனித ரூபத்தில் வருவான் என்பேன் வரும் காலங்களில் அப்பனே. 

நிச்சயம் எதையன்றி கூற அப்படி திருந்தாவிடிலும் அப்பனே நிச்சயம் அழிவுகள் உண்டு என்பேன் அப்பனே.

அதனால் திருந்திக் கொள்ளுங்கள் அப்பனே இன்னும் இன்னும் இயற்கையை அப்பனே எவ்வாறு என்பதையும் கூட இயற்கையை வைத்தே நிச்சயம் ஈசன் விளையாடப் போகின்றான் என்பதை கூட சரியாக கணித்துவிட்டேன் யான்!!!!!

அதனால் அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் இருக்கும் பொழுது எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது என்பேன் அப்பனே.

நல்விதமாக நீங்களும் பலமுறை இங்கு வந்து சென்று கொண்டு தான்  இருக்கின்றீர்கள்.... உங்களையும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே. 

நலமாகவே நலமாகவே ஆசிகள் உண்டு அப்பனே அனைத்தையும் செய்து தருகின்றேன் அப்பனே காலம் போன போக்கில் அப்பனே.

ஆனாலும் விதியின் பாதையையும் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் அப்பனே சில சில போராட்டங்கள் தான் இருந்து கொண்டிருக்கின்றது அப்பனே அதையும் யான் மாற்றுவேன் அப்பனே!!!

என்னாலும் விதியின் மாற்றத்தை நிச்சயமாய் உணர்த்த முடியும் என்பேன் நிச்சயமாய் யான் மாற்றி அமைப்பேன் அப்பனே. பொறுமையாக இருந்தால் அப்பனே அனைத்தும் சாதித்துக் கொள்ளலாம் எளிமையாகவே. 


அப்பனே நலமாகவே எம்முடைய ஆசிகள் அப்பனே மறுவாக்கும் கூறுகின்றேன் அப்பனே!!!!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே !!!!

அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில் தற்பொழுது திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது தற்போது கோசலை பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கோசலை அமைப்பதற்கு நன்கொடைகள் தேவைப்படுகின்றது. நம் குருநாதருடைய இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நன்கொடை செய்வதற்கு விருப்பமுள்ள அடியவர்கள் கோயில் தர்மகர்த்தா தர்மராஜ் ஐயா அவர்களை தொடர்பு கொண்டு உதவிகள் செய்யலாம்.

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகத்தீசுவரர் ஆலயம் நும்பல், சென்னை 600 007

G pay No..9840183464
தர்மகர்த்தா G.B சுந்தர்ராஜ் 9840123464

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......தொடரும்! 

3 comments:

  1. ஓம் அகத்திசாய நம🙏🙏🙏🙏.

    ReplyDelete
  2. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  3. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
    ஓம் ஓதியப்பர் திருவடிகள் சரணம்

    ReplyDelete