​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 3 September 2023

சித்தன் அருள் - 1426 - அனபுடன் அகத்தியர் - ஓதிமலை பொதுவாக்கு!






ஓதி மலையில் வைகாசி விசாகத் தன்று குருநாதர் உரைத்த வாக்குகளின் தொடர்ச்சி!!!!

ஒரு பெண் பக்தர். 

குருவே தியானத்தின் வழியாக முன்னேறுவதற்கு என்ன வழி???

அம்மையே எதை என்று அறிய அறிய நிச்சயம் கிடைக்கும் தாயே பந்த பாசங்கள் எதை என்று அறிய அறிய அம்மையே அதற்காகத்தான் பிறந்தவள் நீ ஆனால் அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்தால் ஒன்றும் நடக்கபோவதில்லை!!! 

அம்மையே எவை என்றும் அறிய அறிய உன் குழந்தை பெரியவன் அழகாக உன் முன்னே நிற்கின்றான் பார்!!!!!( ஓதியப்பர்) 

அம்மையே எவை என்று அறிய அறிய உன் குழந்தை இருக்கும் பொழுது என்ன கவலை அம்மையே ஆனால் நீ தான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றாய்!!!!

அம்மையே எதை என்று அறிய அறிய உன் குழந்தை அனைவருக்கும் அருள் ஆசிகள் கொடுப்பவன் எதை என்று அறிய அறிய அதனால் எதையும் கேட்டு விடாதே முருகனை குழந்தையாக ஏற்றுக் கொள்!!!!

ஒருபக்தர் !!

குருவே என் தாய் தந்தை நன்றாக இருக்க வேண்டும்

அப்பனே அனைவரும் தாய் தந்தையும் நன்றாக இருக்க வேண்டும் என்று நீ எண்ணு!! உன் தாய் தந்தையர் நிச்சயம் நலமாக இருப்பார்கள் அப்பனே!!!

எதை என்று கூட திருமணம் ஆகவில்லை என்றெல்லாம் எவை என்று அறிய அறிய என் மகனுக்கு திருமணம் ஆகவில்லை என் மகளுக்கு திருமணமாகவில்லை என்றெல்லாம்

மாமிசத்தை விட்டோழியுங்கள் முதலில்!!!!

ஆனாலும் பின் எதை என்று அறிய அறிய நீங்கள் கேட்கலாம் !!!அனைவரும் உண்ணுகின்றார்களே அவர்களுக்கு மட்டும் எப்படி திருமணம் என்று ஆனால் இவர்களுக்கு ஞான பாதை தான் வேண்டுமென்று கேட்டு வந்தவர்கள் ஆனாலும் தெரியாமல் புரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் இவ்வாறு இருக்க எவ்வாறு நற்பலன்கள் ஏற்படும்????

ஆனால் விதியினை சரியாக ஆராய்ந்து எவை என்றும் அறிய அறிய தெரிந்து கொண்டாலே மனிதனுக்கு பிரச்சனைகளே இல்லை ஆனாலும் அவ் விதியைக் கூட யாங்கள் சொல்ல முடியும்!!!!!! அதற்கும் புண்ணியங்கள் வேண்டும்!!!

மனிதனுக்கு புண்ணியங்கள் செய்ய தெரியவில்லை!!!

அதனால்தான் அப்பனே மனிதனுக்கு கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம் அப்பனே எதை என்று கூட அப்பனே விதியினை ஒரு மனிதனுக்கு தெரிந்து விட்டால் அப்பனே கஷ்டம் என்பதே இல்லை!!!

ஆனாலும் அதற்கும் பரிகாரங்கள் எதை என்று கூட அப்பனே பரிகாரங்கள் என்பது யான் புண்ணியங்கள் என்றுதான் இங்கு சொன்னேன் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே தாம் தான் எதை என்று அறிய அறிய அப்பனே தன்னால் முடிந்தவரை ஏதாவது ஒரு புண்ணியத்தை செய்து கொண்டு இருந்தாலே அப்பனே எதை என்று கூட என்னால் முடியாது என்ற போதிலும் அப்பனே சிறு எறும்புகளுக்கு கூட உணவுகள் அளித்துக் கொண்டு வந்தாலே அதுவும் பெரும் புண்ணியமப்பா!!!!

அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அறிய இங்கு எவை என்று திருமணம் ஆகாதவர் அனைவருமே எதை என்று அறிய அறிய இறைவா உன்னையே நினைத்துக் கொள்ள வேண்டும் எதை என்றும் அறிய அறிய உன் காலடியிலே பின் எவை என்று அறிய கடைநாள் வரையிலும்  இருக்க வேண்டும் எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை என்று அறிந்தும் அறிந்தும் அதனால் நிச்சயம் உன்னை பாட வேண்டும் பின் திருத்தலம் திருத்தலமாக அலைய வேண்டும் என்றெல்லாம் கேட்டு வந்தவர்கள் !!!

ஆனால் திருமணம் ஆகவில்லையே என்று இப்படித்தான் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்!!!

ஆனால் திருமணங்களோ முருகன் தான் செய்ய வேண்டும் எவை என்றும் அறிய அறிய நிச்சயம் நடக்கும் முருகனை வேண்டிக் கொள்ளுங்கள்!!!

ஒரு பக்தர். 

முருகனுடைய ஆசிகள் வேண்டும்!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய முருக பெருமான்!!!! அப்பனே எப்பொழுதோ ஆசிகள் கொடுத்து விட்டான்!!! நம்பிக்கை இல்லையப்பா நம்பிக்கை இல்லாமல் தான் நீ கேட்கின்றாய் அப்பனே

ஒரு பக்தர் 

குருவே நான் இனி எப்படி இருக்க வேண்டும்???

அப்பனே ஆடிய ஆட்டம் என்ன??? அப்பனே எதை என்றும் அறிய அறிய பாடிய பாட்டங்கள் என்னென்ன??? குத்தாட்டங்கள் என்ன???

அப்பனே முருகன் பார்த்துக் கொண்டே தான் இருந்தான் அப்பனே!!! கடைசியில் வந்து விட்டாய் அப்பனே இரு !! இப்படியே!!!!!

நலம் அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே கேள் என்பேன் அப்பனே!!! 

இனி நான் எந்த மாதிரியான வழிபாட்டு முறைகள் செய்ய வேண்டும்

யான் எதைச் சொன்னாலும் நீ செய்ய மாட்டாய் அப்பனே இப்படியே சோம்பேறியாக இருந்து விடுவாய் அப்பனே!!

குருவே புத்திகள் நல்லபடியாக  கொடுக்க வேண்டும்

அப்பனே எதை என்று அறிய அறிய கவலைகள் இல்லை அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே முருகன் ஏற்கனவே உன் மண்டையில் தட்டி சில புத்திகளை கொடுத்துள்ளான் அப்பனே அதை வைத்துக்கொண்டு பிழைத்துக் கொள் அப்பனே!! 

மௌனத்தை கடைபிடி அப்பனே எதை என்று அறிய அறிய உன் வாயைத் திறந்தாலே பொய்யப்பா சண்டைகள் அப்பா.

அப்பனே அடுக்கடுக்காக கதைகள் வேறு அப்பனே கவலைகள் இல்லை அனைத்தும் முருகன் உன்னை பார்த்து நகைத்திட்டான் அப்பனே ஆனாலும் திருத்துவான் அப்பனே கவலைகள் விடு.

ஆலய அர்ச்சகர்.

குருவே  நமஸ்காரம் சமீப காலமாக அதாவது என்னுடைய தந்தையார் காலத்தில் இருந்து ஓதி மலையில் துர் மரணங்கள் சம்பவித்ததில்லை... ஆனால் கடந்த மூன்று வருடங்களாக மூன்று பேர் மலையிலேயே மரணம் அடைந்து விட்டனர் அது எங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகின்றது ஏதாவது தெய்வ குற்றமா???

அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய கவலைகளை விடு அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே பிறப்பு என்று ஒன்று இருந்தால் நிச்சயம் இறப்பு என்று ஒன்று இருக்கும் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதைப் பற்றி நீ கவலைப்பட தேவையில்லை என்பேன் அப்பனே நீ வெறும் கருவிதானப்பா இயக்குபவன் முருகன் என்பேன் அப்பனே முருகன் பார்த்துக் கொள்வான் அப்பனே உனக்கு ஏது கவலை அப்பனே முருகன் தான் கவலைப்பட வேண்டும் ஆனால் கவலைப்பட போவதில்லை முருகன் அப்பனே எதை என்று அறிய அறிய யார் யாருக்கு எங்கு பிராப்த்தமோ (முக்தி) அங்கு தான் அங்கு தான் முடியும் என்பேன் அப்பனே கவலைகள் விடு அப்பனே முருகன் பார்த்துக் கொள்வான் அப்பனே!!!

ஒரு பக்தர் 

குருவே எனக்குத் தொழில் நன்றாக அமையவில்லை

அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய முருகனுக்கு சேவை செய்!!! இதுவே பெரிய தொழில் அப்பனே பின்பு அனைத்தும் கொடுப்பான் முருகன் ஆனாலும் எதை என்று அறிய அறிய யோசிப்பாய் அப்பனே செய்யலாமா?? என்று!!!!

ஒரு பக்தர் 

குருவே பக்தி நான் எப்படி செலுத்த வேண்டும்??

அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய 

அப்பனே
 ஏறு!!!! ஏறு!!!!! மலையை ஏறு!! ஏறு!!

அப்பனே ஓதிக் கொண்டே வா முருகன் பாடல்களை நிச்சயம் உயர்வு பெறுவாய்!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் கொடுப்பான் மகனே எதை என்றும் அறிய அறிய ஆனால் கைவிடமாட்டான் முருகன்!!!!

ஒரு பக்தர் 

குருவே என் அம்மாவின் நிலை குறித்து!!! 

அப்பனே உன் தாயை நீ நன்றாக பார்த்துக் கொண்டாலே போதுமானது அப்பனே !!

அனைவருக்குமே இவ் பதில் தான் என்பேன் அப்பனே!!அப்பனே குடும்பத்தில் சண்டைகள் இட்டுக்கொண்டு அப்பனே முருகனை தேடி வருவதா என்ன???  அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பேன் அப்பனே!!!  சொல்லிவிட்டேன் அப்பனே!!!  இது அனைவருக்குமே பொருந்தும் அப்பனே!!!

ஒரு பெண்பக்தை 

குருவே பூர்விகத்தில் வீடு கட்டலாமா???? 

அம்மையே நீ எங்கு வேண்டுமானாலும் கட்டலாம் யோகம் உண்டு!!!!

ஒரு பக்தர் 

குருவே பூர்வீக சொத்தை விக்கலாமா????

அப்பனே எதை எதை என்று அறிய அறிய நீ அனைத்தையும் விற்று நடுத்தெருவில் வருகின்றாயா என்ன???

அப்பனே எதை என்று அறிய அறிய முருகன் விட்டு விடமாட்டான் என்பேன் உன்னை ஆனாலும் என்னென்ன லீலைகள் செய்தாய் என்பதை கூட யான் அறிவேன்!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே நல்விதமாகவே ஆனாலும் இதுவே கடைப்பிறப்பாகும் உந்தனுக்கு. 

குருவே உடல் நிலை சரியில்லாமல் இருக்கின்றேன. 

அப்பனே யான் கூறிய மூலிகைகளை எடுத்துக் கொள்!!!!

குருவே குடும்பத்தில் பிரச்சனைகள்

எதற்கு விட்டுப் போகின்றது உறவுகள்???? சொல் மகனே!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் மனிதனை எதை என்று கூற பிரச்சனைகளுக்கு காரணம் என்பேன் அப்பனே மனிதன் அமைதியாக வாயை வைத்துக் கொண்டாலே போதுமானது அப்பனே பிரச்சனைகளும் வராது எதுவும் வராது அப்பனே!!!!

குருவே எனக்கு உத்யோகங்கள் இல்லை

அப்பனே எதை என்று அறிய அறிய உத்தியோகங்களா அப்பனே அமைதியாக நண்பர்களிடம் போய் எதை என்று அறிய அறிய ஊர் சுற்று அப்பனே உபயோகம் வந்துவிடும்!!!!

ஓதிமலை அடிக்கடி வந்து செல்கின்றேன்!!!

நிச்சயம் அப்பனே பொறுத்திருக!!! 
பொறுத்திருக!!!

குருவே எனக்குத் திருமணம்??? 

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து 

"""இங்கு தலைவன்!!! இருக்கின்றான்!!!! அப்பனே!!
முருகனுக்கு எதை என்று அறிஅறிய கருவியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றானே அவனிடத்தில் அடிக்கடி கேட்டுக் கொண்டே இரு!!!

( அதாவது ஓதிமலைக்கு அடிக்கடி வந்து முருகனை வணங்கி முருகனுக்கு கைங்கரியம் செய்யும் அர்ச்சகரிடம் பேசிக் கொண்டே... வா !!! அவர் மூலம் முருகன் உணர்த்துவார் என்பதை குருநாதர் இங்கு கூறுகின்றார்)

ஒரு பக்தர் 

குருவே எனக்கு வாக்குகள் தாருங்கள் 

அப்பனே முருகன் உன்னை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் கவலைகள் இல்லை உன் உடலுக்கும் பிரச்சினை இல்லை அப்பனே உன் உடம்பு இரும்பு!!!!!

ஒரு பெண்பக்தைக்கு

அம்மையே முருகனை பிடி!!!! நன்றாகவே!!!!!   சஷ்டி தனில் விரதம் இரு!!!

குருவே மகனின் கல்வி நிலை குறித்து!!! 

அம்மையே எதை என்று அறிய அறிய பெற்றால்தான் பிள்ளையா!!! அம்மையே!!!

உன் மகன் மீதே உந்தனுக்கு நம்பிக்கை இல்லை!!!! என்னை கேட்கின்றாய் அம்மையே!!!

அடித்து !!உதைத்து!! அம்மையே படிக்க வை!!!

குருவே இங்கு புத்திர பாக்கியம் இல்லாதோர் வந்துள்ளனர் அவர்களுக்கு குருநாதர் உபதேசங்கள் கூற வேண்டும்

எதை என்று அறிய அறிய அப்பனே முருகன் எதை என்று அறியாமலே நிச்சயம் கொடுப்பான் என்றேன் அப்பனே அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அப்பனே முருகன் எதை என்று கூட சிறிது தாமதித்து தான் திருமணம் நடக்கும் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அவ்வாறு முருகன் அருளால் பிறந்த குழந்தையும் கூட இங்கே இருக்கின்றாள் !!!

அதனால் அவளுக்கு கூட தாமதமாகித்தான் சென்றுகொண்டிருகின்றது அப்பனே!! 

ஒரு இளம் பெண் முன்னே வந்து அமர!!!!!! அவரது குடும்பமும் அமர!!! 

அம்மையே எதை என்று அறிய அறிய உந்தனைத்தான் யான் சொன்னேன் அம்மையே ஞான மார்க்கம் உந்தனுக்கு சிறந்தது அப்பனே எதை என்று அறிய அறிய அழகாகவே முருகன் உங்கள் இல்லத்திலே இருக்கின்றான் அப்பனே

அம்மையே இதனால் கவலைகள் இல்லை எதை என்று அறிய அறிய உன் வாழ்க்கை எவை என்று அறிய அறிய முருகன் பார்த்துக் கொள்வான் அம்மையே ஓர் பிறவியில் முருகனை பின் நினைத்து நினைத்து உருகி முருகனை வழிபட்டுக் கொண்டு வந்தாய் அதனால் இப்பிறப்பிலும்கூட முருகனை நிச்சயம் நீ பிடிப்பாய் என்பேன் அம்மையே!!!

முருகன் உன்னை தன் பிள்ளையாக எண்ணி அனைத்தும் உந்தனுக்கு தருவான்!!!! 

அம்மையே அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் கலியுகத்தில் அம்மையே வாழ்வதே கடினம் தான் அனைவருக்கும் சொல்கின்றேன் ஆனாலும் எதை என்றும் அறிய அறிய பார்த்து பார்த்து தான் செய்வான் முருகன் உந்தனுக்கு!!!!

அதனால் அப்பனே குறைகள் இல்லை முன்னோர்கள் ஆசிகளும் குல தெய்வத்தின் அருளும் மிகுந்து காணப்படுவதால் அனைத்தும் நடக்கும் மகனே!!!!

ஒரு பெண் பக்தை குருவே வீடு  எங்கள் பெயருக்கு மாற்றம் செய்யலாமா

அம்மையே இதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை அம்மையே இவ்வுலகத்தில் எப்படி எல்லாம் வாழலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் நீ இப்படி கேள்வி கேட்கின்றாயே இது நியாயமா????

எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் இன்றளவு முருகன் அனைவருக்குமே வந்து ஆசிகள் கொடுத்திட்டான் அப்பனே

அனைவருக்கும் தம்தன் மனதில் உள்ள எண்ணங்கள் நிச்சயம் நிறைவேறும் ஆனாலும் தாமதம் ஆகலாமே தவிர நிச்சயம் நிறைவேறும் அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகள்

யானும்!!!! எந்தனுக்கும் பல வேலைகள் !!! தியானத்தில் மூழ்க வேண்டும் அப்பனே அப்பனே ஆசிகள் ஆசிகள் கோடிகளப்பா!!!!

ஓதிமலை வாக்குகள் முற்றே!!!!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் தம் திருவாய் மலர்ந்து ஓதிமலையின் சிறப்பு குறித்து ஓதிய  பா!!!! 

சங்கரனுக்கு, சரவணகுகன் ஓதிய கிரி !!!!!

சங்கடப்பட்ட பல்மாந்தர்கள் தலைவிதி மாறிய கிரி !!!

சபலங்கள்,சலனங்கள் விட்டு ஓடிடும் கிரி !!!

சிறப்பில்லா முன்வினை ஊழ்பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி !!!

சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி !!!

சிறப்போ,சிறப்பில்லையோ,பேதம் பார்க்கா வாழ்க்கையை ஏற்க வைக்கும் கிரி !!!

சப்த கன்னியர்கள்,அன்னையோடு,அன்னை அருளால் அருளும் கிரி !!!

 செப்புங்கால்,
பஞ்சமும் அடங்க, பஞ்சவதனத்தோன் அருளும் கிரி !!!

சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன் அருளால் இருந்திட்டாலும்,குன்றுக்கெல்லாம் உயர் குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி !!!

அன்னையோடு,ஐயன் அமர்ந்து அன்றும்,இன்றும்,என்றும் அருளும் கிரி !!!

நீறு வேறு, நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு,
நீறு பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி !!!

கட்டிய கணவன் காதில் ரகசியமாய் மனையாள் ஓதினாலும்,
கட்டிய மனைவி ஓதுகிறாளே என்று தாய் ஓதினாலும்,
உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதை ஓதினாலும்
மாந்த குரு சிஷ்யனுக்கு ஓதினாலும்
அனைத்திலும் பேதமுண்டு!!!
.சுயநல நோக்குண்டு !!

பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக !!!
ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக,
நேத்திரத்தில் கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க,!!!
அறுவதனமும் ஐவதனமாகி,
எழு பிறப்பும் எட்டென விரட்டி,
உபயவினையும் இல்லாது ஒழித்து,
சூல நேத்திரத்தோன் திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து,
அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி
ஒருமுகமாய், திருமுகமாய், ஒரு நினைவாய் மாந்தன் வாழ அருளும் கிரி.!!!!

ஞானத்தை நல்கும் கிரி !!!

அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் கிரி !!!

பேதத்தை நீக்கும் கிரி !!!

வேதத்தை உணர்த்தும் கிரி !!!

சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி !!!

நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி !!!

வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி !!!

எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி !!!

கர்ம நிலைகளை மாற்றும் கிரி !!!

அக உளைச்சல் ஒழிக்கும் கிரி !!!

பேதம் காட்டாத வேத கிரி !!!

ஓம் எனும் பிரணவம் ஒலிக்கும் நாத கிரி !!!

இளையவன் திருவடி பாதம் படிந்த கிரி !!!

அன்னை நிரந்தரமாய் அருளும் கிரி !!!

ஐயனோடு இன்று அனைவரும் இருக்கும் கிரி !!!

ஓதும் கிரி !!!! அது ஓதிய கிரி !!!

பேதம் தவிர்த்து பிரணவநாதம் கலந்து ஒலிக்கும் கிரி !!!

ஓம் நமகுமாராய !

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  2. om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  3. ஓம் ஓதியப்பர் திருவடிகள் சரணம்

    ReplyDelete