​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 30 April 2023

சித்தன் அருள் - 1330 - அகத்தியப்பெருமானின் பொதுவாக்குக்கான கேள்விகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இதற்கு முன் நம் குருநாதர் பலமுறை அகத்தியர் அடியவர்களின், பொதுவான கேள்விகளுக்கு திரு. ஜானகிராமனிடம் உள்ள ஜீவநாடி வழி, பதில் உரைத்துள்ளார். ஆன்மிகம், கோவில்கள், பெரியவர்களின் வாக்குகளுக்கு. பொதுவான பதில்களை நாம் அவரிடம் கேட்கலாம். பொதுவாக்கின் உள்ளே தனிப்பட்ட விஷயங்களை திணித்து கேட்பதற்கு வழியில்லை.

கூடிய விரைவில், அகத்தியப்பெருமானை நாடியில் சந்தித்து, சந்தேகம் தீர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பு அடியேனுக்கு அமையும் என நினைக்கிறேன். ஆகவே, அகத்தியப்பெருமானிடம் பொது விஷயங்களில் கேள்வி கேட்க விரும்புகிறவர்கள் agnilingamarunachalam@gmail.com என்கிற மெயில்க்கு தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கேள்விகள் 

  1. பொது விஷயமாக இருக்கட்டும்!
  2. கேள்விகள் சுருக்கமாக தெளிவாக இருக்க வேண்டும்!  
  3. தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் தெளிவாக தட்டச்சு செய்யலாம்.
  4. தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான கேள்விகளை அனுப்ப வேண்டாம்! அடியேன் விலக்கிவிடுவேன், பின்னர் அடியேனை திட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
  5. கேள்வி கேட்டவரின் பெயர். ஊர், தொடர்பு விஷயங்கள் எந்த காரணத்தாலும் சித்தன் அருள் வலைப்பதிவில் வெளியிடப்படாது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பிக்கப்படும்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: