​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 4 April 2023

சித்தன் அருள் - 1317 - திருவாசகம் ஓதுக!



*அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - திருவாசகத்தை பள்ளி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க அதனால் உண்டாகும் அளவிட  இயலாபுண்ணியங்கள்*

அப்பனே நலமாக நலமாக என்னுடைய ஆசிகள் இருக்கும்பொழுது நலமாகவே இன்னும் சிறப்புக்கள் தோன்றும் என்பேன் அப்பனே. நல்முறையாக அப்பனே யானும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் *அங்கே வாசகத்தை ( திருவாசகம்) அப்பனே குழந்தைகள் பாடும் பொழுது. அவர்களுக்கும் நல் ஆசிகள். இன்னும் உயரச்செய்ய வேண்டும். யானும் பலமுயற்சிக்கு எதை எதை என்று கூற அப்பனே இதைத்தன் தொடரந்து செய்ய புண்ணியங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே. இன்னும் அதை சுற்றி நல்விதமாக உயர் பெரியோரின் அப்பனே ஆசிகள் கிடைத்து இன்னும் பன்மடங்கு ஆகட்டும் என்பது கூட எனது ஆசிகள் என்பேன் அப்பனே.*

எவையன்றி கூற வரும் காலங்களில் இதற்க்கும் சம்பந்தம் ஆன சில மனிதர்கள் அப்பனே வருவார்களப்பா. எதை எதை என்று கூற இதற்க்கும் கடைக்க( கலைக்க )  ஆனாலும் அப்பனே நிச்சயமாய் யான் விடவும் மாட்டேன் என்பேன். *இன்னும் பல பல தளங்களிலும் ( பல பல ஆலயங்களிலும் ) இதனை நிச்சயம் இயற்றவேண்டும் ( தினமும் திருவாசகம் பாராயணம் செய்ய வேண்டும் ) என்பேன் அப்பனே. அப்போதுதான் இறைவன் நிச்சயம் நல்முறையாக ஆசிகள் கொடுத்துக்கொண்டே வருவான் என்பேன் அப்பனே.*

அப்பனே இன்னும் இன்னும் ஒவ்வொரு வாக்கில் ஒவ்வொரு சிறப்பை யான் கற்பித்தே வருகின்றேன் அப்பனே நல்முறைகளாகவே உண்டு உண்டு என்பேன் அப்பனே. *இதனால் நால்வரும் ( அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ) இங்கே ( மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் ) வந்து மகிழ்சியாக தங்கிவிடுகின்றனர் அப்பனே என்பேன் அப்பனே. எவர்களது இந்த குழந்தைகள் பாடும் பாடலை பார்த்து அவைகளுக்கும் ( நால்வர்களுக்கும் ) மிக்க சந்தோசங்களப்பா சொல்லிவிட்டேன். எவை எவை என்று கூற அதனால் அப்பனே எவை என்றுகூற உயர் ஞானிகளுக்கு எது சந்தோஷமோ அதையும் அப்பனே நல்விதமாக ஆக்கினால் அவர்கள் வாழ்க வாழ்க என்று சொல்ல ( வாழ்த்த ) நிச்சயமாய் அப்பனே பல கர்மங்கள் போய்விடும் ( அங்கு அமர்ந்து இந்த பாடல்களை பாடும் அனைவருக்கும் - குறிப்பாக குழந்தைகள் ) இவை மனிதர்களுக்கு அப்பனே எப்படி செப்புவது அப்பனே.*

சிறு வயதில் இருந்தே தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் அப்பனே நல்விதமாக எதை எதை என்று கூற அதனால் அப்பனே தர்மத்தை கடைபிடிக்க கடைபிடிக்க எதாவது எதையன்றி கூற அப்பனே நல்முறையாக திருவாசகத்தையும், தேவாரப்பாடல்களையும் பாடி வந்தால் அவர்களுக்கு தானாகவே தர்மத்தை பிடிக்க நல்விதமாக மாறும் என்பேன் அதனால் அப்பனே தெரிவித்துக் கொண்டேன் அப்பனே தர்மத்தை (சிறுவர்களைக் கொண்டே) பிடிக்கப் பிடிக்க இன்னும் மாற்றங்கள் உண்டு என்பேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment