​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 23 April 2023

சித்தன் அருள் - 1327 - அன்புடன் அகத்தியர் - அக்ஷயத்ரிதியை வாக்கு!

 



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

மனிதர்களாகிய நாம் நாம் கேட்டு உணர்ந்ததை!!! படித்ததை!!! மற்றவரிடமிருந்து தகவல்களாக கிடைப்பதை அடிப்படையாகக் கொண்டே ஒவ்வொரு நாட்களும் சரி விசேஷ தினங்களிலும் சரி அதை அப்படியே பின்பற்றி வருகின்றோம் ஆனால் அவையெல்லாம் மனிதர்களால் பொய்யாக உருவாக்கப்பட்டவை!!!!

சரியான உண்மைகளை மறைத்து பொய்யாக மாற்றி வைத்து விட்டனர் என்பதை குருநாதர் அகத்தியர் பெருமான் ஒவ்வொரு வாக்கிலும்.....

மனிதர்கள் நாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் தவறு !!!!!

உண்மை என்பது என்ன ? என்பதை வாக்குகளில் தந்து நமக்கு புத்தி உரைத்துக் கொண்டே வருகின்றார்!!

அதுபோல இன்றைய நாள் அட்சய திருதியை நாள் குறித்தும் இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்தும் குருநாதர் வாக்குகளாக திருவாய் மலர்ந்தருளினார்!!!!

அவ் வாக்குகள் பின்வருமாறு!!!!!!!

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்!!!

அப்பனே நலன்கள்!! நலன்கள்!!

இவையன்றி கூற அப்பனே மனிதன் இறைவன் எழுதிய விதிகளை அப்பனே தன் இஷ்டத்திற்கு தகுந்தார் போல் மாற்றிக்கொண்டு தானும் கெடுவதோடு மற்றவரையும் கெடுத்து விடுகின்றான் அப்பனே இதனால் தரித்திரங்கள் அப்பனே!!

அப்பனே இன்றைய அட்சய இவையன்றி கூற நாளில் பொன்னும் பொருளும் வாங்கினால் அனைத்தும் கிட்டுமாம்!!!!!

பொய்களப்பா அனைத்தும் பொய்களப்பா!!! 

வீணான பேச்சுக்கள் என்பதைக்கூட  அப்பனே !!!! இவையென்று உணர்ந்து உணர்ந்து!!!! 

அப்பனே மனிதனின் எண்ணங்கள் இவ்வாறெல்லாம் போய்க் கொண்டிருக்கின்றது என்று சித்தர்கள் யாங்கள் அடிக்கடி வந்து வாக்குகள் செப்பினாலும் மனிதன் அதை ஏற்ப்பதே இல்லை என்பேன் அப்பனே!!!

இதனால் கஷ்டம் என்பதை கூட உணர உணர!!!!! 

அப்பனே!!!! அனைத்தையும் மனிதன் மாற்றி விட்டான் இன்றைய நாளில் தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்தால் புண்ணியம் பெருகும் அப்பா!!!!

இயலாதவர்களுக்கு நல்மனதுடன் இன்றைய நாளில் உதவிகள் அப்பனே செய்யும் பொழுது அவர்கள் மனம் மகிழ்ந்து வாழ்த்தும் பொழுது உங்களுடைய புண்ணியங்கள் பெருகிக்கொண்டே போகும் அப்பனே!!!! கர்மங்கள் அழியும் அப்பனே!!!!! இதைத்தான் முன்னோர்கள் இவை என்று கூற.    """ அட்சய!!!!!! ... அப்பனே  எதை என்று அப்பனே முன்பே உரைத்து  விட்டனர் அப்பனே !!!!

இவ் அட்சய அதாவது இன்றைய நாளில் அப்பனே மனிதர்கள் தன்னுடைய சுயநலத்திற்காக தனக்குப் பொருள்கள் சேர வேண்டும் பொன் சேர வேண்டும் இவையன்றி கூற அப்பனே அனைத்தும் சேர வேண்டும் என்று தான் நினைத்து தன் சுயநலத்திற்காகவே தன் வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே ஒன்றும் பிரயோஜனம் இல்லை அப்பனே கடைசியில் கஷ்டம் தான் வந்து சேரும் அப்பனே!!! தன் சுயநலத்திற்காகவே வாங்கிய பொருட்கள் அனைத்தும் அப்பனே மற்றவருக்கு தான் போய் சேரும் என்பேன் அப்பனே எவை என்று கூற நல் முறையாக உணர உணர அப்பனே 

இவையன்றி கூற அப்பனே தன்னிடம் இல்லாததை கூட மனம் உவந்து இன்றைய நாளில் மற்றவர்களுக்கு கொடுத்தால் அது பன்மடங்காக புண்ணியமாக இறைவன் உங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வான் அப்பனே!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் பொன்... இவையன்றி கூற சொத்துக்கள் அப்பனே பொருளோ நிரந்தரமல்ல அப்பனே புண்ணியமே நிரந்தரம்  என்பேன் அப்பனே!!!!

அப்புண்ணியங்கள் இருந்துவிட்டால் அப்பனே இறைவனே உன்னை வணங்குவான் என்பேன் அப்பனே!!!!

இன்றைய நாளில் அப்பனே நீங்கள் எவ்விதமான உதவிகளை  அப்பனே பல்வேறு ஜீவராசிகளுக்கு செய்தாலும் அது பன்மடங்காக உங்களை வந்தடையும் என்பேன் அப்பனே!!!!!

என் பக்தர்கள் இதை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!!

அப்பனே மனிதர்கள் ஒவ்வொரு நாளும் இவை என்று கூற வாழ்வதே கொஞ்ச நேரம்தான் அப்பனே  சிறிய சிறிது நேரம் மட்டுமே மனிதன் வாழும் நாட்களில் ஓடிக்கொண்டே இருக்கின்றான் அப்பனே எதற்காக என்றால் அப்பனே கர்மத்தை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே புண்ணியத்தை சேர்க்க அப்பனே முன் வருவதே இல்லை என்பேன் அப்பனே!!!! இவ் நாட்களில் இதையெல்லாம் செய்தால் அதாவது இவற்றையெல்லாம் வாங்கினால் பன்மடங்கு பெருகுமாம்!!!!!

அவை செய்தால் இவையெல்லாம் நடக்கும் என்பதை எல்லாம் மனிதன் சொல்வதைக் கேட்டு கர்மங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

புண்ணியத்தை சேர்க்க யாங்கள் வழிகாட்டுகின்றோம் அப்பனே அதனை அப்படியே பின்பற்றி வந்தால் நன்மை பெருகும் என்பேன் அப்பனே!!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் புண்ணியம் செய்தால்தான் மட்டுமே அப்பனே இறைவனை அடைய முடியும் என்பேன் அப்பனே மற்றவை எல்லாம் செல்லாது என்பேன் அப்பனே!!!!

அப்பனே தங்கத்தை வாங்கி வைத்தால் பன்மடங்கு பெருகும் என்பதெல்லாம் வீணான பொய்களப்பா!!!!! மனிதனால் ஏற்படுத்தப்பட்டவை அப்பனே!!!! அப்படியே மாற்றிவிட்டார்கள் அப்பனே உண்மையை!!!!

இன்றைய நாளில் உன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடு ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய் அப்பனே!!! அதனால்தான் புண்ணியங்கள் பன்மடங்கு பெருகுமே தவிர!!!!! மனிதன் சொல்வதைக் கேட்டு வேற எதைச் செய்தாலும் ஒன்றும் செல்லாது!!!! ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்பேன் அப்பனே!!!!  தனக்கு அதாவது தம்தனக்கு நன்மைகள் பெருக வேண்டும்!!! தன் குடும்பம் மட்டும் உயர வேண்டும் தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என்று சுயநலமாக யோசித்தாலே தரித்திரம் அப்பா!!!!!!

என் பக்தர்கள் அப்பனே அதாவது என் வழியில் வருகின்றவர்கள் இதனை நிச்சயம் செய்ய வேண்டும் அப்பனே இன்றைய நாளில் இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஏழை கன்னிப் பெண்களுக்கு உதவிகள் செய்யுங்கள் அன்னமிடுங்கள் அவர்கள் மனம் மகிழ்ந்தால் அப்பனே உங்கள் நிலை உயரும் என்பேன் அப்பனே அவர்களின் ஆசிகளைப் பெற்று கூட அப்பனே புண்ணியத்தை பெருக்கிக் கொள்ளுங்கள் அப்பொழுது அன்றைய நாட்களில் எல்லாம் அப்பனே இது போன்ற நாட்களில் அப்பனே ஏழை எளியோர்களுக்கு பொன்னும் பொருளும் வாங்கி கொடுத்து அப்பனே திருமணத்தையும் நடத்தி வைத்தனர் அப்பனே 

அப்படி உதவிகள் செய்து அப்பனே அவர்கள் புண்ணியத்தை பெருக்கிக் கொண்டு நல்வாழ்க்கை வாழ்ந்தார்கள் அப்பா!!! ஆனால் இன்றைய நாட்களில் அப்படி இல்லை என்பேன் அப்பனே!!!

அப்பனே யான்  சொன்ன வழிமுறைகளை பின்பற்றி அப்பனே செய்தாலே உங்களுக்கு புண்ணியம் சேரும் கர்மங்கள் தொலையும்  என்பேன் அப்பனே உங்கள் முக்திக்கு யான் வழி காட்டுகின்றேன் அப்பனே இறைவனையும் யான் காண்பிக்கின்றேன் அப்பனே!!!! நல்லாசிகள்!!!

நல்லாசிகள்!!! மீண்டும் ஒரு திருத்தலத்தில் செப்புகின்றேன்!!!!! நல்விதமாகவே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete