​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 4 April 2023

சித்தன் அருள் - 1318 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தமுனி!








வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!!

காசியில் சிவராத்திரி தருணங்களில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அண்ட சராசரங்களை எல்லாம் ஆளுகின்ற  ஈசனின் பாகம் பிரியாள் பார்வதி தேவி மனிதர்களின் கைகளிலே ரேகை போல் நதிகள் ஓடிக் கொண்டிருக்கின்றது என்று வாக்குகளில்  சில ரகசியங்களை கூறினார்.

பார்வதி தேவியார் வாக்கு :::

எதை என்றும் புரிந்தும் புரிந்தும் தன் வாழ்க்கை தன்னிடத்தில் இருக்கின்றதா???? என்பதையும் கூட உணராமல் ஆனாலும் உணர்ந்து கொண்டு தன் கையில் என்றால் பின் பார்த்தீர்களா...... எத்தனை நதிகள்!!! எத்தனை நதிகள்!!! என்பதை கூட பின் அதை அறிய பின் சிறிது சிறிதாக உன் கையில் பார்த்தால் தெரியும்......

அதுபோலத்தான் அங்கங்கு நதிகளில் கூட நீராடினால் தான் பின் கர்மங்களும் அழியும் என்பதை கூட ஆணித்தரமாக ... விளக்கங்கள் அதாவது படங்கள் போட்டிருக்க பின் இறைவன் அதாவது """""என் ஈசன் காட்டுகின்றான்!!!!!

(( அவரவர் உள்ளங்கைகளில் ஓடும் கோடுகளைப் போல் நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றது அங்கெல்லாம் சென்று நீராடினால் தான் கர்மங்கள் தொலையும் இதை ஈசன் படங்களைப் போல் அவரவர் கைகளில் காட்டுகின்றார்)

ஆனால் அதனையும் கூட பின் பொருட்படுத்தாமல் மனிதன் தாம் தான் பெரியவன் என்று.....தாம் தான் அனைத்தும் உணர்ந்தவன் என்று செய்து கொண்டிருக்கும் பொழுது அழிவைத் தேடிக் கொள்கின்றான்!!!!

என்று வாக்குகள் உரைத்திருந்தார். ( சித்தன் அருள்  1297)

அவ் வாக்கின் அடிப்படையின் தொடர்ச்சியாக மனிதர்களின் கைகளில் ஓடும் சனி ரேகை இருதய ரேகை பற்றி நவகிரகங்களை எல்லாம் கட்டுப்படுத்தி அடக்கி ஆளும் இடைக்காடர் சித்தர் முனி ராகு கேதுக்களை பற்றியும் மனிதர்களின் உள்ளங்கையில் ஓடும் ரேகையை பற்றியும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகில் உள்ள சத்ரபதி சிவாஜி பிறந்த சிவனேரி கோட்டையில் வாக்குகளாக ஈந்தார்!!!!!

அவ் வாக்குகள் பின்வருமாறு!!!!!!

12/3/2023 அன்று இடைக்காடர் சித்தமுனி உரைத்த பொது வாக்கு!!!!!

வாக்குரைத்த ஸ்தலம் : சிவாயி மா தேவி ஆலயம். சத்ரபதி சிவாஜி பிறந்த  சிவனேரி கோட்டை. புனே. 

அண்ட பிண்டங்களெல்லாம் ஆளுகின்ற அண்ணா மலையனையும்!!! உண்ணாமலை தேவியையும் !!!மனதில் நிறுத்தி!! நிறுத்தி !!வாக்குகளாக செப்புகின்றேன் """காடன்!!!!

அதாவது இடைக்காடன்!!! இடையன் எதை எதை என்று அறிய !!!!

முதலில் கிரகங்களைப் பற்றியே யான் எடுத்துரைக்க போகின்றேன்!!!!

காலத்தை வென்றவனே இவ் வீரசிவாஜி!!!!

ஆனால் அறிந்து அறிந்து கர்மத்தை அவனால் ஒழிக்க முடியவில்லை!!

இதிலிருந்து தான் மனிதனின் கஷ்டங்கள் ஆரம்பம் ஆகின்றது!!!

ஆரம்பம் ஆகின்றது என்பதாலும் ஏன் என்று அறிய அறிய ஆனாலும் பின் கைகளில் ரேகைகள் பின் ஊர்ந்து ஊர்ந்து ஆனாலும் ஒருவனுக்கு அதிர்ஷ்ட ரேகை எப்படி செயல்படும் என்பதை எல்லாம் ஆனாலும் பல மனிதர்களுக்கு அவை தன் அதாவது அதிர்ஷ்ட ரேகை இருப்பதில்லை!!!

ஏன் ?எதற்காக ?என்றால் சனி பகவானின் தாக்கம் அதிகமாக இருப்பவர்களுக்கு நிச்சயம் இருக்காது !! இருக்காது!!!

ஆனாலும் தாக்கம் அதிக அளவு இருக்க பைத்தியமாக திரிவான்!!! அனைத்து கெட்ட நடவடிக்கைகளிலும் கூட அவந்தன் ஈடுபட்டு விடுவான்!!! இதனால் அதாவது நிச்சயம் அவ் நதி அதாவது அதிர்ஷ்ட ரேகை சனி ரேகை அதாவது அது கங்கையை குறிக்கின்றது தெரிந்து கொள்ளுங்கள்!!!!

இவையெல்லாம் தெரிந்து அறிந்து காலத்தை வென்றவர்கள் பல அரசர்கள்!!!!

ஆனாலும் கர்மத்தை வெல்ல முடியவில்லை!!!

அவ் கர்மத்தை வெல்ல நிச்சயம் சித்தர்கள் வழி வகுப்பார்கள் வரும் காலங்களில் நிச்சயம் எங்கள் பின்னே வந்தால்!!!!!

அதனால் எதை நிமித்தம் காட்டி நிச்சயம் சித்தர்கள் பின்னே சென்றாலும், ஏற்கனவே குருநாதன் அகத்தியனும் இன்னும் பல வழிகளிலும் கூட உயர் சித்தர்கள் நிச்சயம் செப்பி செப்பி வந்தார்கள்!!!! எங்கள் வழிகளில் வருபவர்களுக்கு பின் மூளையையும் எதை அனுபவிப்பது? அனுபவிக்க இன்னும் எவை இருக்கின்றது? என்பதையெல்லாம் நிச்சயம் கசக்கி அறிவுகளை மேம்படுத்தி விடுவோம்!!!

காலத்தை வென்றவர்கள் எதை என்பதை கூட சனி பகவானின் தொல்லைகள் அதிகம் காணப்படுவோர் எதை என்று அறிந்து நதி அதாவது அதிர்ஷ்ட ரேகை விதி ரேகை என்றும் இதனையும் குறிப்பிடுவார்கள் சனி ரேகை என்றே!!!! 

அவ் நதி தான் கங்கை!!!! அதனால்தான் கங்கைக்கு ஒரு உத்தமம் அங்கே!!!! அதாவது அவ் நதியில் அதாவது குதித்து!! குதித்து!!! பாடி துதித்து ஈசனை நிச்சயமாய் மூழ்கினால் அடிக்கடி மூழ்கினால் சனி ரேகையானது வளர ஆரம்பிக்கும்!!!! ஆனாலும் எவரும் அறிவதில்லை இதை!!! 

இவை வளர வளர அதாவது சனிரேகை வளர வளர சனியவன் வளர்ந்து விடுவான்!!! அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவான் அதாவது ரேகையும் வளர்ந்து விடும்!!

ஆனால் அனைத்தும் மறைந்துள்ளது மனிதனின் கைகளில்!!! மனிதனின் கைகளில் மறந்து உள்ளதை பாருங்கள் அதிக அளவில் எழுந்து !! எழுந்து!!!

ஆனாலும் இதற்கு தகுந்தாற்போல் பல வழிகளில் கூட வாழ்க்கை என்பதை கூட தன் கைகளிலே!!!!!!....... அதாவது நதிகளிலே!!!!...... நதிகள் தான் ரேகை என்று.

அதனால் முதலில் கங்கை எதற்கு சிறப்பு பெற்றது?!!!!

யான் சொல்வேன்!!!!! அறிந்து !! அறிந்து !!! பின் சனி ரேகையையே அது குறிப்பிடுகின்றது!!!

அச் சனி ரேகைதான் ஒருவன் விதியையும் தீர்மானிக்கிறது!!!! தீர்மானித்து ஆனாலும் இதுதான் அனைவருக்கும் சொந்தம் நீங்கள் பார்த்தும் கொள்ளலாம் அறிந்தறிந்து (அவரவர் கைகளில் ஆண்களுக்கு வலது கை பெண்களுக்கு இடது கை)

இச் சனி ரேகை வளர நிச்சயமாய் கங்கை தன்னில் நீராடினால் தான் நிச்சயம் சனி பகவானின் தாக்கங்கள் குறைந்து மீண்டும் எழுச்சி பெறும்! ரேகையும் வளர்ந்து விடும்!! கஷ்டங்களும் போய்விடும்!!! அதிர்ஷ்டம் தானாக வந்துவிடும்!!! இறைபக்திகளும் கூடிவிடும்!!!!!!! இதை யாரும் அறிவதில்லை!!!!

இதனால் யான் இங்கேயே இருக்கின்றேனே.... இவ்வளவு கஷ்டங்களா எந்தனுக்கு!!.....என்று!!! 

ஒன்றும் செய்யாமலே மானிட ஜென்மங்களே!!! ஏன் ? இறைவனை எதற்காக கேட்கின்றீர்கள்???

நீ என்ன புண்ணியம் செய்து இருக்கின்றாய்??

முதலில் ??????

அதை பார்த்துத்தான் இறைவனும் கொடுப்பான்!!!!! அதனால் புண்ணியம் செய்யவில்லை என்றால் இறைவனிடம் கேட்பதற்கு நீங்கள் தகுதியற்றவர்களாகத்தான் இருக்கின்றீர்கள்!!!

எதை என்று அறிந்து அறிந்து  அறிந்து அறிந்து !!!!

அடுத்து !!!

""""""நர்மதா !!!!    

நர்மதை  பற்றியும் சொல்கின்றேன்!!!

நர்மதை சரியாகவே ஆனாலும் சிலருக்கு இருதயம் குழப்பங்கள் அதாவது இன்னும் எதையெதையோ என்று அறிய சரியாக கங்கை நதி பாய்ந்து விட்டால் நிச்சயம் மேல் எண்ணங்கள் மேம்படும். பொறாமையும் இருக்காது!!!

அவ் ரேகையானது இருதய ரேகை!!!!!

இருதய ரேகை எங்கு முடியும் என்றால் குருபகவான்( கைகளில் குருமேடு)  இடத்தில் சென்று முடியும் இதற்கு தனி மதிப்பும் உண்டு!!!!

அதை சரியாக இழுத்துச் செல்ல வேண்டுமானால் நர்மதையில் நிச்சயம் நீராட வேண்டும்!!!!

இவ்வாறு நீராடி நீராடி கொண்டே இருந்தால் நிச்சயம் அவ் இருதய ரேகையும் சரியாக வளர்ந்து விடும் வளர்ந்திட்டு நன்றாகவே இன்னும் ஏற்றங்கள் அழகாகவே மன்னனவன்!!!!!! அதாவது பின் எதை என்று அனுபவித்து பின் ஒருவன் நிலையில் அதாவது ஆறு ஆதாரங்களை கூட பெற்று பெற்று ஏழாவதும் உண்டு!!! எட்டாவதும் உண்டு!!!

இவையெல்லாம் யான் சொல்வதை விட இன்னும் அதற்குரிய சித்தர்கள் நிச்சயம் செப்பி!!! செப்பி!!! உங்களை உயர்த்தி விடுவார்கள்!!!

ஆனாலும் அதற்கும் கூட புண்ணியங்கள் இருந்தால் தான் நிச்சயம் பார்க்கவும் முடியும் !!!

செய்யவும் முடியும்!!!

புண்ணியங்கள் இல்லாவிடில்!!!.... எதை எதையோ சொல்கின்றார்கள் சித்தர்கள் நாம் ஏன் நம்ப வேண்டும்??? என்று தனியாகவே போய் விடுவான் கடைசியில் பார்த்தால் அனைத்தும் அனுபவித்து அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து விட்டு பாவங்களையும் சேர்த்திட்டு மீண்டும் !!.....................

ஏற்கனவே சித்தர்கள் செப்பி விட்டார்களே!! அவர்கள் வழியில் நடந்திருந்தால் இவ்வளவு கஷ்டங்கள் வருமா?? என்று!!!!!

இதுதான் மனிதனுடைய இயல்பே!!!!

இதனால்தான் மனிதனை பாவம் என்பேன் யான்!!!

இன்னும் இன்னும் ஏன்? பல பல அரசர்கள் யோகங்கள் இருக்காதவர்களுக்கும் கூட யோக பலம் கூடிவிடும் எதனால் என்பதையும் கூட எதனால் என்பதையும் கூட!!

நிச்சயம் !!..."""""கிரகங்களை கட்டுப்படுத்துவதே!!! மிக அவசியம் வாழ்வதற்கு!!!

இவ் கிரகங்களை கட்டுப்படுத்த நிச்சயம் யான் சொல்லிய ஏற்கனவே யான் சொல்லியும் இருந்தேன்!!! அதனையும் பின்பற்றவில்லை!!!!

அப்படி பின்பற்றாவிடில் பின் எப்படி ?? உங்களுக்கு நல்லதை நடக்கும்??? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டியது தான்!!!

அதனால்தான் கர்மாவை மிஞ்சிய !! மிஞ்சியதும் இங்கு ஏதுமில்லை!!

ஆனால் குருநாதன் இன்னும் கருணைக்கு கருணையான!!!!!!! கருணைக்கு வடிவமான!!!!!!!! அகத்தியன் மனிதர்களுக்காக எப்படியோ எதனையோ என்று எங்கேயாவது சென்று பின் கர்மத்தை அழிக்க அழிக்க மனிதனிடத்தில் எல்லாம் சென்று கொண்டே இருக்கின்றான்!!!

ஆனால் அப்படி சென்று கொண்டிருக்கின்ற குருநாதன் மீதே பழியைப் போட்டு பின் ஏமாற்றியும்!!...... இவ்வாறு இருக்க!!!..... பின் எப்படி இன்னும் கர்மம் சேராமல் இருக்கும்???

ஆனால் நிச்சயம் நிச்சயம் உண்டு என்றால் நிச்சயம் ஆனால் இரு கிரகங்கள் இதனைக் கூட முதலில் கட்டுப்படுத்தி விட்டால் அதாவது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் நிச்சயம் சில ஏற்றங்கள் உண்டு!!!!

ஆனாலும் அவ் விதி அதாவது விதி ரேகை நிச்சயமாய் பின் எதை என்று அறிந்து அங்கே தான் செல்கின்றது!!...."" கங்கை!!! இவைதன் இவ் நதி எதை என்று நினைத்துக் கொண்டால்..... அது சரியாக வளர விட்டால் நிச்சயம் கங்கைக்கு சென்று கொண்டே இருத்தல் சிறப்பை தரும்!!!!!( கங்கை நதி பாய்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் சென்று நீராடினால் அதிர்ஷ்ட ரேகை தானாக வளரும் சிறப்பை தரும்).

இவ்வாறு நிச்சயம் மாற்றங்கள் உண்டு!!!! முதலில் (கங்கைக்கு) வருபவருக்கெல்லாம் சனி பகவான் துன்பங்கள் தான் கொடுப்பான்!!!

ஏனென்றால் இவைதன்( ரேகை) வளர்ந்து விட்டால் நிச்சயமாய் எதை என்று பின் மனிதன் எங்கேயோ உயர்ந்து சென்று விடுவான் என்று கூட!!!!

ஆனாலும் அனுபவிக்கவைத்து கொடுப்பான்!!! இதுதானப்பா!!!!! அப்பா!!!!  எதையென்று அறிந்து அறிந்து இன்னும் செல்லமாகவே கொஞ்சிக் கொண்டு யாங்கள் சொல்லிக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம்!!!! மனிதர்களுக்கு!!!

ஏற்பானா மனிதன்?????????

நிச்சயம் ஏற்பவர்களும் உண்டு!! அவர்களுக்கு அருளாசிகளும் உண்டு!!!

என்னிடத்தில் வாருங்கள் !!! அதாவது அண்ணாமலையை நோக்கி வாருங்கள்!!!!! நிச்சயம் அங்கு கிரகங்கள் வேலை செய்யாது!!!!

நிச்சயம் வரும் காலங்களில் எங்கெல்லாம் அங்கு அண்ணாமலையில் அமர்ந்தால் பல கிரகங்கள் கூட நிச்சயமாய் அங்கு விழும் என்பதைக் கூட நவ கிரகங்கள் நிச்சயம் இன்னும் ஏனைய அதாவது ஏனைய நட்சத்திரங்களை பற்றியும் கூட யான் எடுத்துரைக்கின்றேன்!!!!

எங்கு சரியாக அதன் சக்தி விழும் என்பதையும் கூட!!!

இன்னும் ஓரிடத்தில் அதாவது இன்னும் இன்னும் சொல்லப்போனால் குமிழ்கள் போலே மாறி மாறி அமைவதும் உண்டு அக்குமிழ்களின் வழியாகவே கிரகங்களின் ஒளி இப்புவிதன்னில் படும்பொழுது நிச்சயம் ஏற்றங்கள்!! அங்கு சென்றால்!!!!

அதனால்தான் சித்தர்கள் அறிந்து அறிந்து திருத்தலங்களை உருவாக்கினார்கள் இறைவனையும் கூட அங்கே அமர வைத்தார்கள் இங்கே அமர்ந்திருந்தால் நல்லதே என்பதை!!!!!!

ஆனாலும் இன்னும் கூட அமர்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அமர்ந்து கொண்டு இன்னும் பல வழிகளிலும் கூட மனிதர்களுக்கு ஏற்றத்தை கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்!!!

ஆனாலும் மறுப்பதற்கு ஒன்றுமில்லை!!!! முதலில் இவ் இரு கிரகங்களையும் கூட கட்டுக்குள் கொள்ள வேண்டும் கட்டுப்படுத்த வேண்டும்!!!! கட்டுக்குள் கொண்டு விட்டால் நிச்சயம் ஒன்றும் செய்ய இயலாது!!!!

இச் சிவாஜியானவன் நிச்சயமாய் இதை இரண்டு கிரகங்களை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதைக் கூட சரியாக உணர்ந்து விட்டான்!!!

யான் இப்பொழுது சொன்னேனே இதன் மூலம்

ஆனால் இதை இக்காளி தேவியே( சிவாயி மா) உணர்த்தி விட்டாள் !!! இவந்தனுக்கு!!!!

இவ்வாறு கட்டுப்படுத்தி விட்டால் நிச்சயம் ஒன்றும் செய்ய இயலாது என்று!!!ஆனாலும் பாவங்களையும் கூட சேர்த்து கொள்ள நிச்சயம் அவ் பாவங்களை கழிக்க இரு கிரகங்களால் தான் முடியும். 

நிச்சயமாய்!!!!.... ""ஒன்று ராகு!!! 

மற்றொன்று !!!!! கேது!! 

ஆனால் இதனைபற்றியும் கூட பல வழிகளிலும் கூட எடுத்துரைத்து விட்டார்கள் சித்தர்கள். 

ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூட்சுமங்கள் அமைந்துள்ளது... நிச்சயம் தெரியாதப்பா!!!!! 

இவ் இரு கிரகங்களையும் பற்றியும் யாருக்கும் தெரியாதப்பா!!!! 

ஒரு வார்த்தை சொல்லி விட்டான்!!!!  நிச்சயம் சித்தர்கள் எதை என்று கூற இன்னும் இதனை பற்றி தெரியாத அளவிற்கும் கூட எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்தாலும் நிச்சயம் இவ் கிரகங்களை பற்றி யாரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள் என்பது பின் நிச்சயம் இல்லை இவ்வுலகத்தில். 

யாங்கள் தான் எடுத்துரைப்போம்!!!!! 

எடுத்துரைக்கின்றோம்!!! எப்படி என்று!!!! 

ஆனாலும் மனிதனின் இன்னும் பொறாமைகள் போட்டிகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது... நிச்சயம் நல்லோர்கள் வாழ வேண்டும் என்பதற்காகவே இவைகள் எல்லாம் எடுத்துரைத்து கொண்டே இருக்கின்றோம்!!!! 

ஆனாலும் இதில் கூட வாக்குகளை பின் பற்றி இன்னும் ஏராளமானவர்களும் கூட உயர்ந்தும் விட்டார்கள். இது உண்மை !!! 

சத்தியத்திற்கு அடிமையாக வேண்டும் நிச்சயம் எதற்கு?? சத்தியத்திற்கு அடிமையாக வேண்டும்???? 

நிச்சயம் நீங்கள் அறிந்து அறிந்து மற்றவர்களுக்கு எதை செய்கின்றோமோ அதை நிச்சயமாய் பிரதிபலித்து கர்மத்தை அழிக்க வல்லது """"""கேது!!! 

ஆனாலும் இதனால் தான் அனைத்தும் உதவிகளும் செய்துகொண்டிருப்பவனுக்கு மக்கள் அதாவது மனிதர்கள் என்ன!?!!!  திட்டி தீர்த்தாலும் அவன் உயர்ந்து கொண்டே இருக்கின்றான் !!!

ஏனென்றால் எங்கு செயல் படுகின்றான் என்பதை கூட யாங்கள் அறிவோம்... ஆனால் மனிதர்கள் நீங்கள் அறிவதில்லை. 

அதனால் அவன் திருடன்... அவன் மட்டும் உயர்ந்து கொண்டிருக்கிறானே அவன் கர்மத்தை சேர்த்து பல மனிதர்களை இப்படி செய்துவிட்டு இவந்தன் மட்டும் உயர்ந்து கொண்டிருக்கின்றானே !!...திருடன் !!!என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

ஆனால் அவந்தன் என்ன செய்கின்றான் என்பது யாருக்காவது தெரியுமா???

நிச்சயம் தெரியாது!!! ஆனால் வாய் தான் நீளம் மனிதனுக்கு!!! வாய்தான் எதை எதையோ சொல்கின்றது!!! ஆனால் அவன் என்னென்ன?? செய்கின்றான் !!! யார்? யாருக்கு? உதவிகள் செய்கின்றான் என்பதை எல்லாம் நிச்சயம் எதனை என்று அறிய அறிய!!

அதனால் நீங்கள் செய்வது உங்களுக்கே சொந்தம் என்று கூட.... பல சித்தர்கள் எடுத்துரைத்து விட்டார்கள்.

அதனால் கர்மம் அதாவது பாவம் செய்தாலும் அது உங்களுக்குத்தான் சொந்தம் !!!

புண்ணியம் செய்தாலும் அது உங்களுக்குத்தான் சொந்தம்!!!

இதை நன்றாகவே பல அரசர்கள் தெரிந்து கொண்டனர்!! ஆனால் இப்பொழுது கூட மறைமுகமாக செய்து கொண்டிருக்கின்றார்கள்!!!

ஆனால் பக்தனோ!!!! யான் அதைச் செய்தேன்! இதைச் செய்தேன்! அவன் மட்டும் நன்றாக இருக்கின்றானே!? என்றெல்லாம் பொறாமைகள்!!

இவையெல்லாம் அப் பொறாமை ஏற்கனவே விஞ்ஞான முறையிலும் கூட பல சித்தர்கள் உரைத்து ஆனாலும் இன்னும் பல சித்தர்களும் உரைப்பார்கள்!!!!

 விஞ்ஞானத்தை கூட தன் கையில் வைத்துக்கொண்டோம் யாங்கள்!!!

ஆனாலும் அறிந்து அறிந்தறிந்து நிச்சயமாய் செல்வதற்கு வழிகள் இல்லை எங்கும் !!!

அங்கும் இங்கும் போகன்!!! ( போகர்) 

போகன் நிச்சயம் தன் கிரகங்களை கட்டுப்படுத்த கட்டுக்குள் கொண்டு வர எங்கெங்கோ அலைந்தான் திரிந்தான்!!!......அங்கும் இங்கும்!!!! 

கடைசியில் """ ஓதி மலையிலும் அமர்ந்து விட்டான்!!! படுத்திட்டான்!!!!!!

"""""" முருகன் வந்தான்!!!!!

அங்கு செல்!!!!! கிரகங்கள் உன்னை ஒன்றும் செய்யாது !!!  உன்னால் அனைத்தும் முடியும்!!!! இதனால் நீ நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம் என்று!!!!

இன்றளவும் கூட நினைத்ததை பழனி தன்னில் சாதித்துக் கொண்டுதான் இருக்கின்றான் போகன் !!!!

கிரகங்கள் கூட அங்கு வேலை செய்யாது!!! அவ்விடத்தில் இருந்து கொண்டால்!!!! ( பழனி) 

ஆனாலும் கீழே இருந்து கொண்டு யானும் அங்கே சென்றேனே!!!!........ கிரகங்களும் வேலை செய்து விட்டது என்பதை கூட தெரியப்படுத்தக் கூடாது( பழனி மலை சென்று விட்டு இப்படி மனிதர்கள் கிரகங்கள் கிரக தோஷங்கள் ஏற்பட்டு விட்டது என்று சொல்லக்கூடாது)

ஏனென்றால் மனிதனின் ஏச்சுக்கள் இன்னும் பல!!! பொய் என்று கூறுபவர்களும் உண்டு உண்மை என்று கூறுபவர்களும் உண்டு!!!

உண்மை!!!  எது உண்மை?? என்பதையெல்லாம் ஞானியர்கள் அதாவது எங்கள் வழிகளில் கெட்டியாக பிடித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்!!!! புரியும்!!!! 

அப்படி இல்லை என்றால் நிச்சயம் புரியாது வீணாக போய்விடுவார்கள்!!!!

இதுதான் உண்மை!!!!

இதனால் பழனி தன்னில் இருக்கும் முருகனுக்கு நிச்சயம் அங்கே போகனும் இப்பொழுது தவழ்ந்து நிற்கின்றான்!!!!!

இன்னும் ஏனைய தலங்களை பற்றியும் கூட!!!! அடுத்தபடியாக செல்கின்ற பொழுது நிச்சயம்!!!!.....  """"" செந்தூரில்( திருச்செந்தூர்)  கூட ஆனாலும் இதற்கு இன்னும் விளக்கங்கள் யான் கொடுத்தருள்வேன் இன்னும்!!!

இன்னும்!!!!! யானே சொல்லிவிட்டாலும் அனைத்து ரகசியங்களையும் சொல்லி விட்டாயா????!!!!!!! என்று ஈசனும்!!!!.............

ஆனாலும் நிச்சயமாய் ஒவ்வொன்றும் கூட பிரம்மாவிடத்திலும் கூட விதியை பற்றி ஒவ்வொரு விதியை அதாவது ஒவ்வொருவரின் விதியை கூட எப்படி?? கணிக்கலாம்!!! என்பதை கூட யான் வரும் காலங்களில் எடுத்துரைப்பேன்!!!!!

விதி தன்னில் மாற்றம் அடைய ஒருவனாலே!!!!!

ஒருவனாலே எதை என்று அறிய யாங்கள் சித்தர்கள் சரியாக..... நிச்சயம் சென்று கொண்டு இருந்தால் விதியை யாங்களே மாற்றுவோம்!!!!!

இப்பொழுதெல்லாம் மனிதர்கள் நம்பி நம்பி ஏமாந்து தான் செல்கின்றார்கள்!!!! ஆனால் விதியின் தன்மை தன்னை பாதையையும் பார்த்தாலும் ஆனால் அவன் விதியே அவந்தனுக்கு தெரியாது!!!!! மற்றவர் விதியை எப்படி சொல்வான்???? மனித முட்டாள்!!!!

அதனால்தான் அனைத்து சித்தர்களும் மனிதனைக் கண்டால் காறியும் துப்பி விடுகின்றார்கள்!!!! பின் முகத்தில் கூட பின் பார்க்க விரும்புவதில்லை சித்தர்கள்!!!!

ஏனென்றால் அனைத்தும் தெரியும் என்ற கர்வம் மனிதனுக்கு!!! மனிதனுக்கு கர்வம் உண்டு மனதில்!!!!

யார் ஒருவன் எந்தனுக்கு ஒன்றும் தெரியாது!!!! யான் ஒரு  பைத்தியக்காரன் என்று சுற்றிக்கொண்டு இருக்கின்றானோ!!!!! அவனை மட்டுமே யாங்கள் வந்தடைந்து.... அவனை மாற்றி உயர்த்தி விடுவோம் !!!!

அனைத்தும் தெரிந்தவன் என்று சொல்கின்றவனை  பார்ப்போம் !! இவன் எங்கு? விழுகின்றான் என்று!!!!! ஆனால் செல்கின்றான் ஓடுகின்றான் கடைசியில் குழியில் விழுகின்றான் காப்பாற்ற எவரும் இல்லை!!!

அதனால் நினைத்துக் கொள்ளுங்கள் உண்மை நிலைகளை கூட!!!! அறிந்து அறிந்து இன்னும் எவை என்று அறிந்து அறிந்து சொல்கின்றேன் ரகசியங்களை பற்றியும் கூட!!!!!

அவ் ரகசியத்தை ஒருவன் சரியாக பயன்படுத்திக் கொண்டால் தோல்விகள் என்பது இல்லை!!!! ஆனால் வெற்றிகள் நிச்சயம்!!!!

அவ் வெற்றியின் பாதையில் கூட கர்மாவை நிச்சயம் நீங்கள் சம்பாதிக்க கூடாது!!!! அக் கர்மத்தை எப்படி எல்லாம் சம்பாதிக்க கூடாது என்பதை எல்லாம் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் எடுத்துரைப்போம்!!!

அதாவது நிச்சயம் கர்மத்தை வென்றாக வேண்டும் வரும் காலங்களில்!!!

கலியுகத்தில் நிலையான வாழ்க்கை யாரும்!!!......... யாருக்கும் இருக்காது!!!! ஆனால் அதை நிலையுள்ளதாக செய்ய வேண்டும்!!!!

இதனால்தான் சித்தர்கள் நிச்சயம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றார்கள் இதை பின்பற்ற நன்று!!!

அனைவருக்கும் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொருவனும் ஒவ்வொரு மனம் படைத்தவன்!!!!

மனம் படைத்தவன் குணம் இல்லையே!!!!!

குணம் படைத்தவன் எதை என்று எதிர்பார்க்கும் அளவிற்கு குணம் படைத்தவனுக்கு சித்தர்கள் யாங்கள்  அருகிலே இருப்போம்!!!!

அதனால் பணத்தின் மீது மதிப்பா ?? இல்லை குணத்தின் மீது மதிப்பா????

குணத்தை இங்கேயே!!!!......... வேண்டாம் உன் குணம்!!! 

 ஆனால் எங்களுக்கு வேண்டும் நல்ல குணம்!!!!

பணம் மனிதனுக்கு வேண்டும் ஆனால் எங்களுக்கு வேண்டாம்!!!!

இதை பன்மடங்கு சித்தர்கள் செப்பி விட்டார்கள்!!! நல்வழிப்படுத்த யாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்!!! ஆனால் நீங்கள் காத்துக் கொண்டிருக்கவில்லை!!!!

எதை எதையோ செய்து எதை எதையோ கடைசியில் கர்மத்தை தான் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்!!!

நியாயமா?? சொல்லுங்கள் மனதை தொட்டு!!!

எதை என்று யாங்கள் உங்களை கேட்டோமா?????????????

இதைச்செய்!!! அதை செய்!!! என்று!!!

நீங்கள் எப்பொழுது ஒருவன் சித்தர்களுக்கு அதை செய்கின்றோம் இதை செய்கின்றோம் என்று சொல்கின்றார்களோ அவந்தன் மனம் எப்படிப்பட்டது என்பதை கூட நீங்களே உணருங்கள்!!!!

அப்பொழுதுதான் அங்கேயே ஆரம்பமாகி விடுகின்றது சனியவனின் தொல்லைகள்!!!!

பட்டுத்தான் ஆக வேண்டும்!!!

அதனால் யான் இறைவனை வணங்கினேனே!!!! சித்தர்களுக்கு திருத்தலங்களை கட்டினேனே!! என்றெல்லாம்!!!

ஏன்???   தெரியாமலே கேட்கின்றேன்!!!

எங்களுக்கும் திருத்தலங்களை கட்டி உள்ளீர்கள்!!!!

நீங்கள் சுகமாகவா?????????????????? வாழ்கின்றீர்கள்!!!!!!!

ஏனப்பா!!!!!!!!!!!!!! சிறிதாவது யோசியுங்கள்!!!!!!

அறிவு இறைவன் பலமாகவே கொடுத்திருக்கின்றான்!!!!

ஆனால் மனிதனுக்குத் தான் யோசிக்க நேரங்கள் இல்லை!!! கர்மாவை பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றானே!!! சிந்தித்துக் கொண்டிருக்கின்றானே மனித ஜென்மங்கள்!!!

மனித ஜென்மங்கள் பாவம் என்று யாங்கள் இருக்கின்றோம்!!!!!

ஆனால் மனிதனின் ஆட்டங்கள் பார்த்தால் கோபங்கள்!!! கோபங்கள்!!! தான் வருகின்றது!!!

ஏன்? எதற்கு? என்றெல்லாம் அனைத்திற்கும் காரணம் தாம் தான் என்று நினைக்காமல் இறைவனை நினைத்து!!!! ஆனால் எவன் ஒருவன் ஐயோ!!! பொறாமை படக்கூடாது!!! மற்றவர்களைப் பற்றி குறை சொல்லக்கூடாது பொய் கூறக்கூடாது!!!

இறைவன் நம் தனை பின் அடையாளப்படுத்தி எப்படியாவது தண்டனைகள் கொடுத்து விடுவான் என்று யார் ஒருவன் எண்ணுகின்றானோ!!!?!!!! அவந்தன்  அருகில் தான் சித்தர்கள் இருக்கின்றார்கள்!!!

ஆனாலும் எவன் ஒருவனும் அதை எண்ணுவதே இல்லை!!!!

அப்படி இருந்தால் எப்படி கஷ்டங்கள் வராமல் போகும்?????

அதனால் சொல்கின்றேன் கஷ்டங்கள் எங்கிருந்து வருகின்றது ??  என்பதை எல்லாம் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் சித்தர்கள்!!!!

மனிதா!!! தரித்திர மனிதா!!! பைத்தியக்கார மனிதா!!!! இறக்கக்கூடிய மனிதா!!!! உன்னிடத்தில் இருந்து தான் வருகின்றது கஷ்டங்கள் !!
முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள் பின் இறைவனை எப்படியெல்லாம்? வணங்கலாம் ? என்று யாங்கள் கற்றுத் தருகின்றோம்!!!

அதனால் இறைவனை வணங்குவதில் முதல் வகுப்பிலே தேர்ச்சி பெறவில்லை நீங்கள்!!!

அதனால் இறைவனை குற்றம் சொல்ல உங்களுக்கு தகுதிகளே!! இல்லை!!! அப்படி குற்றம் சொன்னாலும் இறைவன் கோபித்துக் கொண்டு!!........ நீங்கள் தான் பின்னோக்கி செல்விர்களே தவிர இறைவன் நிச்சயம் பின்னோக்கி செல்ல மாட்டான்!!!

இறைவன் இன்னும் பல யுகங்களை கூட கடந்து கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான் !!!

ஒரு நொடி பொழுது வாழும் மனிதனுக்கு எவ்வளவு கர்வம் ???? எவ்வளவு கர்மம்?????? எப்படி எல்லாம் ஆட்டங்கள்!! பாட்டங்கள்!!! என்னென்ன சந்தோஷங்கள் எப்படி எல்லாம் இவை என்று!!!!

""' ஒரு நொடிதான் எங்களுக்கு!!!! நீங்கள்!!!

அவ்வளவுதான் அவ் ஒரு நொடியிலாவது நன்றாக வாழ்ந்து விட்டு செல்லுங்களேன்!!!!!!!!!! 

நிச்சயம் காலத்தை வெல்லலாம் யான் கற்றுக் கொடுப்பேன்!!!!

நலன்கள் !! ஆசிகள்!!! மீண்டும் ஒரு தலத்தில் உரைக்கின்றேன்!!!!!!

இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கினை தொடர்ந்து குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பதில்கள் பாகம் 2 ல் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment