​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 11 April 2023

சித்தன் அருள் - 1323 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் காசி வாக்கு!






9/4/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு -  வாக்குரைத்த ஸ்தலம் :காக்கும் சிவன் காசி கங்கைகரையில்.

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!!

அப்பனே எவை என்று அறிய அறிய அம்மையே நலன்கள் நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் நலன்கள் என்னால் உருவாகும் என்பேன்!!!!

கவலைகள் இல்லை யான் ன் அருகிலேயே இருந்து வழி நடத்துவேன் என்னென்ன தேவை என்பதைக் கூட யான் அறிவேன்!!!! என் பிள்ளைகளுக்கு கூட அறிந்தறிந்து நிச்சயம் செய்வேன்  அதனால் குறைகள் ஒன்றும் இல்லை!!!

எதை என்று அறிந்து அறிந்து அதனால் ஈசனின் பார்வையும் கிடைக்க என்று அறிய அறிய பார்வதி தேவியின் பார்வையும் கிடைக்க எதை என்று அறிந்து அறிந்து..... நிச்சயமாய் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து நல்லாசிகள் இனிமேலும் உயர்வுகள் தான் உண்டு என்பதைப் போல் நிச்சயம் என்னுடைய ஆசிகள்!!

புசுண்டமுனியும் பல வாக்குகள் கூட உரைத்துக் கொண்டே தான் இருக்கின்றான் நலமாகவே!!!

 இதனால் எதை என்று அறிய அறிய அனைவரையும் கூட இறைவன் பார்த்து கொண்டே தான் இருக்கின்றான் நல்லோர்கள் எதை என்று அறிய அறிய புண்ணியம் செய்தவர்கள் எதை என்று அறிய அறிய இறைவன் எங்கெங்கு? எங்கெல்லாம்!! அவர்களை அழைக்க வேண்டுமோ நிச்சயம் இறைவனே வந்து அழைத்துச் செல்வான்!!!!

 பாவங்களையும் கூட அப்படித்தான் எதை என்று அறிய அறிய  இறைவன் பின் எதை என்று அறிய அறிய பார்த்துக் கொண்டே இருக்கின்றான் அதனால் எச்சரிக்கையாகவே இருங்கள் !!!!!

ஏனென்றால் வரும் காலங்கள் கடுமையான எதையென்று கூட போராட்டங்கள் என்ற நிலைமைக்கு வந்து விடுவது எதை என்று அறிந்து அறிந்து!!!!! காலங்கள் !!!

அதனால் நிச்சயம் இப்பொழுதெல்லாம் எவை என்று அறிய அறிய  ஏனென்றால் இறைவனுக்கு எவை என்று கூட அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்!!!!

யான் தெரியாமலே செல்கின்றேன்!!! எவை என்று உணர்ந்து உணர்ந்து இன்றைய காலகட்டத்தில் புதிது புதிதாக கண்காணிப்பு எதை எதை என்று அறியறிய!!!

(CCTV cameras  கண்காணிப்பு கேமரா) பொருத்தம் எவையென்று அறிய அறிய அங்கங்கே உள்ளது!!!!!

ஆனால் எப்படியாவது கண்டுபிடித்து விடுவார்கள்!!!

இதே போலத்தான் எதையென்று அறிய இறைவன் எவை என்று உணர்ந்து உணர்ந்து பின் நிச்சயம் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் என்று அனைவரும்  உணர வேண்டும்!!!!!

எதை என்று அறிய அறிய அதனால் எதை என்று கூட அப்பொழுது உணர்ந்து விட்டால் நிச்சயம் உலகத்தில் எவை என்று கூட பின் பாவங்கள் நடக்காது!!!!

அதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் இவ்வாறு புண்ணியங்கள் செய்து கொண்டு இருந்தாலும் கூட நிச்சயம் அனைவரும் மகிழ்வார்கள் எதை என்று அறியறிய!!! என்ன தேவையோ அதையும் கொடுப்பார்கள்!!!!

அவ்வாறு புண்ணியங்கள் செய்யாவிடில் நிச்சயம் இன்னும் கோபித்துக் கொண்டு கெட்டதை தான் செய்வார்கள் எதை என்று அறிய அறிய!!!!

ஏனென்றால் இது கலியுகம் அதனால் அனைத்து உயிர்களையும் தன்னைப் போல் நினைத்து நினைத்து நிச்சயம் எதையெதை என்று அறிய அதனால் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து நிச்சயம் எவை என்று கூட என் வழியில் வருபவர்கள் எல்லாம் அப்பனே நன்றாகவே செய்து எதை எதை என்று அறிய அறிய அருளாசிகளும் கூட!!!!

அப்பனே ஒரு இடத்தில் சரியாகவே யானும் வந்து அருந்தினேனப்பா!!!!! லோபா முத்திரையோடு நன்றாகவே!!!!!

(குருநாதர் இந்த கோடை காலத்தில் அனைவருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நீர் மோர் மற்றும் மூலிகை குடிநீர் என் பக்தர்கள் செய்ய வேண்டும் என்று வாக்குகள் தந்திருந்தார் அதன்படியே அகத்திய அடியவர்கள் அனைவரும் அனுதினமும் செய்து கொண்டே இருக்கின்றனர் அப்படி ஒரு இடத்தில் குருநாதர் அகத்தியப் பெருமான் அன்னை லோபா முத்ரா தேவியுடன் வந்து அவரும் நீர் மோர்  மூலிகை குடிநீரையும் அருந்தினார் அருந்திவிட்டு நல்லாசிகள் தந்தருளினார்)

எவை எவை என்று அறிய அறிய நிச்சயம் ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்ளுங்கள் எவையென்று கூட புண்ணியங்கள்.. எதை என்று அறிய அறிய யான் சொல்லிவிட்டேன்!!!!! பின் நீர் ( தண்ணீர்  மோர் மூலிகை குடிநீர்) எதை எதை என்று அறிய அறிய இன்னும் பல வகையான பழங்களை கூட மற்றவர்களுக்கு தரும் பொழுது எப்படியாவது எதை என்று அறிய அறிய ஞானிகள் வந்து நிச்சயம் பின் கர்மத்தை பின் எதை என்று அறிய அறிய வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள்!!!!

இதுதான் எவை என்று அறிய அறிய புண்ணியங்கள் தவிர மற்ற மந்திரங்கள் தந்திரங்கள் உதவாதப்பா!!!!

எதை எதை என்று அறிய அறிய யான் சொல்லிவிட்டேன்!!!! இக்கலி யுகத்தில் மந்திரங்களுக்கும் ஒன்றும் வேலை இல்லை தந்திரங்களுக்கும் ஒன்றும் வேலை இல்லை எதை என்று அறிய அறிய இறைவனுக்கும் வேலையில்லை என்று தான் யான் சொல்வேன்!!!!

ஏனென்றால் புண்ணியங்கள் செய்தால் உன்னை தேடியே இறைவன் எதை என்று அறிய அறிய வருவானப்பா!!!

அப்படி புண்ணியங்கள் செய்யவில்லை என்றால் பாவத்திற்காக நீ கஷ்டங்கள் அனுபவிக்க வேண்டியது தான் அப்பனே!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! எவ்வாறு என்பதைக் கூட!!!

இறைவனை எப்படி வணங்குவது என்பதை எல்லாம் தெரியாமல் வணங்கிக் கொண்டு எதை என்று அறிய அறிய அப்பனே இரப்பவனுக்குத்தான் அனைத்தும் கூட எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய புரிந்து கொள்ளுங்கள் அப்பனே என் வழியில் வருவருக்கெல்லாம் அப்பனே நன்மைகள் செய்கின்றேன் அப்பனே!!!

எவை என்று புரிய காசிதன்னில் இருந்தே அனைவருக்கும் என் ஆசைகள்!!!!

என் பேச்சை எதை என்று அறிய அறிய கேட்டு நடப்பவர்களுக்கு இங்கிருந்தே ஆசிகள் தருகின்றேன் அப்பனே நலமாகவே!!!!

நிச்சயம் பின்எதை என்று என்று அறிய அறிய யானே கையைப் பிடித்து  இக் காசி தனக்கு வர வைத்து அனைத்து தரிசனங்களும் செய்ய எவை என்று அறிய அறிய என்னையும் (அகத்தியர் தரிசனம்) எதை என்று அறிய அதனால் அப்பனே பிற உயிர்களுக்கு அப்பனே உதவிகள் செய்யுங்கள்

எதை என்று அறிய அறிய இவ்வாறு நலன்களே செய்து கொண்டிருங்கள்!!!

அப்படி உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை யாங்கள்  செய்வோம் அப்பனே!!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே தன் பிள்ளைக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன் தாய் தந்தையர் என்ன செய்ய வேண்டுமோ நிச்சயம் அதை செய்வார்கள் அப்பனே !!! ( அகத்தியர் அப்பா லோபமுத்ரா அம்மா) 

அதனால் என் பேச்சை எதை எதை என்று அறிய அறிய கேட்டு நடப்பவர்களுக்கும் கூட அப்பனே யானே முன் வந்து அனைத்தும் செய்வேன் அப்பனே.

ஏனென்றால் இது கலியுகமப்பா!!!! போராட்டம் மனக்குழப்பங்கள் அப்பனே கஷ்டங்கள்  இன்னும் கண்டங்கள் எதை எதை என்று அறிய அறிய நோய்கள் எவை என்று உணர்ந்து வருமப்பா!!!!

அவற்றிடமிருந்து எல்லாம் பாதுகாத்துக் கொள்ள எவை என்று அறிய அறிய... ஆனால் போலிகளப்பா இவ்வுலகமே.... அப்பனே எதை எதை என்று அறிய அறிய திருடர்களப்பா கோடி கோடி!!!! எவை எவை என்று அறிய அறிய பிறந்தாலும் பக்திக்குள் நுழைந்து விட்டு இப்படி எல்லாம் மனிதர்களை ஏமாற்றியும் கூட எவை எவை என்று அறிய அறிய சுலபமாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

எதை எதை என்று அறிந்து அறிந்து இன்னும் யாங்கள் வரவில்லை என்றால் அப்பனே எதை என்று கூட சித்தர்களே இல்லை அகத்தியனே பொய் என்று சொல்லி விடுவார்கள் அப்பனே!!!

அதனால்தான் எதை என்று கூட யான் எதை எதை என்று அறிய அறிய ஒவ்வொரு இடத்திற்கும் என்னை எதை எதை என்று அறிய அறிய யானே முன்வந்து எவை என்று கூட புவிக்கு வந்து எவை என்று கூட அனைவருக்கும் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!

எந்தனுக்கு ஒன்றுமே தேவையில்லை அப்பனே!!!!

எதை என்று கூட அன்பை மட்டும் அதாவது ஆனந்த கண்ணீர் விடுங்கள் அப்பனே போதுமானது!!!!!

அதை எவை என்று கூட அதை எவை என்று அறிய அறிய எந்தனுக்கு ஒன்றுதான்!!!!

தாய் தந்தையை மதிக்க வேண்டும் அப்பனே எவை என்று கூட அப்பனே ஐந்து அறிவு உள்ள ஜீவராசிகளுக்கு எதை என்று கூட அனைத்தையும் செய்ய வேண்டும் அப்பனே!!!

அதனால் அப்பனே இதுவே போதுமானது மற்றவை எல்லாம் எந்தனுக்கு தேவையில்லை என்பேன் அப்பனே!!! 

நீ மற்றதை எதைச் செய்தாலும் யான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.... சொல்லிவிட்டேன்!!!!!!! இக் கங்கா நதியின் மேல் எதை எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய ஆணையாக சொல்லி விட்டேன் அப்பனே!!!!

இதை செய்யுங்கள் பின் ஏழ்மையில் இருப்பவர்களை கூட சிறிது உயர்த்தி விடுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!!!!

இவ்வாறு செய்து வந்தாலே போதுமானது அப்பனே எதை என்று கூட என்னுடைய ஆசிகள் கிடைக்குமப்பா!!!!!!

அதை விட்டுவிட்டு தான் மட்டும் வாழ வேண்டும் எதை என்று கூட தன் சுற்றத்தார் மட்டும் வாழ வேண்டும் எவை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய யான் எதுவுமே கேட்கவில்லையப்பா!!!!!

அப்பனே எதையுமே எதை என்று கூட அப்பனே அப்படி நீ செய்தாலும் என்னுடைய ஆசிகள் இல்லையப்பா சொல்லி விட்டேன்!!!!!! ஆணித்தரமாக!!!!!!!

அப்பனே எவை என்று கூட இன்னும் அப்பனே இன்னும் உலகத்தில் எவ்வளவு எதை எதை என்று அறிய இறைவன் படைத்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே எதை என்று கூட கர்மத்திற்காக!!!!

ஆனால் எதை எதை என்று அறிய அறிய பாவமப்பா பாவம் எதை என்று கூட மனிதன் அதனால் எதை என்று கூட யாங்கள் வந்தோம் நிச்சயம் அவர்களையும் காப்பாற்றி விடுவோம் நிச்சயம் எதை என்று கூட!!!!

அப்பனே யான் சொன்ன வழிப்பாதையில் வந்துவிட்டால் அப்பனே நிச்சயம் அனைவரையும் உயர்த்தி விடுவேன் யான்!! எவை என்று அறிய அறிய என்னால் அனைத்தையும் செய்ய முடியும் அப்பனே 

ஆனாலும் எதை எதை என்று அறிய அறிய நீங்களும் கூட சிறிது புண்ணியங்கள் செய்து இறைவனையும் காண வேண்டும் என்று கூட துடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே!!!!

அதனால் புண்ணியங்கள் செய்தால்தான் அப்பனே நிச்சயம் இறைவன் தரிசனம் கூட கிடைக்கும் என்பேன் அப்பனே எதை என்று கூட அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து சக்திகளாக மாறி அப்பனே இறைவனை எதை என்று கூட பின் காந்தம் போல் ஈர்த்துக் கொள்ளும் என்பேன் அப்பனே!!!!!

இதுதான் உண்மை!!!!

அப்பனே புண்ணியங்கள் என்பது சக்திகளப்பா எதை என்று அறிய அறிய!!!!

எவை என்று அறிந்தறிந்து அதேபோல பாவங்கள் கூட அப்பனே எவ்வாறு என்பதை கூட இழுத்துச் செல்லும் தண்ணீர் போல் எதை என்று அறிந்தறிந்து

அதனால் பின் எவை என்று கூட பாவம் செய்யாதீர்கள் அப்பனே!!!!

தண்ணீர் வந்தால் எப்படி அடித்துச் செல்லுமோ அனைத்தையும் கூட அதே போல் உன்னை அடித்து சென்று பள்ளத்தில் வீழ்த்தி விடும் அப்பனே!!!!

புண்ணியங்கள் அப்பனே செய்து கொண்டே இருந்தால் அப்பனே மேல் நோக்கி வரும் என்பேன் அப்பனே எதை எதை என்று அறிய அறிய இறைவனிடத்தில் வருவீர்களப்பா!!!!!நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய சந்தோஷம் என்பேன் அப்பனே அனைவரும் எதை எதை என்று அறியறிய அனைவரும் யான் சொல்லியதை பின் சரியாக பயன்படுத்தி விட்டார்கள் அப்பனே யானும் வந்து அருந்தினேன்  அப்பா!!!!

மிக்க சந்தோசங்கள் இன்னும் உங்களுக்கு என்னென்ன புண்ணியங்கள் அவசியமோ அதையெல்லாம் செய்கின்றேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!

அதனால்  நிச்சயம் நீங்கள் தகுதி உடையவராக இருங்கள் அப்பனே புண்ணியங்கள் செய்து எதை எதை என்று அறிய அறிய யானே உங்களுக்கு வழி வகைகள் செய்கின்றேன் அப்பனே!!!

 நலன்கள்!!! ஆசிகள்!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே

என் பக்தர்கள் இனி இவ் வெயில் காலத்தில் அனைவருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் கூட நீர் மற்றும் உணவை வழங்குதல் வேண்டும்!!!!

சாலையோரங்களில் பந்தல் அமைத்து நீர் மோர் மற்றும் நீரில் வெல்லம் இட்டு துளசி இட்டு இவையன்றி கூற வேப்பம் கொழுந்துகளை இட்டு அனைவருக்கும் தருதல் வேண்டும் அப்பனே!!! மூலிகை குடிநீராக வழங்கும் பொழுது நோய்களின் தாக்கங்களும் பெருமளவில் குறையும் அப்பா!!!!

( மூலிகை குடிநீர் பானையில் நீரை நிரப்பி அதில் வெல்லம் துளசி இலைகள் வேப்பம் கொழுந்து இலைகள் அத்தி இலைகள் வில்வ இலைகள் எலுமிச்சை சாறு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு, அருகம்புல் சுத்தம் செய்தது சுக்கு பொடித்தது  நீர் அளவிற்கு ஏற்ப இவற்றையெல்லாம் நன்றாக கலக்கி இம்மருந்துகள் எல்லாம் நீரில் நன்றாக ஊறி இருக்க வேண்டும் இந்த மூலிகை நீரை அனைவருக்கும் வழங்குதல் வேண்டும்)

இதனை என் பக்தர்கள் நிச்சயம் செய்து வர வேண்டும் அப்பனே ஒவ்வொரு திருத்தலங்களிலும் சாலை ஓரங்களிலும் கோடை வறட்சி மிகுந்த பகுதிகளிலும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பறவைகளுக்கு கோமாதாக்களுக்கு பைரவர்களுக்கு இயலாதவர்களுக்கு கட்டாயம் அளிக்க வேண்டும் அப்பனே இதை என்னுடைய கட்டளையாக எடுத்துக்கொண்டு என் பக்தர்கள் அனைவரும் செய்துவர செய்து வர புண்ணியம் பெருகுமப்பா!!!!

அப்பனே புண்ணியங்கள் எதுவும் இல்லாமல் நேரடியாக இறைவனை கண்டாலும் லாபம் இல்லை அப்பனே!!!!

பல பல புண்ணிய செய்திருந்தால் மட்டுமே அப்பனே இறைவனும் அருள் புரிவான் அவந்தன் தரிசனமும் கிட்டும்!!!!!

நல்முறையாக அனைத்து ஜீவராசிகளுக்கும் உதவிட வேண்டும் பாதசாரிகளுக்கு நீர் மோர் வழங்குதல் அன்னத்தை அளித்தல் இது போன்ற புண்ணிய காரியங்களை செய்து வர வேண்டும்..... நீர் தானம் பெரும் புண்ணியம் அப்பா...

அப்பனே நீர்மோர் பந்தல்களை அமைத்து அனுதினமும் வருகின்றவர்களுக்கெல்லாம் உதவி வர வேண்டும் அவர்களது மனம் மகிழ்ந்தாலே உங்களுக்கு புண்ணியம் பெருகும் அப்பா!!!!

அப்பனே சகல ஜீவராசிகளையும் சமமாக பாவித்து எந்த ஒரு உயிருக்கும் துன்பத்தை கொடுக்காமல் அவைகள் மனமகிழ முடிந்தவற்றை வழங்கி வந்தாலே உங்களது பாவக்கணக்கு குறைந்து அப்பனே புண்ணிய கணக்கு குவிந்து விடும்.... அப்பனே உங்களிடம் அதிக அளவு புண்ணியங்கள் இருந்தால் இறைவனாலும் ஒன்றும் செய்ய முடியாது!!!!!

அப்பனே தன்னுயிர் போல பிறகு உயிரை காண வேண்டும்.... தான் வாழ நமக்கு அப்பனே எப்படி எப்படி தேடி அலைந்து திரிந்து கற்றுக்கொள்கின்றோமே அதுபோல பிற உயிரையும் பேணுதல் வேண்டும் அப்பனே!!!!

என் வாக்கினை என் பக்தர்கள் நிச்சயம் கேட்டு நடந்தால் வாழ்க்கையில் மாற்றங்களை யானே ஏற்படுத்துவேன் இது நிச்சயம்!!!!!

என இந்த வெயில் காலத்தில் அனைவரும் என் பக்தர்கள் செய்து வர வேண்டும் என வாக்குகள் தந்திருந்தார் ( சித்தன் அருள்.   1310. அன்புடன் அகத்தியர்  உத்தரவு )

அதன்படியே உலகம் எங்கும் வாழும் அகத்திய அடியவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பல்வேறு திருத்தலங்களுக்கு முன்பாகவும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு எல்லாம் சென்று மூலிகை குடிநீர் அன்னதானம் நீர் மோர் வழங்குதல் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மும்பை மகாராஷ்டிரா குஜராத் என அனைத்து இடங்களில் வாழும் அகத்தியர் அடியவர்கள் தங்களால் முடிந்தவரை பொதுமக்களுக்கு இந்த சேவை செய்து வருகின்றனர் குருநாதர் தன்னுடைய வாக்கில் அடியவர்களை நெகிழ வைத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்!!!! அகத்தியப் பெருமானும் லோபமுத்ரா அன்னையும் வந்து அருந்திவிட்டு சென்று ஆசிகள் தந்து விட்டு சென்றார்கள் என்று குருநாதர் தன் வாக்கில் குறிப்பிட்டிருந்தார் காசியில் இருந்தே இங்கு அடியவர்கள் செய்யும் அனைத்தையும் பார்த்துக் கொண்டு என் பிள்ளைகள் என் பிள்ளைகள் என்று மனம் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அடியவர்கள் அனைவரும் நம் குருநாதருக்கு புகழ் தேடி தர வேண்டும் புகழை அவர் விரும்புவதில்லை இருந்தாலும் என் பிள்ளைகள் என் பிள்ளைகள் என்று அவர் மனம் மகிழும் படி நாம் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்!!!

இந்த குருநாதருடைய உத்தரவை  சிரமேற்று மிக சிறப்பாக நடத்தி வரும் அடியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

அக்னி நட்சத்திரம் விரைவில் தொடங்குவதை முன்னிட்டு அடியவர்கள் மேலும் மேலும் குழுவாக செய்ய முடியாத அடியவர்கள் தங்களுடைய வீடுகளில் தயார் செய்து விட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் குருநாதர் உரைத்த நீர் மோர் மற்றும் மூலிகை குடிநீரை வழங்கி நல்லாசிகள் புண்ணியங்களை பெற்றுக் கொள்ளுங்கள்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment