​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 11 May 2022

சித்தன் அருள் - 1132 - அன்புடன் அகத்தியர் - காசியில் பார்வதி தேவி உரைத்த பொதுவாக்கு



8/5/2022 அன்று பார்வதி தேவி அம்பாள் உரைத்த பொதுவாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் .காக்கும் சிவன் காசி. கங்கை கரை. 

கங்கையை முடிமேல் அணிந்தவனே!!!!

முக்காலமும் அறிந்தவனே!!! 

உன்னை மனதில் தொழுது மனிதர்களுக்கு ஈகின்றேன் வாக்குகளாக.... உமையவள்.!!!! 

திருந்துவார்களா??? மனிதர்கள்!!!

மனிதர்கள் எண்ணங்கள் வெவ்வேறாக போய்க் கொண்டிருக்கின்றது.

போய்க் கொண்டே இருக்கும் இன்னும்.

மனிதரிடத்தில் தகுதிகள் குறைந்துகொண்டே வரும் இக்கலியுகத்தில்.

அதனால்  மனிதன் மனிதனே அழித்துக் கொள்வான்.

இவ்வுலகத்தில் பெரும் ஆபத்து எதனால் வருகின்றது என்றால்??? மனிதனாலே!!! ஏன்?? பின் அதனையும் இதனையும் என்று எண்ணி வளராமல் இன்னும் பக்திகளில் நுழைந்து நுழைந்து பொய் சொல்லி வாழ்ந்து பிழைப்பு நடந்து தான் கொண்டிருக்கின்றது.

என் மணாளன்!! அதை பார்த்துக்கொண்டு!!! ரசித்துக் கொண்டுதான்!!! இருக்கின்றான். 

ஏன்? ரசிக்கின்றான்?? ஆனால் புத்திகெட்ட மனிதனுக்கு அழிவுகள் இதன் மூலமே என்று தெரியாமல் அனைத்தும் நம்தனக்கு கிடைக்கும் கிடைக்கும் என்றே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அதனால் தான் என் ஈசனும் மனிதனை பார்த்தது சிரித்துக் கொண்டிருக்கிறான்.

இவ்வளவு பின் பக்திகளை நடத்தி நடத்தி ஏமாற்றம் அடைவதற்கு...நீ. எதைப் பின்பற்றி பின்பற்றாமலே  இருந்திருக்கலாம்.

ஆனாலும் என் மணாளன் பெயரைச் சொல்லியும் நமச்சிவாயா!!!! சங்கரா!!!

இவை என்றெல்லாம் கூறி கூறி மனிதன் ஏமாற்றி பிழைப்பும் நடத்துகின்றான்.

ஆனாலும் அவனுக்கு தெரியாது ஆனால்  இவ் சந்தோசங்கள் சில காலங்களே என்று...!!!!

ஆனால் மனிதன் நிச்சயமாய்  திருந்தினால் மட்டுமே இக்கலியுகத்தில் விடிவெள்ளி!!!!

விடிவெள்ளி என்பது உண்டு நிச்சயமாய் நல் மனிதர்களுக்கு!!!!!

ஆனாலும் நிச்சயம் சித்தர்களும் செப்பிக் கொண்டே வருகின்றனர் சில வாக்குகளையும்.

ஆனாலும் அதை நல்லோர்கள் அழகாக பயன்படுத்துகின்றனர். இதனால் நிச்சயம் சித்தர்கள் மகிழ்வதும் உண்டு.

அதனால் சித்தர்கள் சில மனிதர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு நிச்சயமாய் உயர்வும் கொடுப்பார்கள்.

ஆனாலும் பின் என் மணாளனையும்  கூட இவ்வுலகத்தில் நேசித்து நேசித்து வந்தவர்களையெல்லாம் யான் பார்த்தேன்.

ஆனாலும் கடைசியில் என்னவென்று நமச்சிவாயனா??!!! இவன்!!?

இவனை நம்பித்தான் யான் மோசம் போய் விடுகின்றேன் என்று கூட சொல்லியதையும் யான் பார்த்தேன்.

ஆனால் இவ்வுலகத்தில் என் மணாளனை போன்று கருணை மிக்கவன் எவரும் இல்லை.

கேட்டதை!!! கேட்ட வரத்தை!! அப்படியே தருவான்.!!!

ஆனால் மனிதன் அதற்கு தகுதியான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

யான் சொல்வேன்!!! மணாளா !!!!!

ஆனாலும்  உந்தனையும் கூட இப்படி ஏமாற்றுகின்றார்களே!!! என்று கூட.... ஆனாலும்  ஏமாற்றட்டும் ஆனால் அவன் புத்திகளே!!! அவனை கெடுத்துவிடும்.

அதனால் மனிதன் வாழ நினைத்தால் நிச்சயம் நல்முறையாகவே வாழட்டும்!!!

வாழட்டும் என்று உணராமல் இன்னும் இவ்வுலகத்தில் மாற்றங்கள் நிகழப் போகின்றது. அதனால் இன்னும் சித்தர்கள் பெயரைச் சொல்லி ஏமாற்றியவர்களை நிச்சயமாய் சித்தர்களே தண்டிப்பார்கள்..உண்மை. 

யான் தெரியாமலே கேட்கின்றேன்!!

பக்தி நீங்கள் செலுத்துகின்றீர்கள் ஆனால்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வினை!!! ஏன்?? 

உண்மையான பக்தியை செலுத்தினால் ஆனாலும் நிச்சயம்  கருணை மிகுந்த என் ஈசன் உன்னை அணைத்துக் கொள்வான் உன் இல்லத்திற்கே வருவான் யானும் உன் இல்லத்திற்கே வருவேன்...... வருவான் என் மைந்தன் அகத்தியன் கூட...

அகத்தியன் வலம் வந்து கொண்டே இருக்கின்றான்.!!!

ஆனால் புத்தி கெட்ட மனிதன் என் பிள்ளையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல்....

அகத்தியா!! அகத்தியா!! என்றெல்லாம் சொல்லி காசுகளை பறித்து ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றனர்.

ஆனாலும் என் பிள்ளையை அகத்தியனே வேண்டாம்ப்பா!!! வேண்டாம்ப்பா!! மனிதன் நிலையில்லாமல் உன் பெயரைச் சொல்லியும் இப்படி ஏமாற்றுகிறார்களே என்று.......

ஆனாலும் திரும்பவும் திரும்பவும் என் மைந்தன் அகத்தியன் சொன்னான்!!!

ஏமாற்றுபவர்களா!!! ஏமாற்றட்டும்! என்னை வைத்து ...ஆனால் அதுவும் சிறிது காலமே....

ஒன்றை சொல்கின்றேன்!!! சித்தர்களை, சித்தர்களை நம்பினோர்கள்.. ஆனாலும் சித்தர்கள் நிச்சயம் பல பரீட்சைகளை மேற்கொண்டு தோல்விகளை தோல்விகளை ஏற்படுத்தி நிச்சயம்  ஓர் நாள் அழிவில்லாத வாழ்க்கையை ஏற்படுத்துவார்கள்.

ஆனால் என் மணாளன் ஈசனோ!!! அப்படி இல்லை!!! உடனே கொடுத்து விடுவான்.

ஆனால் நிச்சயம் அதற்கு தகுந்தாற்போல் நீ நடந்து கொள்ளவில்லையென்றால் பறித்துவிடுவார். இதுதான் மெய். 

ஆனாலும் பல சோதனைகள் உண்டு மனிதனுக்கு வரும் காலங்களில்.

அவற்றையெல்லாம் எப்படித் தேற்றிக் கொள்வது என்றால்... சொல்லி விடுகின்றேன்....

நிச்சயம் வாயில்லா ஜீவராசிகளை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும் திரும்பவும் , திரும்பவும் யானும் இதைத்தான் செப்புவேன்... தன்னைப் போல பிறரை எண்ணும் குணம் இருந்தால் என் மணாளன் அவ் உள்ளத்தில் அழகாக அமர்ந்திருப்பான். ஆனாலும் இனிமேலும் என் பக்தர்கள் எதை என்று கூறாமலே பொய் சொல்லி

யான் தான் சிவன்!!! எந்தனுக்கே!! அனைத்தும் தெரியும் என்று..... ஆனாலும் ஒரு பழைய பழமொழியும் உண்டு.

"" நிறைகுடம் தளும்பாது!!!

ஆனாலும் அகத்தியனையும் கூட பின் இவையன்றி கூற பெயரையே கெடுத்து விட்டார்கள். கெட்டு கெட்டு மனிதர்களுக்கு இவந்தன் பெயரையும் கெட்டு விட்டார்கள் ஏனென்றால் அப்படி போன்று.

இதனால் சித்தர்கள் பின் மனிதர்கள் சித்தர்கள் மீது எவ்வாறு வரும்?? ஏனென்றால் இதை என்று அறியாமலே மனிதன் நகைத்து!!! ஏன்? உருவமில்லாத சிலைகளுக்கு பின் பொய்களைச் சொல்லி ஏமாற்றுகிறான்.

ஆனால் உருவம் உள்ளது நிச்சயம் யான் சொல்வேன் இதனால்.... கண்களால் யாங்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.

இவையன்றி கூற அனைத்தும் யானே!!! மதுரை(மீனாட்சி) இதை எதை என்று சொல்வதற்குள் காஞ்சி(காமாட்சி) இவை காசி( விசாலாட்சி) இன்னும் பலபல பீடங்கள் என்னுடைய ஆனாலும் பல பல வடிவங்களில் யான் அவதரித்தேன்.

ஆனாலும்  இதையென்றும் ஆனாலும் மக்களுக்கு நல் முறையிலே பல அவதாரங்கள் எடுத்து நிச்சயம் அழிவையும் கொடுத்திருக்கின்றேன். நல் முறையாக வாழவும் வைத்துக் கொண்டு இருக்கின்றேன்.

எதை பின்பற்றுவதற்கு மனிதனுக்கு இனிமேலும் புத்திகள் சிறிது சிறிதாக சிறிது சிறிதாக தெளிவு பெறாமல் வாழ்ந்து விடுவான் கலியின் பிடியில்.

மனிதன் இப்படி இருக்க!!! எவ்வாறு ??கஷ்டங்களை நீங்கள் கடந்து வர....??

கடந்து வரவேண்டும் என்றால் நிச்சயம் பக்திகள்!! அன்புகள்!!கருணைகள்!! நீங்கள் செலுத்த வேண்டும்.

அப்படி இல்லை என்றால் நிச்சயம் ஒன்றும் செய்ய இயலாது மனிதனை.

தான் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற்றும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். ஆனால் நிச்சயம் என் மணாளன் நிச்சயம் பின் மனம் பின் மனம் வந்துவிட்டாலே கொடுப்பான் எதனையும்.

ஆனாலும் சொல்கின்றேன் "'கங்கைக்கு பல அற்புத சக்திகள்!!!

எதையென்று.. என் மணாளனின் தலையின் மீதே உதிக்கின்றது இவ் நதி!!!! 

இதனால் பல வியாதிகளையும் வேதனைகளையும் போக்கவல்லது  இவ் கங்காநதி!!!! 

இதை ஆனாலும் அறியாத மூடர்கள் பல மருத்துவர்களையும் இதையன்றி கூற தெரியாமல் சென்று சென்று......

ஆனால் என் மணாளனின் தலை மேலே வருகின்ற பின் நதியை சிறிதளவாவது தண்ணீரை குடித்து வந்தால் அருந்தி குடித்து பின் குளித்து வந்தால்.... இதை ஆனாலும் மேற்சொன்ன வியாதிகள் நிச்சயம் வராது.

அதுவும் இதுவும் சூட்சுமமாக செப்பி விடுகின்றேன் எதனையும் என்று கூற... தலையின் மீது வரும் நதியானது ஆங்காங்கே பல சித்தர்கள் ஞானியர்கள் இன்னும் என் மணாளன் மீது பக்தி கொண்ட அன்பர்கள் இவர்கள் எல்லோரும் அதற்கடியிலே தங்கித் தங்கி தியானங்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் அதனால் நிச்சயம் இவையன்றி கூற பல வியாதிகளையும் பல மன பிராந்திகளையும் பல மனக் கஷ்டங்களையும் தீராத வியாதிகளையும் நிச்சயம் இவ் நதியில் குளித்தாலே நிச்சயம் தெளிவுகள் பெற்று கொண்டே வரும்.

ஆனால் மனிதன் அதற்கும்  தகுதி படைத்தவனாக இருந்தால் தான்  ""ஈசன் ""என் ஈசன்  இங்கே அழைப்பான்... அதனால் தான் அன்பே தெய்வம் என்று கூட சொல்லிவிட்டார்கள் மனிதர்களுக்கு.

ஆனால் மனிதன் என்னவென்று நினைக்கின்றான் என்றால் தாம் நினைப்பதை அப்படியே நடந்து விட வேண்டுமென்றே இறைவனையும் கூட வணங்குகின்றான்... எப்படி அனைத்தும் கொடுத்து விட்டால் நீ நிச்சயம் பக்தி செலுத்த மாட்டாய்... அனைத்தையும் அழித்து விடுவாய்.. மனிதனையும் அழித்துவிடுவாய்... ஆனாலும் ஏமாறும் காலம் மனிதனுக்கு.

பிழைப்பு நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் நல்நேரங்கள் விடிவதில்லை. 

நல் நேரங்கள் என்பதற்கிணங்க எதன் மூலம் மனிதர்கள் மீதே.... மனிதர்கள் நல்லது செய்தாலே போதுமானது நல் நேரங்கள் கடந்து கொண்டே போகும்.

ஆனால் தீய நேரங்கள் என்பது மனிதன் செய்கைகளே!!!!

அதனால் முதலில் நல்லதை நினையுங்கள்!!! நல்லதை செய்யுங்கள்!!!! நல்ல படியாகவே அனைத்தும் முடியும். முடியும் என்பது எனது வாக்கு!!!!

வாக்கு இன்னும் பல பல சம்பவங்கள் இவ்வுலகத்தில் நடைபெறும்.

ஆனாலும் மனிதனுக்கு வெட்கங்கள்!! புத்திகள்!! இல்லையே!!!!!??

ஏன்??? பக்தியை பொய் பக்தியாக செலுத்துகிறார்கள்???

காசுகளுக்காகவே மனிதர்கள்... இறைவனை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம்.... 

ஆனாலும் அது சிறிய காலமே!!!!.... பின் பலமாக பின் அடிகள் கொடுத்துவிட்டால் திரும்பவும் இறைவன் மீது அவந்தனுக்கு பற்று ஆகாது.

சொல்வான் பல ஞானியர்களும் இதையென்று அறிய... யான் பார்த்ததுண்டு!!! யான் பெரும் பக்தியாக இருந்தேன், சேவை செய்தேன். அனைத்தும்.

ஆனால் எந்தனுக்கு கஷ்டங்கள் வந்துவிட்டது என்று... ஆனால் இதற்கு நீ என்ன செய்தாய்??? பொய்கள்!! பொய்கள்!! பித்தலாட்டங்கள்!!! இவையன்றி கூற ஏமாற்றங்கள்!!! இதையெல்லாம் மறந்து விட்டாயா என்ன????

அதனால் நீ செய்யும் வினைகள்.

உண்மையாக இரு!!!! உண்மையாகவே அன்பைச் செலுத்து.. ஒரு குறையும் வராது....

""உன்  அன்னையவளாகவே இருந்து யான் நிச்சயம் காப்பேன்!!!! அனைத்தையும் கொடுப்பேன்.!!!

இவையறிந்து கூற இவை அறிந்து கூட அதனால் இவ்வுலகத்தில் ஒன்றுமில்லை.!! ஒன்றுமில்லை !!!

உன்னால், இறைவனுக்கு எதை கொடுக்க முடிகின்றதோ..!?. அவ்வாறு கொடு!!!! இறைவன் உந்தனை நிச்சயம் காசுகள் கேட்கவில்லை!!! அன்பைத்தான் கேட்கின்றான்!!! அதை நீ முதலில் கொடு!!! அதை கொடுத்தாலே நிச்சயம் மனமிரங்கிசெல்வான். 

உயர்ந்த உள்ளங்களை இன்னும் பிறக்க வைப்போம் அவர்கள் மூலம் இந்த உலகத்திற்கு நன்மைகளை நிச்சயம் யாங்களும்  செய்வோம்!! சித்தர்கள் வழி வழியாக வந்தவர்கள்.

ஆனாலும் பின் அடியாட்கள் என் ஈசனின் அடியாட்கள் மனிதன் எப்படி கஷ்டங்கள் கொடுத்தாலும் திருந்தவில்லை என்று கூட அடியாட்கள் என்பதை யான் கிரகங்கள் என்று சொல்வேன்...

கிரகங்களும் இதையென்று என் ஈசனிடம் வந்தன!!!

வந்தன இனி எப்படி  யாங்கள் கொடுப்பது??? எவ்விதமாகவும் மனிதர்களுக்கு தண்டனைகள் கொடுத்தாலும் அவன் திரும்பவும் திரும்பவும் பின் இதை! எதை? என்று கூற சிந்திக்காமலே கர்ம வினைகள் பாதிக்கின்றான் என்று கூட....

ஆனாலும் என் ஈசன் கடுமையாக எச்சரித்து விட்டான்!!!

கிரகங்களே!!!!!  இவையன்றி கூற நிச்சயமாய் இவ்வுலகத்தில் உண்மையை  பின் பேசுபவர்களுக்கு நீங்கள் ஒரு தீங்கும் செய்யக் கூடாது.

அப்படி புறம்பாகச் செய்தால் அவர்களுக்கு அங்கேயே தண்டனைகள் கொடுங்கள் நிச்சயமாய்  ஏற்படுத்துங்கள் என்றுகூட.

ஆனால் இதில் சனிதேவனோ முந்திக் கொண்டான்..... யான் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன்....

அதனிடையில் ராகுவும் முந்திக் கொண்டான்... கேதுவும் முந்திக்கொண்டான்... யாங்கள் நிச்சயம் கஷ்டத்தை மனிதருக்கு அள்ளித் தருவோம் . ஆனாலும் உண்மையாக இருந்தால் அவ் கஷ்டத்தையும் கூட பின் பேரின்பமாக மாற்றுவோம்!!! உன்னிடத்தில் (ஈசனிடத்தில்) சேர்ப்பதற்கான வழிகள் செய்வோம்.

அதனால் இதில் கூட சனியோ!! ராகுவோ!!! கேதுவோ!!!! இவர்கள் நிச்சயம் ஒரு சாதகத்தில் வந்தால் அவர்கள் கணக்கை எப்படி என்று கூட தெரியாமல் தெரியாமல் கர்மத்தை கழித்து விடுவார்கள்... 

ஆனால் அவ் கர்மத்தை போக்க.... பல பரிகாரங்களாம்!?

முட்டாள் மனிதர்களே!!!!! சிந்தித்துக் கொள்ளுங்கள்!!!!

சனி!! ராகு!! கேது!! இவர்களுக்கு பலம் எப்பொழுதும் அதிகமாக கொடுத்துவிட்டான். என் மனதில் உள்ள ஈசனே!!!

அதனால் அவர்கள் வந்தடைந்தால்(சாதகத்தில்) மனிதர்கள் எப் பரிகாரம் செய்தாலும் நிச்சயம் பலிக்காது.... 

ஏனென்றால் நீ செய்த கர்மத்திற்காகவே அதை நீ அனுபவித்தே ஆக வேண்டும்... ஆனால் மனிதர்களோ பொய் சொல்லி ஏமாற்றி ஏமாற்றி இவைகள்(ராகு கேது சனி) வருகின்றதே இதனை நிறுத்துவதற்கான வழிகள் யான் கூறுகின்றோம்!!! கூறுகின்றோம் என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி ஏமாற்றி பிழைப்பு நடத்தி அவன் கர்மத்தையும் இவன் சேர்க்கின்றபடியால் நிச்சயம் பின் கடைசியில் பார்த்தால்!! பார்த்தால்!! .....

""என் வாயால் சொல்லக் கூடாது!!!.... நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்!!!

இதையன்றி கூற அதனால் மனிதனே!! உண்மையான ஞானியாக,  எதை அறிந்து கூட உண்மையான பக்தனாக இருந்துவிடு!!!

"நமச்சிவாயா"" என்று என் மணாளனை அழைத்துக் கொண்டே இரு!!! பக்தியோடு!!!.

நிச்சயம் என் மணாளன் எதையும் கேட்கவில்லை... அன்பு தானே கேட்கின்றான்!!!

அதைக் கூட உங்களால் அளிக்க முடியவில்லை!!!

பின்  எப்படி இறைவன் காப்பாற்றுவான்??? எப்படி சித்தர்கள் காப்பாற்றுவார்கள்???

இதை உணர்ந்து ஆனாலும்...இதை எதை என்று தெரியாமலே... ஆனால் கிரகங்கள் பிடிக்கும் பொழுது ஒருவன் சந்நியாசியாக மலையின் மீது போய் அமர்ந்து விட்டால் கிரகங்கள் நிச்சயம் ஒன்றும் செய்யாது.

ஆனாலும் அதற்கும் பந்த பாசங்களில் ஈடுபடக்கூடாது..!!

நிச்சயமாய் தவத்தை மேற்கொண்டால்....எந்தனுக்கு எதுவும் தேவையில்லை!! ஈசனே கதி என்று இருந்தால் கிரகங்கள் நிச்சயம் வேலை செய்யாது.

அதில் கூட ஆணவம் எல்லாம் வந்து விடக்கூடாது!!கூடாது இதனால்தான் பல ரிஷிகளும் பல ஞானியர் களும் எதை என்று கூறாமலே... நிச்சயம் கஷ்டங்கள் வரும் பொழுது அமைதியாக பல மலைகள் மீதும் காடுகள் மீதும் தவங்களை மேற்கொண்டனர்.

இதனால்(கிரகங்களின்) தாக்கம் குறைந்து விட்டது. ஆனால் எளிதில் கூட... அதனால் நினைத்ததை எளிதில் நடத்தி விடலாம்.

இதனால் தெரிந்து கொள்ளுங்கள்!!! மானிட ஜென்மங்களே!!! 

நிச்சயம் கிரகங்கள் கொடுக்கும் கஷ்டங்களை மனிதனால் தடுக்க இயலாது!!

அப்படி தடுத்து விட்டாலும் இரு மடங்கு வந்துவிடும். தெரிந்து கொள்ளுங்கள்.

பணத்தின் மீது ஆசை பணத்தின் மீது பக்தி இவற்றினின்றும் தன் பிள்ளைகள் மீது பக்தி.... மனிதா அனைத்தும் நீயே உருவாக்கியவன். பின் இதையன்றி கூற நீ உருவாக்கியதன் மூலம் அனைத்தும் அதன் மூலம் கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது.

இதையன்றி கூற ஆனால் இறைவன் என் நேசன்!!! என் அன்பானவன்!!! நிச்சயம் தடுக்க கூடியவனே!!!

இதனால் என் அன்பன் நண்பன் இதையன்றி கூற நிச்சயமாய் அகத்தியன் என் மைந்தன் அவன் பெயரைச் சொல்லி நிச்சயம் ஏமாற்றி விடாதீர்கள்.. நிச்சயமாய் பல மனிதர்கள் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள். எதையெதையோ விதவிதமாகவெல்லாம் செய்து...... ஆனால் கடைசியில்  பின் பலமாக அடிகள் விழுந்தால் நிச்சயம் நீ தேறமாட்டாய் சொல்லிவிட்டேன்....

அதனால் யான் பக்திகளாக இருந்தும் பல மனிதருக்கு நன்மை செய்தும் இப்படி வந்துவிட்டதே என்று கூட  இறைவன் மீது பழி சுமத்தாதீர்கள்.

நிச்சயம் மனிதன் மனிதன் பிழைத்துக் கொள்வதற்கு இவ்வுலகத்தில் தர்மமே சிறந்தது!!!!

தர்மம் எதற்காக எதையன்றி கூற பிறர் நலம் எதையன்றி கூற காசுக்காகவே பல மனிதர்கள் பக்தியை செலுத்துகின்றனர் .ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. சொல்லிவிட்டேன்.

சொல்லிவிட்டேன் இதையென்று  அறிவதற்கு இன்னும் பல காலங்கள் சென்று கொண்டேதான் இருக்கின்றது.

பல பல வடிவங்களில் கூட.... சித்தர்கள் தவழ்ந்து  வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

ஆனாலும் பல பூஜைகள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் அங்கேயும் சித்தர்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்... ஆனாலும் பொய் பொய் வாயைத் திறந்தாலே .

பக்தி!! பக்தி என்பது மனதில் தான் இருக்க வேண்டும் திரும்பவும் சொல்கின்றேன். யான் பக்தியானவன்!!! யான் பற்றுள்ளவன் என்றெல்லாம் சொல்பவன் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் ஒரு பழமொழியை திரும்பவும் சொல்கின்றேன்.... நிறைகுடம் எப்பொழுதும் தளும்பாது என்பதைக் கூட... முன்னோர்கள் வகுத்தது!!! இதை இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

ஞானியானவன் நிச்சயம் அனைத்தும் தெரிந்தவன் யாரிடமும் பேச மாட்டான்!! அமைதியாக இருப்பான் அனைத்தும் நடக்கும் என்று சொல்லிவிடுவான்.

ஆனால் ஒன்றும் தெரியாதவனோ ?!அவை!! இவை!! இப்படி செய்!!!!! 

மனிதனே ஒன்றை கேட்கின்றேன் நீ என்ன?? ஞானியா??? சித்தனா?? இல்லை ரிஷியா??? இதற்கு எப்படி தகுதியானவர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஆனால் ஒன்றும் நடக்கப்போவதில்லை ஆனால் பணத்தை பறித்து தான் செல்கின்றார்கள் பக்தி  என்று நுழைந்தவுடன் .
ஏமாற்றி !!ஏமாற்றி!!.....

ஆனாலும் யான் பார்த்துக்கொண்டே.... இதையன்றி கூற விட்டுக்கொண்டே இருக்கின்றேன்..... ஆனால் பொய்களப்பா ஆனாலும் இப்போது நீ தேற்ந்து விடலாம்.... ஆனாலும் ஆனால் உண்மை சம்பவங்கள் ஆனால் நீ எப்படி ?இங்கு எதற்காக வந்தாயோ!!! அதற்கு நிச்சயம் பதில் நீ அளித்தே தீரவேண்டும்!!!

உன் ஆன்மா இறைவனிடத்தில் பின் நின்று பதில் சொல்ல வேண்டும்!!!! சொல்லிவிட்டேன்.

அதனால் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது!!!

ஆனால் ஒன்றை மட்டும் சொல்கின்றேன்... பொய் சொல்ல நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றான் மனிதன்.. ஏமாற்றி பிழைப்பு நடத்த நன்றாக தெரிந்து கொண்டிருக்கின்றான்!!!

 இப்படியிருக்க இறைவன் பின் எப்படி வருவான்????

பல ஜீவராசிகளையும் பின் சாகடித்து.. அதன்... அதனை  உணவாக உட்கொண்டு வந்தால்... ஆனாலும் இறைவன் எப்படி உந்தனுக்கு அனைத்தும் தருவான்????

தெரிந்து கொள்! எதை எதை என்றுகூட!!!!!

பல பரிகாரங்கள் பலபல வழிகளிலும் கூட செய்தாலும் உண்மை நிலை புரியாமல் நிச்சயம் பலிக்காது!!! சொல்லிவிட்டேன்.

இதனையென்று கூற அனைத்தும் வேடங்கள் என்று தெரிந்துகொள்வது!!! வேடத்தை போட்டுக்கொள்வது!! ஈசா!! என்று சொல்வது!! அகத்தியா!! என்று சொல்வது!! யான் சித்தன் அடிமை!!!! என்று சொல்வது!!!...

பொய் அனைத்தும் பொய்!! வாயெல்லாம் பொய்!!! ஆனால் எச்சரித்து விடுகின்றேன் யானும் கூட...

கோபம் வந்தால் அனைவரும் தாங்க மாட்டார்கள்!!!!

ஆனாலும் ஏன் ஒன்றைச் சொல்கிறேன் நீ மனிதா ஏமாற்றுபவனிடம் சென்றால்... அவனும்  ஏமாறுவான்... நீயும் ஏமாறுவாய்... அவனும் கர்மத்தை சேர்ப்பான் நீயும் கர்மத்தை சேர்க்கவேண்டும் தெரிந்துகொள்.

அதனால் உண்மையான படைப்பை படைத்தவனை நம்பு!!!! இவையன்றி கூற இதையென்றும் ஆனால் படைத்ததை எப்பொழுதும் நம்ப வேண்டாம்!!!

நிச்சயம் குருவாக பின் சித்தர்களை தொழுங்கள்..அவனே அனைத்தும் என்று இருங்கள் நிச்சயமாய் பல சித்தர்களும் செப்பி விட்டார்கள்.... மனிதனை நம்பிவிடாதே!!!! மனிதனை நம்பிவிடாதே !!!எளிதில் என்றுகூட!!!!!

ஆனாலும் திரும்பவும் நம்பி நம்பித்தான் ஏமாறுகிறார்கள். ஆனால் ஏமாந்து விடுதல் பின் கூட கர்மத்தை சேர்த்துக் கொள்கின்றார்கள்.

ஒன்றை சொல்கின்றேன் கர்மத்தை சேர்த்துக் கொள்வதில் மனிதன் வல்லவனுக்கு வல்லவன்!! தெரிந்து கொள்ளுங்கள்.

வேண்டாம் பிறவிகள் வேண்டாம் இனிமேலும் பிறவிகள் வந்துவிட்டாலே கஷ்டங்கள் தான் .

பல வழிகளிலும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்... என் மணாளனை வணங்கியோர்களுக்கும்...

ஆனாலும் யான் ""அன்னையவள்!!! ஆக இருந்து பல பரிசுத்த ஆன்மாக்களையும் நல்லதே செய்து இருக்கின்றேன்.

அதனால் மனிதனே... சரியாக திருந்திக்கொள்...பொய்கள் வேண்டாம் ....

நல் முறையாக!!

நல் முறையாகவே உண்டு இன்னும் சித்தர்கள் ஆசிகள்... இவ்வுலகத்தை வழி நடத்துவார்கள் நிச்சயமாய் அதனால் பிழைத்துக் கொள்ளுங்கள்.

ஏன்?? பொய் சொல்லி பக்தி பக்தி என்ற ஆசைகளைக் காட்டி அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

வேடங்கள்!!! வேஷங்கள்!!! தேவையா??? மனிதா!!!

முட்டாள் மனிதா!!! 

வேடங்கள் தேவையா??? 

வேண்டாம் உந்தனுக்கு எதுவும் நடக்காது உண்மையாகவே நிச்சயமாகவே.!!!

எதை நீ அங்கிருந்து பெறப்பட்டாயோ!!! அது தான் நடக்கும் இங்கு. உண்மையான அன்பை செலுத்தினால் அதை நிச்சயம் மாற்றுவோம் இதையெல்லாம்..

ஆனாலும் மனிதர்கள் பொய்யைச் சொல்லி சொல்லி இறை பக்தர்கள் ஆனால் இவர்கள் பொய் பக்தர்கள் என்று சொல்வேன்.யான்.

ஆனாலும் மனிதன் மனதையும் மாற்றிவிட்டான் இவ் பரிகாரத்தை செய்தால் அவை நடக்கும் இவை நடக்கும் என்றெல்லாம்.....

மனிதர்களே ஏதும் நடக்காது சொல்லிவிட்டேன்.!!!

இன்னும் பல மனிதர்கள் இவ்வுலகத்தில் பின் ஏமாந்து நிற்கின்றனர்... தவித்து நிற்கின்றனர் பல கன்னிமார்கள் மனிதனால் இதையன்றி கூற எவை என்றும் கூறாத அளவிற்க்கும் கூட பக்தி பக்தி என்று இவனிடத்தில் சென்று கற்பையும் இழந்துள்ளார்கள்!!!! இனிமேலும் வேண்டாம் பொய் சொல்லி ஏமாற்றுபவர்களை நிச்சயம் யாங்கள் தண்டித்து கொண்டே தான் இருக்கின்றோம்....

அப்பொழுதும் கூட அவன் சொல்லுகின்றான் பரவாயில்லை பரவாயில்லை என்று கூட இவ்வுலகத்தில் பிறந்து விட்டோம் வாழ்ந்து விடுவோம் என்று!!!!

ஆனால் நிச்சயம் பின் இறைவன் பக்தியை கெடுத்து விடாதீர்கள்!!! நல்லோர்களுக்கு சொல்லுங்கள்....

ஏன்?? சித்தர்கள் பல ரகசியங்களையும் கூட சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் ஆனாலும் அவ் ரகசியங்களை பின் மனிதருக்கு செல்லக்கூடாது என்றுகூட பின் மறைத்து விட்டனர் ஆனாலும் இனிமேலும் நல் மனிதர்களுக்காக சித்தர்கள் செப்புவார்கள்.. அதை பயன்படுத்தி கொள்க.

அதை பயன்படுத்தி கொண்டால் ஒரு தொந்தரவும் இல்லை இல்லை.

மனிதா!!!

திருந்தி கொள்!!! திருத்திக் கொள் நீ திருந்திக் கொள்ளவில்லையென்றால்... உன் குடும்பத்தில் உள்ள அனைவருமே அப்படித்தான் இருப்பார்கள் நீ பிறவியை இக்கலியுகத்தில் கடந்து விடு !!கடந்துவிடு!!! இனிமேலும் பிறவிகள் வேண்டாம்..நிச்சயம் சித்தர்களை நம்பியோருக்கு சில கஷ்டங்கள் கொடுக்கத் தான் செய்வார்கள்.

நீ எதனாயினும் கூட கஷ்டங்கள் பட்டால் தான் அதற்கு வெற்றிகள் உண்டு.

அதனால்  நிச்சயம் நீ கஷ்டங்கள் பட்டால்தான் நிச்சயம் இறைவனை காண முடியுமே தவிர சுலபமாக அடைய முடியாது.

இதனால்தான் பல ஞானியர்கள்.  பல சித்தர்கள் ரிஷிகள் எல்லோரும் எவ்வாறு என்பதையும் கூட கஷ்டங்களை பின் கஷ்டங்களில் நுழைந்து தான் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் மனிதனே!!! நீ நினைத்ததெல்லாம் நடக்கும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு இருக்கின்றாயே... இது மாபெரும் குற்றம்.

குற்றம் என்பதை விட ஆனாலும் நிச்சயமாய் கலியுகத்தில் நிச்சயமாய் சித்தர்கள் புவியுலகில் இதை அறிவதற்கே உலா வந்து கொண்டு இருக்கின்றனர் .

அதனால் ஏமாற்றாதீர்கள்!! பொய் சொல்லாதீர்கள்!!! தக்க சமயத்தில் நிச்சயம் ஒரு நொடி போதும் நிச்சயம் தண்டிப்பதற்கு.....

ஆனாலும் சிறிது பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் சித்தர்கள்.

ஆனாலும் அழிவை நோக்கி மனிதர்களே.... ஆனாலும் சித்தர்களும் நிச்சயமாய் செப்பி விடுவார்கள்.. இனிமேலும் .

ஆனாலும் உண்மையானவர்களை நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள் தேர்ந்தெடுப்பார்கள் நலமனதாக....

ஆனால் ஒன்றை சிந்தித்துக் கொள்ளுங்கள் யார் ?ஒருவன் நிச்சயமாய் மனிதர்களுக்கு நாம்தம் நல்லதையே செய்வோம். நிச்சயம் நிச்சயம் மனிதர்களுக்காகவே வாழ்வோம்...

இப்படி எல்லாம் இருக்கின்றதே !! இவ்வுலகம் அதை மாற்றுவோம்!!! என்று  எவன் ஒரு மனிதன் எண்ணுகின்றானோ!? அவனைத் தான் சித்தர்கள் தேர்ந்தெடுப்பார்களே தவிர  மற்றவை எல்லாம் வீண்!!!!

காசுக்காகவே யாரொருவன் எதை என்று கூற இறைவன் பக்தியை செலுத்துகின்றோனோ அவன் பொய்யானவனே.
அதில்  முதல்!! முதல் இடத்தில் வகிப்பான் திருடன்... மனிதனே!! 

ஆனாலும் திருடா!!! என்று கூட நிச்சயம் சித்தர்கள் இனிமேலும்.

எதை  மனிதர்களுக்கே இவையென்று புசுண்ட (காகபுஜண்டர்) முனியும் நிச்சயம் பல யுகங்களாக வாழ்ந்து வாழ்ந்து!!!!

இதையும் என்னிடத்தில் வந்து சொன்னான்... மனித ஜென்மங்கள் திருந்த போவதாக இல்லை...

சித்தர்களையும் சித்தர்கள் ரகசியங்களையும் தெரிந்து கொள்வதற்கான வழிகளை பின்பற்றுகின்றனர். ஆனால் மனிதனோ சித்தர்கள் வழிகளை பின்பற்றுவதற்கு கஷ்டங்கள் என்று உணராமலே ஆனால் நிச்சயம் இதையன்றி கூற எவையென்றும் நிச்சயம்..எதை... யானே கூறி விடுகின்றேன்...

சித்தர்களைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் நிச்சயம் தெரிந்து கொள்ள இயலாது என்பேன்.

இயலாது!!! ஆனாலும் தெரிந்து கொண்டாலும் நிச்சயம் அன்பை செலுத்தி.. நிச்சயம் அனைத்தும் விட்டு விட்டு !!! நீயே கதி !!!  என்று உண்டு என்று சென்றுவிட்டாலே.... யாங்கள் நிச்சயமாய் அவந்தனுக்கு கற்பிப்போம்.

ஆனால் அதற்கு மனிதனில் கோடியில் ஒருத்தன் தான் தகுதியானவனாக உள்ளான்.

இவ்வாறு ஆனால் அழிவுகள்... பலம் தான் என்று சொல்வேன். வரும் காலங்களில்.

அதனால் மனிதனே நீ திருத்திக்கொள்!! திருத்திக்கொள்!! சொல்லிவிட்டேன்.

ஆனால் எதனையோ பின் வரும் காலங்களில் தாய் தந்தையரை தன் பிள்ளைகள் மதிக்காமல் செல்லும் நிச்சயம் இதையன்றி கூற. 

அதனால் முதலில் சிறு வயதிலிருந்தே இறை பக்தியை யார்? ஒருவர் சொல்லிக் கொடுத்து தன் பிள்ளைகளை வளர்க்கின்றார்களோ!!! அவர்கள் நிச்சயமாக மேன்மைகள் அடைவார்கள்..

மற்றவை எல்லாம் வீண் !!!

எவையென்று கூற அதனால் தன்னைத்தானே அழித்துக் கொள்வது எதையென்று கூற இதனால் ஆனாலும் பல ஞானியர்கள் துன்பத்திற்கு காரணம் (ஆசையே துன்பத்திற்கு காரணம்) எதையென்று செப்பிவிட்டு சென்றார்கள் அதையும்கூட இப்பொழுதும் கூட நீங்கள் ஞானியர்கள் வாக்கை பின்பற்றவில்லை என்றால் அழிவுகளே!!! மிச்சம்.

அதனால் அழிவிற்கு காரணம் யார் என்றால் மனிதனே!! மனிதனே!!

மனிதநேயம் சிறிதளவாவது இருக்கட்டும்!!!

மனிதர்களே மனிதர்களிடத்தில் சிறிது நேயம்.......

ஆனாலும்  கோடியில் ஒருத்தனை கூட நிச்சயம் யாங்கள் காப்போம்... நிச்சயமாய் அவந்தனை நல்வழிப்படுத்தி உயர்த்தி விடுவோம்.

இன்னும் பல மாற்றங்கள் இவ்வுலகில் நடக்கப்போகின்றது.

ஆனால் மனிதன் திருந்தவில்லை என்றால் அழிவுகள் நிச்சயம்!!!! என் மணாளனே கொடுப்பான்!!  இது உண்மை !!உண்மை!!

இதையன்றி கூற இன்னும் பல வழிகளிலும் பின் கிரகங்களைப் பற்றியும் சித்தர்கள் உரைப்பார்கள். வரும் காலங்களில்.

அதைக் கேட்டுணர்ந்து நன்கு செயல்படுத்திக் கொள்க....!!!

மனிதா!!! அனைத்து தகுதிகளையும் இறைவன் உன்னிடத்தில்  கொடுத்தே அனுப்புகின்றான்.

ஆனால் அதனை சரியாக பயன்படுத்த முடியவில்லையே உன்னால்!!!!

அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இறைவன்கள் யாங்கள்.... எதை... உங்களை தேடி வருவோம்... இதுதான் கருணை பொங்குகின்ற உள்ளமே எவையென்று கூற....யான் எதையன்றி கூற...."" அவ் உள்ளமே கோயில் என்று யான் சொல்வேன்.....

அதனால் கருணை மிகுந்து காணப்பட்டால் அங்கே யாங்கள் தங்கி விடுவோம்...

பேசுவதற்கு ஒன்றுமில்லை அமைதியாக இருந்து விடுவான். 

அதனால் நான், நான் !!என்று எப்பொழுதும் பக்தி உள்ளவர்கள் சொல்ல மாட்டார்கள்.

அப்படி சொன்னாலும் அது பொய்யே!!!!

காசுகள் !!காசுகள் என்று ஆசைப்படுபவர்கள் அவர்களும் பொய்யே!!!!

அனைத்தும்  இறைவனுடைய செயல் என்று எவன் ஒருவன் செல்கின்றானோ!!!        அவந்தனே மெய்!!!!

அதிலும் கூட பொய்யானவர்கள் வந்துவிட்டார்கள்!!! தெரிந்து கொள்ளுங்கள் நன்மைகளை செய்யுங்கள்!!!

பிறருக்காக உழையுங்கள்!!

எதையென்று கூற எதையும் எதிர்பாராது இருங்கள். உங்கள் கடமையை நீங்கள் சரியாக செய்து வந்தாலே யாங்கள் நிச்சயம் உங்களை பின் கட்டி அணைத்து அனைத்தும் கொடுப்போம்.

பல வாக்குகளை இனியும் சித்தர்கள் செப்புவார்கள்.. ஏனென்றால் மனிதன் சரியான பாதையில் செல்வதற்காக சில வழிகளையும் செப்புவார்கள்.. 

நிச்சயம் யாங்கள் இதையென்று கூற இதனையும் பின் என் மணாளன் எடுத்துச் சொல்வான்.. பல பல மனிதர்களுக்கு.

முதலில் நன்றாக கருணை மிகுந்தவனாக வாழ வேண்டும்.
நற்செயல்கள் செய்ய வேண்டும். என்பதற்காகவே செய்து கொண்டு வந்தாலே போதுமானது!!!

இறைவன் தானாகவே சொல்வான்!!!!

பல பல வழிகளிலும் இப்படி நடந்தால் இப்படி நடக்கலாம் என்று!!!

அதனால் புத்தி கெட்ட மனிதர்களுக்கு புத்தியை ஈட்டுக்கொண்டுதான் புத்தியை இப்படி பயன்படுத்தினால் தான் அப்படி நடக்கும் என்பதை கூட யாங்கள் அறிவோம்.

அதனால் தான் புத்தியூட்டுவதற்கே!!  யாங்கள் வழிகள் பின் வழிகள் விட்டிருக்க்கின்றோம். அதனை சரியாக பயன்படுத்தி கொண்டால் பல சித்தர்கள் இப்படி செய்!! அப்படி செய்!! என்று சொல்லி அப்படி நடந்து பிழைத்துக் கொள்வதற்கான தகுதிகள் சொல்வார்கள் வரும் காலங்களில். நல் வாக்குகளாக....

அனைவருக்கும், எம்முடைய ஆசிகள்!!!!!

மனிதா!!!  திருந்திக்கொள்!!! திருந்திக்கொள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

6 comments:

  1. 1. உங்கள் கடமையை நீங்கள் சரியாக செய்து வந்தாலே யாங்கள் நிச்சயம் உங்களை பின் கட்டி அணைத்து அனைத்தும் கொடுப்போம்.

    2. ஒன்றை சொல்கின்றேன்!!! சித்தர்களை, சித்தர்களை நம்பினோர்கள்.. ஆனாலும் சித்தர்கள் நிச்சயம் பல பரீட்சைகளை மேற்கொண்டு தோல்விகளை தோல்விகளை ஏற்படுத்தி நிச்சயம் ஓர் நாள் அழிவில்லாத வாழ்க்கையை ஏற்படுத்துவார்கள்.

    ஆனால் என் மணாளன் ஈசனோ!!! அப்படி இல்லை!!! உடனே கொடுத்து விடுவான்.

    ஆனால் நிச்சயம் அதற்கு தகுந்தாற்போல் நீ நடந்து கொள்ளவில்லையென்றால் பறித்துவிடுவார். இதுதான் மெய்.

    ஓம் சிவசக்தியே போற்றி,
    ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. நான் யாருக்கும் எத்தீங்கும் செய்ய வில்லை எனும் போது எனக்கு ஏன் அநீதி நிகழ்கிறது.ஒருவேளை இது முற்பிறவியின் பலன் எனக்கூறினால் அந்நிகழ்வானது இப்போது மனக்கண்ணில் தெரிய வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் இறைவன் வேண்டுமென்றே நல்லோர்களை கொடுமைப்படுத்தி அளப்பரிய ஆனந்தம் கொள்கிறான் என்பேன்.அதே சமயத்தில் தீயோர்களை தண்டிப்பதற்கு பதில் மாறாக அவர்களுக்கு பதவி பணம் அதிகாரம் ஆனந்தம் என அனைத்தையும் வழங்கும் இவனை என்னவென்று சொல்வது🤷‍♂️🤦‍♂️

    ReplyDelete
  4. இறைவன் எப்போதும் நல்லோருக்கு கெடுதல் செய்வதும் தீயோரை நன்றாக வாழ வைப்பதும் பழக்கமான ஒன்றாகும் எனில் பூனைக்கு மணி கட்டுவது யார் எல்லாம் தலையெழுத்து

    ReplyDelete
  5. எனது வினாவிற்கு பதில் சொல்ல அவர்கள் மனதில் சத்தியம் இருப்பின் சித்தர்கள் பதில் உரைக்கட்டும்

    ReplyDelete
  6. Translation:
    https://drive.google.com/file/d/1jKCbEEMuRK9mpKo-rPolqDcBsdmFIZAY/view?usp=sharing

    ReplyDelete