​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 23 November 2016

சித்தன் அருள் - 515 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விழிப்புணர்வோடு வாழப் பழகிக்கொண்டால். ஒரு மனிதன் பாவம் செய்ய வேண்டியிருக்காது. ஒரு மனிதனை பாவம் செய்யத் தூண்டுவது எது? ஆசை, பேராசை, அறியாமை, இது போன்ற குணங்கள்தான். ஒரு மனிதன், தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் ஒரு மனிதன் தெரிந்தே செய்யும் பாவங்களே அதிகம். எதையாவது ஒரு சமாதானத்தை தனக்குத்தானே கூறிக் கொள்கிறான். இந்த காரியத்தை இதற்காக செய்தேன், அதற்காக செய்தேன், என்றெல்லாம் கூறிக்கொண்டு அவன் செய்யும் தவறுகள்தான், பாவங்களாக மாறுகின்றன. எனவே, பலகீனமான மனிதர்களே பாவங்களை செய்கிறார்கள். மனதை உறுதியாக வைத்து, எந்த நிலையிலும் பாவம் செய்யமாட்டேன், தவறு செய்யமாட்டேன் என்ற உறுதியோடு இருந்தால், ஒரு மனிதனுக்கு பாவம் செய்யக்கூடிய எண்ணமும், சூழலும் அமையாது. எனவே, அப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் கொண்டால், அவனுக்கு தோஷமும் வராது.

1 comment:

  1. [ROUGH TRANSLATION] Once a person develops the habit of living attentively [consciously], he can avoid indulging in sins. What triggers a person to indulge in sins? Desire, greed, ignorance…such qualities. There is forgiveness for sins committed un-knowingly. But most sins committed by man are done knowingly. He comes up excuses to justify. The wrong actions done by man, claiming I did it for this, I did it for that, turn into sins. Therefore, only weak persons commit sins. If you are determined that under no circumstances I will do wrong, I will commit sin, then the urge and circumstances to commit sins will not arise. So, if he develops such an atmosphere, he will not be affected by doshas.

    ReplyDelete