​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 21 November 2016

சித்தன் அருள் - 513 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எம்மை நாடும் மனிதர்கள் இன்னும் பக்குவப்படவேண்டும். எங்கள் கருத்துக்களை உள்வாங்கி, உள்வாங்கி, அவரவர்கள் சுய ஆய்வு செய்து, சித்தர்கள் யாங்களே கூறினாலும் கூட, அவற்றிலே மெய்ப்பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது, என்று ஆய்ந்து, தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மனம் செம்மையாகவேண்டும். மனம் உயரவேண்டும். மனம் விரிவடைய வேண்டும். மனம் ஆழமாக இருக்க வேண்டும். மனம், மணக்கின்ற மனமாக வேண்டும். அப்பேர்ப்பட்ட மனதிலே தான் இறை வந்து அமரும்.

2 comments:

  1. [ROUGH TRANSLATION] Those who seek us [Siddhas] need to attain more ripe-ness [fit-ness]. After deeply imbibing our views, they should introspect. Even if told by Siddhas, the truth contained therein must be examined, that way you lift yourself up. Reason being, mind should be upright. Mind should rise high. Mind should expand. Mind should deepen. Mind should become fragrant. Only such a mind will be occupied by the Divine.

    ReplyDelete