​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 7 February 2023

சித்தன் அருள் - 1288 - குருநாதர் வாக்கு - அனைவருக்கும் !


வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!!

குருநாதர் அகத்தியர் பெருமான் தற்போது தந்த உத்தரவு

அப்பனே வரும் காலங்களில் நவகிரகங்களின் தாக்கம் பெருமளவில் இருக்கும் அப்பனே!!!!

யாங்கள் சித்தர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களாகிய நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை வாக்குதனில் உரைத்துக் கொண்டே வருகின்றோம்!!!!! எவ் மனிதனினும் எங்களுடைய பேச்சைக் கேட்பதே இல்லையப்பா!!!! இப்படி இருந்தால் எப்படி கஷ்டங்கள் தீரும் எவ்வாறு தான் புண்ணியங்களை சேர்த்து வைக்க முடியும்!!!

மனிதன் கர்மாதனையை சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கின்றான் எவரிடத்திலும் புண்ணியங்கள் இல்லையப்பா!!!!

இனி யான் கூறியதை கேட்டுவிட்டு புண்ணியங்கள் செய்து விட்டு வந்தால் தான் என்னுடைய வாக்குகள் கிட்டும்!!!

நல்முறையாக நவதானியங்களை பொடியாக்கி....அவ் பொடியினை திருத்தலங்களுக்கு எடுத்துச் சென்று திருத்தலங்களுக்கு வெளியே நல்முறையாக பொடிதனை இட்டு அவ் நவதான்ய பொடியின் மேல் தீபமேற்றி எத்தனை தீபம் வேண்டுமானாலும் ஏற்றலாம் தீபம் ஏற்றுவதற்கு முன் நவதானிய பொடிகளை  இட்டு அதன் மேலே தான் தீபங்களை ஏற்ற வேண்டும் முடிந்தவரை உங்களால் முடிந்தவரை தீபங்கள் எண்ணிக்கை இருக்கலாம் தீபம் ஏற்றி பின் அதன் உள்ளேயும் சிறிதளவு நவதானிய பொடிகளை விட்டு அவ் திருத்தலங்களுக்கு முடிந்தவரை சிறிதளவு எனும் உதவிகள் செய்ய வேண்டும் உழவாரப்பணிகள் செய்ய வேண்டும் சுத்தம் செய்வது இது எல்லாம் செய்து வர வேண்டும் ஏனென்றால் மனிதர் இடத்தில் புண்ணியங்கள் இல்லை அப்பா இதை அனைவரிடமும் செய்யச் சொல்...

எதிர்வரும் காலகட்டங்களில் மனிதர்களுக்கு போராட்டங்களும் மனக்குழப்பங்களும் இல்லத்தில் சண்டை சச்சரவுகளும் வரும் இதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள யான் ஒவ்வொன்றாக கூறிக் கொண்டே வருகின்றேன் அதனை என் பக்தர்கள் பின்பற்றி அப்படியே செய்து வர வேண்டும் கடைப்பிடித்து வர வேண்டும்.

யாங்கள் கூறியவற்றை இப்படியே கடைப்பிடித்து வந்தால் யாம் பார்த்துக் கொள்வோம்....

அனுதினமும் அப்பனே கோமாதாக்களுக்கு அகத்திக்கீரை அளித்து வரவேண்டும் மாலை நேரத்தில் வீட்டிலும் தீபம் ஏற்றி திருவாசகம் ஓதி வர வேண்டும் திருவாசகத்தில் இருந்து ஏதாவது ஒரு பதிகம் அனுதினமும் ஓதி வர வேண்டும்!!!! ஓதி வணங்கி பின்பு இனிப்புகளை தானமாக வழங்குதல் வேண்டும்.!!

இதனை இம் மாதத்தில் வரும் சிவராத்திரி வரை கடைபிடித்து வர வேண்டும்!!!!!

சிவராத்திரி அன்று சிவாலயங்களுக்கு சென்று தன்னால் முடிந்த வரை உதவிகள் செய்து வர வேண்டும்!!!!! சிவராத்திரி அன்று சிவபுராணம் ஓதுதல் வேண்டும்!!!! நமச்சிவாயனை மனதில் நினைத்து நமச்சிவாயா நமச்சிவாயா என்று ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும்.

சிவராத்திரி முடிந்தவுடன் அப்பனே மறுநாள் எள் கலந்த சோற்றினை (எள் சாதம்) ஏதேனும் ஒரு புண்ணிய நதியில் கரைத்து விட வேண்டும்......பின் மூழ்கி குளித்திடல் வேண்டும். 

பின் அன்றைய தினத்திலிருந்து துளசி வில்வம் அருகம்புல்லை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.... அதன் பிறகே உணவை உட்கொள்ள வேண்டும்.

அப்பனே வரும் காலத்தில் நவகிரகங்களின் கதிர்வீச்சுக்கள் மனிதர்களை அண்டும் அப்பனே..... இதிலிருந்து நீங்கள் மீண்டு வர யான் ஒவ்வொன்றாக கூறிக் கொண்டே வருகின்றேன் அதை அப்படியே என் பக்தர்கள் கடைப்பிடித்து வந்தாலே ஒரு குறைவும் இல்லை கவலைகள் இல்லை அப்பனே!!!!!

சிவராத்திரி அடுத்து வரும் அமாவாசை தினத்தில் அவரவர் முன்னோர்களை மனதார நினைத்து எந்தன் முன்னோர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்களோ அவர்களையெல்லாம் நினைத்து....... அன்னை தந்தை இழந்தவர்களை யாரும் இல்லாதவர்களை அனாதை இல்லங்களுக்கு சென்று அவர்களை கண்டு......... எம்முடைய முன்னோர்கள் எந்தனக்கு யார் என்று தெரியாது!!!!!! அவர்களை எல்லாம் இப்பொழுது நான் நினைத்துக் கொள்கின்றேன் நாங்கள் எதற்காக பிறந்திருக்கின்றோம் என்பதும் எங்களுக்கு தெரியாது!!!!!! உங்களை எங்கள் முன்னோர்களாக நினைத்து வணங்குகின்றோம் என்று வணங்கி முடிந்தவரை அன்னத்தை அவர்களுக்கு வழங்கிட வேண்டும்!!!! அவர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்ய வேண்டும்!!!!

இதை என் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக அப்படியே பின்பற்ற வேண்டும்!!!!

வரும் காலம் அழிவு காலமப்பா கஷ்டங்களும் நோய்களும் போராட்டங்களும் வருமப்பா!!!!

என் வழியில் வருபவர்களுக்கு யான் அனைத்தையும் எடுத்துக் கூறி எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்பதை கூறிக் கொண்டே வருகின்றேன் அதன்படியே பின்பற்றி வந்தால் நல் மாற்றங்கள் ஏற்படுவது உறுதி!!!!

யான் கூறியவற்றையெல்லாம் செய்துவிட்டு வரச்சொல்!!!! அதன் பிறகு வாக்குகளாக கேட்கச் சொல்!!! அப்பொழுது யான் வாக்குகள் தருகின்றேன் அதுவரை யாருக்கும் வாக்குகள் இல்லை!!!!! 

முற்றே!!!! 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!! என் பக்தர்கள் அனைவரும் இதனை கடைப்பிடித்து வர வேண்டும் புண்ணியங்கள் சேர்த்து வர வேண்டும் என்று குருநாதர் உத்தரவு தந்துள்ளார் சிவராத்திரி அமாவாசை கழிந்தவுடன் மக்களுக்கான வாக்குகள் உரைப்பேன் என்று என்று கூறி இருக்கின்றார்!!!!! குருநாதர் ஒரு உத்தரவு தந்தால் அதனை அப்படியே மேற்கொண்டு வந்தால் தான் வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறியிருக்கின்றார் அதனால் அடியவர்கள் இதை முறையாக பின்பற்றி நல்முறையாக புண்ணியங்கள் சேர்த்துக்கொண்டு பிறகு தங்களுக்கான குருநாதர் உரைக்கும் வாக்குகளை திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டு கேட்கவும்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

14 comments:

  1. ஓம் அகத்தீசாய நம,
    குருவே சரணம்,
    நன்றி ஐயா🙏🌹🙏.

    ReplyDelete
  2. ஓம் தத் புருஷாய வித்மஹே சிவபுத்ராய தீமஹீ தந்நோ அகஸ்திய சித்த ப்ரஜோதயாத்

    ஓம் இன்னல்கள் நீக்கி இன்பம் தரும் அகத்தீசப் பெருமானே
    உமது திருவடிகள் சரணம் போற்றி.... போற்றியே

    ஓம் அகத்தியர் திருவடிகளில் சரணம்

    ReplyDelete
  3. வணக்கம்
    எள் சாதம் கரைக்க புண்ணியநதி இல்லை என்றால் அதற்கு வேறு ஏதேனும் உபாயம் இருக்கின்றதா அய்யா. நாங்கள் வசிப்பது சென்னை யில்.

    ReplyDelete
  4. குளத்தில் கரைக்கலாம்!

    ReplyDelete
  5. அருகம்புல்லை உப்புநீரில் நன்றாக கழுவி சுத்தப்படுத்திவிட்டு சாறு எடுக்க உபயோகியுங்கள்.

    ReplyDelete
  6. " இனி யான் கூறியதை கேட்டுவிட்டு புண்ணியங்கள் செய்து விட்டு வந்தால் தான் என்னுடைய வாக்குகள் கிட்டும்!"

    தற்போது, தனிப்பட்ட வாக்கு உரைப்பதற்கு இப்படி ஒரு தடையை விதித்து உள்ளார். அடியவர்கள் அனைவரும், அவர் சொல் கேட்க்காமல் இப்படியே போனால், ஒரு நாள் எந்த வாக்கும் இல்லை, அவரவர் வாழ்க்கையை இப்போதுள்ளபடி இஷ்டப்படி வாழுங்கள், என்று நம்மை கைகழுவி செல்ல அதிகம் நாட்கள் இல்லை. இதற்குத்தான், இப்பொழுது ஒரு முன் எச்சரிக்கை கொடுத்துள்ளார் என்று தோன்றுகிறது. அவர் வாக்கு உரைப்பதை நிறுத்தினால், பின்னர் அடியேனுக்கும் வேலை இல்லை. "கடை விரித்தேன் கொள்வார் இல்லை!" என்று விலகி சென்ற சித்தர் போல், அடியேனும் சித்தன் அருளை நிறுத்திவிட்டு சென்று விடலாம். திருவண்ணாமலையில், எந்த திசையில் போய் அமர்ந்தால், நன்றாக இருக்கும் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஏன் ஐயா இந்த எண்ணம் நீங்களும் சித்தன் அருள் அவசியம் தேவை ஐயா
      அகத்தியர் ஐயா சொன்னதை கண்டிப்பாக செய்வோம் ஐயா

      Delete
    2. மகாசித்தர் கூறியவற்றை கண்டிப்பாக செய்வோம் ஐயா.



      Delete
    3. நிறுத்தி மட்டும் விடாதீர்கள் எனக்கு இந்த உலகத்தில் ஒரு நிம்மதி மன அமைதி சிறிது கிட்டியது என்றால் அது அகஸ்தியராலும் உங்களாலும் மட்டும் தான். யார் எவர் ஒருவரும் எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் தான் எனது அன்பார்ந்த உறவுகள்.

      Delete
  7. எதுவும் அடியேன் கையில் இல்லை என்று கூறுகிறேன்! அவர் வாக்கு தந்தால்தான் அடியேன் தரமுடியும்! அதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  8. Om Sri Lopa Mudra Devi Sametha Agastheeswaraya Namaha 🙏🙏🙏

    ReplyDelete
  9. கருணைக்கடலே அருள் ஞானக்கடலே நின் பாதக்கமலம் ( திருத்தாள்) போற்றி போற்றி...எதிர்வரும் காலக்கட்டங்களில் மனிதர்களுக்கு போராட்டங்களும் மனக்குழப்பங்களும் இல்லத்தில் சண்டை சச்சரவுகளும் வரும் நவக்கரகங்களின் கதிர்வீச்சுகள் மனிதர்களை அண்டும் ஆகவே என் பக்தர்கள் நான் கூறுவதை கேட்டு செய்து வாருங்கள் என்ற வாக்கு ஆணித்தரமான உண்மை அய்யனே. ஆனால் ஒன்று மட்டும் உண்மை அய்யனே எது நடந்தாலும் அது நன்மைக்கே... தங்களை விட்டால் இந்த நாய்க்கு வேறு கதி(யாரும் )இல்லை அய்யனே... அனைவரையும் காப்பாற்றுங்கள்...வாழட்டும். நன்முறையில் வாழட்டும்... வாழ்ந்துபோகட்டும் எம் பெருமானே...தாங்கள் காட்டிய வழியில் வருகிறேன் வருகிறேன் இவனையும் சார்ந்தவர்களோடு தங்களின் பிள்ளைகளாக...சீடன்களாக...பக்தர்களாக... அனைத்து என் எம் தாய் தகப்பனாகிய தங்களின் திருப்பாதகமலத்துக்கே அர்ப்பணம்... சமர்ப்பணம்... தாங்கள் இடும் ஆணைக்கு காத்திருக்கிறேன்...அய்யனே ஞானப்பெருந்கடலே...அகத்தீசா... ஓம் அகத்தீசாய நம...

    ReplyDelete
  10. ஐயா, துளசி வில்வம் அருகு மூன்றையும் நாட்டு மருந்து கடையில் பொடியாக வாங்கி தேனில் தலா ஒரு சிட்டிகை கலந்து உட்கொள்ளலாமா???
    நன்றீங்க..
    ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி..
    அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி...

    ReplyDelete
    Replies
    1. துளசி வில்வம் அருகு மூன்றும் பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. நீங்கள் வெளிநாட்டில் அல்லது இவை கிடைக்காத ஊரில் வசித்தால் நீங்கள் கூறியது போல பொடியை தேனில் கலக்காமல் தண்ணீரில் கலந்து அருந்தலாம் என யோசனை தோன்றுகிறது.

      Delete