​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 3 February 2023

சித்தன் அருள் - 1281 - அன்புடன் அகத்தியர் - பழனி வாக்கு!





27/1/2023 தை மாதம் ஷஷ்டி திதியில் பழனி கும்பாபிஷேக நன்னாளில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு . வாக்குரைத்த ஸ்தலம் : பழனி மலை சித்தர்கள் உலகம் !!!! 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து வாக்குகளாக செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே எதை என்று அறிந்து அறிந்து ஆராய்ந்து ஆராய்ந்து நிச்சயமாய் பல வழிகளிலும் கூட என் ஆசிகள்!!!!!!

ஆனாலும் சில சில செய்கைகள் மாற்ற வேண்டும் சொல்லிவிட்டேன்!!!! தன் மனசாட்சிக்கு எதிராக எதைச் செய்தாலும் அதுதான் பாவம் என்பது!!!!

அதை செய்யாமல் இருந்தாலே நிச்சயம் தரித்திரம் தன்னை வந்து அடையாது!!!! அவைதனை பாவம் என்று தெரிந்து செய்தாலும் அதை நிச்சயமாய் இரு மடங்கு தண்டனைகள் உண்டு!!! இதனை அனைவரும் உணர வேண்டும்!!

அப்பனே இன்றைய பொழுதில் யான் அனைவரையும் பார்த்தேன் நிச்சயம் அனைவரையும் ஆசீர்வதித்தேன் அப்பனே!!!!
என் பக்தர்களுக்கும் நல்லாசிகள் அப்பனே!!!!

எதை என்று அறிந்து அறிந்து அவை மட்டும் இல்லாமல் போகனும் (போகர் சித்தர்) நல்லாசிகள் தந்து தந்து நிச்சயமாய் ஏற்ற வைத்து இன்னும் இன்னும் பல வகைகளான மனிதர்களுக்கு எப்படி எல்லாம் பின் நோய் தீர்க்கும் மருந்தை கூட வரும் காலங்களில் நிச்சயமாய் உணர்த்தியும் வைப்பான்!!!!

அப்பனே கவலைகள் இல்லை!!!!

அப்பனே எதற்காக? கவலைகள் என்றால் அப்பனே மனிதன் ஏற்படுத்திக் கொண்டதே கவலை என்பேன் அப்பனே!!!

நிச்சயம் இறைவன் எப்பொழுதும் கவலைகள் கொடுப்பதில்லை கஷ்டங்களும் கொடுப்பதில்லை அப்பனே நோய்களும் கொடுப்பதில்லை அப்பனே பின் தானே ஏற்படுத்திக் கொண்டவை தான் அப்பனே!!!!

அப்படி என்றால் தானே ஏற்படுத்திக் கொண்டவை என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் அப்பனே கர்மா தான்!!!! முக்கியமாக பங்கு வகிக்கின்றது அப்பனே!!!!

இதனையென்று என்று எதிர்பார்த்து எதிர்பார்த்தாலும் ஆனாலும் அப்பனே கர்மாவை எதை என்று  அறிய பின் நீக்கும் தலமானது """" இப் பழனி மலையே"""" என்பேன் அப்பனே!!!!! 

ஏனென்றால் போகனும்(போகர்)  பல வழிகளிலும் கூட மூலிகைகளை உற்பத்தி செய்து செய்து எதை என்று அறிந்து அறிந்து பல உலோகங்களில் ஆன பல வழிகளிலும் கூட இரும்புகளாலான செப்பு தகடுகளாலான பல பல வழிகளிலும் கூட மந்திரங்களை எழுதி இட்டு இதனடியில் புதைத்துள்ளான்!!!!! ( பழனி திருத்தலத்தில்) 

இதனால் இங்கு வந்து வந்து சென்றாலே ஒரு மாற்றங்கள் நிகழும்!!!! நிச்சயம்  பின் உயர்வான இடத்திற்கு கூட செல்வார்கள்!! அவை மட்டும் இல்லாமல் கர்மா அதிக அளவு இருந்தாலும் நிச்சயம் முருகன் இங்கு நிச்சயம் பின் இழுத்துக்கொண்டு வரமாட்டான்.( ஒருவருக்கு கர்மா அதிகம் இருந்தால் பழனி மலையில் முருகன் அனுமதிப்பதில்லை) இது நிச்சயம் அப்பனே இதை என்று அறிந்து அறிந்து அனைத்தும் நீங்கள் அறிந்து கொண்டால் அப்பனே நலமாகும் அப்பனே!!!!

எதையென்று அறிய அறிய அதனால் தான் பின் எவையென்றும் உணர்ந்து உணர்ந்து போகனும் (போகர்) பின் நல் முறைகளாகவே ஒவ்வொரு விதத்திலும் கூட பின் முருகனை அமைத்தான் என்பதை கூட பல சான்றுகள் அப்பனே!!!!

இன்னும் இதனடியில் கூட அதாவது முருகன் அடியில் கூட பின் சுவடிகள் ( முருகன் திருவுருவ சிலை பீடத்தின் அடியில்) பதிந்துள்ளது என்பேன் அப்பனே!!!!!

பின் போகனின் சுவடிகள் ஏனென்றால் அப்பனே எதை என்று அறிய அறிய இக் கலியுகத்தில் அப்பனே அவைதன் மனிதருக்கு கொடுத்து விட்டால் இன்னும் ஏமாற்றி விடுவார்கள் என்பேன் அப்பனே!!!

பணத்திற்கு தான் முதல் மதிப்பு கொடுத்து அப்பனே அனைத்தையும் அழித்து விடுவார்கள் என்பது கூட ஆணித்தரமான உண்மை!!

அதனால்தான் அப்பனே போகனும்.(போகர்) .... நிச்சயம் முருகா!!!! நீயே!!!! எதை என்று அறிந்து அறிந்து உந்தனுக்கே தெரியும்!!!!! யார்? யார் ?எதன் மூலம் யாருக்கு கொடுத்தால் உலகத்திற்கு நன்மை ஏற்படும் என்பதை கூட அப்படியே நீ நிச்சயம் கொடுக்கலாம் என்று கூட அப்பனே!!!!


ஆனாலும் எதை என்று அறிய அறிய அதனால்தான் பல வகையிலும் கூட பல பல  பின் வழியில் வந்த மனிதர்கள் அப்பனே எப்படி எப்படி அன்றெல்லாம் அப்பனே!!!!!!

இன்றெல்லாம் பார்த்தால் அப்பனே மனிதனே ஏமாற்றுக்காரனாகத்தான் திரிகின்றான்.... இதனால் அப்பனே மனிதன் மனிதனை மனிதன் அப்பனே இன்னும் இன்னும் புரிந்து கொள்வதற்கான தகுதிகள் நிச்சயம் எங்கிருந்து வருகின்றது அப்பனே???   

இல்லை அப்பனே!!!!!!

இங்கு( பழனி மலையில்) சித்தர்கள் யாங்கள் அனைவரும் வந்தோம்!!!! எதை என்று அறிந்து அறிந்து அப்பனே !!!

"""""முருகன் எம் செல்லப்பிள்ளை!!!!!!!!!

எதை என்று அறிந்து அறிந்து அதனால் முருகன் இருக்கும் இடமெல்லாம் """"யாங்கள் சித்தர்கள் வந்து அவந்தனுக்கு தாலாட்டும் பாடுவோம்!!!!!!

ஏனென்றால் அப்பனே முருகனின் லீலைகள் பல பல!!!!!

அவற்றைக் கூட வரும் காலங்களில் யான் தெரிவிக்கின்றேன் அப்பனே நலமாகவே!!! 

முருகன் எதை என்று அறிந்து அறிந்து இன்றைய பொழுதில் அனைவரையும் பார்த்திட்டான் அப்பனே!!! வள்ளி தெய்வானையோடு வந்து!!!!! நிச்சயம் அவரவருக்கு ஆசீர்வாதங்கள் தான் உண்டு அப்பனே நலமாகவே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே முருகன் பின் எவரை எவரையெல்லாம் பார்த்தாலும் நிச்சயம் பின் அவர்கள் எல்லாம் முன்னேற்ற பாதையில் தான் செல்வார்கள் என்பது ஆணித்தரமான உண்மை அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே நீ தீங்குகள் செய்திருந்தாலும் முருகன் உன்னை பார்த்திட்டால்  உன் கர்மா நீங்கி அப்பனே உயர்வான இடத்திற்கு செல்வாய் என்பது அப்பனே நிச்சயமான உண்மை!!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவை என்று கூட பின் உடம்பை கொடுக்கின்றான் சரியான முறையில்!!!!

அவ் உடம்பை கூட மனிதன் கெடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே பின் இறைவன் கொடுப்பதை மனிதன் பின் அழிக்க முயற்சித்தால் அப்பனே இறைவனுக்கு கோபங்கள் வந்து அப்பனே கஷ்டங்கள் கொடுத்திடுவான் என்பேன் அப்பனே!!!! இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே இவ்வுலகத்தில்!!!!

அதனால் அப்பனே கிரகங்களும் கூட அப்பனே அண்ணாமலையில்!!!! பழனி தன்னில்!!!! செந்தூரில்( திருச்செந்தூர்) !!!அப்பனே பின் எவை என்று ஏழுமலையான் இடத்தில்( திருமலை திருப்பதி) இவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வானது அங்கே செயலிழந்து  போகும் அப்பனே ( இத் திருத்தலங்களில் நவகிரகங்கள் வேலை செய்யாது) இறை அருள் தான் பேசும்!!!!

இன்னும் இன்னும் அப்பனே ஞானங்கள் படைக்க படைக்க எங்கெல்லாம் என்பதை கூட ஆராய்ந்து எதனை என்று உணர்ந்து உணர்ந்து யாங்களும்கூட கட்டியுள்ளோம் அப்பனே திருத்தலங்களைநிச்சயம் அங்கெல்லாம் தரிசித்தாலே சில வினைகள் மாறும் என்பேன் அப்பனே!!!

இதனால்தான் முயற்சி உடையார் எதை என்று அறிய அறிய பின் அப்பனே உங்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே!!! யான் சொல்லத் தேவையில்லை என்பேன் அப்பனே!!!

முயற்சி எப்படி செய்ய வேண்டும் என்றால் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து இறைவனைக் காண முயற்சி செய்ய வேண்டுமே தவிர மற்றவை எல்லாம் பின் முயற்சி செய்தால் தோல்வியில் தான் முடியும்!! தோல்வியில் முடிந்து மனக்கஷ்டங்கள் ஏற்படுத்தி ஏற்படுத்தி பாவங்களை சுமந்து கடைசியில் அழிந்து விடுவார்கள் என்பேன் அப்பனே!!!

அதனால் எதை என்று அறிய அறிய முதலிலே இறைவனை தேடி தேடி முயற்சித்துக் கொண்டு அருளாசிகள் பெற்று விட்டால் அப்பனே பின் எவராலும் பின் இறைவன் கொடுக்க பின் நினைப்பதை தடுக்கவும் முடியாது என்பேன் அப்பனே!!!!

இப்பொழுது புரிகின்றதா அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய இன்றளவில் கூட அப்பனே யான் உலா வந்து கொண்டே இருக்கின்றேன் இவ்வுலகத்தில் அப்பனே!!!

ஆனாலும் பின் மனிதன் எந்தனுக்கு பறிபோய்விட்டது அது போய்விட்டது இது போய்விட்டது என்பதையெல்லாம் தெரிவித்துக் கொண்டு புலம்பிக் கொண்டே இருக்கின்றான் அப்பனே!!!

இவ்வுலகத்தில் உந்தனது பின் எது? சொந்தம் அப்பனே!!! சொந்தம் ஏதும் இல்லையப்பா!!!!!

இதை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

இறைவன் கொடுப்பான் மீண்டும் எடுத்துக் கொள்வான் அவ்வளவுதான் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய இன்னும் ஏனைய சித்தர்களும் கூட செப்பிக்கொண்டே தான் வருகின்றார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் வயதில் வருகின்ற பொழுது எதையும் கேட்பதில்லை அன்பு ஒன்றே!!! 

அவ் அன்பு போகப் போக தாய் தந்தையரிடம் செலுத்தி பின் அவ் அன்பை அப்படியே இறைவனிடத்தில் செலுத்திப் பார்!!!!!!! அப்பனே !!

எவராலும் ஒன்றும் செய்ய முடியாது அப்பனே!!!!

எதையென்று அறிய அறிய இதனால் பல பல மன்னர்களும் கூட இப்படித்தான் ஆனார்கள் என்பேன் அப்பனே!!!!

ஆனால் இன்றளவோ அப்பனே எதை எதை என்று அறிய அதனால் தான் அப்பனே முதலில் சிறிதளவாவது கொடுப்போம் என்று இறைவன் கொடுப்பான் அதில் நீ தவறு செய்தால் நிச்சயம் அதை எடுத்துக் கொள்வான் அப்பனே!!!

கொடுப்பதும் பின் அதை எடுத்துக் கொள்வதும் இறைவனுடைய அப்பனே குணங்கள்!!!

அதனால் பின் எதை எதை என்று அறிய அறிய இதனால் மனிதனுக்கு பின் இங்கு சொந்தங்கள் ஏதுமில்லையப்பா!!!!

மனிதர்கள் அனைவரும் அனாதைகளே என்பதுதான் நிச்சயம்  இவ்அனாதைகளுக்கு துணை இறைவனே என்பேன் அப்பனே!!! இதை உணர்ந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

 நிச்சயம் இதை வரும் காலங்களில் யாங்கள் இதை உணர்த்தியும் வைப்போம் அப்பனே!!! யார் யாருக்கு எதை எதை என்று அறிய அறிய சொந்தம் பந்தம் அப்பனே எதை என்று அறிய அறிய இதனை நிச்சயம் தீர்மானித்துக் கொண்டால் அப்பனே ஒன்றை சொல்லுங்கள் அப்பனே நடப்பதெல்லாம் இறைவனுடைய லீலைகள் என்று யார் ஒருவன் எண்ணுகின்றானோ அவந்தன் மனது நிச்சயம் அப்பனே தெம்பு பெறும்!!!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே அனைத்திற்கும் எதை என்று அறிய அறிய இறைவன் காரணம் என்று ஒரு வார்த்தையை மனதில் நினைத்து விட்டால் அப்பனே ஒரு குறையும் இல்லை என்பேன் அப்பனே!!!!

ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் பின் கஷ்டங்களுக்கும் எதை என்று அறிய அறிய கர்மாவிற்கும் எதை என்று உணர்ந்து உணர்ந்து இன்னும் பல பல வாக்குகளிலும் கூட எங்கெங்கு சொல்ல வேண்டுமோ அத்திருத்தலத்தில் தான் யான் சொல்வேன் அப்பனே ஏனென்றால் அங்கு தான் சக்திகள் மிகுந்து காணப்படுகின்றது என்பேன் அப்பனே!!!!

இவ்சக்திகள் மிகுந்து காணப்படுகின்ற பொழுது அங்கு சென்று தரிசித்தால் அப்பனே!!!! 

அப்பனே அனைவரையும் கூட பார்த்து யான் கேட்கின்றேன் அப்பனே!!!!

எதை எதை என்று அறிய அறிய அப்பனே பின் உணர்ந்து உணர்ந்து அப்பனே மனிதன் கர்மா கர்மாவை சேர்த்துக் கொள்வதில் வல்லவன் இதை ஏற்கனவே யான் பின் தெரிவித்துவிட்டேன் அப்பனே சித்தர்களும் தெரிவித்துவிட்டார்கள் அப்பனே!!!!

ஓடோடி அப்பனே பின் உழைப்பதுண்டு!!!!! எதற்காக? பணத்திற்காக!!!!! தான் நன்றாக இருக்க வேண்டும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் அப்பனே இன்னும் எதையெதையோ செய்து அப்பனே அங்கு சென்றால் பணம் சம்பாதிக்கலாமா??? இங்கு சென்றால் பணம் சம்பாதிக்கலாமா???? இன்னும் என்னென்ன?? தகுதிகள் அப்பனே!......

அங்கு சென்றால் நிச்சயம் எதை எதை என்று அறிந்து அறிந்து ஆனால் இறைவனைத் தான் மறந்து விட்டார்கள் இன்றளவு அப்பனே!!!!

அப்பனே இறைவனை தேடி அப்பனே செல்வதே இல்லை இளம் வயதில் அப்பனே!!!!!

அதனால்தான்  பெரும் குறையப்பா!!!!

இளம் வயதில் எதை எதையோ நினைத்து எதை எதையோ செய்து விட்டு பின் கடைசி பாகத்தில் இறைவனை நோக்கி வந்தால்????

 """"""இறைவன் என்ன குருடனா???????

அப்பனே இவையெல்லாம் நீங்கள் யோசித்துக் கொள்ள வேண்டும் அப்பனே!!!! முதலில் அப்பனே பக்குவங்கள் பட வேண்டும் பக்குவங்கள் பட்டால் தான் அப்பனே வாக்குகள் கூட யான் தெரிவிப்பேன்!!!! அதன்படியே நடந்து வந்தால் வெற்றிகளும் குவியும் !!! எங்களிடையே நிச்சயம் இருப்பார்கள் என்பதுதான் ஆணித்தரமான உண்மை அப்பனே!!!!

அதனால் அப்பனே எவரையும் குற்றம் சொல்வதற்கான தகுதிகள் நம்மிடத்தில் இல்லை என்பேன் அப்பனே!!!

அவனவன் வினை அவனவன் சம்பாதித்து அவனவன் அனுபவிக்கின்றான்!!!! இதுதானப்பா சூட்சுமம்!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அதனால் உயர்ந்தவரும் உயர்வான இடத்திற்கு சென்று கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே தாழ்வானவனும் தாழ்வான இடத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே எவை இதற்கு காரணம் எதை என்று அறிய அறிய மனிதன் நிலைமையே!!!!!

அப்பனே உன் நிலைமையை நீயே யோசித்தால் அப்பனே உயர்ந்து விடலாம் என்ற வாக்கும் பின் உண்டு!!!! 

அதனால்தான் அப்பனே முதலில் உன்னை அறிய வேண்டும் நீ என்னென்ன தவறு செய்கின்றாய் என்பதை அறிய வேண்டும் அப்பொழுதுதான் இறைவனை பிடிக்க வேண்டும் மகன்களே!!! எதை எதை என்று அறிய அறிய!!!!!

அப்படி இல்லை என்றால் அப்பனே இறைவன் இறைவனை வணங்குவதிலே பின் எதை என்று அறிய அறிய ஒரு லாபமும் இல்லை என்பேன் அப்பனே!!!!!

அப்பனே இறைவனை வணங்குவதற்கு தகுதிகள் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும் அப்பனே ஒரு உயிரை கொல்லாமை இருத்தல் வேண்டும்!!!! அவை மட்டும் இல்லாமல் பிறர் நலனை பேணுதல் வேண்டும்!!! தன்னைப் போல் மற்றவரை நினைக்க வேண்டும் அனைத்து உயிர்கள் மீதும் பாசங்கள் காட்ட வேண்டும் அப்பனே இப்படி இருந்தால் தான் இறைவனை நோக்கி நீ பின் போக வேண்டுமே தவிர அனைத்தும் எதை எதை என்று அறிந்து அப்பனே நம்மிடத்தில் குறைகள் இருந்தால் இறைவனும் உன்னை பார்த்திட்டு பின் சென்று விடுவான்!!!! பின் எதை என்று அறிய அறிய!!!!  அனுபவி!!!!!  என்று கூட..... ஒரு வார்த்தை சொல்லி விடுவான்!!!! அனுபவிக்க வேண்டியது தான் அப்பனே கஷ்டங்களை!!!!

இதனால் தான் அப்பனே யான் திருத்தலத்திற்கு சென்றேன் அனைத்தும் செய்தேன் புண்ணியங்கள் செய்தேன் என்றெல்லாம் கூறினாலும் அப்பனே ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்பேன் அப்பனே!!!

இதனால் தான் முதலில் தன்னை அறிய வேண்டும் தன்னை அறியாவிடில் ஒன்றும் லாபம் இல்லை!! பின் அப்பனே மனிதன் உடம்பு எதற்கும் உதவாதப்பா!!!!! உதவாததை பின் உதவுவது போல் ஆக்க வேண்டும் இதுதான் அப்பனே செய்கைகள்!!!

உதவுவது போல் எப்படி மாற்ற வேண்டும் என்றால் அப்பனே இறைவனின் மீது பற்று பற்று பற்று அப்பனே அப்பனே நிச்சயம் எண்ணங்கள் மேன்மை பெற வேண்டும் அப்பனே எண்ணம் போல் வாழ்க்கை என்ற வார்த்தையையும் கூட ஏற்கனவே நிச்சயம் முன்னோர்கள் தெரிவித்து விட்டார்கள் அப்பனே!!!!
நலமாகவே

இதனால்தான் அப்பனே எண்ணங்கள் மேன்மை பெற வேண்டும் எண்ணங்கள் மேன்மை பெற்று இருந்தால் அப்பனே அவ் எண்ணத்தில் இறைவன் நிச்சயம் குடியேறுவான் அப்பனே!! பின்பு உந்தன் நிலைமைக்கு ஏற்றவாறே அனைத்தையும் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!

அப்பனே முதலில் எண்ணமே சரியில்லை என்றால் அப்பனே இறைவன் எப்படித்தான்??? கொடுப்பான்!!!!

ஆனால் எந்தனுக்கு இறைவன் கொடுப்பதே இல்லை யான் பல தலங்களுக்கும் சென்று விட்டேன் என்பதை எல்லாம் அப்பனே மனிதனின் கணக்கு பொய்யான கணக்கு!!! பொய்யான கணக்கு!! அப்பனே!!

இறைவன் தீர்ப்பே முடிவில்லாதது என்பேன் அப்பனே!!! இதனால் குறையில்லை அப்பனே!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே பின் சொல்கின்றேன் ஒரு எதை என்று அறிய அறிய இப்பொழுதெல்லாம் சாமியார்கள் என்றே அழைக்கின்றார்கள் எதை என்று உணர்ந்து உணர்ந்து

யானும் பின் சாமியார் என்றே சொல்கின்றேன் எவை என்று அறிய அறிய ஒருவன் அனைத்தும் செய்திட்டான்.... குடித்தான் பின் எதை என்று அறிய அறிய எதை என்று கூட அனைத்து விஷயங்களும் செய்தான் ஆனால் அனைத்தும் அவந்தனுக்கு சலித்து விட்டது!!!!! பின்பு என்னதான் இவ்வுலகத்தில் அனைத்தும் அனுபவித்து விட்டோமே பின் சாமியார் வேடம் போடுவோம் என்று நினைப்பு வந்தது சாமியார் வேடம் போட்டுக் கொண்டான்!!!!

ஆனாலும் எதை எதை என்று அறிந்து அறிந்து ஆனால் பின் வந்தார்கள் மக்கள் அவனை நோக்கி பின் அனைத்தையும் நீ தான் சாமியார் என்று ஆனாலும் அவந்தனுக்கும் ஒன்றும் தெரியாது!!!

ஆனாலும் மக்கள் என்னவோ அதாவது அவனை உயர்த்தியும் விட்டனர் அப்பனே ஆனால் அவன் மகா திருடனப்பா!!!!!

எதை எதை என்று அறிந்து அறிந்து அதனால் தான் அப்பனே கடைசியில் பார்த்தால் பின் அவந்தன் பாவங்கள் பின் சுமந்து கொண்டு அவன் மட்டும் சுமக்காமல் பின் அனைவரிடத்திலும் கூட பாவங்களை விட்டு விட்டான் அப்பனே!!!! 

இப்படி இருந்தால் பின் எப்படித்தான் வாழ்வது???

பின்பு சொல்வது யான்  அவ் சாமியாரை பார்த்தேன்!!! முதலில் நன்றாக தான் நடந்தது மீண்டும் அனைத்தும் பறிபோய்விட்டது என்பது!!!!

அப்பனே பொய்களப்பா!!!! அப்பனே கலியுகம் என்றாலே பொய் !!பொய்!! கலியுகத்தின் மற்றொரு வார்த்தை பொய் என்பது கூட அப்பனே!!!

நிச்சயம் எதை என்று அதனால் தான் அப்பனே முதலில் தன்னை அறியுங்கள் அப்பனே!!! தன்னறிவு அதாவது இறைவன் அனைவருக்கும் சமமாகவே அறிவு படைத்திருக்கின்றான் என்பேன் அப்பனே

இதனால் அவ் அறிவை பலப்படுத்தி நீ யோசித்தால் உயர்ந்தவன் ஆகிவிடலாம் என்பேன் அப்பனே

பின் யோசிக்க விடாமல் இருந்தால் அப்பனே நீ தாழ்வு நிலையில் வந்து வந்து பின் எதை என்று அறிந்து அறிந்து நீயும் மறைவாய் உன் குடும்பத்தையும் அழிப்பாய்!!! இதுதான் அப்பனே மெய்!!!

ஆனாலும் அப்பனே உண்மை நிலையை பின் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே !!!!

பின் எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்லுகின்றேன்!!!!


""""" தன் நிலையை யார் ஒருவன் அறிகின்றானோ அவந்தனுக்கு கிரகங்கள் வேலை செய்யாதப்பா!!!!!

""அவந்தனுக்கு நல் நேரமும் இல்லை பின் கெட்ட நேரங்களும் இல்லை !!!!! ராகு காலம் இல்லை!!!!!
 எமகண்டம் இல்லை அப்பனே!!!

எதை எதை என்று அறிய அறிய அப்பனே """""" எந்நேரமும் நல் நேரமே!!!!!!! என்பேன் அப்பனே!!!!!

இறைவனை வணங்குவதற்கு எதை என்று அறிய அறிய அப்பனே !!!!!  இப் பழனி மலையில் நின்று சொல்கின்றேன்!!!! அப்பனே!!!

தைப்பூசம்!!!!!! கிருத்திகை!!!!! சஷ்டி!!!!! 

அப்பனே இவையெல்லாம் பின் எதை என்று அறிய அறிய அப்பனே!!! ஆனால் இப்படி எல்லாம் இப்படி இந்த நாட்களில் தான் இறைவனை வணங்குவதா? என்ன??? அப்பனே!!!!

நிச்சயம் இல்லை அப்பனே!!!!

இறைவன் எதை என்று அறிய அறிய பின் பாசத்தோடு இறைவனை முறையிட்டு!!! முறையிட்டு!!! வணங்கி வந்தாலே!!!! அப்பனே """"""""""""எந்நாளும் சஷ்டி தான் கிருத்திகை தான்!!! அப்பனே தைப்பூசம் தான்!!!! அப்பனே பங்குனி உத்திரம் தானப்பா!!!!!!!!!!!!!!

நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே!!!!!

அனைத்தையும் செய்து விட்டு அனைத்து தரித்திர காரியங்களையும் செய்துவிட்டு!!!!!!!!............

 """"""""""""""""""""""பங்குனி உத்திரத்தன்று பின் முருகனைப் பார்த்தால் முருகன் என்ன முட்டாளா என்ன???????????????????????? அனைத்தையும் கொடுப்பதற்கு அப்பனே!!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! முருகன் அனைவரையும் இன்றளவும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே சித்தர்கள் யாங்களும் இங்கு பின் தவழ்ந்து தவழ்ந்து இருக்கின்றோம் பல ஞானியர்களும் அப்பனே பல ரிஷிமார்களும் அப்பனே தேவாதி தேவர்களும் இங்கு தான் குடி கொண்டிருக்கின்றார்கள் இன்றைய தினத்தில் என்று கூட யான் நிச்சயம் அப்பனே அதாவது எதை எதை என்று அறிய ஆனால் ஒருவனுக்காவது அங்கே சென்று தரிசிக்கலாமா என்ற எண்ணம் இல்லையப்பா!!!!

ஏனென்றால் பின் இவர்களைப் பார்ப்பதற்கு சில புண்ணியங்கள் செய்து இருந்தாலே ஆனாலும் அப்பனே ஒருவன் முருகனே என்னால் பார்க்க முடியவில்லையே என்று எங்கு நினைத்தாலும் அப்பனே நிச்சயம் என் பக்தன் அங்கே நினைக்கின்றான் என்று உடனடியாக பின் இங்கு இருப்பவர்களை விட அங்கு நிச்சயம் ஆசீர்வதிப்பான்!!!

இதுதான் கருணையின் கடல் முருகன்!!!!

கருணையின் எதை  என்று அறிய அறிய அதனால் அப்பனே பின் முருகன் குழந்தை வடிவமாக இருந்தாலும் அப்பனே பின் கொடுப்பதில் வல்லவன் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!! பாசங்கள் மிகுந்தவன்!!!! விளையாடுவதில் மிகச்சிறந்தவன் என்பேன் அப்பனே!!!!! எதை எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே குழந்தைகளுக்கு எதை எதை என்று அறிய அறிய இன்னும் ஞானங்கள் அப்பனே வரும் காலங்களில் யான் உரைத்துக் கொண்டே இருப்பேன் அப்பனே நிச்சயம் இதைத் தெரிந்து கொண்டு அப்பனே ஆனாலும் அப்பனே மனிதனின் நிலைமைகள் மாறிக்கொண்டு அதாவது எதை எதை என்று அறிய அறிய!!!!!

எதன் மீது பற்று செலுத்திக் கொண்டே இருக்கின்றது என்பதை எல்லாம் அப்பனே தெரிவித்தாலும் அப்பனே இது கலியுகம் அப்பனே

இதனால் அப்பனே நிச்சயம் சென்று கொண்டிருந்தாலும் நிச்சயம் ஈசன் கடுமையாக தண்டனைகளை கொடுப்பான்!!!

யான் ஒரு முறை மீண்டும் எச்சரிக்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய படைத்தவனுக்கு பின் காக்கவும் தெரியும் அழிக்கவும் தெரியும் அப்பனே அனைத்தையும் கொடுக்கவும் தெரியும் என்பேன் அப்பனே!!!

எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே முதன்மை பகுதிகளில் இருந்தே சொல்லிக்கொண்டே வருகின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூட அப்பனே!!!

ஆனால் நிச்சயம் பொய்யாக்குகின்றான் மனிதன் இறைவனை அப்பனே!!!!

இப்படியே போய்க் கொண்டிருந்தால் நிச்சயம் யாங்கள் தண்டிப்போம் தண்டிப்போம் சொல்லிவிட்டேன் அப்பனே பின் தண்டித்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!!!

ஆனால் அவன் உணரவில்லை அப்பனே!!!

ஏமாற்றாதீர்கள் அப்பனே பக்தி என்ற நிலைமைக்கு வந்து நிச்சயம் ஏமாற்றாதீர்கள் பின்பு பக்தி இல்லாமல் கூட நீ வாழ்ந்து விடலாம் !! ஆனால் பக்திக்கு வந்து ஏமாற்றினால் அப்பனே பின் எதை என்று கூற பாவங்களை இன்னும் இன்னும் அதிகமாக்கிக் கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே மனிதனுக்கு எப்படி வாழ தெரியாமலே வாழ்ந்து வருகின்றான் என்பேன் அப்பனே அதனால்தான் முதலில் இப்படி எல்லாம் இருந்தால்தான் அப்பனே நலமாகவே வாழ முடியும் அப்பனே இறைவன் தரிசனத்தையும் காண முடியும் என்பதை எல்லாம் யான் வாக்குகளாக பரப்பிக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!! நலமாகவே எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!!

இதனால் அப்பனே முதன்மையாக வருவது அப்பனே சில சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு அப்பனே!!!  வாழ்ந்து வந்தாலே கர்மம் அண்டாது!!! அக் கர்மம் அண்டாவிடில் நிச்சயம் அப்பனே உயர்வான இடத்திற்கு தான் செல்வீர்கள் என்பேன் அப்பனே!!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே யான் எத்தனையோ வாக்குகள் பல சித்தர்களும் சொல்லிவிட்டார்கள் ஆனால் ஒருவனுக்கு கூட புத்திகள் இல்லை ஆனாலும் எதை என்று அறிய அறிய என் பக்தர்கள் அதனையும் கூட அப்பனே பின் கடைபிடித்தே வருகின்றார்கள் அப்பனே!!!!

நிச்சயம் யாங்கள் விதியை கூட மாற்றுவோம் அப்பனே!!

மிக்க சந்தோஷமப்பா!!!!!!

ஆனாலும் மனிதர்கள் எதை எதை என்று அறிய அறிய யான் ஈசன் அதாவது இங்கே இருக்கின்றான் என்று கூட எண்ணுகின்றார்கள் அப்பனே!!!   """" பின் இருக்கின்றானா??? என்ன???

அப்பனே பக்குவங்கள் ஞானங்கள் பெறுவதற்கும் கூட அப்பனே இங்கே இருக்கின்றான் என்று ஒருவன் யார் சொல்கின்றானோ அவந்தன் பல இடங்களுக்கும் கூட சென்றாக வேண்டும் பல திருத்தலங்களுக்கும் சென்றாக வேண்டும் அப்பனே இப்படி உலகத்தையே சுற்றி வந்தால் பின் இங்கு இருக்கின்றான் என்று அர்த்தம் என்பேன் அப்பனே

மனித முட்டாளே!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய எவனும் இல்லையப்பா இது போல்!!!

இதனால் இங்கே இருக்கின்றான் என்பதை கூட சொல்கின்றானே அவந்தன் ஒரு முட்டாள் பெரும் திருடனப்பா!!! சொல்லி விட்டேன்!!! அப்பனே

மனிதனை யான் இனி மேலும் எதை என்று அறிய அறிய அப்பனே யான் சொல்லிக் கொண்டே வந்தாலும் அப்பனே பின்  நிச்சயம் மாறுங்கள்!!! மாறுங்கள்!!!

மாறாவிடில் யாங்கள் மாற்ற வைப்போம்!!!!

எப்படி மாற்ற வைப்போம் என்றால் கஷ்டத்தை கொடுத்து தான் மாற்ற வைப்போம் தெரிந்து கொள்ளுங்கள்!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய!! அப்பனே பின்பு எவை என்று உணர்ந்து உணர்ந்து!!!!

அப்பனே பின் அறிவுகள் பலம் அப்பனே தன் தன் வேலையை சரியாகவே அனைத்தையும் செய்து கொண்டு தான் இருக்கின்றது

ஆனால் மனிதன் தான் அப்பனே கர்மாவை உருவாக்குகின்றான் அப்பனே உருவாக்கி உருவாக்கி இவ்வுலகத்தையே அழித்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே

ஆனால் யாங்கள் நிச்சயம் விட்டு விடுவதில்லை என்பேன் அப்பனே

ஏதோ பின் ரூபத்தில் இருந்து மனிதனை காத்து வந்து கொண்டே இருக்கின்றோம் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்தது நல்லோர்களை நிச்சயம் யாங்களும் கூட காத்து வருவோம் அப்பனே!!! தீயோர்களை நிச்சயம் சிறிதளவு விட்டு விடுவோம் ஆனால் நிச்சயம் தண்டித்து விடுவோம் அப்பனே!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே முருகனின் லீலைகள் இன்னும் தொடருமப்பா!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் சரியாக கேட்டுக் கொள்ளுங்கள் அப்பனே அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து!!!

 அப்பனே இப் பழனி தன்னில் அப்பனே!!! ஓர் சிறுவன் அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே பின் ஓர் சிறுவன் எதை என்றும் கூட அப்பனே பின் அதாவது பின் நல்விதமாகவே பின் முருகன் மீது பக்தி கொண்டோர் தாய் தந்தையர்!!! ஆனால் தாய் தந்தையருக்கு ஒன்றும் இல்லாமல் ஆனால் பிள்ளையும் பிறந்தது ஆனால் அப்பிள்ளையை இங்கே விட்டு விட்டு முருகா பின் நிச்சயம் எதை என்று எங்களுக்கே பின் எவை என்று உணராத அளவிற்கு கூட பின் வாழ தெரியவில்லை!!! வாழவும் பிடிக்கவில்லை!!!

ஆனாலும் பின் எங்களுக்கும் வீடு இல்லை காசுகள் இல்லை நிச்சயம் என் பிள்ளையை நீயே பார்த்துக் கொள் என்று விட்டுவிட்டு அவ் தாயும் தந்தையும் மாண்டுவிட்டனர் இக்குளத்தில் அதாவது தற்பொழுது இங்கேயே சிறிதளவு தூரமே சென்றாலே பின் அங்கே ஒரு குளம் அங்கேயே விழுந்து விட்டார்கள்!!

ஆனாலும் அவர்கள் வீழ்வது எதை என்று அறிய அறிய இன்னும் கூட பின் எதை என்று கூட இறப்பதற்கு சென்று விட்டார்கள்.

ஆனாலும் பின் முருகன் அவர்களை இறக்க விடாமல் நீங்கள் எதை என்று அறிய அறிய உயிருள்ளதாகவே சுற்றிக்கொண்டே இருங்கள்!!! யார் ஒருவர் எதை என்று இக்குளத்தில் மூழ்கிறார்களோ அவர்களுக்கு பரிசுத்தமான ஆசிர்வாதங்கள் கொடுங்கள் என்று உத்தரவிட்டான்!!!

இன்றளவும் எதை என்று அறிய அறிய உயிருள்ளதாகவே எதை என்று தெரிந்து தெரிந்து பின் அக்குளத்திலேயே நிற்கிறார்கள் இருவர்களும் கூட!!!!( ஆவினன்குடி சரவணபொய்கை குளம்) 

ஆனாலும் எதை என்றும் கூட அறியாத அளவிற்கும் கூட அச்சிறுவன் இங்கே வளர்ந்தான்!!

ஆனாலும் அச்சிறுவனுக்கு என்ன செய்வது??? ஏது செய்வது??? எப்படி வாழ்வது என்பது கூட தெரியவில்லை!!!

ஆனாலும் """"""""""ஆவினன்குடி!!!!!!!! எதை என்று அறிய அறிய இப்பொழுது கூட அதை கீழே தான் எதை என்று கூட தங்கியிருந்தான்!!!!!

ஆனாலும் முருகனைப் பார்த்துக் கொண்டே இருந்தான் பின் எவை என்று அறிய அறிய பல மனிதர்களை நோக்கி நோக்கி பல மனிதர்கள் நோக்கி நோக்கி அதாவது முருகனை நோக்கி நோக்கி வந்தனர்!!!

ஆனாலும் இவந்தனும் யோசித்தான் பின் ஏன் முருகனை எதை என்று அறிய அறிய நோக்கி வருகின்றார்கள் என்பதற்கு பதில் நிச்சயம் பின் தெள்ளத் தெளிவாக பின் எப்படியாவது கேட்டு உணர்தல் வேண்டும் என்பதைக் கூட நிச்சயம் எதை என்று அறிய அறிய அனைத்து மனிதர்களிடத்திலும் நிச்சயம் பின் ஒவ்வொரு முறையும் நிச்சயம் கேட்பான்!!!

எதற்காக?? முருகனிடத்தில் வந்தாய்?? என்று!!......

எங்களுக்கு வீட்டில் பிரச்சனைகள் அதனால் தான் என்று!!!

மற்றொருவன் பின் எதை என்று யான் காசுகளுக்காக வந்தேன்!!

மற்றொருவன் பின் எங்களுக்கு சொத்துக்கள் தேவை என்று!!!!

மற்றொருவன் இல்லங்கள் தேவை என்று!!!

மற்றொருவன் யான் திருமணம் செய்ய வேண்டும் என்று!!!!

இன்னொருவன் எதை என்று அறிந்து அறிந்து பின் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று!!!

இன்னும் ஏராளமான விஷயங்களையும் கூட அச்சிறுவனுக்கு பதிந்தது!!!

ஆனால் அச்சிறுவன் அங்கேயே அமர்ந்தான்!!!

முருகா!! எதை என்று அறிய அறிய நிச்சயம் உன்னிடத்தில் அனைவரும் இவ்வாறு கேட்கின்றார்களே !!!!

எந்தனுக்கு என்ன தான் ஆசை இருக்கின்றது எந்தனுக்கு யாருமே இல்லையே யான் எவரிடம் கேட்பது என்று அச்சிறுவன் ஆராய்ந்தான். 

ஆனால் முருகனுக்கு இது பட்டு விட்டது "காதில்!!!! எதை என்று!!!(  அச்சிறுவனின் எண்ணம் முருகன் அறிந்து கொண்டார்)

ஆனாலும் நிச்சயமாய் அச்சிறுவன் என்னதான் செய்கின்றான் என்று பார்ப்போம் என்று கூட!!! 

இதனால் யோசித்துக் கொண்டே இருந்தான் அப்பொழுது முருகனை எதை என்று அறிய!!அறிய!!

அனைவரும் சென்று விட்டார்கள் முருகனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று எண்ணினான்!!!

ஆனாலும் பின் நடு ராத்திரியில் பின் எதை என்று அறிய அறிய எழுந்து நின்று முருகா!!!! எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் நீ எல்லாம் எதை என்று அறிய அறிய முருகன்தானா????????????

இவர்கள் எல்லாம் இப்படி கேட்டுக் கொண்டிருக்கின்றார்களே!!!!

ஆனாலும் அச்சிறுவனுக்கு எதை என்று அறிய அறிய முருகனின் அறிவில் எதை என்று கூட சிறந்து விளங்கினான் சிறு வயதிலேயே!!!

ஆனாலும் முருகனைப் பார்த்து முருகா!!!! நிச்சயம் பின் இல்லம் அதாவது இல்லம் வேண்டும் என்கின்றார்களே!!!! எதற்காக??? வேண்டும் என்று யோசித்தாயா!??? தான் வாழ்வதற்காகவே!!!

பணங்கள் வேண்டும் என்று கேட்கின்றார்களே எதற்காக???? தான் வாழ வேண்டும் என்பதற்காக!!!

திருமணம் வேண்டும் என்று எண்ணுகிறார்களே தான் வாழ வேண்டும் என்பதற்காக!!!

இன்னும் எதையெதையோ வேண்டுகின்றார்களே தான் வாழ வேண்டும் என்பதற்காகவே!!!!

ஆனால் முருகா நீ அனாதையாக இருக்கின்றாயே!!!!

ஒருவன் கூட முருகா!!!! நீ அனாதையாக இருக்கின்றாயே உந்தனுக்கு யான் துணை என்று!!!!  யாராவது சொன்னானா?? என்ன???

நிச்சயம் இல்லையப்பா!!!!!

இதுதான் இங்கு நடந்து கொண்டு இருக்கின்றது அப்பனே!!!!

யாராவது முருகனைப் பார்த்து முருகா உனக்காகத்தான் யான் வந்திருக்கிறேன்!!!! எங்களுக்கு சொந்த பந்தங்கள் எதை என்று அறிய அறிய அனைத்தும் நீயே உன்னை பார்த்தாலே சந்தோசம் என்று யார் ஒருவனாவது கேட்கின்றானா என்றெல்லாம் அச்சிறுவன் அவ்வயதிலே இருந்தான்!!!

அதனால் அச்சிறுவனும் பின் முருகா!!! பார்!!! மனிதனை பார்!!! என்றெல்லாம்!!!

நிச்சயம் முருகனுக்கு மிக்க மகிழ்ச்சி ஆயிற்று!!!!!!

நிச்சயம் தான் ஏற்படுத்திய குழந்தை இப்படி ஒரு பேரின்பமா!!!!!!! அறிவா என்பதையெல்லாம் சரி சிந்தித்தான்!!!!

நிச்சயமாய் சரி!!! சிறுவனும் என்னென்ன தான் செய்கின்றான் என்று கூட மறுநாள் நிச்சயம் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட முருகன் பின் அதாவது பக்கத்தில் அமர்ந்து கொண்டான்!!!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் அச்சிறுவனும் யார் நீ???? என்று கூட நிச்சயம் பின் முருகனும் நீ யார்???  என்று கூற!!!! 

யானும் இங்கு ஒரு அனாதையாகவே இருக்கின்றேன்!!!

அநாதையா?? எதையென்று அறிய அறிய பின் எவை என்று உணர்ந்து உணர்ந்து பின் நீ யார் என்று கேட்டதற்கு முருகனே சொன்னான்!!!


யானும் ஒரு அனாதை என்று!!!!எவை என்று உணர்ந்து!!!

அப்படியா!!!!  அச்சிறுவனும் உணர்ந்து அச்சிறுவன் அப்பொழுது கேட்டான் நிச்சயம் யானும் ஒரு அனாதை நீயும் ஒரு அனாதை!!!

ஆனால் முருகனோ எதை என்று அறிந்து அறிந்து....நம்தனை கண்டுகொள்ளவே இல்லை ஏதாவது செய்வோமா என்று எண்ணி எண்ணி காத்துக் கொண்டிருந்தான்!!!

ஆனாலும் அச்சிறுவனும் ஆனாலும் முருகன் விட்ட பாடு இல்லை!!!

எப்படியாவது இவன் சிறுவனின் எதை என்று இன்னும் மீண்டும் மீண்டும் எதனையாவது உசுப்பேத்த வேண்டுமென்று அறிய அறிய

அதனால் நிச்சயமாய் சொல்கின்றேன் சொல்கின்றேன் எதை என்று உணர்ந்து உணர்ந்து!!

அச்சிறுவனும் கேட்டான் பின் எவை என்று அறிய அறிய... பின் நீயும் அனாதை என்கின்றாய் யானும் அனாதையாக இருக்கின்றேன் ஆனால் முருகனும் அங்கு அனாதையாக இருக்கின்றான்( மேலே மலை மீது இருக்கும் முருகனை எண்ணி ) அப்பொழுது முருகனுக்கு யார்?? சொந்த பந்தங்கள் என்று

எவை என்று அறிய அறிய பின் இச்சிறுவனுக்கும் பின் சிறிது ஏற்பட்டு விட்டது... ஆனால் மீண்டும் பின் எதை என்று அறிந்து அறிந்து அச்சிறுவன் அங்கே அமர்ந்தான்....

அனைவரும் இறைவனைக்கான அதாவது முருகனைக் காண ஓடோடி வந்தார்கள்!!!

ஆனாலும் பின் ஒருவனை கேட்டான் முதலில்!!!

எதற்காக வந்திருக்கின்றாய்??? என்பதை கூட!!....

பின் ஏன்?? எந்தனுக்கு திருமணம் ஆகவில்லை அதனால் தான் வந்தேன் என்று!!!!

முருகனுக்கு எவை எவை என்று அறிய அறிய!!!

முருகனே ஒரு அனாதை!!! அவந்தன் உந்தனுக்கு என்னதான் செய்வான் என்று கூட!!!!

அப்படியா!!! முருகன் ஒன்றும் செய்ய மாட்டானா!! என்று சென்று விட்டான்!!!

மற்றொருவன் வந்தான் ஆனாலும் அச்சிறுவன் கேட்டான்!!!

முருகனே ஒரு அனாதை உந்தனுக்கு என்னதான் செய்வான் என்று!!!!

அவனும் சென்று விட்டான்!

அப்பனே! பின் எதற்காக இறைவனை வணங்குகின்றார்கள் என்பதை கூட ஆணித்தரமாக சொல்கின்றேன் அப்பனே

நிச்சயம் தாம் தன் எதையென்று அறிய அறிய அப்பனே தனக்காகவே வணங்குகின்றானே தவிர நிச்சயம் அப்பனே எப்பொழுது பின் எவை என்று இறைவனை இறைவனுக்காக வணங்குகின்றானோ!!!!!!! அவன் தான் உயர்ந்த மனிதன் ஆகின்றான் என்பேன் அப்பனே!!!!

நிச்சயம் யான் பார்த்து இருக்கின்றேன் அப்பனே இன்றளவும் கூட!!!!

ஆனாலும் பல பேர்கள் வந்தார்கள் அப்பனே

ஆனால் அதில் சில குறிப்பிட்ட மனிதர்களே அப்பனே மனதில் ஒன்றும் இல்லாமல் இருந்தார்கள் என்பேன் அப்பனே!!! எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் அப்பனே ஆனாலும் அச்சிறுவனும் வளர்ந்து வளர்ந்து அப்பனே ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து ஆனாலும் நிச்சயமாய் இங்கே பிச்சை ஏந்தினான் அப்பனே!!!!

ஆனாலும் முருகனைக் காண செல்வோர்களிடமெல்லாம் ஒரு வார்த்தை கூறினான்!!!

நிச்சயம் பின் தன்னை( தனக்காக) பற்றி யாரும் வேண்டிக் கொள்ளாதீர்கள் யாரும் வேண்டிக் கொள்ளாதீர்கள் என்றெல்லாம் நிச்சயம் எதை என்று உணர்ந்து உணர்ந்து

ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து முதலிலே இச்சிறுவன் பைத்தியக்காரன் இவன் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டுமா ?? என்று எண்ணி பின் தனக்காகவே வேண்டிக் கொண்டார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!!!

அனைவரையும் ஆனாலும் இப்படியே சென்று கொண்டிருக்கையில் அனைவரும் இவந்தனை பைத்தியக்காரன் என்று சொல்லிவிட்டார்கள்!!!

இதனை எதை என்று அறிய அறிய அதனால் பின் பல உயரிய அதிகாரிகளிடம் சென்று இவந்தன் பைத்தியக்காரன் என்று எதை என்று அறிய அறிய இவனை பிடித்து எங்கேயாவது கொண்டு சென்று அடையுங்கள் என்று கூட ஓர் குகையில் அடைத்து விட்டார்கள்!!!

இதனால் அங்கே இருந்தான் அச்சிறுவன் எதை என்று இவந்தனுக்கு பசிக்கு உணவு கூட கொடுக்காமல் இங்கேயே கொன்று விட வேண்டும் என்று அவர்கள் மனதில்  எதை என்று அறிய அறிய!!!

இதனால் எவை என்று கூற இப்படி இருக்கையில் ஆனாலும் பின் நிச்சயம் ஆனாலும் அச்சிறுவனும் முருகா!!! முருகா!!! இன்று அழைத்துக் கொண்டே இருந்தான்!!!!

நிச்சயம் எதை என்று அறிய அறிய """""""""""""அக்குகையை அப்படியே மேல் நோக்கி""""""""" எடுத்துச் சென்று விட்டான் முருகன்!!!!!!!( மலைமீது) 

அப்பனே இன்றளவும் அங்கே இருக்கின்றதப்பா!!!!!

நிச்சயம் அதன் ரகசியத்தை வரும் காலங்களில் சொல்கின்றேன்!!!!

எதை என்று அறிய அறிய அச்சிறுவனையும் எதை என்று அறிய அறிய பின் அப்பனே ஆட்கொண்டு அவந்தனும் இப்பிறப்பில் ஒரு மாமனிதனாக பிறக்க வைத்துள்ளான் முருகன் என்பேன் அப்பனே!!!!!

இதுதான் முருகன் விளையாட்டப்பா!!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! நிச்சயம் அப்பனே அழிக்காதீர்கள்!!!
முதலில் உடம்பை அழிக்காதீர்கள் அப்பனே!!! இறைவன் கொடுத்த உடம்பு எதை என்று அறிய இறைவனுக்கே சொந்தம்!!!

அதை அழிக்க நினைத்தால் உன்னையும் இறைவன் அழித்து விடுவான் சொல்லிவிட்டேன்!!!!

அப்பனே இதற்கு எடுத்துக்காட்டாகவே பல வழிகள் உண்டு என்பேன் அப்பனே!!!

மற்ற உயிர்களை கொன்று சாப்பிட்டால் அப்பனே நிச்சயம் உந்தனுக்கு நோய்கள் வரும் சொல்லிவிட்டேன் அப்பனே!!! 

இதை யாராலும் தடுக்க முடியாது!!! 

யாங்கள் மருந்துகள் கூறினாலும் ஆனாலும் பல வகையிலும் கூறிவிட்டோம் அப்பனே எதை என்று அறிய அறிய!!! 

எழுதியும் வைத்துள்ளோம் அப்பனே ஆனாலும் நிச்சயம் எங்களிடமே அதை இயக்குவதற்கான தகுதிகள் உள்ளது என்பேன் அப்பனே

மருந்துகளை தின்னுங்கள் ஆனாலும் சரியாக விடுமா??? என்ன????

நிச்சயம் ஆகாது என்பேன் அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய இதை சித்தர்கள் ரகசியத்தோடு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!

நிச்சயம் இது சித்தர்கள் உலகம் என்பேன் அப்பனே!!!

சித்தர் எதை என்று அறிய அறிய அப்பனே சித்தன் போக்கு எதை என்று அறிய அறிய பைத்தியன் போக்கு என்பேன் அப்பனே!!!!

சித்தனின் வாக்குகளை கேட்டால் நீ பைத்தியனாகி அப்பனே நிச்சயம் இறையருள் பெற்று மேலோகம் சென்று அனைத்தும் பார்ப்பாய்!!! அனைத்திற்கும் அழைத்துச் செல்வோம்!!!!

எங்களுக்கு அத்தகுதி உண்டு என்பேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய எதை என்று உணர்ந்து உணர்ந்து........ 

எங்களுக்கு மேலானவர் எவர்????????? இவ்வுலகத்தில் சொல்!!!!

எதை என்று அறிய அறிய எவரும் இல்லையப்பா!!!

நிச்சயம் தண்டனை கொடுப்போம் மாற்றுவோம் அப்பனே!!!!!

நல்லாசிகள் !! நல்லாசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. வெற்றிவேல் வீரவேல்,
    ஓம் அகத்தீசாய நம,
    நன்றி ஐயா🙏🌹🙏🌷💐💐

    ReplyDelete
  2. Om Saravana Bhavaya Namaha 🙏🙏🙏. Om Sri Lopamudra Devi Sametha Agastheeswaraya Namaha🙏🙏🙏

    ReplyDelete