​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 7 February 2023

சித்தன் அருள் - 1286 - ஜீவநாடி பொதுவாக்கு 3 (06/02/2023)


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் அகத்தியப்பெருமானிடம் சமர்ப்பித்த 52 கேள்விகளுக்கும் பதில் வந்துவிட்டது. ஒரு தொகுப்புக்கு 10 கேள்வி/பதில் வீதம் தட்டச்சு செய்து தருகிறேன். பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

1. வீட்டில் விளக்கேற்றி தெரிந்த வரையில் பூஜை செய்கிறேன். சிலவேளை நடந்து செல்லும் பொழுது மானசீகமாக பூசை செய்கிறேன். இது இறைவனிடம் சென்று சேருமா?

அப்பனே! இறைவனை மனதாலே நினைத்தாலே போதுமானது. அப்பனே! பல வாக்கியத்தில் கூட இதனை யான் சொல்லிவிட்டேன், அன்பு மட்டுமே என்று. இதனால், மனதில் கூட தீபத்தை ஏற்றலாம் என்று கூட. அப்பனே! தீபத்தை மட்டும் ஏற்றி, மனம் எங்கோ இருப்பதில் என்ன லாபம். அதனால், எங்கு சென்றாலும், பின் நமசிவாயத்தை மனதில் நினைத்துக்கொண்டு சென்றாலே போதுமானது. மனது கட்டுக்குள் வந்து விடும் என்பேன் அப்பனே! ஆனால், மனிதனின் மனதிலே, 1000க்கும் மேலான குறைகளப்பா. இதனால், எப்படித்தான் இறைவன் வந்து இறங்குவான், அப்பனே! மனதிலே எதுவும் வைத்துக் கொள்ளாமல், தீபத்தை, மனதிலே ஏற்றவேண்டும் அப்பனே! மனதில் தீபம் ஏற்றுவது 100 மடங்கு பலன் தரும் அப்பனே! இதனை பற்றியும் இன்னும் தெரிவிக்கின்றேன் விஷயங்களை பின்னர் அப்பனே!

2. நாகர் வழிபாடு வீட்டில் செய்யலாமா? அதை பற்றி கூறவும்.

அப்பனே! எதை என்று அறிய! அறிய! எவை என்று புரிய! புரிய! அப்பனே! சுடுகாட்டில் சென்று, உட்கார்ந்து உண்ணலாமா?

3. எந்த சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக மூளைத்திறன் வளர்ச்சி குறைந்த குழந்தைகள் பிறக்கின்றது? அப்படி பிறந்த குழந்தைகளை ஏதேனும் ஒரு வழியில் சரி பண்ண முடியுமா?

அப்பனே! நிச்சயம் சரி செய்கின்றேன் அப்பனே! இதற்கெல்லாம் தாய் தந்தையரே காரணம் என்பேன். இன்றைய காலப்போக்கில், எதை எதையோ நினைத்து எதை எதையோ உண்ணுகின்றார்கள் அப்பனே! ஒரு பெண்ணவள் கர்ப்பமாய் இருக்கும் பொழுது, எதை எதையோ உண்ணுகின்றாள் அப்பனே! இயற்கையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதிகாசங்கள் ஓதுதல் வேண்டும். அவை மட்டுமல்லாமல், பல பல இயற்கை மூலிகைகள் உட்கொள்ள வேண்டும். ஆனாலும், இன்றைய காலகட்டத்தில், சண்டைகள், சச்சரவுகள், இவை மட்டும் அல்லாமல் பின் இல்லத்தில் கூட, வெளியில் கூட இவ்வாறு குழப்பங்கள் கணவனுக்கு சண்டைகள், இவ்வாறு வருவதனால் தான் எதை என்று அறிய, அறிய, உள்ளே இருக்கும் அந்த குழந்தையின் மூளைத்திறன் பாதிக்கப்படுகிறது என்பேன். அப்பனே! இதற்கு அதி விரைவிலே யான் விளக்கம் தருகின்றேன் அப்பனே! இதனால் தான், மணங்கள் செய்து கொண்டால், ஒரு வருடம், அமைதியாக சந்தோஷமாக இருந்தால்தான் அப்பனே! அக் குழந்தையும், நல்லபடியாக பிறந்து உயர்வடையும். இன்றைய சூழ்நிலையில் அது இல்லை அப்பா. 

4.சமிஸ்க்ரித மந்திர ஒலியினால் மூளை திறன் வளர்ச்சி குறைபாட்டை சரிபண்ண முடியுமா?

அப்பனே! எதை என்று அறிய அறிய! இதெல்லாம் வீணான பேச்சு! பின் முகத்தை திருப்பி முதுகைப்பார். முடியுமா என்ன? கேள்!

5. குரு நாதா,  யுகங்களின் முதல் யுகமான சத்திய யுகத்தில்  வாழும் மக்களின் வாழ்வியல் முறை எப்படி இருக்கும் ஐயா ?

அப்பனே! நீதி, நேர்மை தவறாமல், பிறருக்கு உதவி செய்தல், பொறாமை இல்லாமல், அப்பனே! இறைவனே ஆட்சி புரிந்தான். அப்பனே! இன்றைய கால கட்டத்தில் மனிதனே ஆட்சி புரிகின்றான். மனிதன். மனிதன். நிச்சயம் யாங்கள் விட மாட்டோம், யாங்கள் விடமாட்டோம், நிச்சயம்.

6. குருவே, இந்த கலியுகம்  நிறைவடைய இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளன ?

அப்பனே! எதை என்று அறிய! அறிய! இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. அதற்குள்ளே இத்தனை கேள்விகளா. பின் மெதுவாக உரைத்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அப்பொழுது தெரியும் ஆட்டம்.

7. பூஜை, வேள்விகளில் சிறந்து விளங்கும் ஒருவனாக ஒரு பிறவியில் பிறக்க, இப்பிறவியில் என்ன செய்ய வேண்டும்?

அப்பனே! எதுவும் செய்ய தேவை இல்லை. எதை என்று அறிய! அறிய! மனதுள், இறைவா, நீ மட்டும் எந்தனுக்குப் போதும் என்று இருக்கச்சொல். மனிதன் திருடனப்பா, இவ்வாறு இருக்க மாட்டான் என்பேன் அப்பனே! இவ்வாறு இருந்தால், பிறவிக்கடலை கடந்து விடலாம். யாராவது ஒருவன் இருக்கின்றானா என்று அவனை கூறச்சொல், அவனைப்பற்றி, பிறகு யான் எடுத்துரைக்கின்றேன்.

ஒருவன் கேட்டான், ஒரு நாள், கதை சொல்லிவிடாதே என்று. அவன் என்ன செய்தான் என்று தெரியுமா அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! அவனைப்பற்றி விளக்குகின்றேன் அப்பனே!

ஒரு முறை, ஒரு பிறவியில், பிறவி எடுத்து அப்பனே! திருத்தலத்தில் வாழ்ந்து வந்தான். ஆனாலும் அப்பனே! தாழ்த்தப்பட்ட சமுதாயங்களை திருத்தலத்தில் அனுமதிக்கக்கூடாது என்று. அவந்தனுக்குத் தெரியும், அனைவரும் தெய்வ பிள்ளைகள் என்று. சொந்த பந்தங்கள் எல்லாம், கீழானவர்கள் என்று கூட, கர்பிணி பெண்களை கூட உதைத்து, கர்பிணி பெண்களை விஷம் கொடுத்து கொன்றுவிட்டான். பல சாபங்கள். அவந்தனுக்கு குழந்தைகள் பாக்கியம் இருந்தாலும்/இல்லாவிடினும் இதனால் என்ன லாபம். அவந்தனுக்கு இந்த வாக்கை உரைக்கச்சொல். பிள்ளைகள் இருந்தாலும், சொந்த பந்தங்கள் இருந்தாலும் நிச்சயம் அவந்தனுக்கு எங்கும் இருக்க முடியாது என்பேன் அப்பனே! சாதாரணமானவர்கள் இல்லை நாங்கள் சித்தர்கள். இவன்தன் எண்ணத்திற்கு தகுந்தவாறு சொல்ல வேண்டுமா என்ன? அவன் யார் என்பதைக்கூட யான் தெரிந்து கொண்டேன் அப்பனே! என்னிடத்தில் கூட அவன் வந்து கொண்டேதான் இருக்கின்றான் அப்பனே. என்ன லாபம், கர்மத்தை முதலில் ஒழித்துவிட்டு என்று கூட. அப்பனே! ஒன்றை சொல்லுகின்றேன். இறைவனிடத்தில் வந்தாலும் கூட, கர்மங்கள் செல்லாமல் ஒன்றும் நடக்கப்போவதில்லை. என்பேன். யானே பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நீ செய்த கர்மத்துக்கு, யாங்கள் வந்து பதில் கூற முடியுமா என்ன? அதனால் அப்பனே! ஒழுங்காக இருங்கள். சொல்லிவிட்டேன். நீங்கள் செய்த தவறுக்கு, நீங்கள்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால், யான் கூடவே இருந்து, பல மாற்றங்கள் ஏற்படுத்துவேன் அப்பனே! அவந்தனுக்கு ஒரு முறை கடைசி வாய்ப்பும் கொடுக்கின்றேன்!

[இரண்டாவது, மூன்றாவது பத்திக்கான கேள்வி, இனிமேல்தான் வரப்போகிறது.அதை தெரிந்து கொண்ட அகத்தியர், இந்த கேள்வியுனூடே பதிலளித்து விட்டார்! அந்த கேள்வி வரிசையில் வரும் பொழுது உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.]

8. உயிர்களை  இறை படைக்க காரணம் என்ன?  ஆன்மாக்கள் தோன்ற காரணம்  என்ன?

அப்பனே! இவற்றை பற்றி எடுத்துரைத்துவிட்டேன் அப்பனே. ஆன்மா, எப்படியெல்லாம் தவறு செய்கிறது என்பதை. ஒவ்வொரு ஆன்மாவுக்கும், இத்தனை பிறவிகள் என்று கூட. ஆசைகளே இல்லாமலிருந்தால், இதற்கு தீர்வுகள் பல வழிகளிலும் உண்டு அப்பனே. யார் இதை கேட்டானோ, அவனுக்கு ஒரு சாட்டையடி, கட்டங்களும் வரும் என்பேன். ஆனால் பொறுத்திருக்கச்சொல், அவன் இந்த கேள்விக்கு யான் நேரடியாகவே பதிலளிக்கின்றேன்! எனது ஆசிகள்.

9. இறையின் நோக்கம்  என்ன....உயிர்கள் இல்லாத உலகம் .. எப்படி இருக்கும்...!

ஈசனாரும், பார்வதி தேவியும் வந்து உரையாடுவார்கள் அப்பா! அப்பொழுது, இதற்கு விடை தெரிந்து விடும்.

10. ஹநுமத்தாசன் ஐயா அவர்களிடம் இருந்து திருப்பதி ஆறு மலைகள் பற்றி குருநாதர் சொல்லி இருந்தார், 7வது மலை பற்றிகூற முடியுமா?

முதல் மலையை பற்றி கூறத்தொடங்கியதுமே, அவனது விதி தொடங்கிவிட்டதப்பா. இவை எல்லாம் இப்பொழுது கூற மாட்டேன், அப்பா! ஏன் என்றால், மனிதர்கள், திருடரப்பா. அவந்தனுக்கே உணர்த்தினேன், மனிதர்கள் திருடரப்பா! சேராதே அப்பா! வேண்டாம் அப்பா! என்று கூட.  வீழ்ந்தும் விட்டான் அப்பா! போய்விட்டான் அப்பா! என்னிடத்திலே தான் இருக்கின்றான் அப்பா! அனைத்தையும் தெளிவாக கடைசியில் உரைக்கின்றேன் அப்பா! அதற்கெல்லாம் தெளிவான பதில் உண்டு அப்பா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

8 comments:

  1. அகத்தீசாய நம 🙏🙇‍♂️நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. நன்றி யாருக்கு?

      Delete
    2. அகத்திய பெருமானுக்கும். தொகுத்து வழங்கிய தங்களுக்கும்

      Delete
    3. அகத்தியப்பெருமானிடம், உதை வாங்க, நிறைய வாய்ப்புள்ளது, உங்களுக்கு!

      Delete
    4. அகத்திசாய நம 🙏அதைபாக்கியமாக கருதுகிறேன் ஐயா

      Delete
  2. Om Agatheesaya Namaha. Thank you very much sir.

    ReplyDelete
  3. திருப்பெருந்துறை சிவனே போற்றி . . திருவிளையாடல் நாயகா போற்றி

    இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே

    இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

    அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

    வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்

    தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே

    நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha 🙏🙏🙏

    ReplyDelete