​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 4 February 2023

சித்தன் அருள் - 1283 - குருநாதரின் அறிவுரைகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்த பதிவு மிக அவசியமாகின்றது. 

குருநாதர் அகத்திய பெருமானின் ஜீவனாடி ஓலைச்சுவடியில் குருநாதர் அகத்தியர் பெருமான் தோன்றி அடியவர்களுக்கு வாக்குகள் தந்து கொண்டிருக்கின்றார்.

யாருக்கு?? வாக்குகள் தர வேண்டும்!! எப்பொழுது? எங்கு? எந்த நேரத்தில்? தர வேண்டும் என்பதை குருநாதர் அகத்தியர் பெருமான் தான் தீர்மானிக்கின்றார்.

சில அன்பர்கள் நாங்கள் மாதக்கணக்காக காத்திருந்தும் தொடர்ந்து முயற்சி செய்தும் எங்களுக்கு ஓலைச்சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று நினைக்கின்றார்கள். இதில் ஒரு விஷயத்தில் நாம் அனைவரும் தெளிவு பெற வேண்டும்!!

""" அனைத்தும் குருநாதர் கையிலே இருக்கின்றது திரு ஜானகிராமன் கையில் அல்ல!!!!

குருநாதர் அகத்தியர் பெருமான் நினைத்தால் மட்டுமே வாக்குகள் கிடைக்கும்!!!!

சிலருக்கு ஒரு முறை இரு முறை வாக்குகள் குருநாதர் உரைத்திருந்தாலும் அதன் பிறகு ஒரு மண்டலம் அல்லது இரு மண்டலம் கழித்து வாக்குகள் கூறுவேன் என்று உரைத்திருப்பார்.

அதேபோல முன்பு வாக்கு கேட்டவர்கள் ஒரு மண்டலம் ஒரு மண்டலம் கழித்து வாக்குகள் கேட்பதற்காக தொடர்பு கொண்டால் சில சமயம் குருநாதரே வாக்குகள் தருவதை நிறுத்தி தள்ளிப் போடுகின்றார்.

காரணம் என்னவென்றால் குருநாதர் வாக்கில் உரைத்த விஷயங்களை பொதுவாக யாரும் செய்வதில்லை.

இதனைக் குறித்து குருநாத அகத்திய பெருமான் கூறுவது என்னவென்றால் யான் கூறியதை சரிமுறையாக கடைப்பிடிக்கவில்லை அப்பனே யான் எப்படி வாக்குகள் தருவது ??என்று கூறுகின்றார்.

முதலில் யான் சொல்லிவற்றை செய்து விட்டு வரச்சொல்.. பின் வாக்குகளாக செப்புகின்றேன் அப்பனே..... என்று கூறுகிறார்... 

பொதுவாக்கிலும் சரி தனிப்பட்ட நபர் வாக்கிலும் சரி குருநாதர் இந்த ஆலயங்களுக்கு சென்று வா!!!! குறிப்பாக ஆறுபடை வீடுகளுக்கு சென்று வா!!!! ஏழுமலையானை சென்று தரிசனம் செய்துவிட்டு வா!!! காலபைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வா!!! அனுதினமும் கோமாதாக்களுக்கு உணவை அளித்து வா. இயலாதவர்களுக்கு உணவை அளித்து வா !!!என்று குருநாதர் உத்தரவு கொடுப்பதை யாரும் சரி வர கடைபிடிப்பதில்லை...

இதையெல்லாம் செய்ய சொல்வது எதற்காக என்றால் 

சம்பந்தப்பட்ட அடியவர்கள் அவர்களது கர்மா தீரட்டும் என்பதற்காக தான்..... என்பதை உணர வேண்டும்!!!! 

கர்மவினைதீர அவர் உரைத்ததை அப்படியே செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுகின்றார்கள். 

கர்மா குறையும் பொழுது குருநாதரே தேடிவருவார்!!!!  இதை புரிந்து கொள்ள வேண்டும். 

ஆனால் அடுத்த வாக்கு எப்பொழுது?? அடுத்த வாக்கு எப்பொழுது?? என்ற எண்ணம் மேலோங்கி நிற்கின்றது. 

அடுத்ததாக ஒன்று ஒருவரின் கர்ம வினை தீர குருநாதர் பரிகாரமாக அதைச் செய்யச் சொல் என்று கூறினால் அதை செய்வதற்கு பதிலாக மற்றவரிடம் ஆலோசனைகள் கேட்டு அவர்கள் கூறுவதை கேட்டு நடப்பது இது  ஒருபுறம் இருக்க

குருநாதர் அகத்தியர் பெருமான் செய்யச் சொல்லியதை செய்வதற்கு சில ஆலயங்களுக்கு சென்று அதன்படி செய்ய அணுகினால் நிர்வாகத்தின் அனுமதி மறுப்பு ஒத்துழைக்காமை இவையும் நடக்கின்றது.

இதனை குறித்தும் குருநாதர் அகத்தியர் பெருமானிடம் வாக்குகளாக கேட்ட பொழுது

அப்பனே ஒருவன் கர்ம வினையை கரைப்பதற்காகவே அதை செய் என்று கூறுகின்றேன் அதை அப்படியே செய்வதற்கு முன் வந்தாலும் சில மனிதர்களால் அதற்கு தடைகள் ஏற்படுகின்ற பொழுது அல்லது மாற்று ஆலோசனைகள் கூறி மடை மாற்றுவது போன்ற செயல்கள் செய்வதும் எந்தனுக்கு தெரியும்!!!!

ஆனால் அவர்களுக்கு தெரியாது இப்படி செய்வதால் அவர்களுக்கு இவனுடைய கர்மா வந்து சேரும் என்பதை அறிவதில்லை.

ஒருவன் நல் மனதோடு யான் கூறியதை பின்பற்றி அதை நடத்த முயற்சி செய்யும் பொழுது அவனுடைய கர்ம வினையை தீர்க்க யான் கூறிய வழிகளை பின்பற்றும் பொழுது அதற்கு தடையாக தடுப்பதோ அதை உதாசீனப்படுத்தி மாற்றினாலோ இவன் தன் கர்மா சுமையை அவர்கள் தலையில் ஏற்றி வைத்து விடுவேனப்பா!!!!!

இது கலியுகம் அப்பனே கலியுகத்தில் மனிதர்கள் எவ்வாறு எல்லாம் நடந்து கொண்டு வருகின்றார்கள் என்பதையெல்லாம் யானும் சித்தர்களும் உரைத்து கொண்டே வருகின்றோம்!!!!! 

ஆனாலும் மனிதனின் கர்மா விடுவதில்லை அப்பனே!!!!! 

இதெல்லாம் குருநாதர் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விளக்கமாக கூறும் வழிமுறைகள் ஆனால் இதை எதையும் நினைத்துப் பார்க்காமல் எண்ணாமல் உணராமல் செய்யாமல்

திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொள்ளும் பொழுது குருநாதர் அவர்களுக்கு தரும் வாக்கினை ஒதுக்கி வைப்பதால் அனைவரும் திரு ஜானகிராமன் ஐயாவை குற்றம் கூறுகின்றார்கள். ஒரு சிலர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் வாக்குகள் படியுங்கள் என்று குறுஞ்செய்திகள் அனுப்புகின்றார்கள்.

இவர்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் அகத்தியன் ஒன்றும் வியாபாரப் பொருள் அல்ல!!!!! பணம் வாங்கிக் கொண்டு வாக்குகள் தருவதற்கு!!! என்ற வாக்கினை ஏற்கனவே அவர் கூறியிருக்கின்றார். 

ஓலைச்சுவடி வாசிப்பது என்பது அதுவும் ஜீவநாடி வாசிப்பது என்பது பணத்திற்காக செய்வது அல்ல திரு ஜானகிராமன் ஐயா இதுவரை குரு தட்சணையாக யாரிடமும் நாடி வாசித்ததற்கு இவ்வளவு கொடுங்கள் அவ்வளவு கொடுங்கள் என்று கேட்டதே கிடையாது!!!!! அடியவர்கள் அன்போடு குருதட்சிணையாக அளித்தாலும் அதையும் வேண்டாம் என மறுத்து தான் நடந்து கொள்கின்றார்!!! இதுவரை நாடி வாசித்ததற்கு இவ்வளவு கொடுங்கள் என்று யாரிடமும் எவரிடமும் அவர் தட்சனை கேட்டதே கிடையாது.

அன்பால் அடியவர்கள் அளிப்பதை ஏற்றுக் கொள்கின்றார்!!!!

உழைப்பையும் குருநாதரையும் நம்புகின்றவர் அவர் வேறு எதையும்  அவர் நம்புவதில்லை!!!!

பணத்திற்கு பின்னால் அவர் ஆசைப்பட்டு போவதுமில்லை !!!!

எந்தனுக்கு குருநாதர் இருக்கின்றார் அவர் பார்த்துக் கொள்வார் என்று குருநாதர் இட்ட கட்டளைகளையும் செய்து கொண்டு உழைத்துக் கொண்டு அவர் வாழ்ந்து வருகின்றார்.

அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் இந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று குருநாதர் வாக்குகளில் தந்தாலும் மைந்தன் செல்வதற்கு ஏதுவாக குருநாதரே வழிமுறைகளை நல்லடியவர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்து தருகின்றார்.

அதை விட்டுவிட்டு அவரை குறிப்பிட்ட பேருக்கு மட்டும் பணத்திற்காக வாக்குகள் படிக்கின்றார் என்று குற்றம் சாட்டுவது அவரை அல்ல குருநாதரை என்று எண்ணிக் கொள்ள வேண்டும்..

வீணாக சித்தர்களின் சினத்திற்கு ஆளாக வேண்டாம் அதனால் என்ன பேசுகின்றோம் என்ன செய்கின்றோம் என்ன நினைக்கின்றோம் என்பதை எல்லாம் சித்தர்கள் உணர்வார்கள் அதை உணர்ந்து செயல்படுவது மிக நல்லது அனைவருக்கும்.

பணத்தால் குருநாதரை அடைய முடியாது!!!! 

பக்தியாலும் அவர் சொல்லை கேட்பதாலும் அவர் காட்டும் வழியில் நடப்பதாலும் மட்டுமே அவரை அவர் வாக்குகளை நாம் அடைய முடியும்!!!! 

இதை முதலில் அனைவரும் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஏனோதானோ!!!! என வாக்குகள் கேட்பது!! படிப்பது !!அதை சரியாக உணராமல் செய்யாமல் 48 நாட்கள் கழிந்த உடனேயே தொடர்பு கொண்டு படி!!! படி!!! என்றால் என்றால்

அப்பனே!!!! இவந்தனுக்கு தற்போது வாக்குகள் இல்லை... யான் சொன்னதை செய்யவே இல்லை!!! அவந்தனை பொறுமை காக்க சொல் !!!!என்றும் மறுத்து விடுகின்றார்.

ஒரு சிலர் தெய்வமாகிய அகத்திய பெருமானை ஏதோ ஒரு ஜோதிடர் போல எண்ணிக் கொண்டு அவை வேண்டும் இவை வேண்டும் என்று பேராசையோடு கேள்விகள் கேட்கின்றார்கள்.

நீங்கள் கேள்விகள் கேட்பது சித்தர்களிடம் அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் !!!!

சித்தர்கள் முதலில் நம் கர்மாவை தான் அழிப்பார்கள்!!! நல்வழிப்படுத்துவார்கள்!!! இறைவழியே அழைத்துச் சென்று முக்தியையும் மோட்ச கதியையும் தருவார்கள்.

சித்தர் வழியில் வருபவர்களுக்கு பேராசை எதுவும் இருக்கக் கூடாது. மடாலயத்தின் அதிபதியாக வேண்டும் தலைமை பொறுப்பு எந்தனுக்கு வேண்டும், பதவி அதிகாரம் வேண்டும் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்னென்ன கேள்விகள் எப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் கேட்கின்றார்கள்.
இவர்கள் இப்படி கேள்விகள் கேட்பதால் சித்தர்களின் சினத்திற்கு ஆளாக நேரிடுகின்றது!!!

இது ஒரு புறம் என்றால் மறுபுறம் குருநாதர் கூறிய வாக்குகளின் தன்மையை புரியாமல் அவர் சொன்ன எதையுமே செய்யாமல் மீண்டும் மீண்டும் வந்து தொடர்பு கொண்டு தொந்தரவு செய்தால் என்ன தான் செய்வது

ஜீவனாடியை குறித்தும் அகத்தியரை குறித்தும் சரியான புரிதல் இல்லாமை தான் இதற்கு காரணம்.

ஒரு விஷயத்தை கூறி அதை செயல்படுத்த சொல்லிவிட்டு 48 நாள் கழித்து வாக்குகள் தருகின்றேன் என்று குருநாதர் கூறுகிறார் என்றால் அந்த 48 நாளும் நமக்கான சோதனை காலம்!!! நமக்கான பரிட்சை   என்று எண்ணிக் கொள்ள வேண்டும். அதை அப்படியே கடைப்பிடித்து நாம் வரவேண்டும் 

அந்த 48 நாளும் குருநாதர் வாக்கில் நமக்காக என்ன கூறியிருக்கின்றார் அதை அப்படியே கடைப்பிடித்து அவரையே நினைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தால் குருநாதரே யான் கூறியவற்றை சரிவர செய்து வருகின்றான் என்று நினைத்து வாக்குகள் மீண்டும் தருகின்றார். 

இதற்கு எத்தனையோ அனுபவ பதிவுகளை உதாரணமாக கூறலாம் நீங்கள் அனைவரும் உணர்ந்து கொண்டால் நல்லது.

அந்த சோதனை காலகட்டத்தில் அவருடைய பார்வை நம் மீது இருக்கும்!!!

 நம் பேச்சைக் கேட்கின்றானா? நம் வழியில் வருகின்றானா? என்பதை எல்லாம் கண்காணித்துக் கொண்டு இருப்பார் என்பதை மறந்து விடுகின்றார்கள் அடியவர்கள்.

இந்த விஷயம் எல்லாம் குருநாதரே கூறிய விஷயங்கள்.

அடுத்து அடியவர்கள் கேட்கும் கேள்விகள் அது ஒரு தனி ரகமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது மாந்திரீகம் குறித்தும் வசியங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கின்றார்கள்... தெய்வத்தின் பிரசாதத்தோடு ஏதோ ஒன்று கலப்பதை போல தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும் என்பதை எத்தனையோ வாக்குகளில் சித்தர்களும் குருநாத அகத்திய பெருமானும் வாக்குகளாக தந்து இருந்தாலும் அதையெல்லாம் மறந்து தகாத கேள்விகள் கேட்கின்றார்கள்.

இந்தப் பதிவு தங்கள் அனைவருக்கும் புரிந்துணர்வு பதிவு இதை உணர வேண்டியது நம் அனைவரின் கடமை.

உங்கள் அனைவருக்கும் ஒரு விஷயங்கள் கூற கடமைப்பட்டு இருக்கின்றோம்.

நாடி வாசிக்கும் திரு ஜானகிராமன் ஐயா குருநாதர் எந்தெந்த ஆலயங்களுக்கு செல்ல உத்தரவிடுகின்றாரோ !!!!அந்தந்த ஆலயங்களுக்கு நேரம் காலம் பார்க்காமல் ஊன் உறக்கம் இல்லாமல் எப்படி எப்படியோ பயணம் செய்து குருநாதர் சொன்ன வாக்கினை அப்படியே கேட்டு நடந்து வருகின்றார்.

யாருக்காக ??இத்தனை ஆலயம் சென்று வாக்குகள் படிக்கின்றார் அவருக்காக அல்ல!!! அடியவர்கள் நமக்காக !!நமக்காக!!! அவர் இத்தனை ஆலயங்களுக்கு ஓடோடி சென்று வாக்குகள் படித்து அதை தருகின்றார் என்றால் தனி நபர் வாக்கில் இந்த ஆலயத்திற்கு சென்று வா என்று கூறும் பொழுது செய்வதற்கு இதில் என்ன கஷ்டம்????

யாருடைய தவறு இது ???

குருநாதர் கூறியதை செய்வதற்கு தற்போது சூழ்நிலை சரியில்லை நேரம் காலங்கள் இல்லை!!! பிறகு பார்ப்போம் என்று தள்ளிபோட்டால்...... நமக்கான குரு உபதேசமும் தள்ளி போகின்றது என்பதை உணர்ந்து கொள்க!!!!!! 

மனிதர்களை நல்வழிப்படுத்தவே யாங்கள் சுவடியில் தோன்றி.....வாக்குகள் தருகின்றோம்...... ஆனால் மனிதனோ அதை முழுமையாக உணராமல் கடைபிடிக்காமல் மீண்டும் மீண்டும் என்னிடத்தில் வந்தால்.... யான் ஒதுக்கி வைத்து விடுவேன்..... என்றும் கூறிவிட்டார். 

தவறை நாம் செய்து விட்டு ஜானகிராமனை தொடர்பு கொண்டால் தொடர்பு கொள்ள முடியவில்லை மொபைல் சுவிட்ச் ஆப் வாக்குகள் இல்லை படிக்க மறுக்கின்றார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள்.

இதனால் மைந்தன் மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகின்றது!!!

தேடித்தேடி ஓடி ஓடி நாடி நாடி ஆலயங்களுக்கு சென்று சென்று வாக்குகள் படித்து படித்து  நமக்காக வாக்குகள் தந்து தெளிவினை தர பாடுபடுகின்றார்.

இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்!!!

ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகின்றோம் யாருக்கு? எப்பொழுது எந்த நேரத்தில் எந்த சூழ்நிலையில் வாக்குகள் தர வேண்டும் என்பதை குருநாதரே தீர்மானிக்கின்றார்!!!

வாக்குகள் நமக்கு கிடைப்பதற்கு புண்ணியமும் செய்து இருக்க வேண்டும்.

சமீபத்தில் கூட இரு நபர்களுக்கு வாக்குகள் கேட்பதற்காக தொடர்பு கொண்ட பொழுது

 """  அப்பனே சிறிதளவும் புண்ணியம் இல்லை அப்பனே!!!!! இயலாதவர்களுக்கு அன்னம் அளித்து புண்ணியம் சேர்த்துக் கொண்டு வா என்றும் மற்றொரு அடியவருக்கு  தொடர்ந்து ஒன்பது நாட்கள் கோமாதாக்களுக்கும் இயலாதவர்களுக்கும் உணவளித்துவா பின்பு வாக்குகள் தருகின்றேன் என்று கூறிவிட்டார்.

சமீபத்தில் ஒரு பெண்மணி குருநாதரிடம் வாக்குகள் கேட்பதற்காக தொடர்பு கொண்ட பொழுது.... சுவடியில் போகர் சித்தர் வந்து...

அப்பனே அப்பெண்மணியிடம் உரைத்து விடு!!!!

அவர்களுக்கு புண்ணியம் குறைவாக இருக்கின்றது!!! 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இல்லாதவர்களுக்கு அன்னத்தை படைத்து விட்டு எங்களை கேட்கச் சொல்!!!! யாங்கள்  வாக்குகள் தருகின்றோம்!!!! 

யாங்கள் சித்தர்கள் வருவதற்கும் நீங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்!!! நீங்கள் புண்ணியம் செய்து இருந்தால் தான் எங்களாலும் வந்து வாக்குகள் தர முடியும் உங்கள் கர்மத்தினையும் போக்க முடியும்....... நீங்கள் புண்ணியம் செய்திருக்காவிட்டால் நாங்கள் வந்து எப்படி வாக்குகள் தருவது???? என்று கூறி வாக்குகளை நிறுத்திவிட்டார்!!!!

வாக்குகள் இவருக்கு தர வேண்டும் அவருக்கு தர வேண்டும் என்பது திரு ஜானகிராமன் ஐயா கைகளில் இல்லை.

நமக்கு சித்தர்கள் வந்து வாக்கு தர வேண்டும் என்றால் நாம் நம்முடைய புண்ணியத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் அவர்களை நினைத்து விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தாலே!!!!!  சித்தர்களே  எப்படியாவது கால நேரத்தையும் மாற்றியமைத்து அதற்கான நேரம் ஏற்பாடுகளை செய்து அந்த நேரத்தில் போனில் தொடர்பு கொள்ளும் பொழுது வாக்குகள் பெறுமாறு மாற்றி அமைத்து வாக்குகளை தந்து விடுகின்றார்கள்.

இதை சம்பந்தப்பட்ட அடியவர்களே அனுபவமாக கூறியிருக்கின்றார்கள் !!!

ஒரு அடியவர் பலமுறை திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டு தொடர்பு கொண்டு கிடைக்கவே இல்லை கடைசியாக ஆலயத்திற்கு சென்று மனமுருக குருநாதரை வணங்கி கேட்டு அழுது புலம்பி சில சமயம் கோபப்பட்டு குருநாதரை உங்களுடைய வாக்கு எங்களுக்கு வேண்டும் என்று மன்றாடிய பிறகு எதேச்சையாக திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்ட பொழுது அந்த நேரத்தில் சுவடி வாசித்துக் கொண்டிருந்த ஜானகிராமன் ஐயா அடியவர்களுக்கு படித்து வாக்குகள் தந்த சம்பவங்களும் உண்டு.

அடுத்த புரிதல் இப்படியும் அடியவர்கள் யோசிக்கின்றார்களா என்பது வேதனையாகத்தான் இருக்கின்றது

சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் திரு ஜானகிராமன் ஐயா வாக்குகள் படிக்கின்றார் எங்களுக்கு படிப்பதில்லை ஏன் வேறொரு மார்க்கத்தை பின்பற்றும் அடியவர்களுக்கு கூட வாக்குகள் கிடைத்து விடுகின்றது எங்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் வேறு இருக்கின்றது.

ஒரு அடியவருக்கு தொடர்ந்து வாக்குகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது என்றால் குருநாதர் கூறியவற்றை அவர் அப்படியே செய்து கொண்டு வருகின்றார் என்று அர்த்தம் !!!

அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து வேற்று மார்க்கத்தை பின்பற்றும் ஒருவருக்கு வாக்குகள் தருகின்றார் என்றால் அவருடைய நம்பிக்கை!!! அவருடைய புண்ணியம்!!!!

இப்பிறவியில் அவர் இந்த மார்க்கத்தை பின்பற்றலாம் முற்பிறவியில் அவர் என்னென்ன செய்திருக்கின்றார்??? எத்தகையான பக்தி புண்ணிய காரியங்கள் செய்திருக்கிறான் என்பதை குருநாதர் தான் அறிவார்!!! அதன் அடிப்படையில் தான் அவருடைய புண்ணியம் பக்தி நம்பிக்கை இதன் அடிப்படையில் தான் அவர்களுக்கும் வாக்குகள் கிடைக்கின்றது இதையும் புரிந்து கொள்ள வேண்டும்!!!!

உங்கள் அனைவருக்கும் வாக்குகள் குருநாதருடைய உபதேசங்கள் வேண்டுமென்றால் அவர் கூறிய வழிமுறைகளை பின்பற்றுங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள் அனுதினமும் ஏதாவது ஒரு உயிரினத்திற்கு உணவளியுங்கள்!!! அவருடைய புகைப்படமோ சிலையோ அவரைப் பார்த்து உரையாடுங்கள் குருவே எந்தனுக்கும் உங்கள் உபதேசங்கள் வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்!!! 

நம் குருநாதர் அகத்திய பெருமான் மனமிரங்கி நல்வாக்குகள் தந்து நம் குறைகளை தீர்த்து வழிநடத்துவார் என்பது நிதர்சனமான உண்மை.

அடியவர்களே நம் குருநாதர் அகத்திய பெருமானின் அவதார திருநாள் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அம்மை லோபமுத்ரா   தாயாரின் நட்சத்திரம் சதயம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இத் தை மாதத்தில் லோபா முத்திரை தேவி சமேத அகத்திய பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில் எல்லாம் நம் குருநாதருக்கும்  லோபமுத்ரா தேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கும்.

அதில் குறிப்பாக ஆதிவராக நல்லூரில் அகத்தியர் திருக்கோயிலில் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் அன்னை லோப முத்ரா தேவிக்கும் தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருக்கல்யாண விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே உண்மையான திருமண நாள் நட்சத்திரம் என்பதை அறிந்து கொள்ள குருநாதர் அகத்தியர் பெருமானிடம் கேட்ட பொழுது

அப்பனே யான் ஏற்கனவே முன்பே உரைத்து விட்டேன் சித்தர்களுக்கு நாளும் கோளும் எதுவும் இல்லை!!! ராசி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பிறப்பு இறப்பு என எதுவும் இல்லை எங்களுக்கு..

என் பக்தர்கள் அன்போடு எதைச் செய்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

அன்போடு செய்யும் பொழுது யாங்கள் வந்து கலந்து நல் ஆசிகள் தந்து செல்வோம்!!!

எங்களுக்கு என்னாளும் நன்னாளே!!!!! 

இவ் நாள் இவ் நட்சத்திரம்  மட்டும் உகந்தது என்பது எங்களுக்கில்லை.... நீங்கள் அன்போடு குருபூசை செய்தாலும் திருக்கல்யாணம் செய்தாலும் அதை அன்பாக செய்யும் பொழுது ஏற்றுக்கொள்கின்றோம்.. அன்பு எவ்விடம் இருக்கின்றதோ அவ்விடத்திற்கு யாங்கள் வருவோம் அப்பனே என்று குருநாதர் வாக்குகள் உரைத்திருந்தார்.

அடியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கின்றோம் குருநாதருடைய வாக்குகளை சரி வர கடைபிடித்து அவர் பேரன்பிற்கும் ஆசீர்வாதத்திற்கும் தகுதி படைத்தவராக நாம் மாறிக்கொள்ள வேண்டும்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. ஓம் அகத்தீசாய நம,
    குருபாதம் சரணம்,
    மிகச் சரியான விளக்க உரை நன்றி ஐயா🙏🌹🙏🌷🌷🌷🌹.

    ReplyDelete
  2. ஐயா சரியான விளக்கம்
    மரியாதைக்குறிய ஜானகிராமன் ஐயா அவர்களை குறை கூறுவது தவறு நான்பல முறை முயன்று இரு முறை வாக்குகள் கேட்டு இருக்கிறேன் எனக்கு வாக்குகள் கிடைத்தது மகிழ்ச்சி அதன் பிறகு தொடர்ந்து ஐந்து மாத காலமாக முயற்சி செய்கிறேன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதற்காக ஐயாவை குறை கூறுவது மிக தவறு . நமக்கான வாக்குகள் கிடைக்க வில்லை என்று எண்னி நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். வாக்குகளில் சொன்ன பரிகாரங்களை நான் செய்தேன் தொடர்ந்து செய்து வந்தேன் ஆலயங்களுக்கு செல்ல உத்தரவு என்னால் சூழ் நிலை காரனமாக செல்ல முடியவில்லை. விரைவில் சென்று வந்து விடுவேன், நான் இரு முறை வாக்குகள் பெற்ற போதும் என்னிடம் ஜானகிராமன் ஐயா ஒரு ரூபாய் கூட பணம் வாங்கவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
  3. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Agastheeswaraya Namaha 🙏🙏🙏

    ReplyDelete