​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 28 September 2022

சித்தன் அருள் - 1189 - அகத்தியர் உத்தரவு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீப காலமாக பெரியவர்களும் குழந்தைகளும், ஒரு புதுவித வைரஸினால் பாதிக்கப்பட்டு மிகுந்த ஸ்ரமத்துக்குள்ளாகி வருவதை நாம் அனைவரும் காண்கிறோம். முதலில் ஜூரமும், உடல் வேதனையும் வந்து போகும். பின்னர் தொடர்ந்து பல நாட்களுக்கு, மார்புச்சளியும், வரண்ட இருமலும் தொடர்ந்து இருக்கும். ஒரு சிலருக்கு மட்டும் மருந்துகளுக்கு கட்டுப்படும்.

அகத்தியப்பெருமானிடம் இதென்ன புது விளையாட்டு? இந்த தொடர் கிருமி பாதிப்பிலிருந்து விமோசனம் இல்லையா? என கேட்ட பொழுது,  "தான தர்மங்களின் நிலை சற்று மேலும் உயர வேண்டியுள்ளது. இருப்பினும், இந்த நோய், நொடி மனிதன் அனுபவித்து தீர்க்க வேண்டியுள்ளது. வாக்கு சுத்தமும், மன சுத்தமும் கடைப்பிடித்து, மேலும் அனைத்து ஜீவன்களுக்கும் உணவளித்து, பச்சை கற்பூரம் எம் சன்னதியில் தீபாராதனைக்கும், இரவு சன்னதி நடை சார்ந்தும் பொழுது உள்ளே பொடித்து சுற்றி தூவி விட, நிறையவே நலம் உண்டாகும்" என்றார்.

இதற்கு முன் அபிஷேகத்துக்கு நல்லெண்ணையும், பூஜைக்கு கொழுந்தும் வேண்டும் என குருநாதர் கேட்க, பல அடியவர்களும் அகத்தியர் கோவிலில்  வாங்கி கொடுத்த பொழுது, நிறைய நல்லது நடந்துள்ளது.

இம்முறையும், அடியவர்கள், அகத்தியப்பெருமானின் உத்தரவை சிரம் மேற்கொண்டு, தங்களால் இயன்ற வரை பச்சை கற்பூர வேண்டுதலை நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவில், பாலராமபுரத்தில் செய்ய விரும்புபவர்கள், சித்தன் அருள் வலை தளத்தில் கூறியுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

3 comments:

  1. என் அன்பான அகத்தியம் பெருமானுக்கு அடியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல பல பல... தங்களை வணங்கி வரும் நல் ஆத்மாக்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கவேண்டி வணங்குகிறேன்... வேண்டுதலும் கூட. ஓம் அகத்தீசாய நம...

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. அகத்தியர் கருணை! 🙏

    ReplyDelete