​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 7 September 2022

சித்தன் அருள் - 1179 - அகத்தியப்பெருமானின் உத்தரவு!


வணக்கம் அகத்தியர் அவர்களே

"வரும் புரட்டாசி மாத மஹாளய அமாவாசைக்கு ஒன்பது நாள் முன்பிருந்து இயலாதவர்களுக்கு அன்னமிட்டு, தான தர்மங்கள் செய்து அமாவாசை தினத்தன்று முன்னோர்களையும் குலதெய்வத்தையும் வணங்கி அன்றைய தினமும் இயலாதவர்களுக்கும் ஏழை எளியோர்களுக்கும் அன்னதானமும் கோமாதாவிற்கும் உணவும் இனிப்புகளையும் பரிமாறி தர்மங்கள் செய்திடல் வேண்டும்" என்று அகத்தியபெருமான் உரைத்திருக்கின்றார்

இதை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு குருநாதர் அகத்தியபெருமான் "அப்பனே! நீங்கள் அனைவரும் கடைநாள் வரையிலும் இப்படி செய்து தர்மங்களை கடைபிடித்து வந்தாலே பெரும் புண்ணியமப்பா! கர்மாக்களை அழித்து விட முடியும் அப்பனே!" என தெரிவித்துள்ளார்.

இதை அடியவர்கள் அனைவரும் நல்முறையாய் கடைபிடித்து குருவருளும் இறையருளும் பெறுவோம் .

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............ தொடரும்!

5 comments:

  1. எந்த நாளிலிருந்து தொடங்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. மஹாளய அமாவாசைக்கு ஒன்பது நாள் முன்பிருந்து (16/09/2022)

      Delete
  2. ஏழை எளியோர்களுக்கு வைக்க இயலவில்லை யென்றால் பைரவர் மற்றும் பறவைகளுக்கு வைக்கலாமா

    ReplyDelete
    Replies
    1. பசிக்கு புசிக்கும் எந்த ஜீவனுக்கும் உணவிடலாம். எல்லா நாட்களும் ஆவினங்களுக்கு அகத்திக்கீரை கொடுப்பது உத்தமம்! கொடுப்பதை மனம் ஆற கொடுங்கள்.

      Delete
  3. எம்பெருமானே அகத்தீசா... இவ்வாரம் இவனுடன் உரையாடுவதை ஏன் விட்டீர் ?!?!?!?!?! தாயும் தகப்பனும் நீர்தானே அய்யா?!?!?! நம்பினேன் அய்யனே - நட்டாற்றில் என் கைகள் நழுவிடாது அருள் புரியவும் என்றேனே - அய்யனே.... அய்யனே... அய்யனே... இதைத்தவிர வேறொன்றும் அறியேன் - அறியேனே... அய்யனே...

    ReplyDelete