வணக்கம் அகத்தியர் அவர்களே
"வரும் புரட்டாசி மாத மஹாளய அமாவாசைக்கு ஒன்பது நாள் முன்பிருந்து இயலாதவர்களுக்கு அன்னமிட்டு, தான தர்மங்கள் செய்து அமாவாசை தினத்தன்று முன்னோர்களையும் குலதெய்வத்தையும் வணங்கி அன்றைய தினமும் இயலாதவர்களுக்கும் ஏழை எளியோர்களுக்கும் அன்னதானமும் கோமாதாவிற்கும் உணவும் இனிப்புகளையும் பரிமாறி தர்மங்கள் செய்திடல் வேண்டும்" என்று அகத்தியபெருமான் உரைத்திருக்கின்றார்
இதை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு குருநாதர் அகத்தியபெருமான் "அப்பனே! நீங்கள் அனைவரும் கடைநாள் வரையிலும் இப்படி செய்து தர்மங்களை கடைபிடித்து வந்தாலே பெரும் புண்ணியமப்பா! கர்மாக்களை அழித்து விட முடியும் அப்பனே!" என தெரிவித்துள்ளார்.
இதை அடியவர்கள் அனைவரும் நல்முறையாய் கடைபிடித்து குருவருளும் இறையருளும் பெறுவோம் .
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............ தொடரும்!
எந்த நாளிலிருந்து தொடங்க வேண்டும்
ReplyDeleteமஹாளய அமாவாசைக்கு ஒன்பது நாள் முன்பிருந்து (16/09/2022)
Deleteஏழை எளியோர்களுக்கு வைக்க இயலவில்லை யென்றால் பைரவர் மற்றும் பறவைகளுக்கு வைக்கலாமா
ReplyDeleteபசிக்கு புசிக்கும் எந்த ஜீவனுக்கும் உணவிடலாம். எல்லா நாட்களும் ஆவினங்களுக்கு அகத்திக்கீரை கொடுப்பது உத்தமம்! கொடுப்பதை மனம் ஆற கொடுங்கள்.
Deleteஎம்பெருமானே அகத்தீசா... இவ்வாரம் இவனுடன் உரையாடுவதை ஏன் விட்டீர் ?!?!?!?!?! தாயும் தகப்பனும் நீர்தானே அய்யா?!?!?! நம்பினேன் அய்யனே - நட்டாற்றில் என் கைகள் நழுவிடாது அருள் புரியவும் என்றேனே - அய்யனே.... அய்யனே... அய்யனே... இதைத்தவிர வேறொன்றும் அறியேன் - அறியேனே... அய்யனே...
ReplyDelete