​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 14 September 2022

சித்தன் அருள் - 1184 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ கபாலேஷ்வரர் மகாதேவ் மந்திர்!




10/9/2022 அன்று சிவவாக்கியர் உரைத்த ஆலய பொதுவாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் 

ஸ்ரீ கபாலேஷ்வரர் மகாதேவ் மந்திர் 
பஞ்சவடி நாசிக். 
மகாராஷ்டிரா. 

நெஞ்சில் அழகாக குடியிருக்கும் என் அப்பனை பணிந்து வாக்குகளாக பரப்புகின்றேன் வாக்கியனவன்!!!!

எதனையும் என்றும் கூட மறுப்பதற்கு ஒன்றுமில்லை. இன்னும் ஏராளமான செய்திகள் சித்தர்கள் நிச்சயம் மனிதர்களுக்கு உரைத்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

ஆனாலும் மனிதனின் நிலைமையோ பின் தன்மையற்றது.

மூலாதாரம் எதிலிருந்து வருபவை என்பதை கூட அறியாதது.

இதனால் நிச்சயம் மனிதனுக்கு மயக்கத்திலே போகும்.... காலம் விரைந்து ஓடோடி வருகின்றது இதனால் இறைவனின் நினைப்புக்கள் சற்று குறைவாகவே ஓடும்.

இதனை எதை என்று விரிவாக்கம் இன்னும் ஏராளமான செய்திகள் சித்தர்கள் உரைப்பார்கள்.

நல்லோர்களை சேரும் பொழுது இன்னும் ஞான பாதையை கடைப்பிடித்து கடைபிடித்து மோட்சத்தை அடைய நிச்சயம் கதி சித்தர்கள் எதை என்று உணராமலே வருவார்கள் நல்லோர்களை தேடி தேடி வரும் காலங்களில்.

இதை உணர்ந்து நன்கு பயன்படுத்திக் கொண்டாலே மாற்றங்கள் நிகழும் என்பது உண்மை.

சித்தர்கள் எவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து மக்களுக்கு நல்வாக்கு பலப்பல யுகங்களாக பின் தெரியப்படுத்தி தான் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் மனிதனின் தன்மை யான் எவை எவற்றில் இருந்து வந்தவை என்று கூட தெரியாமல் அலைந்து திரிந்து மீண்டும் மீண்டும் பிறப்புக்களாக எடுத்து எடுத்து அவதிப்பட்டு அவதிப்பட்டு கொண்டுதான் இருக்கின்றான். 

ஆனாலும் இதற்கு அர்த்தங்கள் ஒன்றும் இல்லை. ஆனால் மனிதனின் தன்மைகள் பின் பிறப்புகள் எடுத்து எடுத்து எந்த ஒரு லாபமும் இல்லை.

இதனால் கஷ்டங்கள் தான் பின் சுமந்து வருகின்றான் மனிதன்.

அதாவது பாவக்கணக்கை சுமந்து கொண்டே இருக்கின்றான். பின் பிறவிகள் எடுத்து எடுத்து!!!

ஆனாலும் இதை தடுப்பதற்கான பல வழிகள் சித்தர்கள் யாங்கள் சொல்லிக் கொண்டே தான் வருகின்றோம்.

ஆனாலும் நிச்சயம் அதை மனிதர்கள் ஏற்பதாகவே தெரியவில்லை ஏனென்றால் வரும் காலங்களில் கலியுகம் எவை என்றும் எவற்றிலிருந்தும் மேன்மைகளை தருவதை என்பதை கூட நிச்சயம் பின் பல திருத்தலங்களையும் கூட சித்தர்கள் நிச்சயம் செப்புவார்கள்.

அதனால் நிச்சயம் ஆனாலும் எதனை நோக்கி கொண்டிருக்கின்றது என்பதால் அழிவை நோக்கியே கொண்டிருக்கின்றது.. அதனால் மனிதன் என்னவோ யாம் வாழ்கின்றோம் !!யாம் வாழ்கின்றோம்!! என்றெல்லாம் நினைப்பாகவே கொண்டிருக்கின்றான்.

ஆனால் மனிதனின் பல பல புதிய புதிய கண்டுபிடிப்புகள் ஆனால் அதன் மூலமே அழிவு என்பது தெரியாமல் போய் கொண்டிருக்கின்றான் மனிதன். ஆனால் கலியுகத்தில் மனிதனால் மனிதனுக்கு அழிவு என்பதை கூட நிச்சயம் தெளிவு.

ஆனாலும் இவற்றின் உண்மைகளையும் புரிந்து புரிந்து பக்திகளில் அதாவது ஞான பாதையில் சென்று சென்று இறைவனை காணலாம்.

ஆனால் ஞான பாதைகளில் கூட நிச்சயம் சென்று விடாமல் தவித்து விடுகின்றார்கள் மனிதர்கள்.

எதற்கு எவை என்று எதன் மூலம் வந்தவை என்பதையெல்லாம் நிச்சயம் வரும் வரும் காலங்களில் மனிதனுக்கு நிச்சயம் தெரிவதில்லை.

இதனால் வந்தோம் சென்றோம் எதை என்று உணர்வதற்கு கூட அர்த்தங்கள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றான் மனிதன்.

என்ன ஒரு லாபம்????

லாபங்கள் இல்லை!!!!

லாபங்கள் இன்னும் ஏராளமாக கைக்கூடுவதற்கு நிச்சயம் பல திருத்தலங்களை நாட வேண்டும்!!!

ஏன்? யாங்கள் சித்தர்கள் ஊர் ஊராக சென்று எவற்றில் இருந்து கூட எங்கெல்லாம் எதனை அமைக்கலாம்!!! என்றெல்லாம்!! பாடுபட்டு பாடுபட்டு அமைத்து விட்டோம் பல திருத்தலங்களை.

ஆனால் மனிதனின் எண்ணமோ பல மாய வலைகளில் சிக்கி சிக்கி ஏனென்றால் மனிதன் இக்கலியுகத்தில் மாய வலையில் கூட சிக்கித் தவித்து மாயையை நோக்கி தான் சென்றுகொண்டிருகின்றானே தவிர இறைவனை நோக்கி சென்றடையவில்லை.

ஆனால் இறைவனை நோக்கி படையெடுத்து படை எடுத்து வந்தாலே நிச்சயம் மேன்மைகள் எங்கோ.

பின் அதாவது இறைவனே அழைத்துச் செல்வான் என்பது உண்மை.

கலியுகத்தில் இறைவனுக்கு ஏதும் தேவையில்லை ஏதும் தேவையில்லை என்றெல்லாம் பல சித்தர்கள் குறிப்பிட்டுக் கொண்டுதான் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

அன்பு எதனை எவற்றில் இருந்து வைப்பது என்பதை கூட மனிதனுக்கு தெரியாமல்......

ஆனாலும் ஒரு விளக்கத்தை யான் நிச்சயமாய் இங்கு கூற வேண்டும்!!!!

கூறுகின்றேன்!!!!!

ஆனாலும் பின் ஈசன் இருக்கும் இமய மலை என்று கூட தற்பொழுது நிலைமையில் ஆனாலும் அங்கே ஓர் இமயவர்மன் ஆனால் சிறு வயதிலேயே ஆனாலும் இவந்தனுக்கு பக்திகள் அதிகம்.

ஈசனை காண வேண்டும் ஈசனை காண வேண்டும் என்றெல்லாம்!!!

ஆனாலும் இவந்தனுக்கோ பின் ஈசன் எவற்றில் இருந்து கூட ஆனாலும் ஈசன் கண்கூடாக பார்த்து விட்டான்.

ஆனாலும் இச்சிறு வயதில் என்னை காண வேண்டுமே!!! என்னை காண வேண்டுமே !!!என்ற எண்ணம் தவிர வேறு ஒன்றும்  வேறு ஏதும் இல்லை இவந்தனுக்கு!!!

நிச்சயமாய் தெரிந்து விட்டது ஈசனுக்கும் கூட.

ஆனாலும் இவ் பக்தனோ எவற்றில் இருந்து கூட நிச்சயம் இப்பிறப்பு ஈசனை நோக்கி தான் தவங்கள் தவங்கள் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் பின் அங்கேயே பல வழிகளில் கூட அதாவது ஏதோ உண்ணுவது ஏதோ உறங்குவது இறைவனை நிச்சயம் கண்டுவிடலாம் என்று கூட பல பல குகைகளிலும் கூட வாழ்ந்தான்.

பல பல வகையிலும் கூட மலைகள் மீது ஏறி ஏறி ஆனால் எதையும் பார்க்காமல் ஈசனை மட்டும் பார்க்க வேண்டும் என்று குறியாக இருக்கின்றான்.

ஆனாலும் இவற்றைத் தவிர்த்து எவை வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் நிலைமையா என்ன!!! எதற்கும் ஈசன் தயாராகி ஆனாலும் இவந்தனை சோதிக்க வேண்டும் என்று எண்ணி ஆனாலும் பின் ஈசனே மாறுவேடத்தில் நிச்சயம் வந்து யாரப்பா நீ? எதனை? எவற்றில் இருந்து .......
நீயும் இங்கு தான் அலைந்து கொண்டிருக்கின்றாய்!!!!    பல காலங்களாக கூட !

உன்னை சிறுவயதாக இருக்கின்ற பொழுதிலிருந்து கூட யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் நீ யார் ? என்று ஈசன் மாறுவேடத்தில் வந்து கேட்டான்.

ஆனால் அவ் பக்தனோ!!! 

யான் யாரோ!!!!! ஆனால் ஒன்றை மட்டும் சொல்வேன் யான் ஈசனுடைய குழந்தை என்று  மட்டும் தான் என்று சொல்வேன்.

அதனால் நீ யார்?? என்று கேட்க!!.....

பின் நீயே இப்படியாவது உரைக்கும் பொழுது யானும் பின் ஈசனின் குழந்தையே என்று....

 ஆனாலும் வந்தவன் ஈசன் தான் என்று நிச்சயம் புரிந்து கொள்ளவில்லை!!!!
ஆனால் சிறுவன்!!

 ஆனால் ஈசனோ ஏதாவது இவந்தனுக்கு உதவி புரியலாம் என்று கேட்க ஆனாலும் பின் ஈசனோ... 

பின் பக்தனே சிறுவனே உந்தனுக்கு என்ன தான் வேண்டும்????

இச்சிறு வயதிலேயே ஈசனிடத்தில் பக்திகள் மிகுந்து மிகுந்து காணப்படுகின்றாய்!!! ஆனாலும் எது தேவை என்று நீ கேள்!!!! என்று!!! 

ஆனாலும் அச் சிறுவனோ யான் தெரியாமலே இப்பிறப்பில் வந்து விட்டேன் ஆனால் நிச்சயம் என் ஈசனை அதாவது என் தகப்பனை யான் நிச்சயம் தரிசிக்க வேண்டும். இதுதான் என்னுடைய லட்சியம்!!!!

மீண்டும் பின் மாறுவேடத்தில் இருந்த ஈசன் எதையென்று உற்று நோக்க!!!!

உந்தனுக்கு என்ன தான் தேவை???? ஈசனை தரிசித்து விடலாம் எளிதில் கூட!!!!

ஆனாலும் நிச்சயமாய் இள வயதில் உந்தனுக்கு என்னென்ன தேவையோ??? அவையெல்லாம் கேள்!!!!

அச் சிறுவனும் எதை என்று எவற்றையென்று ஈசனை சாதாரணமாக தரிசித்து விடலாமா!!!! பின் எவற்றில் இருந்து என் அப்பனை அதனால் நீ யார் ???
நிச்சயம் என் ஈசனை சாதாரணமாக தரிசிக்க முடியாது!!!! 

ஏனென்றால் யான் உணர்ந்தேன்!!!!! சிறுவயதிலிருந்தே எதை எவற்றில் இருந்து கூட எதனை என்றும் பின்பற்றுவதற்கு அல்லாமல் மீண்டும் மீண்டும் எதனை என்றும் கூட தெரிவிக்காமல் உணர்ந்தேன் உணர்ந்தேன்.

ஆனாலும் நிச்சயம் ஈசனை நிச்சயம் பின் காணவே முடியாது !!

ஆனாலும்!!!! பின் ஈசனோ!!!  நகைத்தான்!!!!! 

எதற்காக என்று கூட அச்சிறுவன் எதற்கு நகைத்தீர்கள்???

ஆனாலும் அப்பனே இதை எவற்றில் இருந்து கூட... உன் விளையாட்டை எல்லாம் யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் மீண்டும் விளையாடு.

ஆனால் சிறுவனோ!!!! யான் விளையாடுகின்றேனா!!!! ?????? யாம் சிறு வயதிலே இருக்கின்றேன் என்று சிறுவனாக எண்ணி விட்டாயா நீ!!!!!???????!

இல்லை!!!!! எந்தனுக்கும் பல வழிகளிலும் கூட சிறு வயதிலேயே காடுகள் மேடுகள் கல்லாமை பசி பட்டினி இவையெல்லாம் ஈசனுக்கே எவை என்று கூற நினைப்போடு தான் இருக்கின்றேன்.

என் ஈசனை பின் அவ்வளவு நிச்சயமாய் அதிவிரைவிலே காண முடியாது.

 ஆனாலும் பின் ஈசனோ!!! மனதிலே நினைத்தான்!!!
அருகிலே இருக்கும் இவந்தனும் துன்பப்படுகின்றான்....

ஆனாலும் நம் தன் ஏதாவது இவந்தனுக்கு யாம் தான் என்று காட்டி விடுவோமா!!!!
இல்லை இன்னும் சோதனைகள் கொடுப்போமா!??? என்று!!!

 ஆனாலும் மீண்டும் அப்பனே இச்சிறு வயதில் நீ எவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு இருக்கின்றாய் என்பதை கூட யானும் இங்கே சுற்றி சுற்றி தெரிந்து கொண்டே இருக்கும் பொழுது உன்னை பார்த்திட்டேன்...

ஆனாலும் உன் போல் இருக்கும் சிறுவர்கள் எதை எதையோ நம்பி நம்பி நம்பி செல்கின்றார்கள் மாய வலைகளில் எல்லாம் சிக்கி தவித்து விடுகின்றார்கள்.
அவை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் தான் கேட்கின்றார்கள்.

ஆனாலும் யான் பல தடவை உன்னை கேட்டு விட்டேன்!!!

உந்தனுக்கு என்ன தான் தேவை?? என்று கூட.... ஆனாலும் நீயும் ஈசனை தான் காண வேண்டும் என்று கூட அடம் பிடிக்கின்றாயே!!! என்று!!!!

ஆனாலும் நிச்சயம் எந்தனுக்கே எவை என்று ஆனாலும் என் தகப்பன் பின் அதாவது ஈசனை நிச்சயம் யான் கண்டுகொண்டால் சிறு வயதிலே எந்தனுக்கு என்னென்ன தேவையோ அவனிடத்திலே நேரடியாகவே கேட்கின்றேன் என்று அச்சிறுவனும் கூற... 

ஆனாலும் ஈசன் என்னதான் செய்வது என்று கூட..... சரி பார்ப்போம்!!! என்னதான் செய்கின்றான் என்று கூட சில நேரத்திற்கு அவனிடத்திலே இருந்தான்.

ஆனாலும் என்னவென்று புரியாத வார்த்தைகள் ஆனாலும் பின் இரவும் பகலுமாக ஈசனே !!சங்கரனே!! சங்கரனே!! என்றெல்லாம்!! என்றெல்லாம்!! அழைத்துக் கொண்டிருந்தான். ஈசனே!!! என்றெல்லாம்!!!!

ஆனால் ஈசனும் தான் அருகில் தான் இருக்கின்றான் ஆனால் மௌனத்தை சாதித்துக் கொண்டிருக்கின்றான்.

இதை உணர்ந்து உணர்ந்து நிச்சயம் என் ஈசன் வருவான்!! என் ஈசன் வருவான்!! என்றெல்லாம் தூங்குவதுமில்லை.

எதை எவற்றை அறிந்து அறிந்து உண்ணாமல் ஆனாலும் நிச்சயம் ஈசனுக்கு பின் எவை என்று வேதனையாக......

ஆனாலும் பின் மீண்டும் கேட்டான்!!!

அப்பனே சிறு பிள்ளையே இப்படி ஈசனையே அழைத்துக் கொண்டிருக்கின்றாயே ஈசன் என்ன வருவானா??? என்று.... எந்தனுக்கு நம்பிக்கையே போய்விட்டது என்று!!!!!

ஆனாலும் அச்சிறுவன் கோபப்பட்டான் பெரியவரே இதை அன்றி கூட என் வயதை விட நீ மூத்தோனாக இருக்கலாம்.... அதனால்தான் உந்தனுக்கு கூட இவ்வளவு நேரங்கள் மரியாதை..

ஆனாலும் என் ஈசனை பற்றி நீ குறை சொல்வதற்கு ஒன்றும் பின் எதை எவற்றிலிருந்து கூட குறை சொல்வதை தவிர்த்து விட வேண்டும்.

ஆனால் நிச்சயம் எவை இன்னும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் உன்னை விட்டு நான் போய் விடுவேன் என்று கூட!!!!

ஆனால் ஈசனோ நகைத்தான்!!!!..... யார்? யாரை!!! விட்டு செல்வது என்று!!! தெரியாமல் இச்சிறுவன் விளையாடி கொண்டிருக்கின்றான் என்று கூட.

ஆனாலும் பின் ஈசனோ!!! அச்சிறுவனிடம் சரி!!! உன் ஈசனையே தேடுகின்றாய்!!!!  யான் புறப்படட்டுமா?? என்று!!....

ஆனாலும் சிறுவனோ எங்கு செல்கின்றீர்கள்???

ஆனால் நீங்களும் எங்களிடத்திலே அதாவது என்னிடத்திலே பல பல பல பல மாதங்களாகவே நின்றீர்கள் ஆனாலும் ஈசன் மீது உங்களுக்கு நம்பிக்கையே இல்லை!!!! 

அதனால் யார் அதிக அளவு ஈசன் மீது பற்று கொண்டிருக்கின்றோம்!!! என் ஈசனை யான் பார்ப்பேன் அதோடு உன்னையும் கூட அதாவது உந்தனுக்கு கூட என் ஈசனை காண்பிக்கின்றேன் அதனால் நீ அமைதியாக இரு!!!!

பின் ஆனால் வந்திருப்பது ஈசன் என்று உணரவில்லை!!!!

ஆனால் மீண்டும் மீண்டும் ஆனாலும் சரி இச் சிறுவன் என்னதான் செய்கின்றான் என்று எண்ணி!!!!!!

ஆனாலும் ஈசனோ!!! சரி நிச்சயம் நீ சொல்லும் படியே யான் நடந்து கொள்கின்றேன்... நிச்சயம் ஈசனை காண்பிக்க வேண்டும் !!

நிச்சயம் ஈசன் வருவான் என் ஈசன் வருவான் அனைத்தும் தருவான் என்று!!!!

ஆனாலும் மறைமுகமாக உணர்ந்தவையே ஈசன் அருகிலே இருக்கின்றான்.

ஆனாலும் இவையன்றி கூட மீண்டும் மீண்டும் பின் அலைந்தான் திரிந்தான்!!!
திரிந்து கொண்டே இருந்தான்.... ஆனாலும் எவற்றின் தன்மைகளை என்று புரியாது ஆனாலும் வயது ஆகி ஆகி சென்று கொண்டே இருந்தது!!!

ஆனாலும் ஈசன் பல வழிகளிலும் கூட இவந்தனுக்கு இவ்வளவு நம்பிக்கையாக அன்பானவை எதை என்று உற்றுநோக்கி!!!!

 உற்று நோக்கி!!! நம்தனையே நினைத்து செய்து கொண்டிருக்கின்றானே என்று எண்ணி ஈசன் பல வகையிலும் கூட இவந்தனுக்கு உதவிகள் செய்தான்!!!!

அப்பனே!! பிள்ளையே!!! ஆனால் நிச்சயம் ஈசன் உந்தனிடம் வருவான்!!! 
அனைத்தும் செய்வான் அதனால் நிச்சயம் இங்கேயே தங்கி விடுகின்றாயா!?? என்று கேட்க!!.....

நிச்சயம் தங்கி விடுகின்றேன் உந்தனுக்கு விருப்பம் இருந்தாலும் நீயும் இங்கேயே தங்கி விடலாம் என்று எண்ணி..... ஆனாலும் இதை நோக்க நோக்க பின் தன்மைகளை உணர உணர ஆனாலும் சரி என்று கூட..

ஆனால் அங்கேயே ஒரு கூடாரம் அமைத்து எவை என்று பின் அங்கேயே சமைப்பது !!உண்பது!! ஈசா !!ஈசா !!என்று காண்பது காண்பது என்பது.

ஆனாலும் ஈசனும் பல சேவைகளையும் இச்சிறுவனுக்கு செய்தான் ஆனால் ஈசன் என்னவென்று கூட இங்கே பிரதானமானது அன்பு மட்டுமே!!!!!

இதனால் எதற்காக சொல்ல வந்தேனென்றால்.... அன்பு அன்பு மட்டுமே நீடிக்கும்!!!

இவ் அன்பை எவ்வளவு எவ்வளவு இறைவன் மீது நீங்கள் செலுத்துகின்றீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு இறைவன் நிச்சயம் அதாவது உந்தனுக்கு சேவைகள் செய்வான் இதுதான் உண்மை!!!

இதை நிச்சயம் நீங்கள் செய்து பாருங்கள் எதை எவற்றில் இருந்தும் கூட அன்பை வெளிப்படுத்துங்கள் நிச்சயம் இறைவன் அதாவது சேவைக்காகவே பின் தயாராகிக் கொண்டிருக்கின்றான்!!!

மனிதர்களே எதை என்று கூட இறைவன் மனிதர்களுக்கு அனைத்தும் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றான்.

அதனை பெறும் குணம் மனிதனுக்கு இல்லையே என்பதுதான் வருத்தம்!!!

ஆனால் எதை பெறுகின்றான் என்றால் கர்மா!!! கர்மாவை தான் பெற்று பெற்று மீண்டும் மீண்டும் சேர்த்து சேர்த்து மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து வருகின்றான்.

ஆனாலும் இத்தன்மையை உணர்ந்து அச்சிறுவனும் பின் பின்பு ஆனாலும்!!!

ஈசன் மனதில் நினைத்தான் நிச்சயம் யாம் காட்சிகள் கொடுத்தாலும் இவந்தனுக்கு எதை என்று உணராமலே... இதனால் இப்படியே இருக்கட்டும் என்று உணர்ந்து உணர்ந்து இறைவனே எதை என்று கூட ஈசனே இவந்தனுக்கு செய்த சேவைகள் பல!!!

வயதாகிக் கொண்டே போய்க்கொண்டிருந்தது ஆனாலும் ஈசனை காணவில்லையே!!!! என்று ஏக்கத்தோடு ஆனாலும் இவற்றின் தன்மைகளைக் கூட எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!ஆனாலும் எதை என்று ஆனாலும் இவந்தன் மடியும் காலம் வந்து விட்டது!!! என்பதைக்கூட ஈசனுக்கு சரியாகப் புரிந்து விட்டது ஆனாலும் எதை என்றுபின் எவை என்று ஆனாலும் யாம் தன் இவந்தனுக்கு காட்சிகள் அளித்து விட்டாலும் ஆனாலும் இதையன்றி இவந்தனும் சந்தோஷத்தில் மிதப்பான் என்று உணர்ந்து!!! எதை எவை என்று கூட....

ஆனாலும் இறைவனே இவந்தனுக்கு சேவைகள் செய்து பல வழிகளிலும் கூட ஆனாலும் ஓர் பிறவியில் எதை என்று உணராமலே அதாவது எதை என்று தெரியாமலே இவந்தனும் மாண்டு போனான்!!!! 

மாண்டு போனான்!!! எதை எவற்றிலிருந்து கூட பிரம்மாவிடம் சென்றது இவன் ஆன்மா!!!

ஆனாலும் எதனை நிமித்தம் நிமித்தம் காட்டி காட்டி எதை என்று உணர உணர ஆனாலும் அவ் ஆன்மா பிரம்மனிடம் எதை என்று ஆனால் பிரம்மனே!!! கேட்டான்..... எதை என்று உணர ஆனாலும் உன் நிலைமை தான் உணர என்ன எவை அறிந்து கூட உந்தனுக்கு முற்றுப்பெற்றது பிறவி!!!
பல கஷ்டங்கள் பட்டுப்பட்டு ஈசனையே நினைத்துக் கொண்டிருந்தாய்.

அதனால் இப்பிறவியிலே எதை என்று எவற்றினின்று கூட பின் கடை பிறப்பாக போய்விட்டது.... ஆனால் புண்ணியம் செய்த ஆன்மாக்கள் மீண்டும் பிறக்க வேண்டுமா??? என்று எண்ணி எதை என்று உணர்த்துவதற்கு!!!!

ஆனாலும் பின்  அவ் ஆன்மா சண்டையிட்டது பிரம்மா!!!! எதையென்று உணர....  யான் ஈசனையே நினைத்துக் கொண்டிருந்தேன் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று!!!!

ஆனாலும் ஈசன் எந்தனுக்கு நிச்சயமாய் தரிசனமே காண்பிக்கவில்லை!!!

ஆனாலும் பிரம்மனும் உணர்ந்து விட்டான்!!!

தரிசனமா???? காண்பிக்கவில்லை!!!!!?

எதை என்று உணர்ந்து பின் மனதிலே நினைத்துக் கொண்டான்!!!

ஈசனே உந்தனுக்கு சேவைகள் செய்தான்!!!!

ஆனால் அதனால் தான் எதை என்று உணர்ந்து பின் மனதில் நினைத்துக் கொண்டு பின் எதை என்று கூட எவற்றில் இருந்து தன்மைகளை..... மீண்டும் உந்தனுக்கு பிறப்புக்கள் எடுக்க வேண்டுமா??? பல கஷ்டங்களை பட்டுப்பட்டு ஈசனையே நினைத்துக் கொண்டிருக்கையில் ஈசன் உந்தனுக்கு வரங்களும் கொடுக்கவில்லை எதை என்று கூற ஏதும் செய்யவில்லை!!!
ஆனால் பிறப்பு தேவையா என்று கூற.... 

நிச்சயம் எந்தனுக்கு பிறப்பு தேவை!!!!

என் ஈசனை யான் நினைக்க வேண்டும்!!!!

பின் பிரம்மாவும் முட்டாள் முட்டாள் எதையன்றி கூட எவற்றில் இருந்து கூட.... ஆனால் பிரம்மாவுக்கு அனைத்தும் தெரியும் !!!

சிறிது நேரம்  அவ் ஆன்மாவிடம் விளையாடலாம் என்று கூட!!!

ஆனாலும் மீண்டும் பிறப்பெடுத்தால் பல கஷ்டங்கள் படுவாய் எதை எவற்றில் இருந்து கூட இப்பிறவியிலே ஈசனைத் தவிர எவரையும் நீ எண்ண வில்லை!!!!

ஆனால் எவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனாலும் பின் பிறப்பு எடுத்தாலும் கூட மீண்டும் மீண்டும் ஈசனை நினைத்துக் கொண்டே இருந்தால் என்ன லாபம் என்று கூற

நிச்சயம் எந்தனுக்கு பிறப்பு வேண்டும் யான் எந்த தவறும் செய்யவில்லை... எவற்றில் இருந்து கூட... அதனால் நிச்சயம் எந்தனுக்கு பிறப்பு வேண்டும் பிறப்பு வேண்டும் என்று கூட சண்டையிட்டது அவ் ஆன்மா பிரம்மாவிடம்...

ஆனாலும் நிச்சயம் எதை என்று ஆனாலும் பிரம்மாவும் யோசித்தான் இவந்தனுக்கு பிறப்புக்கள் இத்தோடு முடிக்கப்பட வேண்டும்!!!

ஆனாலும் ஏதாவது ஒரு பழியை சுமத்தலாமே என்று கூட ஆனாலும் பிரம்மா பின் ஏது எதையென்று உணர... பிரம்மா எவையென்று கூட பின் ஆன்மா எவை என்று கூட பின் உந்தனுக்கே பல வழிகளிலும் கூட கொன்ற சாபம் வந்துவிட்டது.... நீ தெரியாமலே எவையென்றும் !!

ஆனாலும் வந்துவிட்டது கோபம்!!! யான் தவறு செய்தேனா!!???? 

எதை எதை எப்படி சொல்ல வேண்டும் நீ பிரம்மா!!!!
இல்லை நிச்சயம் யான் என் ஈசனையே நினைத்துக் கொண்டிருக்கையில் எப்படி??? தவறு செய்திருக்க முடியும்??? என்று  அவ் ஆன்மா சண்டையிட்டது!!!

ஆனாலும் பிரம்மாவோ நிச்சயம் நீ ஒரு உயிரை கொன்றாய்!! நிச்சயம் உன் பாவக்கணக்கில் சேர்ந்து விட்டது பிரம்மஹத்தி தோஷமும் எழுந்து விட்டது!!!
நிச்சயமாய் இதை அனுபவிப்பதற்க்காகவே நிச்சயம் நீ மறுபிறவி எடுக்க வேண்டும் என்று கூட மறைமுகமாக பிரம்மா!!!!

ஆனாலும் வாதாடினான்  எதையென்று கூட இவற்றில் இருந்து தன்மைகள் அவ் ஆன்மாவும் கூட நிச்சயமாய் பிரம்மா எவை என்று கூட நிச்சயமாய் யாருக்கும் எவருக்கும் எதையும் யான் துரோகம் செய்யவில்லை ஏன் இந்த கஷ்டம் என்று கூட......

ஆனாலும் பிரம்மா அனைத்தையும் அறிந்தவன் இவந்தனுக்கு பிறவிகள் கொடுத்து நன்மைகளை செய்விக்கலாம் என்று!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து மீண்டும் எவற்றினின்று எதனை எவற்றின் தன்மைகளையும் உணர்ந்து உணர்ந்து உணர்ந்து நிச்சயம் உந்தனுக்கு யான் பிறப்பை கொடுக்கப் போகின்றேன்

நிறுத்தும்!!! நிறுத்தும்!!!!

நிச்சயம் எந்தனுக்கு பிறப்புக்கள் அவசியம் இல்லை எதையன்றி கூற இப்பொழுது கூட மறைமுகமாகவே !!!ஆனாலும் எதை  இதனையும் கோபப்பட்டு எந்தனுக்கு பிறப்புக்கள் தேவை இல்லை என்று கூற.... 

ஆனால் பிரம்மன் சரியாகவே நிச்சயம் இதை எவற்றில் இருந்து செயல்பட்டவை என்று தெரியாமல் கூட ஆனாலும் நிச்சயம் பிறப்பின் ரகசியம் கூட யான் ஈசனை தான் காண வேண்டும் என்று நினைத்திருந்தான்!!!

ஆனாலும் இவந்தனோ!!! பின் எதை என்று உணராமலே பின் பல கஷ்டங்கள் பட வேண்டும் அதாவது பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது என்று குலுங்கி விட்டான்!!!

ஆனாலும் பல வழிகளும் சண்டைகள் இட்டு நிச்சயம் யான் பிறப்பெடுக்கின்றேன் பிறப்பெடுக்கின்றேன் என் ஈசனை காண!!!!

ஆனாலும் என் ஈசனை நேரடியாக கண்டு நிச்சயம் இதற்கான வழிகளையும் கூட யான் சொல்வேன்!!!

ஆனாலும் யான் எந்தத் தவறும் செய்ததில்லை நிச்சயம் பிறப்பு எடுக்கின்றேன் பிறப்பு எடுக்கின்றேன் என் ஈசனை காண!!!!

ஆனாலும் நிச்சயமாய் எதை என்று கூட பிரம்மனும் சரியாக அமைதியாக அமைதியாக இருந்தான்!!!

எதை என்று உணர்ந்து உணராத அளவிற்கு கூட பிறப்பெடுத்து விட்டான்!!!

ஆனால் அனைத்தும் தெரிந்து விட்டது அலைந்தான்!!! திரிந்தான்!!! எதை எவற்றில் இருந்து ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்த அதாவது ..................................நந்தியெம்பெருமான்( நந்தி பகவான்) எதை எவற்றிலிருந்து கூட எவற்றின் தன்மைகளை புரியாத அளவிற்கும் கூட உதவிகள் செய்ய முற்பட்டான்!!!!

ஆனாலும் பிறவி எடுத்து விட்டான் அச்சிறுவனாக இமயமலையில் பின் ஓரத்திலே!!!! ஆனாலும் அவந்தனுக்கு அனைத்தும் புரிந்து விட்டது.... நாம் ஒன்றுமே தவறு செய்யவில்லையே முற்பிறப்பில் ஈசனையே நினைத்து கொண்டிருந்தோமே!!!!
ஆனால் நிச்சயம் பிரம்மாவும்  பின்  இப்படி கஷ்டப்பட வேண்டுமே என்று ஆனாலும் நிச்சயமாய் எதை எவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து நிச்சயம் பின் சிறுவயதில் ஆனாலும் இவற்றில் இருந்து கூட!!!!

ஈசன் திரும்பவும் வந்தான்!! நாடகத்தை நடத்த!!!!!

அப்பனே யாரப்பா!!! நீர்?? என்று கேட்க!!!

அச்சிறுவனும் எதை என்று உணர ஆனாலும் வயதும் சிறிது சிறிதாக ஆனாலும் இச்சிறுவன் அவ்வளவு ஞானத்தை பெற்றிருந்தான்.

பின் ஈசன் யாரப்பா நீ?? யாரப்பா நீ?? என்று கேட்க!!

பின் உந்தனுக்கு உதவலாமா!!? என்று 

ஆனாலும் அச்சிறுவனுக்கு தெரிந்து விட்டது!!! வேண்டாமப்பா!!! பின் எதை என்று கூட... மனிதனின் உதவிகளே எந்தனக்கு வேண்டாமப்பா!!!!

ஏனென்றால் முற்பிறப்பிலே!!! என் அருகிலே ஓர் மதிக்கத்தக்க முதியவர் அதாவது ஒரு வயதான முதியவர் அதாவது எதை என்று கூற இருந்து இருந்து பல இன்னல்களையும் பட்டு பட்டு ஆனாலும் அவர் ஏதாவது தவறு செய்திருக்கலாம். அதனால் பழியும் என் மேல் வந்துவிட்டது....

இதனால் வேண்டாம் எந்தனுக்கு யாரும் வேண்டாம்!!!!! என் ஈசனை யான் பார்க்க போகின்றேன் என்று அமைதியாக உட்கார்ந்தான்!!!!

இதனால்  எதையென்று கூற...... இதனால் கோமாதா வடிவெடுத்து பின் ஈசன் வந்தான்!!!!

ஈசன் வந்து !!...ஆனாலும் அச்சிறுவன் அங்கே அமர்ந்திருந்தான் பக்கத்தில் பின் கோமாதாவும் படுத்து உறங்கியது. 

ஆனால் ஈசன் தான் கோமாதா என்று அவந்தன் உணரவில்லை.

ஆனாலும் சிறிது காலம் இப்படியே அதாவது எதை என்று உணராமலே அவன் அருகிலே அவன் அருகிலே படுத்து உறங்கியது.

பாசம் வந்துவிட்டது அவந்தனுக்கும் அக் கோமாதா மீது!!!! 

ஆனாலும் எதை எவற்றை எவற்றில் இருந்து கூட வந்தவை என்று தெரியாமல் ஆனாலும் பாவங்கள் போக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து உணர்ந்து ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து ஆனாலும் நிச்சயமாய் எவை என்றும் ஆனாலும் பிரம்மனும் பின் வந்து விட்டான்!!!! மறைமுகமாக!!

இவந்தனும் ஒரு முதியவர் தோற்றத்திலே வந்து விட்டான்!!!

இதனால் நிச்சயம் எதை என்று எவை என்று கூட பின் ஈசன் கோமாதா வடிவில் இருந்ததை பார்த்திட்டான்.

ஆனாலும் எதை எவற்றில் இருந்து கூட அச்சிறுவனும் எதை என்று அறிந்து பின் பிரம்மாவும் வந்து......

ஏனப்பா??!!!! தனியாக இருக்கின்றாய்!!!!!

இக் கோமாதா உந்தனுக்கு போதுமா? வேறு ஏதாவது வேண்டுமா என்று!!!

வேண்டாம்!! வேண்டாம்!! எந்தனுக்கு தனியாக இருக்க வேண்டும்....இச் ஜீவனான பின் அதாவது இவ் ஜீவனே எந்தனுக்கு போதும்!!....எந்தனுக்கு அனைத்து உதவிகளும் செய்கின்றது என்று...

ஆனாலும்  பின் பிரம்மா நிச்சயம் உந்தனுக்கு பாவங்கள் ஏற்பட்டு விட்டது அதனால் நிச்சயம் எவற்றின் தன்மை அதாவது இக் கோமாதா எங்கு? செல்கின்றதோ அங்கு நிச்சயம் உன் பாவம் போகும் என்று!!!! இதனால் மறந்து போய்விட்டான் பிரம்மன்.

ஆனாலும் அச்சிறுவன் யார் என்பதை உணர்ந்து ஆனாலும் உணர முற்பட்டமையால் பின் ஏதோ ஒரு நிச்சயம் நம் தனக்கு இறைவனே சொல்கின்றான் என்று நினைத்து கோமாதாவிடம் நிச்சயம் எதை என்று அறிந்து அங்கிருந்து வந்து கொண்டே இருந்தான்...

ஆனாலும் எங்கெங்கோ அலைந்து !!திரிந்து!! எவை என்று எதை என்று தங்கி !!தங்கி!! தங்கி!! எழுந்து!! எழுந்து !!ஆனாலும் எதை என்று ஆனாலும் நிச்சயமாய் ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டான் பிரம்மன்.

இக் கோமாதா எங்கு? நிச்சயம் தண்ணீர் அருந்துகின்றதோ அங்கு உன் பாவம் போகும் என்று!!!!!


ஆனாலும் ஈசன் விடுவானா!!! என்ன!?

நிச்சயம் சில காலம் எதை எதை தான் என்று கூட ஆனாலும் வந்து வந்து ஆனால்(கோமாதா) தண்ணீர் கூட அருந்தவில்லை!!!

ஆனாலும் நிச்சயம் எதை என்று உணர ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டான் பிரம்மன் நிச்சயம் உன் பாவம் எங்கோ தொலைகின்றதோ!!! அங்கே!!!நிச்சயம் ஈசன் எதை அறிந்து உணர்ந்து அங்கேயே காட்சியளிப்பான் என்று...

ஆனால் நடந்தான்!!! நடந்தான்!!!!

பல பல திருத்தலங்களுக்கு கூட நடந்து நடந்து எதை என்று கூட கடந்து கடந்து......

 ஈசா!! ஈசா!! ஈசா !!! ஈசா !!ஈசா!!......... என்று

ஆனாலும் ஈசன் பக்கத்திலே இருந்தான்!!!!

ஆனாலும் எவை என்று கோமாதா வடிவெடுத்து எதையென்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் வந்தான் எதை என்று கூட!!!

முடியவில்லை!!!! முடியவில்லை!!!! ஈசா..... ஈசா!!!!...... ஈசா!!!!!!!..... முடியவில்லை ஈசா என் கால்கள் எல்லாம் ஓய்ந்து விட்டது.......

என்றெல்லாம் எதை என்று ஆனாலும் ஈசனை நிச்சயம் பார்க்க வேண்டுமே என்று துடிதுடித்து ஆனால் கடைசியில் அதாவது இவ் நதியில் தான் (பஞ்சவடி கோதாவரி நதி )..... நிச்சயம் அக்கோமாதா அதாவது ஈசன் பின் தண்ணீர் அருந்தினான்!!!!!! 

இதனால் பாவமும் போய்விட்டது பின்...... """""அப்பனே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!என்று பின் கூச்சலிட்டான்.

பின்பு நிச்சயம் ஈசன் கண்கூடாக காட்சி அளித்தான்!!!!!!!!!!

கோமாதாவிலிருந்து!!!!!! ஆனால் எதை என்று அறிந்து அறிந்து இதனால் நிச்சயமாய் எதை என்று கூட  எவற்றினின்று பின்....

 அவந்தனும் மன மகிழ்ந்து!!! மனமகிழ்ந்து!!!!

என் ஈசனை கண்டு விட்டேன்!!!! என் ஈசனை கண்டு விட்டேன்!!!!!

என்று உணர்ந்து பின் குதித்தான்!!! குதித்தான்!!! ஈசனே!!! நமச்சிவாயனே!!! சங்கரனே!!!! என்றெல்லாம்......

அவந்தனுக்கு மிக்க மகிழ்ச்சி!! மகிழ்ச்சி!! மகிழ்ச்சி!!!

பின் ஒரு ஜென்மத்தில்  எதையென்று அறிந்து ஒரு முதியவனாகவே இருந்து உதவி செய்தவன் யானே என்று கூற அந்த முதியவர் தோற்றத்தையும் ஈசன் காண்பித்தான் அச்சிறுவனுக்கு !!!!

அச்சிறுவன் அனைத்தும் உணர்ந்தான்!!!!

ஒருவன் புண்ணியங்கள் செய்திருந்தால் நிச்சயம்  முற்பிறப்பு அனைத்து பிறப்பையும் உணர்ந்து இருக்கலாம்... ஆனாலும் எதை என்று கண்ணீர் விட்டு அழுதான் எதை என்று கூட அவ் பக்தன்!!!!! 

ஈசனே!!!!! நிச்சயம் யான் செய்த என்ன புண்ணியங்கள் எந்தனுக்கு நீங்கள் சேவை செய்தீர்களா !!!!   என்று கூற... 


நிச்சயம் எதை என்று இதனால் நிச்சயம் எவை என்று இதனால் நிச்சயம் சில சில நல்லோர்கள் அதாவது எதை என்று கூட தெரியாமலே தவறுகள் செய்து விடுவார்கள். ஆனால் நிச்சயம் இவ் நதிக்கு வந்து எதை என்று எவற்றிலிருந்து கூட வந்து சிறிது நீரை பின் நிச்சயம் அதாவது நீராடி விட்டு நிச்சயம் உன்னை கண்டால் பாவங்கள் விலக்கப்பட வேண்டும் என்று..கூற

ஆனாலும் ஈசனோ அச்சிறுவனிடம் அப்பனே இவை எல்லாம் கேட்டு விடாதே!!!  நிச்சயம் அவரவர் கர்மத்தை அவரவர் அனுபவிக்க தான் வேண்டுமென்று!!!!!

நிச்சயம் எதை என்று ஆனாலும் இவற்றின் தன்மைகளையும் அறிந்து அறிந்து நிச்சயம் பின் என் அப்பனே!!! சங்கரனே!!!! நிச்சயம் நீ!!!! நீங்கள் சொல்வதை சரியாக யான் புரிந்து கொண்டேன்!!!

ஆனாலும் இத்திருத்தலம் நிச்சயம் எவை என்று கூட ஆனாலும் நிச்சயம்!!

 ஒன்றை சத்தியம் செய்து கொடு !!!எவை என்று எதனை என்று கூட.......

நிச்சயம் இங்கு நல்லோர்கள் வருவார்கள் நல்லோர்கள் தான் நிச்சயம் வருவார்கள் எதை என்று யான் நன்றாகவே கணித்து விட்டேன்!!!

அதனால் நிச்சயம் எவை எதை என்று கூட நீ நல்லதை தான் செய்ய வேண்டும் என்று!!!

ஆனாலும் ஈசனும் சத்தியம் அடித்து விட்டான்(சத்தியம் செய்து விட்டார்). ஆனாலும் இதனால்தான் ஆனாலும் இது மறைமுகமாகவே இத்திருத்தலம் இருக்கின்றது யாருக்கும் எவையென்று நிச்சயம் உணராமலே பின் எதை என்று கூட!!!!!

அதனால்தான் பின் கடமைகள் செய்திட்டு பாவக்கணக்கை முடிக்கும் பொழுது தான் இத்திருத்தலம்  அனைவருக்கும் தெரியவரும்!!!!!
சொல்லிவிட்டேன் அப்போது தான் வரவும் முடியும்!!!

அதனால் ஈசனும் எதை என்று கூட கோமாதாவும் எவை என்று கூட ஒன்றே!!! என்று காண்பதற்கு மட்டுமே பின் எதை என்று கூட ஈசனே ஒருவனாக இங்கு நிற்கின்றான்(கோயிலில் தனியாக நந்தி இல்லை ஈசன் மட்டுமே அருள் பாலிக்கின்றார்) இதுதான் இத்திருத்தலத்தின் சிறப்பு!!!

இதனால் நிச்சயம் எவை என்று  எதையென்றும் எங்கெங்கோ?? போய்விட்டு!!!  எங்கெங்கோ? சென்றிட்டு!! எதை என்று கூட இங்கு வருபவர்களுக்கு நிச்சயம் ஈசன் தரிசனம் கொடுப்பான் என்பது கலியுகத்தின் கட்டாயம்!!!!

அதாவது அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்து விட்டு கடைப்பிறப்பு யாருக்கோ நிச்சயம் ஈசன் இங்கே தரிசனம் கொடுப்பான்.

அதனால் நிச்சயம் அதாவது எவை என்று கூற பின் எதை என்றும் கூட என்றும் என்றும் பஞ்சபாண்டவர்களும் இங்கே வந்து ஈசனை வழிபட்டு வழிபட்டு பாவத்தை போக்கி கொண்டார்கள் எவற்றில் இருந்து கூட.......

அதாவது கன்னி(புரட்டாசி மாதம்) திங்களில் எதை என்று கூட இங்கே முன்னோர்களுக்கு நிச்சயமாய் எதை என்று எவற்றில் இருந்து கூட பின் வணங்குதல் பின் ஈசனை கண்டு விட்டால் பின் முன்னோர்களின் சாபமும் தொலைந்து விடும்!!!

இதை நிச்சயம் யான் எதை என்று பின் கன்னி திங்களில்தான் இங்கே வந்து பின் எதை என்று கூட ஐவர்களும் (பஞ்ச பாண்டவர்கள்) பின் சாபத்தை நீக்கிக்கொண்டு சென்றார்கள்.

எதனிலிருந்து எவற்றினின்று வந்தவை என்பது தெரியாமல் பின் ராமனும் சீதாவும் நிச்சயம் பல பல  எதையென்று உணராமலே ஈசனும் பின் உதவிகரமாக அதாவது அனுமானும் இதையென்று உணராமலே பின் ஈசனுக்கும் ஈசனுக்காக எதை என்று உணர்த்துவதற்காகவே நிச்சயம் பின் ராமர் சீதா இவை தன் உணர உணர எங்கெல்லாம் சென்றார்களோ எங்கெல்லாம் பாவங்கள் போகுமோ(போக்க முடியுமோ) என்று பின் அவதாரம் எடுத்து பின் அனுமான் காண்பித்துக் கொண்டிருந்தான்... அதனால் பின் ராமனை பின் அயோத்தியாவில் இருந்து எதை எவற்றை எவற்றின் தன்மைகளை அறிந்து அறிந்து ஆனாலும் இவற்றின் தன்மைகளை அறிந்து அறிந்து அறிந்து கஷ்டப்படுகின்ற நேரத்தில்....

 பின் அனுமான் நிச்சயம் ஒரு தலம் இருக்கின்றது!!!!

எவை என்று கூட அங்கு சென்றால் நிச்சயம் எதை என்று அறியாமலே ஈசன் தரிசனமும் கிட்டும் என்பதை கூட!!!!....

 இதனால் இங்கே வந்து பல ஆண்டுகளாக முன்னோர்களை எதையென்று அறியாமல் பின் இவன் எதை என்று கூட இங்கேயும் காட்சிகள் கொடுத்தான் என்பது ராமன் உணர்ந்ததே!!!!

பின் சீதா தேவிக்கும் இப்படியே ஆகட்டும் என்று அனுமானும் இங்கே அழைத்து சீதா தேவிக்கும் இங்கே ஈசன் நிச்சயம் எதை எவற்றில் இருந்து கூட

ஆனாலும் வேடங்களப்பா!!! எதை என்று அறியாமலே இதற்கும் சம்பந்தங்கள் உண்டு இறைவன் ஒருவனே என்பதற்கிணங்க!!!

எதனை என்று அறிவதற்கும் கூட வரும் காலங்களில் நிச்சயம் மனிதர்கள் தெளிவுபடுத்துவார்கள் மனிதர்களுக்கு!!!

எப்படி எல்லாம் மனிதர்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமோ அப்படி எல்லாம் நிச்சயம் மனிதர்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.

ஆனால் இதையென்று அறிவதற்கு இதனால் நிச்சயம் வரும் கன்னி(புரட்டாசி மாதம்) திங்களில் எதை அறிந்து அதாவது கன்னி திங்களில் தான் ஐவர்களும் ராமர் சீதாவும் எதை என்று உணர்ந்து இங்கு வந்தார்கள் சில பாவங்களையும் போக்கிக் கொண்டார்கள்.

நிச்சயம் எதை எவற்றில் இருந்து கூட இப்படி எல்லாம் நிச்சயம் இறைவன் மீது அன்பு செலுத்தினால் !!!அன்பு செலுத்தினால்!!! நிச்சயம் இறைவனே சேவை செய்வான் என்பது உறுதியாக யான் சொல்வேன்...

யானும் இத்திருத்தலத்திற்கு வந்தேன் பல பல கோணங்களாக பின் இங்கேயும் தர்மமும் ஏந்தி( பிச்சை யாசித்து) பல மக்களுக்கு உதவிகளும் செய்தேன்!!!!

நிச்சயமாய் இதையென்று இங்கு நிச்சயம் வந்து அருள் ஆசிகள் பெற்று தந்து மீண்டும் அகத்தியனும் இத் திருத்தலத்திலே வாக்குகள் உரைப்பான் !!! புசுண்ட முனியும் உரைப்பான்!!!(காகபுஜண்டர் போகர்) போகனும் உரைப்பான்!!!
எதை என்று அறிவதற்கு இன்னும் ஏனைய சித்தர்களும் இங்கே பல மர்ம மர்மமான விஷயங்களும் மறைந்து போயிற்று!!! இதனால் நிச்சயம் வெளிக்கொண்டு வருவோம்!!! இத்திருத்தலத்திலே மீண்டும் ஒரு வாக்கு உண்டு!!!!

முற்றே!!.......

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

புனிதமிகு பூமி நாசிக் பஞ்ச்வாடி. ராமன் வனவாசக் காலத்தில் பெரும்பாலான நாட்களைக் கழித்த இடம். கோதாவரியுடன் அருணா, வருணா ஆகிய நதிகளும் இணையும் திரிவேணி சங்கமமாகவும் திகழ்கிறது இந்தத் தலம்.

அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயம், கோதாவரி மாதா கோயில், பிரமாண்ட அனுமன் சிலை ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு திகழும் இந்தத் தலத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது, அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்.

கோதாவரி நதியை நோக்கிவாறு, தரை மட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது இந்தச் சிவாலயம்.

50-க்கும் மேற்பட்ட படிகளில் ஏறி ஆலயத்துக்குச் செல்லவேண்டும். சில படிகளில் ஏறியதுமே இடது புறத்தில் அனுமன் தரிசனம் தருகிறார்.

அவரை வணங்கிவிட்டு மேலும் படிகளில் ஏறிச் சென்றால், கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு வெளியே தத்தா மந்திர் மற்றும் காயத்ரீ மந்திரை தரிசிக்கலாம்.

நாசிக் திரிவேணி சங்கமத்தை தரிசித்து வரும் பக்தர்கள் இங்கே இந்த இரண்டு ஆலயங்களையும் தரிசித்துவிட்டு, கபாலீஸ்வரரை வழிபடச் செல்கிறார்கள்.

அழகுற அமைந்துள்ளது கபாலீஸ்வரர் ஆலயம். மூன்று திசைகளிலிருந்து கோயிலுக்குள் நுழையும் வண்ணம் வாயில்களும் வழிகளும் அமைந்துள்ளன. பக்தர் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது ஆலயத்தில்


கருவறையில் லிங்கத் திருமேனியராக அருள்கிறார் கபாலீஸ்வரர். பக்தர்கள் சிவலிங்கத்திற்கு அருகில் சென்று வழிபடும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மஹத்தி என்பது கடும் தோஷம்; சகல செளபாக்கியங்களையும் இழக்கச் செய்துவிடும் என்பார்கள். இதுபோன்ற தொஷங்களால் அவதிப்படும் அன்பர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து கபாலீஸ்வரரை மனமுருகி வழிபட்டால், தோஷங்கள்-சாபங்கள் அனைத்தும் விலகும்; ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திங்கள் கிழமையை சோமவாரம் என்பார்கள். ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் கபாலீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. அன்று அபிஷேகம் நடக்கும்போது வெளியேறும் புனித நீரைப் பிடித்துச் சென்று பக்தர்கள் நீராடுகிறார்கள். இதன் மூலம் தேக உபாதைகள் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

அதேபோல், கோயிலுக்குள்ளும் தீர்த்தம் தேவைப்படுவோருக்கு, பாட்டில்களில் புனித அபிஷேகத் தீர்த்தம் நிரப்பி கொடுக்கப்படுகிறது; பக்தர்கள் பயபக்தியோடு பெற்றுச் செல்கிறார்கள்.

கபாலீஸ்வரரை தரிசித்து வழிபட்டு விட்டு வெளியே வரும் பக்தர்கள், கோயிலுக்கு வெளியில் கோபுரத்தை தரிசித்தபடி கையைத் தட்டி வழிபடுகிறார்கள். `இறைவனுக்குத் தங்களின் வருகையை அறிவிப்பதற்கான சம்பிரதாய வழிபாடு இது' என்கிறார்கள், உள்ளூர் மக்கள்.

நாசிக் செல்ல விரும்பும் அன்பர்கள் ரயில் மார்க்கமாகச் செல்லலாம். ரயில் நிலையத் திலிருந்து பஞ்சவடி திரிவேணி சங்கமம் செல்ல போக்குவரத்து வசதிகள் நிறைய உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகிலுள்ள பஞ்சவடி கபாலீஸ்வரர் மகாதேவர் (சிவன்) கோயிலில் நந்தி சன்னதி இல்லை.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகேயுள்ள பஞ்சவடி கபாலீஸ்வரர் மகாதேவ ஆலயத்தில் ஈசனின் சந்நதிக்கு எதிரில் நந்தியம்பெருமான் வீற்றருளவில்லை. இந்தியாவிலேயே நந்தி இல்லாத சிவன் கோயில் இதுதான் எனலாம். ஆனால், நந்திபகவானின் அருள் பெற்ற சனகர், சனாதனர், சனந்தகர், சனத்குமாரர், வியாக்ரபாதர், பதஞ்சலி, சிவயோகமுனிவர் மற்றும் திருமூலர் ஆகிய எண்வரையும் இங்கு தரிசிக்கலாம்.

செல்லும் வழி: ரயில்நிலையம்-10,புனே-202,பந்தார்தாரா-72, அஹமதுநகர்-164
தகவல்கள்:
ஊர்:நாசிக்,பஞ்சவடி,மந்தாகினி நதிக்கரை,
இறைவன்:கபாலீஸ்வரர்

பிறசன்னதிகள்: விநாயகர்,ஆஞ்சநேயர்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

5 comments:

  1. Agnilingam Ayya Avargalukku Romba Romba Nandri- Sivanin Leelaigala Sitthar perumakkal solla , neenga padhivu potta thaan engalukku ivvalo seidhigal theriya varudhu. idhu perum bakyam ellarukkum - padipporukkum seidhiya koduppavarukkum.- Ravi Mogappair

    ReplyDelete
  2. எம்பெருமானே அகத்தீசா... சிவவாக்கிய தேவா... அடியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... ஆசிர்வதியுங்கள் அனைவரையும்... முப்பெருமானுக்கும் முப்பெரும் தேவியர்க்கும் எண்ணில் அடங்கா கோடானுகோடி சித்தர் பெருமக்களுக்கும்... பல அடியவர்கள் பல துன்பங்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்... ஆதலால் பல கடமைகள் காரணமாய் இவ்வளவு தொலைவில் ஆலயம் வருவதும் செல்வதும் என்பது முடியாதது ஒன்று... ஆகையால் இறைசக்திகளும் ஏனைய சித்த பெருமக்களும் தயவு செய்து தமிழகத்தில் இப்படி ஒரு ஆலயத்தைக் கூறி அடியவர்கள் சென்றுவந்து சகலபாவதோஷ குறைகளை நீக்கி என்றும் நலமுடன் ஈசனை கண்டு அகத்தியம் பெருமானை கண்டு பிரவாநிலை எடுத்து வாழ வழிகாட்டி ஆலயம் கூறுங்களேன். சற்று மணமிறங்கி எங்களின் நிலையறிந்து கூறுங்கள்... உங்களுடன்... நல்லாத்மாவாக இருக்கும்வரை வாழ்கிறோம்????!!! நலம் நலம் தொடரும்... அன்புடன் அடியவன்...

    ReplyDelete
  3. வணக்கம் அகத்தியர் அடியவர்களே அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்

    ஒரு மனிதன் தனக்கு சரியான எதிர்பார்க்கும் சம்பளமும் பிடித்த வேலையும் தேடி தேடி செல்கின்றான்

    தனக்கு பிடித்த உணவுகளை எங்கெங்கு கிடைக்கும் என்று தேடி தேடி சென்று அலைகின்றான்

    தனக்கு தன் வாழ்க்கையில் எங்கெங்கெல்லாம் சென்றால் லாபம் எங்கெங்கெல்லாம் சென்றால் சாதகமாக இருக்கும் என்பதை தன்னுடைய புத்தியை உபயோகப்படுத்தி அதன்படியே நடந்து கொள்கின்றான்

    ஆனால் இறைவனின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கும் இறையருளை பெறுவதற்கும் நம்முடைய பாவங்களை தீர்ப்பதற்கும் தேடிச் செல்ல முடிவதில்லை

    மனிதர்கள் நல்ல வாழ்க்கையினை பெற நல்லபடியாக பக்தியை கடைப்பிடித்து இறைவன் திருவருளைப் பெற சித்தர்கள் இந்த பாரத தேச முழுவதும் ஆலயங்களை அமைத்திருக்கின்றார்கள்.

    தற்போது நடந்து வரும் இந்த கலிகாலம் மிகவும் கடுமையாகவும் அழிவை தரக்கூடியதாகவும் இருக்கின்றது இதற்கெல்லாம் காரணம் மனிதனின் மன மாற்றங்கள் செயல்பாடுகள்.

    சித்தர்களாகிய நம்முடைய குருமார்கள் குறைந்த பட்சம் நல்லோர்களையாவது நல்வழிப்படுத்தி அவர்கள் வாழ்வில் மேன்மை பெற இறையருளைப் பெற இந்த ஆலயத்திற்கு செல்லுங்கள் அந்த ஆலயத்திற்கு செல்லுங்கள் என்று வழிகாட்டுகின்றார்கள்.

    அகத்தியர் மைந்தன் ஜீவநாடி வாசிக்கும் ஜானகிராமன் ஐயா எத்தனை ஆலயங்களுக்கு குருவின் உத்தரவின் பேரில் சென்று கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

    யாருக்காக இதையெல்லாம் செய்கின்றார்???
    குருநாதர் அகத்தியரும் சித்தர்களும் சொன்னதை அப்படியே செய்து கொண்டு மனிதர்கள் வாழ்க்கையில் வளம் பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இறைவன் வாக்குகளை நமக்கு தந்து இரவு பகல் உறக்கம் உணவு கடமை இவற்றையெல்லாம் கூட ஒதுக்கி வைத்துவிட்டு ஒவ்வொரு புண்ணிய ஸ்தலங்களுக்கும் சித்தர்களின் உத்தரவின் பேரில் பயணித்து பயணித்து நம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த எவ்வளவு தூரம் உழைக்கின்றார் அதை யாரும் உணர்வதில்லை

    சித்தர்களுக்கு வேறு வேலையில்லையா

    அற்ப பதர்களாகிய மனிதர்களாகிய நமக்கு வாக்கு தந்து நம்மை வழிநடத்திச் செல்வதே மிகப்பெரிய விஷயம்..

    இங்கே அனைவருக்கும் கடமைகள் உள்ளது யாருக்கு தான் கடமைகள் இல்லை..

    எதற் எதற்கோ ஓடிக்கொண்டே இருக்கின்றோம் இறைவன் திருவருளை பெறுவதற்கு கண்டிப்பாக ஓடியே தீர வேண்டும் வேறு வழியே இல்லை நமக்காக உதவ சித்தர்கள் போராடி ஒவ்வொரு ரகசியங்களாக நமக்கு எடுத்துக் கூறி நம் வாழ்க்கையை மேம்படச் செய்ய உரைத்துக் கொண்டே இருக்கின்றார்கள் அதன்படியே நடந்து சென்றால் நல்லதே தான் நடக்கும்.

    இந்தியாவில் நந்தியே இல்லாத சிவாலயம் இது இங்கு சிவனும் ஒன்று நந்தியும் ஒன்று என்பதை எடுத்துக் காட்டவும் உண்மையான பக்தியை காட்டினால் அந்த இறைவனே நமக்காக இறங்கி வந்து சேவைகள் செய்வான் என்பதை உணர்த்துவதற்கும் இந்த ஆலய வாக்கு இதை சரியாக நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதை விட்டுவிட்டு நமது வசதிப்படியே அனைத்தும் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகத் தவறு புரிந்து கொண்டால் சரி

    ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  4. சித்தர்களின் ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு பிரமிப்பாக இருக்கின்றது எவ்வளவு ரகசியங்கள் எத்தனை எத்தனை தகவல்கள்

    மதுரையில் ஈசன் புரிந்த திருவிளையாடலில் வந்தி பாட்டிக்காக பிட்டுக்கு மண் சுமந்து வேலைக்காரனாக வந்த படலத்தை நாம் அனைவரும் அறிவோம்

    ஆனால் ஒரு சிறுவன் தன் மீது கொண்ட அன்பிற்கு கட்டுப்பட்டு ஒரு பிறவி முழுவதும் முதியவனாக வந்து சேவைகள் செய்து அடுத்த பிறவியிலும் கோமாவதாக வந்து கூடவே பயணித்து வாழ்ந்து அந்த உண்மையான பக்தியை உலகத்திற்கு எடுத்துக்காட்டி அருள் செய்த ஈசனின் திருவிளையாடலை எப்படி சிவவாக்கியர் எடுத்து உரைத்திருக்கின்றார்

    இதுவரை நாம் அறியாத ஒன்று இது

    எப்பேர்ப்பட்ட புண்ணிய ஸ்தலமாக இருக்கும் இந்த ஆலயம்

    இன்னும் மர்மமான விஷயங்கள் பல ஒளிந்துள்ளன சித்தர்கள் அனைவரும் வெளிக்கொண்டே வருவோம்
    போகன் வருவார் காகபுஜண்டர் வருவார் அகத்தியன் வருவார் அனைவரும் வந்து இந்த ஸ்தலத்திலே வாக்குகள் உரைப்பார்கள் என்று கூறும் பொழுதே நமக்கு தெரிந்திருக்க வேண்டாமா? எப்படிப்பட்ட ஸ்தலம் என்று

    போக வேண்டும் என்று நினைத்தால் நம்மால் போக முடியும்

    போக உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தால் வீட்டில் இருந்தே மனதார வழிபட்டாலும் கூட போதுமானது

    அதை விட்டுவிட்டு நமக்கு அருகிலேயே இது போன்று உரைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு

    ReplyDelete
  5. ஈசன் நினைத்திருந்தால் ஒரு நொடியில் தன் தரிசனத்தை காட்டி அந்த சிறுவனுக்கு முக்தி மோக்ஷத்தை அளித்திருக்க முடியும்

    ஆனால் ஏன் அப்பொழுது தரிசனம் தந்து இந்த நாடகத்தை ஏன் முடித்து வைக்கவில்லை

    நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்

    அந்த சிறுவன் காட்டிய பக்தியை நம்பிக்கையை கண்டு ஈசனே ஒரு ஜென்மம் மட்டுமல்ல மறு ஜென்மத்திலும் வந்து சேவை செய்து அச்சிறுவனின் பக்தியையும் நம்பிக்கையையும் உலகத்திற்கு எடுத்துக்காட்டவே இவ்வாறு செய்தார்

    எப்பேர்பட்ட புண்ணிய ஸ்தலம்

    வாக்குகளை முழுவதுமாக சரியாக படித்து சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்

    ஏதோ மனிதர்கள் சொல்லுவது அல்ல தெய்வமே இறங்கி சொல்லும் வாக்குகள் இவை

    ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தமுள்ளது

    இந்த ஆலயத்திற்கு யார் யாரெல்லாம் வர முடியும் தோஷங்கள் கடைப்பிறப்பு என நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் இந்த வாக்கில் உள்ளன அதை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும் ஒரு முறைக்கு இருமுறை மூன்று முறை நான்கு முறை வாக்குகளை படிக்க வேண்டும் அப்பொழுதுதான் புரியும்.... அரைகுறையாக படித்துவிட்டு அரைகுறையாக புரிந்து கொண்டு இருந்தால் நஷ்டம் நமக்கு தான்

    ReplyDelete