​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 16 September 2022

சித்தன் அருள் 1185 - அன்னமிட அகத்தியர் உத்தரவு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்தன் அருள் 1179இல் அகத்தியப்பெருமான் நம் அனைவருக்கும் ஒரு உத்தரவு கொடுத்திருந்தார். அது கீழ் வருமாறு!

"புரட்டாசி மாத மஹாளய அமாவாசைக்கு ஒன்பது நாள் முன்பிருந்து இயலாதவர்களுக்கு அன்னமிட்டு, தான தர்மங்கள் செய்து அமாவாசை தினத்தன்று முன்னோர்களையும் குலதெய்வத்தையும் வணங்கி அன்றைய தினமும் இயலாதவர்களுக்கும் ஏழை எளியோர்களுக்கும் அன்னதானமும் கோமாதாவிற்கும் உணவும் இனிப்புகளையும் பரிமாறி தர்மங்கள் செய்திடல் வேண்டும்."

அந்த முதல் நாள் இன்று(16/09/2022) தொடங்குகிறது. ஏதேனும் ஒரு ஜீவனுக்கு சிறிதளவு அன்னம் கொடுத்து, அகத்தியப்பெருமானின் அருளை பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி, ஞாபகப்படுத்திட இந்த தொகுப்பு. இன்று முதல் 10 நாட்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்....... தொடரும்!

1 comment:

  1. ஓம் ஶ்ரீ லோபாமுத்திரை சமேத ஶ்ரீ அகத்தீசாய நமோ நம...

    ReplyDelete