வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சித்தன் அருள் 1179இல் அகத்தியப்பெருமான் நம் அனைவருக்கும் ஒரு உத்தரவு கொடுத்திருந்தார். அது கீழ் வருமாறு!
"புரட்டாசி மாத மஹாளய அமாவாசைக்கு ஒன்பது நாள் முன்பிருந்து இயலாதவர்களுக்கு அன்னமிட்டு, தான தர்மங்கள் செய்து அமாவாசை தினத்தன்று முன்னோர்களையும் குலதெய்வத்தையும் வணங்கி அன்றைய தினமும் இயலாதவர்களுக்கும் ஏழை எளியோர்களுக்கும் அன்னதானமும் கோமாதாவிற்கும் உணவும் இனிப்புகளையும் பரிமாறி தர்மங்கள் செய்திடல் வேண்டும்."
அந்த முதல் நாள் இன்று(16/09/2022) தொடங்குகிறது. ஏதேனும் ஒரு ஜீவனுக்கு சிறிதளவு அன்னம் கொடுத்து, அகத்தியப்பெருமானின் அருளை பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி, ஞாபகப்படுத்திட இந்த தொகுப்பு. இன்று முதல் 10 நாட்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்....... தொடரும்!
ஓம் ஶ்ரீ லோபாமுத்திரை சமேத ஶ்ரீ அகத்தீசாய நமோ நம...
ReplyDelete