​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 19 February 2022

சித்தன் அருள் - 1089 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!


15/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு!

வாக்குரைத்த ஸ்தலம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் பீடம். கிருஷ்ணகிரி.


ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நலமாக நலமாக அப்பனே குறைகள் இல்லை என்பேன்.

ஆனாலும் அப்பனே பல வாக்குகளும் சொல்லிவிட்டேன் அப்பனே.

எவை என்று கூற அப்பனே நன்மை தீமை எவ்வாறு என்பதையும் கூட வருவது பின் மனிதனின் பிறப்பில் இருந்தே வருபவை. இதை யாராலும் தடுக்க முடியாது என்பேன்.

நன்மைகள் வரும்பொழுது பின் எவை என்று கூற அனைத்தும் எவ்வாறு என்பதைக்கூட நாம் செய்ததற்கு வருவதென்றும் ,தீமைகள் வரும் பொழுது இறைவன் இல்லை என்று கூட அப்பனே அப்படி சொல்லுதல் ஆகாது என்பேன்.

இதனால்தான் அப்பனே தீமைகள் வைத்தால்தான் துன்பங்கள் வைத்தால்தான் அப்பனே இறைவனை நெருங்க முடியும் என்பேன்.

அதனால்தான் அப்பனே சில மனிதர்களுக்கு இறைவனே துன்பத்தை வைப்பான் அதை யாராலும் தடுக்கவும் முடியாது என்பேன்.

ஆனாலும் சில துன்பங்கள் அப்பனே இவையன்றி கூற இறைவன் அனுகிரகத்தால் மாறும் என்பேன்.

ஆனாலும் எவ்வாறு என்பதையும் கூட போலியான  அப்பனே இன்னும் வருவார்களப்பா. துறவிகள் எவ்வாறு என்பதையும் கூட.

மனிதன் சம்பாதிப்பதற்காகவே அப்பனே எவை என்று கூற அனைத்தும் செய்வான் என்பேன்.

பணம்தான் மூலாதாரம் என்று கூட சொல்வான் என்பேன்.

ஆனால் அப்பனே அவை இல்லை மூலாதாரம்.

மூலாதாரம் என்பது இறை பலமே என்பேன்.

இவ் இறை பலத்தைப் பெற்று விட்டால் அப்பனே அனைத்தும் நடக்கும் அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

அதனால் முதலில் பணத்திற்கே மரியாதை அப்பனே இப்புவியுலகில்.

பணத்தைத் தேடித் தேடி சென்றாலும் அப்பனே கிட்டாது என்பேன்.

இறை பலத்தை தேடித்தேடி சென்றால் அப்பனே அனைத்தும் கிட்டிவிடும்.

அப்பனே நல் உள்ளங்கள் கிட்டி நல் முதன்மையான பின் வழிகளில் அப்பனே இவை என்று கூற இன்னும் மேன்மைகளைப் பெற்று அப்பனே வாழ வழி வகுப்பான் ஈசன் என்பேன்.

அதனால் அப்பனே இனிமேலும் அப்பனே பின் எவனிடம் அப்பனே எதனை கொடுக்க வேண்டும் என்பது கூட ஈசன் முடிவெடுத்து விட்டான்.

இவந்தனிடத்தில் பணம் கொடுத்தால் இவந்தன் மற்றவர்களுக்கு உதவி செய்து பல புண்ணியங்களை இவந்தனும் பெற்று மற்றவர்களை  வாழவைப்பான் என்பதற்கிணங்க யாரிடம் பொருள்கள் கொடுக்க வேண்டுமோ!!! அவனிடத்தில் மட்டுமே இனிமேலும் பொருள்கள் கொடுப்பான். மற்றவர்களிடமிருந்து எடுப்பான் என்பது மெய்யப்பா.

இவையன்றி வரும் வரும் காலங்களிலும் பார்க்கலாம் என்பேன். 

அப்பனே   இவைதன் அப்பனே யாங்கள் எதனை என்று கூட மனிதர்களைப் பற்றி சரியான முறையில் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே.

இதனால் அப்பனே மனிதர்களிடத்தில் எவை எவை தீய எண்ணங்களோடு செயலாற்றுகின்றதோ!!! அவையெல்லாம் எடுப்போம். இவையன்றி கூற இதனையுமென்று கூற அவையெல்லாம் பின் அடியோடு அழிப்போம் என்பேன். 

இதுதான் எங்களுடைய முதல் முயற்சி.

அப்பனே சித்தர்கள் பெயர்களை வைத்துக் கொண்டு ஏமாற்றாதீர்கள் ஏமாற்றாதீர்கள் என்றெல்லாம் நாங்கள் சொல்லிக் கொண்டே பல ஞானியர்கள் சொல்லிக்கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம். 

ஏனப்பா!!! வேறு பிழைப்பே இல்லையா??? எதனை என்று கூற அப்பனே பிழைப்பதற்கும் வேறு வழிகள் இல்லையப்பா. பெயர்களையும் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.

அப்பனே அவையெல்லாம் பொய்யப்பா!!! நம்பாதீர்கள் அப்பனே.

யான் பல நூல்களிலும் அப்பனே இதை எழுதி வைத்திருக்கிறேன் அப்பனே பல யுகங்களாக.
எவை என்று கூற கோடிகோடி திருடர்கள் வருவார்களப்பா வருவார்களப்பா என்றெல்லாம்.

அப்பனே நம்பி விடாதீர்கள் அப்பனே எந்தன் பெயரைச் சொல்லியே அகத்தியன் அகத்தியன்  யான் என்று சொல்லி ஏமாற்றுவார்கள், திரிவார்கள். 

காகபுஜண்டன் அப்பனே இவையன்றி கூற அனைத்தும் சொல்லிவிட்டான் என்பேன் அப்பனே. 

இவையன்றி கூற வாக்குகளாக முருகன் செப்புகின்றான் ஈசன் செப்புகின்றான்.

இவையன்றி கூற அவையன்றி கூற அப்பனே சொல்லிச் சொல்லி அப்பனே மனிதனை ஏமாற்றி பிழைப்பு நடத்தி அப்பனே கடைசியில் பார்த்தால் இவ் மதத்திற்கே தீங்கு விளைவிப்பான் மனிதன். இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது வேண்டாம் அப்பனே திருந்துங்கள் என்று கூட சொல்லிக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம்.

விதவிதமான ஆடைகள்!!! விதவிதமான பூ வகைகள்!!! விதவிதமாக அப்பனே எப்படி எல்லாம் மனிதன் தன்னை அலங்கரித்து கொள்ள வேண்டுமோ அப்படியெல்லாம் அலங்கரித்துக் கொள்வான் மனிதர்கள்.

அப்பனே இதனால் யாரையும் நம்பிவிடக் கூடாது என்பேன்.

அனைத்து திறமைகளும் தந்து பின் நல் விதமாகவே கொடுத்துத்தான் இறைவன் நல்அறிவுகளோடு தான் அனுப்புகின்றான் மனிதர்களை.

ஆனாலும் அதனை அறியாத  முட்டாள்கள் மனிதர்களே என்பேன்.

அப்பனே இதை அறிந்துவிட்டால் உள்ளூர அறிந்துவிட்டால் அனைத்தும் நீயே உந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்பேன்.

இதனால்தான் அப்பனே முதலில் இறை பலத்தை தேடுங்கள் தேடுங்கள் என்றெல்லாம் சொல்கிறோம்.

இறை பலத்தைத் தேடி விட்டால் உங்களுக்கே அறிவுகள் ஏற்படும்.

அப்பனே எப்படி?? அப்பனே காவி துறவி ஆகின்றான்??

இதனால் அப்பனே இக்காலத்தில் சாமியார் என்கின்றார்களே அப்பனே இவந்தனக்கு ஏதும் நடக்காது !!!!அப்பனே காதல் தோல்விகள்.!!! அப்பனே பல பிரச்சனைகள், இவையெல்லாம் வந்து இவனை வாட்டும் பொழுது பின் நாம் இவ்வாறு மனிதர்களை ஏமாற்றிவிட்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்றுதான் காவி உடுத்து கிறான் அப்பனே.

இதனால் உண்மையான காவிகளுக்கும் எவை என்று கூற பொய்யான மனிதர்களால் பின் அப்பனே அசிங்கம் தான் ஏற்படுகின்றது. வரும் வரும் காலங்களில் இவ்வாறுதான் ஏற்படும் அப்பனே.

அப்பனே சொல்கின்றேன் அப்பனே பாரத தேசத்தில் அப்பனே இவையன்றி கூற இப்படி இழிவாகவே நடந்து கொள்கின்றார்கள் அப்பனே பின் இறைவனே என்று ஏமாற்றி திரிகின்றார்கள்.

ஒரு கொள்கையுடன் வாழத் தெரியவில்லை அப்பனே. இவ்வாறு இருந்தால்?? அப்பனே எவ்வாறு ??எவ்வாறு ??நலன்கள் செய்வான்? இறைவன்!!

அதனால்தான் யாங்களே சித்தர்கள் பல மனிதர்களை திருத்துவோம் திருந்த வில்லை என்றாலும் அடிப்போம் அப்பனே பலமுடனே. 

அப்பனே திருந்திக் கொள்ளுங்கள்.

அப்பனே ஏமாற்றுபவன் மனிதன் என்பேன் அப்பனே இதனையும் என்று கூற ஏமாற்றம் ஏமாற்றம் அப்பனே.

மனிதன் என்பதை விட மனிதன் என்று சொல்வதைவிட ஏமாற்றுக்காரன் என்று தான் சொல்வதே பொருத்தமாக உள்ளது என்பேன்.

மனிதனை இவ்வாறு என்பதை கூட நன்மைகள் உண்டு உண்டு ஆனாலும் அப்பனே எதையும் அறியாமல் தன் போக்கிலேயே சென்று கொண்டிருந்தால் அனைத்தும் யாங்களே முன்னின்று நடத்துவோம். அதுதானப்பா உண்மை.

அப்பனே நிச்சயம் என் பெயரைச் சொல்லி அப்பனே நல் விதமாகவே இன்னும் அப்பனே எவ்வாறு எவ்வாறு என்று கூட ஏமாற்றி திரிபவர்களை யான் நிச்சயம் விடமாட்டேன் இனிமேலும்.

பொறுத்துக் கொண்டது போதும். ஏனென்றால் அப்பனே இனிமேலும் இவ்வாறு விட்டுவிட்டால் அகத்தியன் பொய் சித்தர்கள் பொய் என்றே சொல்லி விடுவார்கள் அதனால் தான் அப்பனே யான் எதையன்றி கூற பல சித்தர்களும் என்னிடத்தில் கூறிவிட்டார்கள்.

அகத்தியா!!! எவை என்று கூற இப்படியெல்லாம் உன்னை வைத்து பல வழிகளிலும் பல பல வழிகளிலும் இவ்வாறு என்பதெல்லாம் பொய் சொல்லி திரிந்து கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே இவையன்றி கூற. 

இதனால் எவ்வாறு என்பதையும் கூட யானும் போனால் போகட்டும் போனால் போகட்டும் பின் என் பெயரைச் சொல்லியும் பிழைத்தால் பிழைக்கட்டும் என்றெல்லாம் ஈசனிடம் பல சித்தர்களிடம் சொல்லிவிட்டேன்.

ஆனாலும் பின் அப்பனே கேடுகெட்ட பிறவியப்பா மனிதப் பிறவி. அப்பனே இதனையன்றி கூற எதனை என்று குறிப்பிடுவது??? அப்பனே.

பொய் சொல்லி ஏமாற்றுகின்றானே மனிதன் அப்பனே வேறொன்றும் அப்பனே அதற்கு எவ்வாறு என்பதையும் கூட வேறு எதனை என்று கூட அப்பனே அமைதியாய் அப்பனே திருத்தலத்தில் அப்பனே பின் உட்கார்ந்தால் இறைவனே உண்ண ஆகாரமும்  உடையும் அனைத்தும் தருவான் அதை விட்டுவிட்டு ஏமாற்றி தான் பிழைப்பு நடத்த வேண்டுமா???

பின் ஏமாற்றி வருகிறார்களே என்பதை யானும் சொல்லி விட்டேன் அப்பனே எதனை என்றால்.?

அப்பனே யானும் கருணை உள்ளம் கொண்டவன் தான். அனைத்து மக்களும் நல்வழிக்காகவே யான் போராடிப் போராடி அப்பனே பல யுகங்களாக பல மனிதர்களுக்கும் சொல்லி சொல்லி ஏன்??

ராமனுக்கும் வழிகாட்டினேன்.
சீதைக்கும் வழிகாட்டினேன்.

ஏன் பல பல சோழர்களுக்கும் வடக்கில் உள்ள ஒவ்வொரு யுகத்திலும் வாழ்ந்த பல பல அரசர்களுக்கும் வழி காட்டினேன்.

ஏன்,  பிரம்மாவிற்கும் வழிகாட்டினேன்.

 ஈசனுக்கும் நற்செயல்கள் எல்லாம் சொல்லி வழி காட்டினேன் எவை என்று கூற பிள்ளையோனுக்கும் வழிகாட்டினேன். முருகனுக்கும் வழிகாட்டினேன்.

ஆனால் இவையன்றி கூற அவர்களும் அகத்தியா அகத்தியா நல்லது என்று கூட ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் மனிதனோ!! முட்டாள் மனிதனோ!! ஏற்றுக் கொள்ளவில்லையப்பா.

சொன்னால் இக் காதில்   பின் வாங்கி பின் அவற்றை எல்லாம் விட்டு விடுகின்றான்.

இதனை எல்லாம் எதனை என்று கூற அதனால்தான் அப்பனே எல்லை மீறி விட்டார்கள் மனிதர்கள் என்பேன் அப்பனே இதனையன்றி கூற இன்னும் ஓர் தடவை இவ்வாறு சென்று கொண்டிருந்தால் அகத்தியா நீ எல்லாம் பின் சித்தனா என்று கூட பின் எதனையும் என்று அறியாமலே என்னையும் சொல்லிவிட்டார்கள் அப்பனே பல பேர்களும். இனிமேலும் சொல்வார்கள் 

அதனால் அவ் பழிச்சொல்லுக்கு யான் ஆளாக மாட்டேன். சொல்லிவிட்டேன் அப்பனே அனைவருக்கும் அடிகள்!!! பலமாக யானும் சொல்லிவிட்டேன் எதனையும் என்று கூற சொல்லிச் சொல்லி அப்பனே பார்ப்பது அரிதல்ல.

எவை என்று கூற அப்பனே இதனையும் என்று அறியாமல் வேண்டாம் அப்பனே பொய்கள் பித்தலாட்டங்கள் அப்பனே.

யான் சித்தன், யான் மகான், யான் புலவன், யான் ரிஷி, இவையெல்லாம் அப்பனே  உண்மையானவையா???

அப்பனே இதனையும் என்று அறியாமல் வேண்டாம் அப்பனே வேண்டாம் அப்பனே பொய்கள்.

அப்பனே ஒரு ரிஷியவன் எவ்வாறு செய்வான்!! என்பது கூட தெரியுமா?? அப்பனே!!

எவ்வாறு என்பதையும் கூட ரிஷி என்று மூலாதாரத்தை அப்பனே பெயரை வைத்துக்கொண்டு ஏமாற்றாதீர்கள் அப்பனே.

இவையன்றி கூற ஆனால் சித்தன் இவையெல்லாம் சொல்லி ஏமாற்றி திரிகின்றார்கள்.

சித்தன் என்றால் பொருள் எவ்வாறு என்று தெரியுமா???

அட்டமா சித்து பெற்றவர்கள்தான் சித்தர்கள்.

அப்பனே மிதக்க வேண்டும்!!! பறக்க வேண்டும்!!! அப்பனே இவையன்றி கூற அப்பனே

ஏதாவது இவ்வுலகத்தையும் அழித்து பின் இவையன்றி கூற சித்தர்கள் அழியும் என்றால் அழிந்துவிடும். மழையே வா!! என்றால் வந்துவிடும். போ என்றால் போய்விடும் அப்பனே இவையன்றி அப்பனே. கடல் அலைகளும் அப்பனே நில்!!என்றால் நின்றுவிடும்.

ஆனாலும் மனிதன் பித்தலாட்டகாரன் என்பேன் அப்பனே.

இனிமேலும் விடப்போவதில்லை அப்பனே.

ஓர் ஆட்சியை எவ்வாறு என்பதைக்கூட இவ்வுலகத்தில் எவ்வாறு மாற்றி அமைப்போம் என்பதைக்கூட எங்களுக்கும் தெரியும் என்பேன்.

அப்பனே நல் விதமாக மாற்றங்கள் அப்பனே உரித்தாகுக.

இல்லை அப்பனே எவை என்று கூற பல பல புராணங்கள் இதிகாசங்கள் யான் பல மனிதர்களுக்கும் அப்பனே மகாபாரத போர்களிலும் எவ்வாறு என்பதை கூட எதனையும் என்று நிரூபிக்கும் அளவிற்கு கூட பல வார்த்தைகள் அப்பனே பல திருத்தலங்களிலும் அப்பனே  யான் இப்பொழுது கூட திரிந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே.

ஒழுங்காக மனிதன் இல்லையப்பா.

அதனால் நீ ஒழுங்காக இல்லை என்றால் அப்பனே இறைவனை குறை கூறுவதா??? அப்பனே

முதலில் நீ ஒழுங்காக நடந்து கொண்டால் அனைத்தும் நடக்கும் அனைத்தும் நிறைவேறும்.

நீயே ஒழுக்கமாக இல்லை அப்படி ?? எப்படி ??ஒழுங்காக நடக்கும்???

அப்பனே யோசித்துப்பார்!!! அப்பனே  உன் மனதை தொட்டு பார் !!!!அப்பனே

இவையன்றி கூற இன்னும் வாக்குகள் உண்டு பல சித்தர்களும் வந்து வாக்குரைப்பார்கள். ஒவ்வொருவரும் அப்பனே மனிதனை சமநிலைப்படுத்தவே.

அப்பனே முதலில் திருந்துங்கள் திருந்துங்கள்.

பொய்யப்பா!!! மனிதன். அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் அப்பனே அப்பப்பா!!!!!!!!!!!

அப்பனே வேண்டாம் அப்பனே.!! 

இவையன்றி கூற இன்னும் மாற்றங்கள் உண்டு.

ஆனாலும் கவலைகள் இல்லை அப்பனே நேர்வழிப் பாதையில் சென்று அப்பனே நல் வழியும் யாங்கள் உங்களுக்கும் நல் விதமாக கற்பிப்போம்.

அப்பனே வாழ்க்கையில் பிறந்து விட்டோம் என்றால் அப்பனே தின்றோம் அப்பனே வாழ்ந்தோம் அப்பனே உறங்கினோம் இவையெல்லாம் ஒரு வாழ்க்கையே இல்லையப்பா.

அப்பனே இவையன்றி கூற அனைத்து வகை உயிரினங்களும் இதைத் தான் செய்து கொண்டிருக்கின்றது.

ஆனால் மனிதப்பிறவி அப்பனே மனிதப்பிறவி பின் பெரும் பிறவியப்பா!!

இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அப்பனே இவ்வுலகத்தை ஆட்டிப் படைக்கலாம் மனிதனால்.

ஆனால் முட்டாள் மனிதனோ!!! அப்பனே எவை எவையோ!!! என்று எண்ணி அப்பனே தன்னை தானே கெடுத்துக் கொண்டு தன்னிடம் இருக்கும் அனைவரையும் கெடுத்துக் கொண்டு இருக்கின்றான் அப்பனே.

இவைதான் உலகமப்பா.

அப்பனே இன்னும் மாற்றங்கள் உண்டு என்பேன் அதனால் அப்பனே திருந்தி வாழுங்கள்.

அப்பனே இவையன்றி கூற வரும் வரும் ராகு காலத்தில் அப்பனே நல்விதமாக அப்பனே எவ்வாறு என்பதை கூட ஞாயிறு தோறும் வரும் ராகு காலத்தில் பைரவனை(கால பைரவர்) வணங்கினால் இன்னும் பெரியதப்பா!!!!!  நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும் என்பேன்.

இதனை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன். அவைமட்டும் இல்லாமல் இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே வரும் வரும் ராகு காலத்தில் அப்பனே நல் விதமாகவே அனுமானுக்கு அப்பனே வெற்றிலை மாலை சாற்றி தன் எண்ணத்தில் உள்ள குறைகள் பின் அவனுக்கு அவனிடத்தில் சொன்னால் அப்பனே அதி அற்புதம் நடக்கும் என்பேன் அப்பனே.

ஆனாலும் இவையெல்லாம் கூட இதுவும் ராகு காலத்தில் செய்துவிட வேண்டும் என்பேன் ஞாயிறு தோறும் . ஆனால் பல மக்களுக்கு இது தெரியாமல் போய்விட்டது அப்பனே.

சொல்லிவிட்டேன் சூட்சுமத்தை அப்பனே.

இன்னும் பல வழிகளிலும் ஞானத்தைப் பெற வரும் வரும் காலங்களில் சொல்லிக்கொண்டே இருப்பேன் அப்பனே.

நலன்கள் ஏற்படும் என்பேன் அப்பனே கவலைகள் இல்லை  அப்பனே நலமாக நலமாக.

மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன் பலமாகவே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

7 comments:

  1. Om Namahshivaya
    Om Namahshivaya
    Om Namahshivaya

    ReplyDelete
  2. நன்றி மகரிஷி. 25 ஆண்டுகளாக ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு விளக்கு ஏற்றி வருகின்றேன்.ஆனால் ராகு காலத்தில் வெற்றிலை மாலை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபடவேண்டும் என்பது யாருக்கும் தெரியாது. இதை உம் பக்தர்களுக்காக இந்த ரகசியத்தை தெரியப்படுத்தின உங்களை நினைத்தால் சொல்ல வார்த்தைகள் இல்லை. தயவு செய்து இந்த மாதிரி வழிபாடு ரகசியத்தை உங்க பக்தர்களுக்காக தொடர்ந்து சொல்லுங்கள். இது போதும் எங்களுக்கு..மிக்க நன்றி அகத்தியரே.

    ReplyDelete
  3. ஓம் அகத்தியர் திருவடி சரணம்.

    ReplyDelete
  4. ஞாயிறு கிழமை ராகு காலம் என்பது அவ்வளவு சக்தி வாய்ந்த த இறைவா உத்தரவு சித்தரப்பா

    ReplyDelete
  5. Om Sri lopamudra Samatha Agasthiar Thiruvadi Saranam.

    ReplyDelete
  6. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  7. Translation:
    https://drive.google.com/file/d/1ZtiY1mUugg3-D46Mm86b7ZuBkmvKz3_w/view?usp=sharing

    ReplyDelete