​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 13 February 2022

சித்தன் அருள் - 1085 - அன்புடன் அகத்தியர் - சிவகாமீஸ்வரர் சிவகாமீஸ்வரி ஆலயம், காவனூர்!


6/02/2022 அருள்மிகு ஸ்ரீ சிவகாமீஸ்வரர் சிவகாமீஸ்வரி ஆலயத்தில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு பாகம் 2 

நல் விதமாகவே அப்பனே எவ்வாறு எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலைகள் உண்டு என்பேன்

ஆனாலும் அப்பனே இதைத்தான் தெரிவித்துக் கொள்கின்றேன் அப்பனே அப்பனே கஷ்டங்கள் எவ்வாறு என்பதையும் கூட வரும் அதனை எல்லாம் தாண்டி வந்தால் தான் இறைவனையே பார்க்க முடியும் என்பேன் ஆனாலும் கஷ்டங்கள் வந்துவிட்டால் மனிதன் நினைத்துக் கொள்கிறான் ஐயோ கஷ்டம் கஷ்டம் என்பதை கூட இறைவனை நினைத்தாலே கஷ்டம்தான் என்று கூட...

ஆனால் இறைவன் நினைப்பான் மனிதன் முட்டாள் என்பேன்.

முட்டாளே!!!

யான் உன் அருகிலேயே இருக்கின்றேன் அது கூடதெரியாதா?? என்று சொல்லி பலவழிகளிலும் இருப்பான் .

ஆனாலும் மனிதன் எண்ணமோ கஷ்டங்கள் கஷ்டங்களே என்று எண்ணிக் கொண்டு இருப்பான். மனிதன் இதனால் தான் முட்டாள் என்பேன் மனிதனை கூட.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட இதை பல மனிதர்களுக்கு பல மனிதர்களுக்கும் சொல்லிவிட்டேன் அப்பனே.

அப்பனே இன்பத்திலே இருந்தாலும் கூட அப்பனே மனிதனுக்கு வாழத் தெரியாமல் போய்விடும் அப்பனே.

இறைவன் கூட பின் காட்சியளிக்க மாட்டான் என்பேன். 

ஆனால் துன்பத்தில் இருந்தால்தான் எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலை புரிந்து அப்பனே எவை என்று கூற துன்பம் துன்பம் பட்டு பட்டு இறைவனை தேடி தேடி அலைகின்றான் அப்பனே.

அப்பொழுதுதான் அவந்தனக்கு உண்மைப் பொருள் என்னவென்று தெரிகின்றது.


அதனால் துன்பம் வருவது அப்பனே எங்களுக்கு மிக்க சந்தோஷமே என்பேன்.

அப்பனே உண்மைப் பொருளைத் தேடி விட்டால் அப்பனே மனிதனுக்கு பிறவிகளே இல்லையாம்.

ஏனப்பா மனிதர்களே பிறவிகள் எடுத்து எடுத்து துன்பத்தில் மிதந்து மிதந்து மீண்டும் மீண்டும் வருந்தி வருந்தி வருகின்றீர்கள் அப்பனே இவையெல்லாம் பிறப்புக்கள் இல்லை அப்பனே.

அப்பனே இறைவனைச் சரணடைந்தால் அப்பனே நற்பிறவி கிட்டி எதனையும் என்றும் சொன்னவாறு அனைத்தும் நிறைவேறும் அப்பனே.

இவ்வுலகத்தில் அப்பனே ஈசனை விட உயர்ந்த சக்திகள் இல்லை என்று கூட பல சித்தர்களும் அப்பனே உரைத்தும் விட்டார்கள் என்பேன். அதனால் அப்பனே ஈசன் ஒருவனே அப்பனே எவை என்று கூற சக்தி மிகுந்தவன். அவனால் முடியாதது இவ்வுலகத்தில் ஒன்றுமில்லை.

ஆனால் மனிதனோ அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் அப்பனே இவையெல்லாம் பொய் பித்தலாட்டம் அப்பனே நம்பி விடாதீர்கள் எளிதில் கூட.

ஏனென்றால் கலியுகத்தில் மனிதன் இப்படித்தான் காசுக்காக செய்வான் என்பேன்.

கோடிகோடி இன்னும் திருடர்கள் வருவார்களப்பா.

அப்பனே அதனால்தான் அப்பனே எவை என்று கூற எதனையும் என்று கூற அப்பனே உன் மனது நன்றாக இருந்தால் நீ எதையுமே செய்ய வேண்டாம் என்பேன்.

இறைவனே உன் மனதில் குடி கொள்வான் என்பேன்.

அதனால் அப்பனே மந்திரம் ஜெபிக்க தேவையில்லை இறைவனிடம் சென்று வணங்கக்கூடியது இல்லை அப்பனே பல யோகாசனங்கள் செய்வதும் இல்லை அப்பனே பல வாசிகளும் தேவை இல்லை என்பேன் அப்பனே.

ஆனால் இவையன்றி கூற அனைத்தும் எதற்காக என்றால் அப்பனே மனதை அடக்குவதற்கே!!! என்பேன்.

அதனால் மனது சுத்தமாக இருந்தால் இறைவன் அங்கு குடி கொள்வான் என்பேன்.

அப்பனே அதனால் தான் அனைத்திற்கும் காரணம் மனதே!! என்பேன்.

அப்பனே ஒன்றைச் சொல்கிறேன் அப்பனே  இவ் தரித்திர உலகத்தில் அப்பனே ஈசன் அருளை பெற்றவர்கள் நீங்கள் புண்ணியவான்களே என்பேன் அப்பனே.

இவை அனைத்திற்கும் அப்பனே அனைத்து மனிதர்களுக்கும் சொல்கின்றேன் அப்பனே.

ஈசனை அடைவது அவ்வளவு சுலபமில்லை அப்பனே.

அப்பனே ஈசனை அடைந்தாலும் இவந்தன் அப்பனே எப்படி காண்பான் இவந்தனுக்கு கஷ்டங்கள் கொடுப்பேன் பின் இவந்தனும் அப்பனே பின் நல் முறையாக நம்தனை பிடித்து கொள்கின்றானா?? என்று கூட அப்பனே கஷ்டங்கள் மென்மேலும் கொடுப்பான் என்பேன்.

ஆனாலும் பார்வதிதேவி எவ்வாறு என்பதையும் கூட ஈசனே!!! ஈசனே!!! இவ்வாறு மனிதர்களுக்கு கஷ்டம் வைத்தால் எப்படி உன்னை ஏற்பார்கள்??? என்று கூட அடிக்கடி எவ்வாறு என்பதையும் கூட ஈசனிடத்திலே பார்வதிதேவியும் கூறுவாள்.

ஆனாலும் சோதனைகள் இல்லாமல் என்னை வந்தடைந்து விட்டால் அதற்கு மதிப்பு கிடையாது. அதனால் சோதனைகள் கடந்து கடந்து வந்தால் அவர்களை யானே நேரில் நல் விதமாக தரிசித்து அவர்களுக்கு பல ஆசிகள் கொடுத்து என்பால் அழைத்து விடுவேன்.

அதனால் தான் சொல்கின்றேன் என்று கூட ஈசனே பின் சொல்லி விடுவான் பார்வதி தேவியிடம்.

அதனால்தான் அப்பனே ஈசனை நெருங்க முடியாது என்பேன்.

நெருங்கி விட்டாலும் துன்பத்தில் மிதப்பீர்கள் என்பேன்.

அத் துன்பத்திற்கு பன்மடங்கு ஈசன் அனைத்தும் கொடுப்பான் என்பேன்.

அதனால் எவரும் கவலைப்பட தேவை இல்லை என்பேன். எதனையும் என்று கூற அப்பனே பிறப்பு அப்பனே எவ்வாறு என்பது தெரியாமலே மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான் அப்பனே.

வாழ்ந்து வாழ்ந்து அப்பனே கடைசியில் தான் தெரிகின்றது இதெல்லாம் இவை இவை எல்லாம் ஒரு வாழ்க்கையா என்று கூட..

அப்பொழுதுதான் அப்பனே இவ்வாறு இறைவனை கூட நாம் நம்முடைய செயல்கள் தொட விட வில்லையே என்று வருத்தம் அடைகிறான். அப்பனே.

அப்பனே இறுதியில் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் அப்பனே... இவையன்றி கூற இறைவன் தந்த இப் பிறவியினை நல்விதமாகவே வாழவேண்டும் அப்பனே 

மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே அதி விரைவிலே!

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்!

2 comments:

  1. அப்பனே இறுதியில் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் அப்பனே... இவையன்றி கூற இறைவன் தந்த இப் பிறவியினை நல்விதமாகவே வாழவேண்டும் அப்பனே

    ReplyDelete
  2. Translation:
    https://drive.google.com/file/d/1CvnalV2_SE7K_YbbrRgN0Z6NOUuMqYt5/view?usp=sharing

    ReplyDelete