​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 6 February 2022

சித்தன் அருள் - 1082 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு!


1/02/2022 அன்று தை அமாவாசை திதியில் காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொதுவாக்கு. 

வாக்குரைத்த ஸ்தலம். திருவண்ணாமலை 

உலகத்தை படைத்து அழகாக காக்கின்ற சிவகாமியையும் பணிந்து நமச்சிவாயத்தையும் பணிந்து பரப்புகின்றேன் வாக்குகளாக புஜண்ட முனி. 

எண்ணற்ற மனிதர்கள், கோடிகோடி வந்தார்கள் என்பேன். ஆனாலும் பிறவி பயனை தெரியாமல் திரும்பவும் பின் போய் சேர்ந்து திரும்பவும் மனிதர்கள் வந்தார்கள் என்பேன்.

வட்டம் உலகம் பின் வட்டம் வட்டமாகவே பின் மனிதனுடைய செயல்கள் சென்றான் வந்தான் சென்றான் வந்தான் இவைப் போலத்தான் வாழ்க்கையும் வந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் ஒன்றும் பயனில்லை மனிதனுக்கு.

அதனால் மனிதனே எதையென்று குறிப்பிடுவது??

ஆனாலும் பல ஞானியர்களும் பிறந்து விட்டு பின் மனிதர்களுக்கு எதை என்று சொல்வது?? சொல்வது தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோம் ""இப்படி வாழ்"" என்று. 

ஆனாலும் பல மனிதர்களின் செயல்கள் புத்திகெட்டதாக தெரிகின்றது.

புத்தி கெட்ட மனிதன் மாயையில் சிக்கிக் கொண்டு புத்திகெட்டதாகவே அலைகின்றான் இப்புவியுலகில்.

அதனால் சித்தர்கள் யாங்கள்  இனி மேலும் மனிதர்களை காப்போம்.

ஆனாலும் மனிதன் மனிதனை கொன்று தின்னும் அளவிற்குக்கூட உலகம் மாறிவிட்டது.

உலகம் மாறிவிட்டது என்பதற்கு பின் எதை?? என்று குறிப்பிட??

மனிதன்தான் மாறிவிட்டான். மனிதனின் எண்ணங்கள் மாற மாற இறைவனும் நிச்சயம் மாறுவான் என்பேன்.

ஏனென்றால் மனிதனை யான் கூட பொய்யென்று குறிப்பிடுவேன்.

ஏன்?? யான் கூட இல்லை அனைத்து சித்தர்களுமே மனிதனை இனிமேலும் ""பொய்யான்"" என்றுதான் குறிப்பிடுவார்கள்.

ஏனென்றால் மனிதனின் செயல்கள் எல்லை மீறிவிட்டது.

மனிதன் வாயைத் திறந்தாலே இனிமேலும் பொய்கள் தான் தாண்டவமாடும் என்பேன்.

இதனால் யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். நம்பிவிடாதீர்கள் என்பதற்கிணங்க சித்தர்கள்  யாங்கள் எதனை என்று கூட பின் மலர்ந்து ஏறும் என்பதுஆனாலும் இதை என்று கூற சித்தன் பேசுவான் என்று பொய் சொல்லி ஏமாற்றி வலம் வருவான் வரும் காலங்களில்.

யாங்கள் கூட நகை கின்றோம் அவர்களைப் பார்த்து. பார்த்து ஆனாலும் இவையன்றி கூற பல வழிகளிலும் அவர்களுக்கு கஷ்டத்தை யாங்களே  கொடுத்துவிட்டோம்.

மனிதா!!! பின் ஏன்?? இவ்வாறு? நாடகம் நடத்துகின்றான் என்றால்? அனைத்தும் பணத்திற்காகவே.

இதனையுமன்றி கூற யாங்களே தண்டித்தாலும் திரும்பவும் வந்து எங்களையே சீண்டுகின்றான்.

ஏனப்பா??  யாங்கள் தான் கிடைத்தோமா??? 

மனிதா ஏன்?? நீதான் பேசுகின்றாய் என்று நீயே குறிப்பிட வேண்டியது தானே!!!!!

வேண்டாம்.

அகத்தியனும் கருணை கொண்டு வலம் வந்து கொண்டே இருக்கின்றான் இப்புவியுலகில்.

புவிஉலகில் என்பதற்கிணங்க ஆனாலும் அகத்தியன் மௌனம் சாதித்து கொண்டிருக்கின்றான் தன் பக்தர்களுக்கு நல்லது செய்வது என்று.

ஆனாலும் இப்படி இருந்தால் மனிதர்களுக்கு என்ன செய்வது?? என்று கூட தெரியாமல் பின் திகைக்கின்றான், அகத்தியன்.

ஆனாலும் சொல்கின்றேன் இறைவன் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றான் ஆனால் மனிதன் பெற்றுக் கொள்வதற்காகத்தான் எவை என்று நிர்மாணித்த அளவிற்கு மனிதர்கள் செயல்கள் அப்படி போய்விட்டது.

திருத்தலங்கள் எண்ணற்ற திருத்தலங்கள் இன்னும் மறைந்து கிடக்கின்றது சொல்லிவிட்டேன் பல பல யுகங்களில் வாழ்ந்த அரசர்கள் இவ்வுலகத்தை நன்றாக இருக்கவேண்டும் என்று கூட எண்ணினார்கள் 

ஆனாலும் தீயவர்கள் பின் திருக்கோயில்களை அழித்தால்தான் பின் நம்தனை நம்புவார்கள் என்று பல திருத்தலங்களை அழித்தார்கள்.

இதுகூட காலங்களாக இப்பொழுது கூட நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் யாங்கள் விடமாட்டோம்.

மனிதா!!! பொய்யான பக்திகளை காட்டி ஏன்?? ஏமாற்றுகின்றாய்???

ஏன்?? உன்னால் இவையன்றி கூட ஒரு இறைவன் தலத்தை கூட காக்க முடியவில்லை??

ஆனால் மறைந்திருக்கும் பொருளை மறைந்திருக்கும் பொருளை பின் வணங்கி இவந்தன் என்ன செய்ய போகிறான் இவனால் என்ன முடியும்?? என்று தானே பக்தியை காட்டினால் பின் இதையன்றி கூற பின் பக்தி உண்மையா?? பின் மனிதன் உண்மையா?? என்று பார்த்தால் மனிதனும் பொய் பக்தியும் பொய்.

யான் பல யுகங்களாக வாழ்ந்துவிட்டேன் மனிதனைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.

ஆனால் வாழ்கின்றான்! எதைச் சொல்லி??

யாங்கள் சொல்லிச்சொல்லி அலுத்தும் விட்டோம்.

நீதி !!இல்லை நியாயம் இல்லை !!தர்மம் இல்லை!! அன்பு இல்லை!! பாசம் இல்லை!!

ஆனால் இருக்கின்றது!! பொய் பித்தலாட்டங்கள் ஏமாற்றுவது!! பிறரை எப்படி? ஏமாற்றுவது? தரித்திர மனிதனுக்கு அனைத்தும் தெரிந்திருக்கின்றது, நல்லவை தவிர.!.

ஆனாலும் மனிதனை மனிதன் நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை என்று யான் சொல்லிவிட்டேன். 

சித்தர்களை ஏமாற்றி ஏமாற்றி நடித்து வருபவர்களுக்கும் யாங்கள் தண்டனை கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம்.

ஆனாலும் அதை நிறுத்தப்போவதாக தெரியவில்லை.

கஷ்டங்கள் தானே ஏதாவது சொல்லி ஏதாவது பரிகாரம் செய்தால் போய்விடும் என்று எண்ணி விடுகிறார்கள்.

ஆனாலும் முடியாதப்பா!! முடியாதப்பா.

யாங்கள் கூட ஆனாலும் என்பெயரை(காகபுஜண்டர்) சொல்லியும் கூட ஏமாற்றி பிழைப்பு நடத்தி விட்டனர்.

ஆனாலும் தண்டனை கொடுத்து விட்டேன் யானும்.

வேண்டாம் அய்யனே அப்பனே என்று கூட அகத்தியனா???  யான்?? என்று!! செல்லமாக கூறுவதற்கு????

புஜண்டன். 

புஜண்டன் எவ்வாறு என்பதை கூட யாருக்கும் அறியாதது பின் அனைத்தும் தெரிந்தவன் யான் என்றே சொல்லுவேன்.

பிரம்மாவையும் தெரியும் ஈசனையும் தெரியும் அனைத்தும் தெரியும்.

இவ்வுலகத்தை படைத்ததற்கு முன்பே யான் ன் பிறந்து விட்டேன்.

ஆனாலும் படைத்தான் பிரம்மன்.

பிரம்மனுக்கு முன்னே ஈசன் தான் மனிதனை படைத்தான்.

பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.

ஈசனும்  போனால் போகட்டும், போனால் போகட்டும் என்று கூட.

ஆனாலும் மனிதா உன்னிடத்தில் பல அறிவுகள் கொடுத்திருக்கின்றான்.

அதைக் கூட உபயோகிக்க தெரியவில்லையே?? மானிடப் பிறவியே!!

பொய்யா!!

சரியான முறையில் உபயோகித்து விட்டால் பலங்கள் உன்னிடத்திலேயே இருக்கின்றன.

மனிதனை எவ்வாறு என்பதை கூட மனது ஒரு எதனை என்று கூட பின் அலை பாய்கின்றது.

இனிமேலும் மாயைகளில் சிக்கி கொண்டு தவிப்பார்கள் பாருங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள்.

ஆனாலும் எதனை என்று எதனையும் என்றுகூற இருப்பிடம் இல்லையப்பா. மனிதனே அனாதையப்பா.

தான் அனாதை என்று தெரியாமல் கூட சொந்தங்களை ஏற்படுத்தி ஏற்படுத்தி பின் அவ் சொந்தங்களும் போய்விடுகின்றது கடைசியில் மீண்டும் அனாதையாக.

குழந்தையாக பிறக்கின்றான் அழுகின்றான் ஒன்றும் தெரியாமல் திரும்பவும் போய் சேர்கின்ற பொழுது குழந்தையாகவே பின் கூனியும் விழுந்து விடுகின்றது. ஒன்றும் தெரியாமலேயே திரும்பவும் போய் விடுகின்றான்.

நடுவில் என்னென்ன?? செய்தாய்? மனிதா??

வேண்டாம், யோசித்துக் கொள்!!

திரும்பவும் பிறக்கின்றான் ஒன்றும் தெரியாமலே.

ஆ!! என்று !! ஆ என்று பிறக்கும்போது குழந்தை சொல்கின்றது!! அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா???

தெரியுமா???

தெரிந்து கொள்ளுங்கள்!!

குழந்தை பிறக்கும்பொழுது முதலில் ஆ!!!  என்ற சத்தம் கேட்கும். அதனையும் யான் பலபல கோடிகளாக பார்த்துவிட்டேன்.

ஆனால் அந்த குழந்தைக்கு தெரியும்.

ஆ!!!!  இந்த உலகத்தில் பிறந்து விட்டோமே மனித ஜென்மத்திலாக எவ்வாறெல்லாம் கஷ்டப்பட போகிறோம் என்று கூட.

அதனால் தான் ஆ!!! என்று கத்துகின்றது.

இதனையும் என்றுகூட ஆனால் அது தெரியாமல் வளர்கின்றது.

ஆனாலும் இதையன்றி கூற சுகத்திற்காகவே உண்டு இதனையும் என்று கூற...

மனிதா!!!  எப்பிறவி எடுத்தாலும் மனிதர்களை யான் காரித்தான் துப்புவேன் . என்பேன்.

இன்னும் கூட வாழ்ந்து கொண்டேதான் இருக்கின்றேன்.

அப்பப்பா!!!!! இதனையும் ஈசனும் பொறுத்துக் கொண்டு தான் இருக்கின்றான்.

அதைவிட அகத்தியன்!!! அகத்தியன் கருணை உள்ளவன் கருணை உள்ளவன் அதனால்தான் அகத்தியன் பெயரைச் சொல்லியும் ஏமாற்றிப் பிழைப்பவர்களை அகத்தியனும் மன்னித்து மன்னித்து விடுகின்றான்.

ஆனாலும் யான் மன்னிக்கப் போவதில்லை இனிமேலும் மனிதர்களை.

எதனால்??? எதனாலென்றால்??

அப்பனே அப்படியும் யான் செல்லமாக குறிப்பிட்ட ஆகையால் கந்தன் இவையன்றி கூற கலியுகக் கடவுள் கந்தன் கூட நினைத்துக் கொண்டிருக்கின்றான். மனிதர்களை காப்பதற்கு கூட.

ஆனாலும் வழி வகுப்பான் கந்தன்.

நிச்சயமாய் நம்புங்கள் என்றுகூற.

ஆனாலும் யாங்கள் சித்தர்கள் எங்கள் அருள் இல்லாமல் இறைவனை நேரடியாக காண முடியாது என்பேன்.

யாங்கள் தான் இறைவனை கூட நெருக்கி விடுவோம்.

ஆதி சித்தன் நமச்சிவாயனை கூட பணிந்து பணிந்து சொல்கின்றேன் இதனையும் கூட.

ஆனாலும் எந்தனுக்கு முன்பே கொடுத்துவிட்டான் மகேஸ்வரன்.

புஜண்ட முனியே!!! இவ்வுலகத்தில் எவ்வாறு நடக்கும் !!என்பது தர்மம் தலைகீழாகும். அப்பொழுது நீ!! மனிதனை தண்டிக்கலாம் என்று.

ஆனாலும் யானோ பொறுத்திருந்து பார்ப்போம் .ஆனாலும் நிச்சயம் தண்டனைகள் கொடுப்பேன் என்று கூட.

ஆனாலும் அகத்தியன், என்னிடம் சொன்னான்! எதை என்று கூற?!!

முனியே!!! காக்கை முனியே!!!

வேண்டாம்!! மனிதர்கள் பிழைக்கட்டும்.! பிழைக்கட்டும்! என்று.

ஆனாலும் யானும் கூட சரி என்று விட்டுவிட்டேன்.

ஆனாலும் இப்பொழுது பார்த்தால் யானும் அகத்தியனிடம் சென்றேன்.

சென்றேன்.!... அகத்தியா!!! எப்படி இவையெல்லாம்!!! என்றுகூற... ஆனாலும் அகத்தியன் அப்பொழுது கூட என்னவென்று பின் சொன்னான்.. பின் இப்பொழுது தண்டிக்கலாமா என்றுகூட அகத்தியனிடம் கூறினேன்.

ஆனாலும் அகத்தியன் அப்பொழுது கூட தண்டிக்க வேண்டாம் என்று கூட மனதால் சொல்லவில்லை மௌனத்தை காத்திருந்தான்.

காத்திருந்தான் என்பதற்கிணங்க அனைத்து சித்தர்களும் வந்து தான் கொண்டிருக்கின்றார்கள் மாற்றி அமைப்போம் ஆனால் மனிதனின் எண்ணத்தை மாற்றி முதலில் மனிதனின் எண்ணத்தை மாற்றினால் தான் உண்டு அனைத்தும் கூட.

இவ்வுலகத்தில் தவறுகள் யாரால் நடக்கின்றது என்றால் மனிதனால் தான் என்பேன்.

மனிதனால்!!!! அதனால் தான் சொல்கின்றேன் எண்ணத்தை விட்டு விடுங்கள்.

சில எண்ணத்தை விட்டுவிட்டு இறைவன்பால் செலுத்துங்கள் போதுமானது.

இறைவனே அனைத்தும் கற்றுக் கொடுப்பான்.

மனிதனுக்கு மனிதன் கற்றுக் கொடுப்பதா????!!!!

நகைக்கின்றேன் யான்!!!!!

மனிதா ஏன்?? உந்தனக்கு புத்திகள் இல்லை!!?

பின் திரும்ப திரும்ப சொல்லி விடுகின்றேன் சொல்லி விடுகின்றேன் பின் புத்திகள் இல்லாத மனிதா!!!

புத்திகள் பிறக்கும் பொழுதே கொடுத்து அனுப்புகிறான். ஆனாலும் மாயையில் சிக்கிக் கொண்டு புத்தி அழிந்து விடுகின்றது.

அவ் மாயையில் சிக்காதவனே பின் நன்கு வளர்ந்துவிடுகின்றான். ஆனால் அவந்தனும் நன்கு வளர்ந்து ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றான்.

இதனால் தான் சொன்னேன் யாரிடத்தில் தவறு என்றால் இறைவனிடத்தும் தவறில்லை பின் பலபல சித்தர்களிடத்தும் தவறுகள் இல்லை. மனிதனிடத்தில் தான் தவறு.

அனைத்தும் செய்துவிட்டு இறைவா என்னை காப்பாற்று என்றால் யான் சொல்லிவிட்டேன்

இதையும் பல வாக்குகளிலும் பல சித்தர்களும் சொல்லிவிட்டார்கள்.

பின் இறைவன் என்ன?? எதிர் நோக்குகின்றானா?? 

ஆனாலும் சொல்கின்றார்கள் மனிதன் அனைத்தும் செய்ய முடியுமாம்.

மனிதனால் அனைத்தும் செய்ய முடியுமா??

சொல்கின்றேன் ஒன்றை.

உயிரை பிழைக்க வைக்க முடியுமா??

ஆனால் அது எங்களுக்கு சாதாரணம். !!ஆனாலும் அதை கூட செய்யாத மனிதனுக்கு அனைத்தும் தெரியுமாம்!!!

ஆனால் அர்த்தம் உண்டு என்பேன். எதை என்று கூற ஆனாலும் இன்னொன்றையும் தெரிவிக்கின்றேன்.

மனிதா உன்னால் அனைத்தும் செய்ய முடியும் என்றால்? ஒரு நோயை குணப்படுத்து "பார்ப்போம்.

அதைக் கூட தெரியாத மனிதன் அனைத்தும் செய்கின்றானாம்!!! 

சரி !!இவையெல்லாம் பார்த்துவிட்டு சென்றோம்.

வயதானதை, முதிர்வாவதை, வயது ஆக ஆக முதிர்ந்த நிலை ஏற்படுகின்றதே அதை ஏன்? இளமையாக வைக்க கூடாது?????

பார்ப்போம் இதையாவது செய்.

இதுவும் செய்ய முடியாது ஆனால். மனிதன் என்னால் முடியும் என்று பித்தலாட்டங்கள். 

அதை விட்டு இவையன்றி கூற சில மனிதர்களுக்கு கால் கால் ஊனங்கள் இவையன்றி கூற அதைக் கூட எங்களால் சரிப்படுத்த முடியும் ஆனால் மனிதனால் பின் சரிப்படுத்த முடியுமா????

மனிதா!!! இதிலிருந்து தெரிந்து கொள்.

பொய் பொய் அதனால் தான் மனிதனை பொய் என்போம்.

ஏமாற்றி ஏமாற்றி யாங்கள் இதனையும் என்று கூற இனிமேலும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் மனிதர்கள்.

அப்பனே !!அப்பனே!! என்றெல்லாம் அகத்தியன் செல்லமாக மனிதர்களை குறிப்பிட்டு குறிப்பிட்டு ஆனாலும் அதற்காக அகத்தியன் கூட வேதனைப்பட்டு அகத்தியனுக்கு கூட இவையன்றி கூற பணம் வேண்டும், பொருள் வேண்டும், குழந்தைகள் வேண்டும், மனைவிகள் வேண்டும், பல பல, பல வேண்டும் சொத்துக்கள் வேண்டும், என்று கூட.

ஆனாலும் இறைவா நீ தான் வேண்டும் என்று கூட யாரும் சொன்னதே இல்லையப்பா.

அதனால் எவ்வகையில் நீங்கள் மனிதர்களிடத்திலிருந்து பக்திகள் பொய் இறைவனே நீ தான் அனைத்தும் செய்ய வேண்டும் என்று கூட விட்டு விடுங்கள் பார்ப்போம்.

அனைத்தும் செய்வானடா!!! 

முட்டாள் மனிதா!!!

ஏன்?? ஏன்?? இந்தப் பிழைப்பு!!!

அமைதியாக போய் திருத்தலத்தில் போய் தர்மம் ஏந்து. 

அதுவே பெரும் புண்ணியம்.

அதை விட்டுவிட்டு ஆனாலும் பாவங்கள் புண்ணியங்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்று எண்ணிப்பார்த்தால் புண்ணியங்களை கூட பாவங்கள் ஆக்குகின்றான் மனிதன்.

புனித பிறப்பில் கூட.

இதனால் கிரகங்களும் ஆட்சிகள் ஆட்சிகள் என்பதைக்கூட சொல்லிச் சென்று இதனைமென்று கூற

யான் கணிக்காத கிரகங்களா???

யான் சொல்லாத கிரகங்களா???

ஆனால் மனிதனின் சொல்கின்றேன் கிரகங்களைப் பற்றி சொன்னால், கிரகங்களுக்கு கோபமாகி விடும் அதனால் மனிதனின் எதனையன்றி கூற பின் சொல்கின்றேன்.

சனியவன்(சனிஸ்வரன்) நல்லதே செய்கின்றான் என்று சொல்லி அனுப்பினால் மனிதனின் வார்த்தை சனியவனுக்கு கோபம் வந்துவிடும்.

அதனால் அவ் மனிதனுக்கு பின் தாழ்ந்த எண்ணத்தோடு சில கஷ்டங்களை ஏற்படுத்தி விடுவான் சனியவன்.

ஆனாலும் கிரகங்களைப் பற்றி ஆனாலும் சனியவனை யாராவது சொன்னால் சனியவன் அதைச் செய்வான் இதை செய்வான் என்றெல்லாம் அவந்தனக்கு முதலில் அடி. யார் சனி நியாயாதிபதி அவன் தான் அவனை நிச்சயமாய் தண்டிப்பான்.

ஏனென்றால் சனிக்கு கோபம் அதிகம் என்பேன்.

என்னை பற்றியே!!! கூறுகின்றாயா?? என்பதற்கிணங்க. அதனால் கிரகங்களைப் பற்றி சொல்வோர்க்கும் கடைசியில் பலத்த நோய்களும் உருவாகும் என்பேன்.

கிரகங்கள் பற்றி அவர்களுக்கு இட்ட வேலையை அவர்கள் செய்கின்றார்கள்.

மனிதா நீ எதற்கு?? இப்புவியில் வந்தாய்?? என்பது, உன் நிலைமையை பார் அதைப்போன்று செய். அனைத்தும் மாறும் என்பேன்.

அதை விட்டுவிட்டு யான் இனிமேலும் சொல்லப் போவதில்லை. சொல்லப் போவதில்லை.

மனிதனின் எதனை என்று கூற??

மனிதனுக்கு பேய் பிடித்து இருக்கின்றதாம்!!!!

இதையும் யான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

மனிதா நீயே ஒரு பேய்!!!!

உன் மனம்தானப்பா பேய்!!!!

அனைத்தும் நடக்காத பொழுது போய் இதனையும் என்று கூற பார்த்தால் ஆட்டங்கள் !!பேயாட்டங்கள்.

அப்பனே இருக்கும் பொழுது பொய் இல்லாத பொழுதும் பொய். அந்த ஆன்மாவிற்கு. திரும்பவும் பிறவி எடுக்கும் பொழுதும் பொய்.

பொய்!! பொய்!! பொய்!! வட்டமாக சுற்றி வருகின்றது.

நினைத்துப் பார்த்தீர்களா!!! உண்மை எதுவென்று நிலை. உண்மை நிலை எதுவென்று கூற நீ சரியாக முறையில் செயல்பட்டால் யாங்களே உந்தனுக்கு பல வழிகளிலும் உதவுவோம் என்போம்.

ஆனாலும் இதில் கூட யாரும் இல்லையப்பா.

இனிமேலும் வருவார்களப்பா!! திருடர்கள்.

திருடர்கள் வருவார்களப்பா!!

அதையும் யாங்கள் நிச்சயமாய் பார்த்துக்கொள்வோம் பார்த்துக்கொள்வோம் அப்பனே திருந்துங்கள் நிச்சயமாய் வழிவகுப்போம் யாங்கள்.

பின் திருந்தாவிடிலும் யாங்கள் தண்டிப்போம் இதுதான் நடக்கப் போகின்றது.

மனிதனின் எல்லைகள் மீறி விட்டது.

இனிமேலும் சித்தர்கள் யாங்களும்  மீறுவோம் என்போம்.

ஒவ்வொரு விதத்திலும்!!

பலமாக மீண்டும் வாக்குகள் வந்து அகத்தியன் செப்புவான் என்பேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

5 comments:

  1. அகத்தியரின் கருணை மனம் நினைக்கும் போது கண்கள் கலங்குகிறது.இறைவா நீ அனைவருக்கும் உற்ற துணை

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகள் போற்றி,
    ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் திருவடிகள் போற்றி,
    நற்பவி, நற்பவி

    ReplyDelete
  3. ஓம் அம் அகத்தீசாய நமக 🙏🙏🙏

    ReplyDelete
  4. இறைவன் திருவடிகளை வணங்கி அவனையே பணிகின்றேன். சித்தர்கள் திருவடிகள் போற்றி

    ReplyDelete
  5. Translation:
    https://drive.google.com/file/d/1ulqqbnv727GyXd07QSHWU1Ca__2XSSLB/view?usp=sharing

    ReplyDelete