​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 12 February 2022

சித்தன் அருள் - 1084 - அன்புடன் அகத்தியர் - சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர்!


6/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய திருப்பணி குறித்து திருப்பணி குழுவினருக்கும் உலகத்திற்கும் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் ஓம் ஸ்ரீ சிவாகாமி தாயார் உடனுறை ஸ்ரீ சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனூர் கிராமம்.ஆற்காடு தாலுக்கா.இராணிப்பேட்டை மாவட்டம், காவனூர் அஞ்சல் 632507.

ஆதி சிவனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்.

அப்பனே பின் நன்மைகள் உண்டாகும் என்பேன்.

அப்பனே யான் சொன்னேன் தைத்திங்களில் இங்கு வருவேன் என்று. ஆனாலும் தை பிறந்த உடனே அப்பனே யான் வந்துவிட்டேன் அப்பனே நல்விதமாக அப்பனே அனைத்தும் யார் யார் எதனை மூலம் உருவாக்க வேண்டுமோ அவையெல்லாம் யானே உருவாக்கி தருகின்றேன் அப்பனே. கவலைகள் இல்லை வந்துவிட்டேன் அப்பனே.

நல் விதமாக மாற்றங்கள் உண்டு என்பேன். ஆனாலும் அப்பனே ஈசன் கண்ணை எவ்வாறு?? மனிதனால் கட்ட முடியும் ??என்பேன் இவையெல்லாம் தவறு என்பேன். அப்பனே.(ஆலய திருப்பணி குழுவினர் பணிகளை மேற்கொள்ள ஈசனின்  லிங்கத்தை துணிகளால் கட்டி வைத்து மூடி விட்டு பணிகளை செய்து வந்துள்ளார்கள் அது குறித்து குருநாதர் இப்படியெல்லாம் யாரும் எந்த ஆலயத்திலும் செய்யகூடாது என்று உரைத்தார்) 

அப்பனே உங்கள் கண்களை கட்டினால் அப்பனே உங்களுக்கு கோபம் வருமா? வராதா? என்று கூட!! நீங்களே சிறிது சிந்தித்துக் கொள்ளுங்கள்!!! அப்பனே .

இவையெல்லாம் மனிதனின் பேச்சுக்கள் தரித்திர பேச்சுக்கள் என்பேன் அப்பனே .

அப்பனே இவைபோன்ற தவறுகள் வரும் நாட்களில்  யாரும் பின் செய்யக் கூடாது என்பேன் அப்பனே எவை என்று கூற.

ஆனாலும் சித்தர்களும் நல் விதமாகவே வந்து வந்து சென்றுள்ளார்கள் என்பேன் அப்பனே.

யானும் இங்கு தங்கி விட்டேன் அப்பனே.

இதன் நிச்சயமாக எவ்வாறு என்பதைக்கூட காலமும் வந்துவிட்டது என்பேன் இவையன்றி கூற போதாதற்கு பின் புசுண்டமுனியும் (காக புஜண்டர்) அருளும் பரிபூரணமாக இருக்க புசுண்ட முனியும் இங்கே தங்கி நல்விதமாகவே அனைத்தும் செய்விப்பான். செய்விப்பவனும் நல் விதமாகவே கந்தனும் நல் விதமாகவே இங்கே வந்து வணங்கிட்டு சென்றுள்ளான்.ஓர் முறை. இவையன்றி கூற ஆனாலும் இங்கே எதனை என்றும் அறியாமலும் கூட இன்னும் சில பின் இறைவனுடைய சிலைகள் எவை என்று கூற இங்கு புதைந்துள்ளது என்பேன்.

ஆனாலும் இதற்கும் காரணம் ஈசனே இவையன்றி கூற எதனையும் என்று கூற எப்பொழுது நிரூபிக்கும் எதனை என்ற அளவிற்கும் கூட முடியாத அளவிற்கு கூட இவந்தன் நிச்சயமாய் பின் நல் விதமாகவே தன்னை தான் உயர்த்திக் கொள்வான் என்பேன் அதனால் நீங்கள் கருவியாக செயல்படுங்கள் இதைத்தான் பல வாக்குகளிலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

மனிதர்கள் நினைத்தால் ஈசனை நிச்சயமாய் எவ்வாறு என்பதையும் கூட அமைக்க முடியாது திருத்தலத்தை.

ஈசனே நினைக்க வேண்டும் என்பேன்.

அதனால்தான் யான் சொன்னேன் சிறிது காலம் பொறுத்திருக்க!! என்று. அதனால் ஈசன் எப்பொழுது நினைக்கின்றானோ அப்பொழுது தான் அமையும் என்பேன்.

ஆனாலும் சொல்லி விட்டேன் தைத்திங்களில் யான் வருகின்றேன் என்று கூட.

ஆனாலும் எவை என்று கூட பின் ஈசனவனும் நினைத்து விட்டான். எவை என்று கூற என்னையும் அழைத்து விட்டான் என்பேன். தைத்திங்களில் முதல் நாளிலே யான் வந்துவிட்டேன் இங்கு.

அப்பனே எவை என்று கூற சொல்லுகின்றேன் அப்பனே இவையன்றி கூற பின் எதனையும் என்று அறியாத அளவிற்கு கூட அனுதினமும் அப்பனே பூஜைகள் அப்பனே செய்து நல் விதமாக பின் எதனையும் என்றுகூட சில சில பிரசாதத்தையும் நல்விதமாக மனிதர்களுக்கு அப்பனே பின் உங்களால் முடிந்த அளவு கொடுக்க வேண்டும் என்பேன்.

இவ்வாறு அப்பனே கொடுத்துக் கொண்டே வந்தால் நல் ஆரோக்கியங்கள் எவை என்று கூறாத அளவிற்கும் கூட ஈசன் மகிழ்ந்து பின் அதி விரைவிலேயே ஏற்படுத்திக் கொள்வான் என்பது உண்மை.

அப்பனே இவையன்றி கூற இதனையும் என்று அறியாமல் வரும் சில நாட்களிலே புசுண்ட முனியும் வருவான் இங்கு.

எவை என்று கூற கொங்கணனும்(கொங்கணர்)வருவான். போகனும் (போகர்) வருவான். இவையன்றி கூற இன்னும் சில சித்தர்கள் ஞானியர்கள். வருவார்கள் அப்பனே. 

அப்பனே எவை என்று கூற ஈசனின் திருவிளையாடல்கள் எவ்வாறு என்பதையும் கூட எதனையும் என்று கூட நிரூபிக்கும் அளவிற்கும் கூட அன்று அன்று கூட இவையன்றி கூற இரவு நேரங்களில் அப்பனே மாசி மாதத்தில் வரும் இரவுதனில்(சிவராத்திரி) அப்பனே இவை என்று கூற புசுண்டமுனியும் இங்கு தங்கி வழிபட்டு சென்றுள்ளான் என்பேன் அப்பனே.

பின் இதனையும் என்று கூட பின் ஆனாலும் ஆலயம் சிறிது காலம் அழிந்துவிட்டது என்பேன் ஆனாலும் விடவில்லை இங்கு தங்கி விட்டு தான் சென்று இருக்கின்றான்.

ஆனாலும் இவையன்றி கூற கலியுகத்தில் பின் எதனையும் என்று கூட நிரூபிக்கும் அளவிற்கு கூட எழுந்து நிற்கின்றது அப்பனே ஈசனே எழுந்து நின்றான் என்பேன் .அதனால் மகிழ்ச்சி என்பேன் புசுண்ட முனிக்கும்.

திருப்பணி குழுவினர் கேள்வி

குருவே இந்த ஆலயம் யாரால் உருவாக்கப்பட்டது யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?? 

அப்பனே இவை என்று கூற எதனையும் என்று கூற நினைப்பதற்கு அளவிற்கு கூட அப்பனே வருடங்கள் எதை என்று கூற அப்பனே இதனையும் என்று கூற பின் சோழர்கள் வந்தார்கள் அவற்றின் காலமே  என்பேன்.(சோழர்கள் கால கோயில்.) 

திருப்பணி குழுவினர் கேள்வி

குருவே இந்த ஆலயத்தின் இறைவன் திருநாமம் என்னவென்று கூறுங்கள்!!! 

அப்பனே இவையன்றி கூற இதனையும் என்று அறியாமல் அப்பனே சொல்கின்றேன் அப்பனே.

ஈசனின் பெயர்

இவையன்றி கூற இப்பொழுது எதை வைத்துள்ளீர்களா அப்பனே அதையே பின்பற்றி கொள்ளலாம் என்பேன். (சிவகாமேஸ்வரர் சிவகாமேஸ்வரி தாயார் ). 

அப்பனே எவை என்று கூற இறைவனுக்கு இட்ட பெயர் அப்பனே இவந்தனுக்கு அனைத்துப் பெயர்களும் உண்டு என்பேன் இவந்தனக்கு . அதனால் அப்பனே இப் பெயர் வைப்பதா?? அப் பெயர் வைப்பதா?? என்பதெல்லாம் மனிதனின் கணக்கு என்பேன் அப்பனே.

அப்பனே நலமாக நலமாக எவை என்று கூற பல பல வழிகளிலும் அப்பனே ஓர் எதை என்று கூற இத்தலத்திற்கு வருபவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் அகன்று கொண்டிருந்தது என்பேன் அப்பனே.

இவையன்றி கூற ஆனாலும் இங்கு வந்து வணங்கிச் செல்பவர்களுக்கு அப்பனே பல வெற்றிகளும் அப்பனே அளித்துள்ளான் ஈசன். 

அதனால் எவை என்று கூற இதை அறிந்த அப்பனே "ஆங்கிலேயன்"(பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரி) சொல்கின்றார்களே இப்பொழுதும் கூட அவந்தனை. இவையன்றி கூட இவந்தன் எதனை என்று கூட பின் இங்கே வழிபாட்டுமுறைகள் பின் சாதாரணமாக இல்லை அனைத்தும் வந்து கூடி பின் வழிபட்டு வழிபாடுகள் பலவிதங்களிலும் நடந்திருக்கின்றது.

இதனை எவ்வாறு அறிவது என்று கூட தெரியாமல் ஆனாலும் அவந்தன் தளபதியாக இருந்து கண்டுபிடித்து இதனை இதனை இங்கே சென்றால் தான் மக்கள் நன்மை பெறுகிறார்கள் என்று கூட அவந்தன் யூகித்து விட்டு பின் இவையன்றி கூற மக்களை அடித்துத் துரத்தினான். நெருங்காத முடியாத அளவிற்கு கூட இங்கு.

இவைதன் அறியாமல் இதனையுமென்று கூற ஆனாலும் பின் காவலாளிகள் யாரும் இங்கு வரக்கூடாது என்று கூட தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பல ஆண்டுகளாக இங்கே காவலாளிகள் தங்கி விட்டனர் .யாரும் வழிபட வில்லை என்பேன். 

ஆனாலும் இதை எதனை என்றும் கூற இதனையும் பின்பற்றும் அளவிற்கு கூட இதனை அறிந்து அறிந்து பின் ஈசனும் தன்னை மறைத்துக் கொண்டான். சில நாட்களில் .

ஆனாலும் இவையன்றி கூற ஆனாலும் நல் விதமாக ஈசன் மறக்கவில்லை அப்பனே.

இதையன்றி கூற ஆனாலும் மனிதர்களுக்கு செய்து கொண்டுதான் இருந்தான் என்பேன். காணக்கிடைக்காத அற்புதங்களை கூட.

ஆனாலும் இவையன்றி கூற சரி என்று கூற பின் ஈசனே மறந்துவிட்டான்.

ஆனாலும் புசுண்ட முனியும் மறக்கவில்லை. ஈசனிடத்தில் சென்று, ஈசா!! இவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது??? உன்னுடையது எல்லாம் எதனையும் என்று கூற அனைத்தும் அறிந்தவன் நீயே!!! இவையெல்லாம் பின் மனிதனுக்கு சில எதனை என்றுகூட நிரூபிக்கும் அளவிற்கு கூட கஷ்டங்கள் என்றுகூட பல சிந்தனைகள் கூட புசுண்ட முனியின் பின் இவை என்று கூற பின் பார்வதி தேவியிடம் ஈசனிடத்திலும் உரையாடிக் கொண்டிருக்கையில் ஆனாலும் ,பொறுத்திரு 
புசுண்டனே!!! 

இவையன்றி கூற ஒரு காலம் வரும் அப்பொழுது யானே இதனை ஏற்படுத்திக் கொள்வேன் என்று கூட .

ஆனாலும் நன்று அதனையும் ஏற்படுத்திக் கொண்டான். இப்பொழுது மக்களை இனிமேலும் காப்பான் என்பேன்.

அதனால்தான் சொன்னேன் இவையெல்லாம் செய்யக் கூடாது என்பேன் மூடத்தனம் என்பேன். 

அப்பனே இவையன்றி கூற அதனால்தான் அப்பனே இன்னும் பல ஆலயங்களை இவ்வாறு தான் அழித்தார்கள் என்பேன் அப்பனே.

ஆனாலும் ,அவர்கள் ஓங்கி நின்றார்களா!!! என்ன??????

பேரும், புகழோடு நின்றார்களா!! என்ன ????

அழிந்தும் விட்டார்கள் அப்பனே.

ஆனாலும் கலியுகத்தில் இவைதன் நடைபெற்றிருக்கும் பொழுது சிறிது விட்டு விடுவான் ஈசன் என்பேன்.

ஆனால் நிச்சயம் அனைவரையும் அழித்து விடுவான் இருக்கும் இடம் தெரியாத வரை.

அப்பனே அவை அவை என்று கூற இதனையும் என்று கூற அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்.

அப்பனே அணையாத தீபத்தை இங்கு நிச்சயமாய் ஏற்றுதல் வேண்டும் அப்பனே. சில குறிப்பிட்ட தினங்களுக்கு.

அப்பனே இவையன்றி கூற? சர்ப்பங்களும் அப்பனே மிகுந்துள்ளது அடியில் கூட.

அப்பனே இவையன்றி கூற தேவ கன்னிகைகள் இவர்கள் தன் என்பேன். எதனையும் என்று கூற.

ஆனாலும் இதையன்றி கூற பல சிலைகளும் மறைத்து வைத்து அவர்கள்தன் பாதுகாப்பிலே இருக்கின்றது என்பேன். 

ஆலய திருப்பணி குழுவினர்

 கேள்வி 

குருவே!!  தற்சமயம் ஆலய திருப்பணி நடந்து கொண்டு இருக்கின்றது அந்த சிலைகள் கிடைக்குமா ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த பிரியப்படுகிறோம்!!! 

அப்பனே எவை என்று கூற ஆனாலும் சொல்லி விடுகின்றேன் எந்தனுக்கு தெரியும் என்பேன்.

ஆனால் ஈசனே இதற்கும் சாட்சி என்பேன்.

ஈசன் நினைத்தால் உடனே வர வைக்க முடியும் என்பேன். 

அப்பனே இவையன்றி கூற அப்பனே இவ்வாறெல்லாம் செய்தால் எப்படி ஈசன் சந்தோஷப்படுவான் ??என்பேன். 

முதலில் இதை அகற்றி விடுங்கள் என்பேன்.

அப்பனே இவையன்றி கூற ஆனாலும் யான் சொல்லிவிட்டேன் அப்பனே ஆனாலும் இங்கு அமர்ந்திருக்கும் அப்பனே அனைவருக்கும் ஒன்றை சொல்கின்றேன்.

அப்பனே யானும் இதை எவ்வாறு என்பதையும் கூட ஆகிப்போனது கூறவில்லை.

ஈசன் கனவிலே வந்து செப்புவான் என்பேன் அப்பனே உங்களுக்கே தெரிந்துவிடும் என்பேன்.

அப்பொழுது நீங்களே செய்து கொள்ளுங்கள் என்பேன்.

அப்பனே நலமாக நலமாக உண்டு. இதனையும் அறிந்து கூட சொல்லிவிட்டேன் வெற்றிகள் பல உண்டு என்பேன். இங்கு தரிசனம் செய்பவர்களுக்கும் வருங்காலத்தில் அப்பனே வெற்றிகளை சூடி பல துன்ப நிலைகளிலிருந்தும் அப்பனே அகற்றி நல்வழிப்படுத்துவான் ஈசன் என்பேன்.

அப்பனே இவ்வுலகத்திற்கு படியளந்தவன் ஈசன் என்பேன்.

இவையன்றி கூற இன்னும் பல திருத்தலங்கள் அழிந்து கொண்டே இருக்கின்றது என்பேன். பலப்பல யுகங்களிலும் ஆனாலும் அவ் நல் ஈசனே எவ்வாறு என்பதையும் கூட எழுந்து நிற்பான் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நல்விதமாக அப்பனே இக்கலியுகத்திலும் மக்களை ஈசனே காப்பான் என்பேன்.

எங்கள் போன்ற நல் விதமாக சித்தர்களும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள் அப்பனே.

இவையன்றி கூற மக்களை எவ்வாறு காப்பது எவ்வாறு பேணி காப்பது என்பதை கூட .

ஆனாலும் அப்பனே பல திருத்தலங்களை அப்பனே அடியோடு அழித்து விட்டார்கள் என்பேன் அப்பனே. 

அவையெல்லாம் யாங்கள் மேலே பின் நல்விதமாக எழுப்பச் செய்வோம் அப்பனே.

புது புது விதமான திருத்தலங்களும் அப்பனே உருவாக்குகிறார்கள்!!! என்ன லாபம்??? அப்பனே!

அவற்றால் ஆனால் மனிதனுக்கு சம்பாதிப்பதற்கே உருவாக்குகிறார்கள் என்பது கூட யான் அறிந்து கொண்டேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே இவையன்றி கூற அப்பனே ஆனாலும் போராட்டங்கள் மிகுந்து மிகுந்து அடியில் பலகோடி திருத்தலங்கள் ஒளிந்து நிற்கின்றது. அவை எழுப்பினால் தான் அப்பனே பழைய நிலைக்கு வரும் என்பேன் அப்பனே.

இவற்றைத்தான்,  யாங்கள் சித்தர்கள் செய்யப் போகின்றோம். இனிமேலும் கூட.

அப்பனே இவையன்றி கூற முருகன் கூட அப்பனே இதனை என்று கூற அவன் தகப்பன் ஈசன் பாசத்தால் இங்கு வந்து கொண்டுதான் சென்று கொண்டிருக்கின்றான் என்பேன். திருத்தணிகை மலையில் இருந்து கூட.

திருபணிக்குழுவினர் கேள்வி

குருவே திருத்தணி முருகனுக்கு சொந்தமான இடமும் இங்கே  கோயில் நிலங்கள் இங்கே உள்ளது என்று என்று கேள்வி பட்டிருக்கின்றோம். அது உண்மையா?? 

அப்பனே இவையன்றி கூற அப்பனே உண்டு உண்டு என்பேன். அதனால் அப்பனே முருகனும் நல் ஆசிகளுடன் அதி விரைவிலே ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே.

இங்கு நல் விதமாக அப்பனே நீரோட்டமும் நல்விதமாகவே அமையும் என்பேன் .குளத்தையும் கூட அமைக்க வேண்டும் என்பேன்.

குருவே!! திருப்பணிகுழுவில் இடம் பெற்றிருக்கும் அடியவர்களுக்கும் இவ்வாலயத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா??? 

அப்பனே இவையன்றி கூற அப்பனே நீங்கள் கேட்காவிடிலும் யான் நிச்சயமாய் சொல்லியிருப்பேன் அப்பனே.

இவையன்றி கூற அப்பனே நீங்கள் எவ்வகையாக வந்தவர்கள் என்று கூட அப்பனே உங்களுக்குப் பின் எவை என்று ஒரு காலத்தில் பல கஷ்டங்கள் அப்பனே. வாழ்க்கையிலும் சரி அப்பனே பல பிரச்சனைகள் இருந்து விட்டது. ஆனாலும் சொல்லிவிட்டேன் அப்பனே அப்பொழுதே. நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பேன் அப்பனே ஆனாலும் அப்பனே எவை என்று கூற இங்கு வந்து வந்து அனைத்தும் பெற்றுள்ளீர்கள் நீங்கள் என்பேன்.

அதனால் என்று கூற பல வெற்றிகளையும் அப்பனே  ஆளும் ஆளும் எவை என்று கூற பின் நல் விதமாக கிராமிய தலைவராகவும் இருந்துள்ளீர்கள் என்பேன்.

இதனால் பின் இதை இங்கு காவலர்கள் எவை என்று கூற அனைவரையும் துரத்திவிட்டனர் அதில் நீங்களும் அப்பனே.

இவையன்றி கூற நீங்களும் ஈசனே!!! ஈசனே!! என்று கூட அழுது சென்று உள்ளீர்கள் என்பேன்.

ஆனாலும் இவையன்றி கூற  அப்பொழுதுகூட எவையென்று கூற அண்ணாமலைக்கு சென்று நீங்கள் அனைவரும் முறையிட்டுள்ளீர்கள் என்பேன். எதனையுமென்று கூற. 

அப்பனே இவையெல்லாம் இப்பொழுது எதை என்று கூட நிரூபிக்கும் அளவிற்கு கூட அழித்து விட்டார்களே எதனை? எங்கு செல்வது?? நாங்களெல்லாம்??

வெற்றிகளை நீதான் எங்களுக்கு பல பல வழிகளிலும் தந்தாய்.

ஆனாலும் இப்பொழுது எங்களால் உன்னையும் எங்களால் மறக்க முடியவில்லை எதை என்று கூற... அதனால் உன்னிடத்திலேயே நாங்கள் அனைவரும் சேர்ந்து பின் இதனையும் என்று அறியாமல் இங்கேயே இறந்து விடுகின்றோம் என்று கூட ... சிம்ம தீர்த்தத்தில் கூட பின் குதித்துள்ளீர்கள் நீங்கள் எதுவும் தேவையில்லை ஈசா ஈசா என்றுகூட..


அப்பனே அத் தீர்த்தத்தில் ஈசன் நல்விதமாக எழுந்து மகன்களே!!! உங்களுக்கும் கூட என்னுடைய ஆசிகள் பல சித்தர்களுடைய ஆசிகளோடு மீண்டும் கலியுகத்தில் பிறப்பெடுத்து எந்தனுக்கே சேவை செய்வீர்கள் என்று கூட உத்தரவிட்டு விட்டான். 

இதனால் அப்பனே புரிகிறதா இப்பொழுது கூட.

அப்பனே இன்றளவும் கூட நல் விதமாக இதைச் செய்திட்டு பின் கடை நாளில் ஈசன் தரிசனத்தையும் அண்ணா மலையிலேயே காணலாம் சிம்ம தீர்த்தத்திலே இப்பொழுது கூட.

அப்பனே இவையன்றி கூற ஆனால் அப்பனே ஒருமுறை நீங்கள் அண்ணாமலை சென்று அப்பனே நல் விதமாக அப்பனே தர்மத்தை ஏந்த வேண்டும் என்பேன்.

ஈசனே அப்பனே மனித ரூபத்தில் வந்து தானம் இடுவான் என்பேன் அப்பனே.

அப்பனே இதனால் அப்பனே மேலோங்கும் என்பேன். அப்பனே குறைகள் இல்லை அப்பனே. உங்கள் அனைவருக்கும் மோட்ச பிறவி என்பேன் அப்பனே ஈசனே கொடுத்துவிடுவான் அப்பனே.

அப்பனே கவலைகள் இல்லை அப்பனே எவை என்று கூற இனிமேலும் இத்தலம் நல் விதமாகவே அமையும் என்பேன் அப்பனே.

யானும் இங்கே தான் இருக்கின்றேன் கவலையை விடுங்கள்.

அப்பனே இவை எதனையுமென்றும் அப்பனே பல வழிகளிலும் பலப்பல பலப்பல திருத்தலங்கள் யான் தான் எழுப்ப வேண்டும் என்பது கூட மனிதனின் செயல்கள் ஆனால் மனிதனால் ஒன்றும் முடியாது அப்பனே.

ஈசனால் மட்டுமே முடியும் ஈசன் நினைத்தால்தான் உண்டு என்பேன்.

அதனால்தான் அப்பனே இவனருளாலே எதனையும் என்று கூற அனைத்தும் நடக்கும் என்பது விதியப்பா.

ஆனாலும் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான் அப்பனே ஆனாலும் அதை உருவாக்குவோம் இதை உருவாக்குவோம் என்று கூட.

ஆனாலும் ஈசன் அருள் இல்லாமல் எதனையும் உருவாக்க முடியாது என்பதுதான் திண்ணம் அப்பனே. அதற்கும் காலங்கள் வந்தால்தான் உண்டு என்பேன் அப்பனே.

காலம் வந்துவிட்டது அப்பனே அனைத்தும் போகப் போக முடியும் என்பேன்.

திருப்பணிக் குழுவினரின் கேள்வி

குருவே இவ்வாலயத்திற்கு அம்மன் சன்னதி இல்லாமல் இருக்கின்றது நாங்கள் என்ன செய்வது??

அப்பனே இவையன்றி கூற அப்பனே நல் விதமாக யான் சொல்லிவிட்டு சென்றாலும் அப்பனே எவை என்று கூற அதனால் யான் இங்கே தான் இருக்கின்றேன் அப்பனே அதனால் ஞானியவர்கள் அப்பனே ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் வந்து பின் காப்பார்கள் என்பேன் அதைப்பற்றி கவலையை விடுங்கள் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஈசனே அப்பனே அடிக்கடி தன் சொப்பனத்தில் காட்டுவான் என்பேன் சில வித்தைகளை கூட அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.

அப்பனே நலமாக நலமாக எவை என்று கூற அப்பனே கந்தனும் எவை என்று கூற இதனையும் என்று அறியாமல் நிச்சயமாய் அப்பனே பின் மாசி மாதத்தில் வரும் அப்பனே பின் எவை என்று கூற அன்று பின் தினத்தில் அப்பனே நீங்கள் கூட பல விசேஷங்களை செய்வீர்கள் இங்கே அன்றைய தினத்தில்(சிவராத்திரி) நிச்சயம் முருகன் இங்கு வருவான் என்பேன் அப்பனே.

அப்பனே நல் முறையாக நல் முறையாக கவலைகள் இல்லை அப்பனே நல் முறையாகவே சித்தர்களின் ஆசிகளும் பரிபூரணம் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.

இவற்றிலிருந்து நிச்சயமாய் மேலோங்கும் என்பேன் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே அது விரைவிலே யாங்கள் சித்தர்கள் சேர்ந்து இதை நிச்சயமாய் அப்பனே அமைத்து விடுவோம் அதனால் நீங்கள் வெறும் கருவி யாக இருங்கள் என்று யான் சொல்லி விட்டேன் அப்பனே.

அப்பனே!! இறைவனே !!யார் ?யாரை? எப்பொழுது? தேர்ந்தெடுக்க வேண்டும்?? என்பதைக் கூட தெரிந்ததே என்பேன்.

ஆனாலும் அப்பனே சில மனிதர்கள் அப்பனே எவை என்று கூற பல திருத்தலங்களிலும் அப்பனே ஒற்றுமையாக செயல்படுவது இல்லை அதனால்தான் அப்பன் ஈசன் கோபித்துக்கொண்டு எவை என்று கூற அவர்களுக்கு தண்டனையும் பல திருத்தலங்களை உருவாக்குபவர்களையும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றான் அதனால் அப்பனே  எவ்வித சுயநலமின்றி அப்பனே ஈசா நீயே என்று நீயே கதி என்று அனைத்தும் ஒன்றிணைந்தால் ஈசன் அனைத்தும் நல்குவான் என்பேன்.

அவரவர் இல்லத்திலும் சுப நிகழ்ச்சிகள் நல் விதமாக நடந்தேறும் என்பேன். கஷ்டங்கள் நீங்கும் என்பேன். பணி இல்லாதவர்களுக்கு பணியும் கிடைக்கும் என்பேன்.

அப்பனே நலமாக நலமாக உண்டு உண்டு என்பேன் அப்பனே.

அப்பனே கவலைகள் இல்லை திறமைப்பட அப்பனே நல்விதமாக உண்ணாமுலை இதில் பின் உண்ணாமுலை தேவியும் அப்பனே நிச்சயமாய் பின் பங்குனி உத்திரத்தில் இங்கு நிச்சயமாய் வருவாள் என்பேன்.

அதனால்தான் பெரியோர்கள் சொல்லியிருக்கின்றார்கள் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?? என்று கூட ..

அது அனைவரும் உணர்ந்ததே என்பேன்.

அப்பனே இவையன்றி கூற அதனால்தான் அப்பனே மேன்மைகள் உண்டு என்பேன்.

இத்தலம் அப்பனே இன்னும் மேன்மை பெறும் என்பேன் அப்பனே.

அப்பனே கவலைகள் இல்லை எவை எவை என்று கூறிவிட்டேன் .அப்பனே இன்னும் பலபல ரூபத்திலும் அப்பனே நிச்சயமாய் அப்பனே இவையன்றி கூற பின் ஈசனே வந்து வந்து அப்பனே சென்று விடுவான் அப்பனே.

குறைகள் இல்லை மென்மேலும் உயர்வுகள் உண்டு அப்பனே கவலைகள் இல்லை அப்பனே நல் முறையாக யாங்களே உருவாக்குவோம் என்போம். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்பேன்.

அப்பனே, நல்விதமாக இதை உருவாக்கி மீண்டும் இங்கு வந்து வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே அதி விரைவிலே.

திருப்பணி குழுவினரின் கேள்வி.

குருவே பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீ உண்ணாமுலை தேவி இங்கு வருவார் என்று கூறினீர்கள் அன்றைய தினத்தில் ஆலயத்தில் தேவிக்கு பூச்சொரிதல் விழா நடத்தலாமா???

அப்பனே இவையன்றி கூற தாராளமாகச் செய்யலாம் அப்பனே.

குருவே !!அம்மாள் சன்னதிக்காக பூமி பூஜை செய்வதற்காக காத்திருக்கிறோம் !!உத்தரவு கிடைக்குமா??

அப்பனே இதனையும் என்று அறியாமல் அப்பனே அதனால்தான் முதலிலேயே யான் சொல்லிவிட்டேன். யான் இருக்கும் பொழுது உங்கள் மனதிலே நுழைந்து சொல்லிவிடுவேன் அப்பனே.

குருவே இந்த ஆலயத்திற்கு சொந்தமான நிலபுலன்கள் சிறிதளவே இருக்கின்றது இவ்வளவுதான் இருக்கின்றதா?? அல்லது அதிகமாக இருக்கின்றதா?? ஏனென்றால் கோயிலை விரிவுபடுத்த நாங்கள் எண்ணி இருக்கின்றோம்.

அப்பனே எவை என்று கூற அப்பனே ஈசன் இடமே இவையெல்லாம். அப்பனே ஆனாலும் மனிதன் வரவர ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே.

ஆனாலும் அதை யாங்களே நிச்சயமாய் சரி செய்வோம் என்பேன் அப்பனே.

குருவே இந்த ஆலயத்தை மிகப்பெரிதாக ராஜகோபுரம் பிரகாரங்கள் தனித்தனி சன்னதிகள் என்று அமைக்க நாங்கள் விருப்பப் படுகின்றோம் ஒவ்வொன்றாக விதமாக நடைபெற வேண்டும்.

அப்பனே எவை என்று கூற அப்பனே ஒவ்வொன்றாக யான் சொல்லிக்கொண்டே வருவேன் அப்பனே இதனால்தான் இதனையும் சொல்லிவிட்டேன் அப்பனே அப்பனே அனைத்தும் ஈடேறும் என்பேன்.

யான் இங்கேயே இருக்கின்றேன் அப்பனே கவலையை விடுங்கள்.

குருவே தங்களுக்கும் இந்த ஆலயத்தில் தனி சன்னதி அமைத்து பூஜிக்க விரும்புகின்றோம்

அப்பனே எவை என்று கூற யான் எப்பொழுதும் கேட்டதில்லை அப்பனே எந்தனுக்கு பூஜைகள் செய் என்று கூட.

ஆனாலும் அன்பு செலுத்தினாலே போதுமானது அப்பனே.

எதற்காக யான் இப்புவியுலகிலத்தில் அப்பனே வந்தேனப்பா... மனிதர்களுக்கு புத்தி இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றார்களே அவர்களை நல்வழிப் படுத்தவே நாங்கள் வந்துவிட்டோம்.

அதனால் அப்பனே நீங்கள் நன்றாக செல்லுங்கள் அப்பனே அன்பை செலுத்தினால் போதுமானது அப்பனே மற்றவைகள் எல்லாம் யாங்கள் விரும்புவதே இல்லை அப்பனே.

குருவே காகபுஜண்டர் முனி இங்கு இருக்கின்றார் என்று கூறியிருந்தீர்கள் அவரை நாங்கள் எவ்விதம் வணங்குவது??

அப்பனே இவையன்றி கூற இவைதன் கேள்விகள் எவ்வாறு இருப்பதென்றால் அப்பனே எதை என்று கூற இதனையும் இப்பொழுது யான் உரைத்து விடுகின்றேனா என்பதற்கிணங்க இதற்கு பின் மாறுபாடாக புசுண்ட முனியே  நல் விதமாக அமைத்துக் கொள்வான் என்பேன் வரும் வரும் காலங்களில் அப்பனே அவனே மனதில் நுழைந்து இங்கு அமைத்து விடலாம் என்று கூட அப்பனே உங்களுக்கே தெரியும் என்பேன்.

மீண்டும் இங்கு வந்து பலமாக வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே.

ஆலயதிருப்பணிகள் சேவைகள் குறித்த விபரங்கள் 

DHAKSHINAMURTHY K R
ACCOUNT NO:3011083927
MICR CODE:600016003
IFSC CODE: CBIN0280878
PHONE NUMBER:9042305799

ஓம் ஸ்ரீ சிவாகாமி தாயார் உடனுறை ஸ்ரீ சிவகாமேஸ்வரர் ஆலயம். காவனூர் கிராமம்.ஆற்காடு தாலுக்கா. இராணிப்பேட்டை மாவட்டம். காவனூர் அஞ்சல் 632507.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் ............ தொடரும்!

4 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Namashivaya
    Om Namashivaya
    Om Namashivaya

    ReplyDelete
  3. ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ அகத்தீசாய நம

    ReplyDelete
  4. Translation:
    https://drive.google.com/file/d/1yAtQGDImPKJJRa5Kb4SUscvHUgOJyH4R/view?usp=sharing

    ReplyDelete