​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 15 October 2020

சித்தன் அருள் - 944 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ சரநாராயண பெருமாள், திருவதிகை, பண்ருட்டி, தமிழ்நாடு!


பண்ரூட்டியின் அருகில் சுமார் 3 km தொலைவில் உள்ளது, இந்த கோவில். பண்ருட்டியில் இருந்து பாலூர் வழியாக திருவந்திபுரம் பேருந்தில் ஏறினால் திருவதிகை அடையலாம் .

ஸ்ரீமந் நாராயணர் அவரிடம் சிவபெருமான் திரிபுரா அசுரர்களை அழிக்க உதவி செய்யுமாறு கேட்கிறார் அதற்கு நாராயணர் சிவபெருமானிடம் தேவர்களின் உதவியுடன் தேரை அமைத்து பிரம்மாவை தேரோட்டியாகவும், பூமியை ரதமாகவும், சூரியன் சந்திரரை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரையாகவும் வைத்துக்கொண்டு, மேருமலையை வில்லாகவும் ஆதிசேஷனை நாணாகவும் செய்து யுத்தத்தை தொடங்குமாறு கூறினார். வில்லிற்கு தான் அம்பாக விளங்கி திரிபுரர்களை சம்ஹாரம் செய்வதாக கூறினார். ஆதலால் இத்திருத்தலத்தில் அவர் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் வீரட்டேஸ்வரர் கோயில் வைகாசி மாத திரிபுரர் எரிக்கும் விழாவில் நாராயணர் கருட வாகனத்தில் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சை நடைபெறுகிறது.

சரி! ங்கு நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது!

  • 2000 வருட பழமையான கோயில்மற்ற கோயில்களில் கை கூப்பி நிற்கும் கருடாழ்வார் இந்தக்கோயிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சிதருகிறார்.
  • உப்பிலியப்பன் ஸ்ரீனிவாசனை போல் இங்குள்ள சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற கோலத்தில் காட்சிதருகிறார்.
  • மூலவர் சரநாராயண பெருமாள் முழுவதும் சாளக்ராமத்தால் ஆனவர்.
  • திரிபுர சம்ஹாரத்தில் சிவபெருமானுக்கு சரம் கொடுத்து உதவியதால் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
  • இக்கோயிலில் சயன கோலத்தில் (படுத்திருக்கும்) நரசிம்மர் தாயாருடன் காட்சி தருகிறார்.
  • திருமாலின் திருக்கோயில்களில் இந்தக் கோயிலில் தான் நரசிம்மர் சயன கோலத்தில் தெற்கு நோக்கி சயனத்திருக்கிறார்.
  • 700 ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்த தேசிகர் இவரை வழிபட்டதாக கூறுகிறார்கள்.
  • இந்த சயனநரசிம்மர் திருவக்கரையில் வக்ரா சூரனை அழித்து விட்டு அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துளார்.
  • தாயாருடன் எழுந்தருளியதால் இது போகசயனம் ஆகும்.
  • சிவனுக்கு பிரதோஷம் நடைபெறுவது போல் இவருக்கும் பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

4 comments:

  1. Om sri lobha mudra thayar samedha agasthia peruman thiruvadigale potri

    ReplyDelete
  2. ஓம் நமோ நாராயணா பத்மநாபா புருஷோத்தமா வாசுதேவா வைகுந்தா மாதவா ஜனார்த்தனா ஸ்ரீ சக்ரபாணி நின் பாதாரவிந்தங்கள் சரணம் சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete
  3. Aum Namo Narayanana

    ReplyDelete