​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 7 October 2020

சித்தன் அருள் - 936 - ஆலயங்களும் விநோதமும் - காமாக்ஷி கோவில், காஞ்சிபுரம்!


காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன், இரண்டு காலையும் மடித்து, பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் முதுகு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.

முன்னொரு காலத்தில் கயிலை மலையில், தன் அன்புக்கு உரிய உமாதேவி ஒரு பாகத்தில் இருக்க, வேதங்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தார்.  அப்போது தேவி விளையாட்டாக ஈசன் பின்புறம் வந்து அவருடைய கண்களை, தன் இரு கரங்களால் பொத்தினார். இதனால் உலகம் இருண்டது.   இருளையே அறியாத தேவலோகம் ஒளி இழந்தது.  எங்கும் இருள் சூழ்ந்ததால் படைப்புத் தொழில்  நின்றது.  யாகங்கள் தடைப்பட்டன.  தவங்கள், தானங்களும் கைவிடப்பட்டன.  தெய்வ வழிபாடு  அறவே ஒழிந்தது.  உயிர்கள் மகிழ்ச்சி இல்லாமல் வருந்தின. அறிவு வளர்ச்சித் தடைப்பட்டது.   மறை நூல்கள் மறைந்தன.  இருளின் வயப்பட்டு உலகமெல்லாம் மயங்கி நின்றன.

தேவர்களும் முனிவர்களும் தம் காரியங்கள் தடைப்படவே, என்ன ஆகியதோ? என்ன ஆபத்து சூழ்ந்ததோ? எனப் பதை பதைத்து சப்தமிட்டனர்.  இக்குரல் அன்னையின் திருச்செவியில் ஒலித்தது.  உடன் அன்னை தன் திருக்கரங்களை இறைவன் திருக்கண்களிலிருந்து எடுத்தார். உடனே  இறைவன் திருக்கண்கள் இரண்டும் ஒளிவீசின, மீண்டும் உலகம் புத்தொளிப் பெற்றது.

சிவபெருமான் தேவியை நோக்கி, நீ எமது கண்களை மூடிய நொடிப் பொழுதில், உயிர்கள் வருந்தி அறங்கள் தடைப்பட்டு பாவம் சூழ்ந்தது.  அந்தப் பாவம் நீங்க, நீ பிராயச்சித்தம் செய்தாக வேண்டும் என்றார்.  அதற்கு வழியையும் கூறினார்.  தேவி, யாம் எழுந்தருளியிருக்கும் இடத்திலாவது, நம் அடியார் சிறப்புடன் வீற்றிருக்கும் இடத்திலாவது எம்மை வழிபடுவாயாக என்று அருளச் செய்தார். இறைவன் கூறியபடி அன்னை பிராயச்சித்தம் செய்வதற்குப் புறப்பட்டார்.

பாவம் சூழ்ந்த அன்னை, உக்கிர ரூபிணியாக பல இடங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து உத்தரவு கேட்டும் கிடைக்காமல், காஞ்சிபுரத்தில் ஏகாந்தமாய் அமர்ந்திருக்கும் "ஏகாம்பரேஸ்வரரை" தரிசித்ததும் அங்கேயே உத்தரவு கிடைத்தது. அங்கேயே தவநிலையில் அமர்ந்து, இறைவன் அருள மறுபடியும், சிவபெருமானை வந்தடைந்தார்.

சரி இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம், காமாட்சி அம்மன் கோயில் ஆகும், இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை.

காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், 'உக்ர ஸ்வரூபினி' என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.

ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்த ஆதி சங்கரர், தன்னிடம் கூறாமல் அன்னை வெளியே சென்று விடக்கூடாது என சத்தியம் வாங்கினார். ஆதலால், இன்றும் அன்னை கோவிலை விட்டு வெளியே வரும் முன், ஆதி சங்கரர் அமர்ந்து தவம் செய்த அறைக்கு முன் சில நொடிகள் நின்று விட்டுத்தான், வெளியே வருவாள். 

தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் ’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார்.

காமாட்சியின் அம்மனின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அன்னை கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை உருவாக்கும்.

காஞ்சிபுரத்தில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள்  கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம்  காலமாக இருந்து வருகிறது.

காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில்  அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக  திகழுகிறாள்.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும்.

அம்மனுக்கு  முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. அது காணவேண்டிய ஒரு காட்சி.

இத்தலத்தில் தான் ஆதிசங்கரர்  ஆனந்தலஹரி பாடினார்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............ தொடரும்!

8 comments:

  1. காஞ்சி காமாட்சி தாயே என் பாதார விந்தங்கள் சரணம் சரணம் ஏகாம்பரேஸ்வரர் பாதம் போற்றி போற்றி ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ🙏🙏🙏

    ReplyDelete
  2. குருவருளால் அடியேன் பதிவு.
    படித்து, பாடல் கேட்டு, காணொலி பார்த்து, சத்தியம் உணர்ந்து மகிழுங்கள். 🦚🦚🦚🦚🦚🦚

    https://fireprem.blogspot.com/2020/10/blog-post.html?m=1

    ReplyDelete
  3. Om lobha mudra thayar samedha agasthia peruman thiruvadigale potri.

    ReplyDelete
  4. ஐயா, இந்த மாதம் 29ம் தேதி கோடகநல்லூர் பெருமாளை சேவிக்க எண்ணி உள்ளேன். அன்றைய தேதியில் பெருமாள் அபிஷேகம் ஏற்பாடுகளில் அடியேனுக்கு பணி செய்ய விருப்பம்.

    ReplyDelete
  5. ஓம் அகத்தீசாய நம !

    ReplyDelete
  6. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  7. ஓம் அகத்தீசாய நமக
    ஓம் அகத்தீசாய நமக
    ஓம் அகத்தீசாய நமக
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete