​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 11 October 2020

சித்தன் அருள் - 940 - மாப்பிள்ளை சுவாமி கோவில், திருவீழிமிழலை, திருவாரூர்!


இத்தலத்தில் சிவபெருமான் மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இறைவன், மாப்பிள்ளை கோலத்தில் காசியாத்திரைக்கு செல்வதுபோல் உள்ளதால், மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

சிவபெருமான் இங்கு ஸ்வயம்பு மூர்த்தியாக உரைகின்றார்.

இங்கு உள்ள பாதாள நந்தி பிரசித்தமானது. நந்தியம்பெருமானே முழு கோவிலையும் தங்குவதாக ஐதீகம்.

பெருமாள் சக்ராயுதத்தை திரும்ப பெற வேண்டி, சிவபெருமானுக்கு பூசை செய்ய, சரியாக ஒரு பூ குறைந்ததால், தன் ஒரு கண்ணை எடுத்து பூசையை நிறைவேற்றினார்.

சிவபெருமானுக்கு முன்பாக, நந்தியம்பெருமானுக்கு பதில், பெருமாள், ஒரு கையில் பூவுடன், ஒரு கையில் கண்ணுடன் நிற்பது வித்யாசமாக இருக்கும்.

கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது வித்யாசமாக இருக்கும்.

இங்கு உற்சவ மூர்த்தி, சக்கரத்தை கையில் ஏந்தி நிற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.

இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

இறைவனாரிடமிருந்து பெற்ற படிக்காசுகளை மாற்றிப் பொருள் பெற்ற கடைத்தெரு ஐயன்பேட்டை என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. இங்கே படியளந்த நாயகி உடனாய செட்டியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்! 

4 comments:

  1. Om sri lobha mudra thayar samedha agasthia peruman thiruvadigale potri

    ReplyDelete
  2. ஸ்ரீ மாதா லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  3. சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சக்ரபாணி க்கு சக்ரதானியாய் அருளிய சிவனே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete
  4. Aum Agastheeshaya Namaha

    ReplyDelete