​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 5 October 2020

சித்தன் அருள் - 934 - ஆலயங்களும் விநோதமும் - ஜகந்நாதர் கோவில், பூரி, ஒடிசா மாநிலம்!


ஜெகன்நாதர் கோயில் அல்லது ஜெகந்நாதர் கோயில், இந்தியாவின், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.

ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் தன் பூத உடலை விட்டு விலகினார். புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதை காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலை செய்யும் அறை கதவை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச் சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உள்ளே அமர்ந்திருந்த தச்சர் கோபமடைந்தார். 

"மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே, இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரை குறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள்" என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.

சரி! நாம் இங்கு தெரிந்து கொள்ள என்ன உள்ளது!

பகவான் கிருஷ்ணரின் உடலுக்கான இறுதி சடங்கை செய்தபின், அவரின் குலத்தவர்கள், உடலை ஒரு கட்டையில் கிடத்தி, நதியில் விட்டனர். இதை கவனித்துக் கொண்டிருந்த போகர் சித்தர், "பகவான் கிருஷ்ணர் இறைவனின் மறு அவதாரமாயினும், ஒரு சிறந்த வாசி யோகி. ஆதலால், சித்தமார்க்க முறைப்படி அவருக்கு சமாதி அமைக்க வேண்டும்" என தீர்மானித்து, அனைவரும் சென்றபின், உடலை கைப்பற்றி, கிருஷ்ணருக்கு சமாதியை அமைத்தார். பகவான் உடலை கிடத்தியிருக்கும் சந்நிதானத்தை, ஒரு சங்கின் வடிவில் அமைத்தார். ஆகவே பகவான் கிருஷ்ணரின் பூத உடல், இன்றும் பூரி ஜெகந்நாதர் சன்னதிக்கு கீழே உள்ளது.

"நாராயணீயம்" கற்று முடித்த/தேர்ந்த பக்தர்கள், ஒருமுறையேனும், இங்கு சென்று ஒரு தசகமாவது அவர் சன்னதியில் வாசித்தால்தான், பகவான் கிருஷ்ணருக்கு "குருதக்ஷிணை" கொடுத்த பலன் கிடைக்கும்.

உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கிறார்கள். தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.

இந்த கோவிலின் கோபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் கொடியானது, காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில்தான் எப்பொழுதும் பறக்கும்.

கோவில் பூஜாரி தினமும் கோபுரத்தின் மேலே ஏறி (45 மாடி கட்டிடத்தின் உயரம் இருக்கும்) கொடியை ஏற்றுவார். ஒரு நாள் கூட தவறாமல் கொடி ஏற்றவேண்டும் என்பது விதி. ஒரு நாள் தவறினால், 18 வருடங்களுக்கு கோவிலை மூடி வைக்க வேண்டும் என்பதும் இந்த கோவிலின் விதியாக உள்ளது.

இக்கோவிலின் கோபுரத்தில் பதிக்கப்பட்டிருக்கும் "சுதர்சன சக்ரம்" கோவிலை சுற்றி எங்கிருந்து பார்த்தாலும், பார்ப்பவரை நோக்கியே நிற்கும். அது 1000 கிலோ எடையுள்ளது.

இக்கோவிலின் கோபுரத்துக்கு மேலே, எந்த பறவைகளும் பறப்பதில்லை.

பொதுவாக, கடற்கரையில் அமைந்துள்ள இடங்களில், பகல் நேரத்தில், காற்று கடலிலிருந்து, ஊரை நோக்கியும், மாலை முதல் கரையிலிருந்து கடலை நோக்கியும் வீசும். இங்கு, பகல் நேரத்தில் கரையிலிருந்து கடலையும், மாலையில், கடலிலிருந்து கரையையும் நோக்கி வீசும்.

கோவிலின் கோபுர நிழல், பூமியில் விழுவதில்லை.

பகவான் கிருஷ்ணருக்கு இரவு நிவேதிக்கப்படும் உணவு, ஒரு நாள் கூட விரயமாவதில்லை/மிச்சம் வருவதில்லை.

சிம்ம வாசல் வழி உள்ளே நுழைந்தவுடன், கடல் சப்தம் கேட்பதில்லை. மிகுந்த அமைதியாக இருக்கும். வெளியே கால் வைத்த அடுத்த நொடி கடலின் இரைச்சலை உணரலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


 சித்தன் அருள்....................தொடரும்!

6 comments:

  1. Om sri lobha mudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  2. ஐயா அன்பு வணக்கங்கள். ஜெய் கிருஷ்ணா! பூரி ஜகண்ணாதரை பார்க்க ரொம்ப ஆசை ஐயா. அவர் எப்போ கூப்பிடுவார் என்று தெரியவில்லை ஐயா. கிருஷ்ணர் நா சின்ன வயசு முதல் ரொம்ப பிடிக்கும் ஐயா. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன் ஐயா, அம்மா. குருபரன் திருவடிகள் போற்றி!

    ReplyDelete
  3. அருமை ஐயா
    ஓம் அகத்தியர் பாதம் திருவடி
    சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    அதிசயமான அமைப்பு ....

    ReplyDelete
  5. பத்மநாபா புருஷோத்தமா வாசுதேவா வைகுந்த மாதவ ஜனார்த்தன சக்கரபாணி🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய 🙏🙏

    ReplyDelete
  6. Aum Namo Bhagavathe Vasudevaya......

    ReplyDelete