​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 2 October 2020

சித்தன் அருள் - 930 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ பகவதி கோவில், சக்குளத்துக்காவு, கேரளா!


​சக்குளத்துக்காவு பகவதி கோவில், நீராற்றுபுரம், ஆலப்புழை மாவட்டம், கேரளாவில் அமைந்துள்ளது. திருவல்லா என்கிற ரயில் நிலையத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்த கோவிலில் குடியிருக்கும் அன்னை, துர்கை வடிவினள். பாம்பை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோவில், ஏராளம் பக்தர்கள், வழிபடும் தெய்வமாக போற்றப்படுகிறாள். சோற்றானிக்கரை பகவதி கோவில் அளவுக்கு மிக பிரபலமான கோவில்.

சரி! இந்த கோவிலில் நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது!

கார்த்திகை மாதத்தில் இந்த கோவிலில் பொங்கல் படையல் அன்னைக்கு போடப்படுகிறது. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் கோவில் பொங்கல் படையல் விசேஷம் போலவே, இங்கும், முதல் அடுப்பு, கோவில் சார்பாக, பூஜாரி, அம்பாள் சன்னதி விளக்கிலிருந்து அக்னியை எடுத்து, மூட்டுவார். அதிலிருந்து, மற்ற அடுப்புகளுக்கு, அக்னி பகிர்ந்து கொடுக்கப்படும்.

இந்த பொங்கல் படையல் போடுகிற பக்தர்கள் கூட்டம் 20-40 கிலோ மீட்டர் வரை வரும்.

இங்கு அமர்ந்திருக்கும் அம்பாள் சன்னதிக்கு மேலே, மேற் கூரை கிடையாது. பஞ்ச பூதங்கள் அனைத்தையும் தன் தலையில் சுமந்தபடி அமர்ந்திருக்கிறாள்.

இந்த கோவிலின் முதன்மை பூசாரியிடம் ஏழு வெற்றிலை, இரண்டு பாக்கு வாங்கிக்கொடுத்தால், அப்படி கொடுத்தவருக்கு என்ன பிரச்சினை இருக்கு, எதற்காக வந்திருக்கிறார், அதற்கு என்ன பரிகாரம் என்பதை மிக துல்லியமாக, அம்மையிடம் கேட்டு சொல்லிவிடுவார். மிக மிக சரியாக இருக்கும். பரிகார விதி தெரிந்து, தங்கள் வாழ்க்கையை சரி பண்ணிக்கொண்ட பக்தர்கள், ஏராளம்.

அனைவரும் ஒருமுறை சென்று பார்க்க வேண்டிய அருமையான கோவில்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்! ​

3 comments:

  1. அம்மா சரணம் 🙏🙏🙏
    தேவி சரணம் 🙏🙏🙏

    ReplyDelete
  2. சக்குளத்துகாவில் அம்மே சரணம் தேவி சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete