​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 20 November 2016

சித்தன் அருள் - 512 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இந்த உலகில் உள்ள அனைவருமே, இறைவனின் பிள்ளைகள். அதில் ஒரு பிள்ளைக்கு அதிக செல்வத்தைக் கொடுத்ததன் காரணம், வாடுபவனுக்கு கொடுத்து உதவுகிறானா, என்று சோதிக்கத்தான்.

தர்மத்தை செய்து கொண்டே இருங்கள். இது புண்ணிய வழி என்ற எண்ணம் இல்லாமல் செய்யவேண்டும். யாருக்கெல்லாம் தேவையோ, அவர்களுக்கெல்லாம் நேரிய வழியில் பொருள் ஈட்டி தந்து கொண்டே செல்லுங்கள். செல்வம் உங்கள் பின்னால் வரும். இதனை சோதனை மார்கமாகக் கூட செய்யலாம். ஏனென்றால், ஒவ்வொரு யுகத்திலும் செல்வந்தர்கள் குறைவு. வறுமையாளர்கள் அதிகம். கொடுத்து, கொடுத்து வறுமையடையும் விதியிருந்தாலும் பாதகமில்லை. கொடுத்ததினால் ஒரு வறுமை நிலை வந்தால், அதுதான் இந்த உலகத்திலே உச்சக்கட்ட வளமை. அவன்தான், இறைவனுக்குப்-பக்கத்திலே இருக்கிறான், என்பது பொருளாகும். எனவே, இந்த கருத்தை மனதிலே வைத்து இனி வருகின்ற ஒவ்வொரு கணத்திலும், தேடித் தேடி தர்மம் செய்வதை ஒரு லட்ச்சியமாக கொண்டு விட்டால், அவர்களுக்கு, எம் ஆசி என்றும் தொடரும். ஆசிகள், சுபம்.

1 comment:

  1. [ROUGH TRANSLATION] All people in this world are children of the Divine. The reason a few children are rich, is to test whether they share with and help the poor.
    Keep on doing charity. Do so without thinking about earning punyas. Whoever has needs, please keep doing charity to them. Wealth will seek you. In every yuga, the number of rich is less, the number of poor people is more. Even if it is your destiny to become poor by giving charity, it is OK.
    To become poor through charity is the height of progress. He is the one who has come close to the Divine. Being mindful of this perspective, make it your mission to search and do charity, every moment. To these, our aasi’s will follow. Blessings, subham.

    ReplyDelete