​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 19 November 2016

சித்தன் அருள் - 511 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எம்மை நம்பி வந்து, இந்த ஜீவ அருள் நாடியில், உரைப்பது சித்தர்கள்தான், என்று நம்புபவர்களுக்கு மட்டும் இந்த உபதேசம் பொருந்தும். சித்தர்களுக்கு என்ன? உரைத்துவிட்டுப் போவார்கள். நேரடியான வாழ்க்கையை எதிர்கொண்டால், அவர்களுக்குத் தெரியும். பிள்ளைகள் படிப்பு, தாரத்தின் உடல்நிலை, சொந்த இல்லம், போன்ற எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. இருக்கின்ற தனத்தை எல்லாம் தர்மத்திற்கு செலவழித்துவிட்டால், நாளை பிள்ளைகள் கேட்டால் என்ன சொல்வது? என்றெல்லாம் வறட்டு வாதம் செய்தால், நல்ல பலனை இழக்கப்போவது மனிதன்தான்.

2 comments:

  1. [ROUGH TRANSLATION] Siddha jiva nadi readings will suit only those who, with trust in us, believe that the reading is given by Siddhas only. [But] those who put forward dry arguments like “Siddhas will simply give some upadesa…but they have no direct experience of real life situations….they don’t understand our problems like childrens education, health of spouse, own house and other such difficulties…If I spend my wealth on charity, how do I answer my children later on?” will lose out on positive benefits.

    ReplyDelete
  2. Super saying by Agasthiar ... if we donate siddhars will bless during difficult times...

    ReplyDelete