​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 18 November 2016

சித்தன் அருள் - 510 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

அன்றாடம் அல்பொழுதிலே, துயில் கொள்ளும்பொழுது யோசிக்க வேண்டும், "இன்று நாம் எத்தனை பேருக்கு நன்மை செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தையால் ஆறுதல் சொன்னோம்? எத்தனை பேருக்கு உடலால் நன்மை செய்தோம்? எத்தனை பேருக்கு நம், கைப்பொருள் கொண்டு உதவி செய்தோம்? எத்தனை ஆத்மாக்களை குளிர வைத்தோம்? இன்னும் எத்தனை பேருக்கு செய்ய வேண்டி இருக்கிறது?" என்றெல்லாம் பட்டியலிட்டு பிறகு தம்மைத்தாமே செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வேண்டுமே. உறவுக்கும், தாரத்திற்கும், பிள்ளைகளுக்கும், நெருங்கிய நட்புக்கும் செய்வது தர்மத்தில் வராதப்பா. அது கடமையில் வருமாப்பா. ரத்தத் தொடர்பு இல்லாதவர்களுக்கு செய்யும் தர்மம், இவனுக்கு செய்தால் நமக்கு பிரதிபலனாக என்ன செய்வான்?" என்ற எதிர் பார்ப்பு இல்லாமல் செய்வதே தர்மமாகும்.  எனவே, அறத்தின்தன்மையை, சூட்சுமத்தை ஒரு மனிதன் உணர்ந்து கொண்டால், அவனுக்கு துன்பம் இல்லை. துயரம் இல்லை. சிக்கல் இல்லை. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டுப் போகட்டும். ஆன்மீகவாதிகள் எப்படி வேண்டுமானாலும் வழிகாட்டட்டும்.

1 comment:

  1. [ROUGH TRANSLATION] Every night, before going to sleep, recollect: “To how many persons did I do a good turn today? How many people I spoke in sympathetic words? How many people I did bodily service to? To how many people I gave charity? How many atmas did I soothe? To who all I can do more?”, listing like this, enhance your maturity by your own efforts. Service to relatives, wife, children and close friends is not charity. It is merely duty. It is charity when it is given to those not related by blood. It is charity when it is given without expectation of return favour. Thus, if a man appreciates the nature and intricacy of charity, he can be free from un-happiness, entanglements and difficulties. Let others live as per their wishes.

    ReplyDelete