​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 14 November 2016

சித்தன் அருள் - 504 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

ஒவ்வொரு மனிதனும் எம்மை நாடுகிறானோ, இல்லையோ, எம்மை நம்புகிறானோ, இல்லையோ, எத்தனையோ பிரச்சினைகளை, சிக்கல்களை எதிர் கொள்கிறான். உறவு சிக்கல், பண சிக்கல், ருண சிக்கல், பிணி சிக்கல், தசவழி சிக்கல்கள். பிற மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் சிக்கல்கள், என்று இவ்வாறு மாந்தன் வாழ்வில் சிக்கல்களே நிறைந்துள்ளன. காரணம், மிகுந்த புண்ணியத்தை, சத்தியத்தை, பொறுமையை, தர்மத்தை, பெருந்தன்மையை எவன் ஒருவன் கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு வாழ்க்கை வசப்படும். அனைத்தும் எளிதாகும். நினைத்தது உடனே பலிதமாகும். அவன் தனவானோ, ஏழையோ, நிம்மதியான வாழ்க்கை வாழ்வான். இல்லையென்றால், எந்தெந்த வழிகளில் எல்லாம் அந்த மனிதன் குற்றங்களை செய்தானோ, அந்தந்த வழிகளில் எல்லாம் நிம்மதி குறைவதற்கான வழிகள் உண்டாகும்.  ஆகுமே, எத்தனை தான் ஞானிகள் நேரிலே தோன்றி எத்தனை தான் உபதேசம் செய்தாலும் கூட, மாந்தன் செவியில் இவையெல்லாம் ஏறாது என்பது, எமக்கு நன்றாகத் தெரியும். அகுதொப்ப சுருக்கமாக சொல்லப்போனால் ஆலயங்கள் சென்றாலும், சொல்லாவிட்டாலும், யாகங்கள் செய்தாலும், செய்யாவிட்டாலும், எவன் ஒருவன் சத்தியத்தையும், தர்மத்தையும் விடாப்பிடியாக பிடித்துக் கொள்கிறானோ, அவனைத் தேடி இறை வரும் என்பது மெய்யாகும் அப்பா!

2 comments:

  1. [ROUGH TRANSLATION]
    Irrespective whether a person approaches us [Siddhas] or not, or believes us or not, he encounters many problems and tanglements in his life. Family issues, money issues, debt issues, health issues, relationship issues, like this a man’s life is full of difficulties. Reason being, that person who does lots of punyas, follows truth, patience, dharma [charity], broad minded-ness, his life will be in control; everything will become smooth. His wishes will come true fast. Whether he is rich or poor, he will have a peaceful life. In other cases, whichever way one had committed sins, in similar ways his peace will be adversely affected. We [Siddhas] are well aware that the direct upadesas of so many mahaans fall on deaf ears. In short, whether a person does yagnas or not, whether he goes to temples or no, if he steadfastly follows satyam and dharma [charity], the Divine will search for him and approach him, that’s the truth.

    ReplyDelete