​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 4 November 2016

சித்தன் அருள் - 492 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

ஒரு யாகத்திற்கு முன்பு, சிவன் அம்பாளுக்கு அபிஷேகம் போன்ற வழிபாடுகள் செய்து, அந்த யாகம் பூர்த்தி அடைந்த பிறகும் ஒரு அபிஷேகம், வழிபாடு செய்வதுதான், பரிபூரணமான ஒரு முறையாகும். அடுத்து, யாகம் செய்துவிப்பவனும், கலந்து கொள்பவனும் மனதை பூப்போல் வைத்திருக்கவேண்டும். அங்கு எதிர்மறை வார்த்தைகளோ, எரிச்சலூட்டும் வார்த்தைகளோ, வெறுப்பை உமிழும் வார்த்தைகளோ பேசக்கூடாது. உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். ஆடைகள் பழையதாக இருந்தாலும், துவைத்து சுத்தமாக இருக்க வேண்டும். அமரும் பொழுது, ஏதாவது ஒரு விரிப்பின் மீது அமரவேண்டும். யாகம் செய்துவிக்கும் மறையோர்கள், தர்ப்பைப்புல் ஆசனத்தில் அமரவேண்டும். யாகத்தில் கலந்துகொள்ளும் ஆண், பெண் இருவருமே எண்ணை ஸ்நானம் செய்து விட்டு வரவேண்டும். நகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அல்லது அறவே நீக்கி விட வேண்டும். மறை ஓதுவோர்கள் மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது வாயில் இருக்கும் எச்சில் யாகத்தீயிலோ, வேறு எந்த யாகப் பொருள்களின் மீதோ விழக்கூடாது. ஆண், பெண் இருபாலாரும் கைகளில் "மருதோன்றியை" இட்டுக்கொள்வது சிறப்பு. உடைகளில் பருத்தி ஆடைகள் ஏற்றது. ஆண்கள் மேலாடை அணியாமல் இருப்பது சிறப்பு. மந்திரங்களை அவசர அவசரமாக மென்று விழுங்கி, ஏனோ, தானோ என்று உச்சரிக்காமல், அக்ஷர சுத்தமாக, ஸ்பஷ்டமாக, ஆணித்தரமாக, நிதானமாக சொல்லுவது நல்ல பலனை தரும். எந்த ஒரு யாகத்திற்கும் முன்பாக "மூத்தோனுக்குரிய" "கணபதி" யாகத்தை செய்து, மற்றவற்றை, பின் தொடரலாம். நெருப்பினால் சமைக்கப்பட்ட உணவை விட, இயற்க்கை கனிகள் அன்னைக்கு ஏற்றது. அகுதொப்ப எல்லா வகை வாசமிக்க மலர்களையும், குறிப்பாக தாமரை மலர்களை தூய்மையான நெய்யிலே கலந்து, கலந்து, கலந்து இடுவது சிறப்பு. அதோடு, ஒவ்வொரு பொருளையும், நெய்யோடு கலந்து இடுவது, மிகுந்த பலனைத் தரும்.  யாகப் பொருளை சிதற விடாமல் ஒழுங்காக வைப்பது சிறப்பு.  ஆலயமாக இருந்தாலும், யாகக்கல்லை அடுக்குவதற்கு முன்னால், அந்த இடத்தை தூய நீரினால் சுத்தி செய்து, பசுங்கற்பூரம், மங்கலப் பொடி கலந்த நீரினாலும் சுத்தம் செய்துவிட்டு, யாகக்கல்லையும் சுத்தம் செய்யவேண்டும். உள்ளே போடும் மணல், உமி போன்றவற்றை சலித்து தூய்மை செய்து பயன்படுத்துவது, நல்ல பலனைத் தரும்.  எதையெல்லாம் நீரினால் சுத்தம் செய்ய முடியுமோ, செய்ய வேண்டும். பல்வேறு மனக்குழப்பத்தில் இருக்கும் மனிதர்களை,  அதிக காலம் ஒரே இடத்தில் அமர வைக்க முடியாது. நீண்ட காலம் பூசை செய்வது என்பது மனம் பக்குவப்பட்ட ஆத்மாக்களால் மட்டும்தான் முடியும். யாக மந்திரம் ஒலிக்கும் போது தேவையற்ற பேச்சுக்களும், தேவையற்ற குழப்பங்களும் இருக்கக் கூடாது. எனவே, மந்திர ஒலி, ஒலிக்கத் தொடங்கிவிட்டால், அனைவரும் அமைதியாக கவனிக்க வேண்டும். யாகத்தை, சிறப்பாகவும், அதே சமயம் சுருக்கமாகவும் செய்ய வேண்டும்.


1 comment:

  1. Before starting a yagna, first perform abhishek and other rituals to Siva and Ambal [Parvati], and after yagna is over, again perform abhishek and rituals to Siva and Ambal – this is the complete method. Further, the person conducting the yagna and other people participating in the yagna should keep their mind soft. Should not utter hostile/aggressive, irritating or hateful words. Both body and mind (heart) should be kept pure. Even if wearing old clothes, they must be kept washed and clean. While sitting, should sit on a mat (or spread). The pujaris performing the yagna should sit on a darba mat. Those participating in the yagna, both men and women, should have had oil bath. Nails should be clean; or, nails should be cut. While chanting aloud the mantras, the saliva from mouth should not fall on the yagna fire or yagna offerings. Both men and women can apply henna on their hands. Cotton dress is superior. Better than men don’t wear upper garments. Mantras should not be chanted hurriedly, or half-heartedly; chanting the mantras with clarity on the aksharas, strongly and slowly will yield better results. Ganapati homam must be performed first. For Devi, offering fruits is superior to cooked food items. It is superior to offer fragrant flowers, particularly lotus, after dipping in (or mixing with) pure ghee. For best results, mix each offering with ghee. Yagna offerings should be kept properly, without getting scattered. Even inside temples, before installing the yagna stones, the spot should be cleaned with clean water and then water mixed with camphor and turmeric power. Yagna stone must also be cleaned. The sand and rice-husk needs to be filtered, this will give good results. Whatever that can be cleaned with water, must be cleaned with water. Since most people are having mental stress, it is difficult to make them sit in one place for along time. Only those with mental maturity can perform long pujas. When yagna mantras are being chanted, avoid unnecessary talks and confusions. After starting mantras, all must sit quietly. Yagna must be conducted in a proper manner, but not prolonged.

    ReplyDelete