​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 28 February 2025

சித்தன் அருள் - 1808 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி வாக்கு!


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 3

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தன் அருள் - 1796 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1805 - பகுதி 2 )

நம் குருநாதர் :- அப்பனே கவலைகள் இல்லை. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். ஒவ்வொரு இடத்திலும் உங்களைப் பார்த்துள்ளேன் நலமாகவே. ஆனாலும் சில வெற்றி, தோல்விகள். கவலைகள் இல்லை. 

வெற்றி, தோல்வி அறிந்தும் கூட 

சூரியன் , சந்திரன்

இரவு பின் பகல்

இன்பம் , துன்பம்

மாறி மாறித்தான் வரும் என்பேன். நிச்சயம் ஒன்று சொன்னேன் பல வழிகளிலும் கூட. இதனால் துன்பமே வந்திருந்தாலும், இன்பமே வந்திருந்தாலும் நிச்சயம் இன்பமாகவே இறைவன் படைத்திருந்தாலும் நீங்கள் நிச்சயம் இன்பமாகவே வாழ்ந்திட்டு , இறைவன் என்ற பெயரையே மறந்து விடுவீர்கள். அதனால்தான் இறைவன் துன்பம் என்று வைத்திருக்கின்றான். அதனால் நிச்சயம் துன்பம் வந்தே சேரும். துன்பம் வந்தால்தான், இறைவனிடத்தில் ஐயோ!!! ஓடோடி  இறைவா!!! இறைவா!!!! என்னை காப்பாற்று காப்பாற்று என்று ஓடோடி வருவீர்கள். இன்பமாகவே இருந்தால் , இறைவனா??? எங்கிருக்கின்றான்??. யான்தான் இறைவன் என்று மனிதன் சொல்லிவிட்டு சென்று கொண்டே இருப்பான். 

அடியவர்கள் :- ( காற்றின் ஓசை கூட கேட்காத அளவு அமைதி ) 

குருநாதர் :- அப்பனே சொல். துன்பம் வருவது நல்லதா? பின் இன்பம் வருவது நல்லதா? 

அடியவர் 4 :- இரண்டும் கலந்து வந்தால்தான் வாழ்க்கை சுவையாக இருக்கும் என்று தானே சொல்ல வருகின்றீர்கள் சாமி!! 

குருநாதர் :- அப்பனே எப்படி சுவையாக இருக்கும்?

அடியவர் 4 :- பக்குவம் ஆகி, அதுக்கு அப்புறம் நல்லது நடக்கும்போது, கெட்டியாக காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றீர்கள் சாமி.

குருநாதர் :- அப்பனே (இதை) அனைவருக்கும் சொல்லி எடுத்து உரை. 

அடியவர் 4 :- ( அப்படியே எடுத்து உரைத்தார் அங்கு உள்ள அடியவர்களுக்கு ) வாழ்க்கையில இன்பம் துன்பம் இரண்டும் இருக்கும். துன்பம் வந்தால்தான், பக்குவம் வரும். பக்குவம் வந்தால்தான் அதை கட்டி காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று அவர் சொல்லவருகின்றார். 

குருநாதர் :- அப்பனே புரியும் என்பது என்ன? புரியாது என்பது என்ன? 

அடியவர் 4:- நீங்க சொல்ரது புரியல சாமி. 

குருநாதர் :- அப்பனே அறியும் என்பது, அறியாது என்பது (என்ன)?

அடியவர் 4:- தாங்களே கூறிவிட்டால் சௌகரியமாக இருக்கும்…

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

குருநாதர் :- அப்பனே அனைத்தும் கூறுகின்றேன் அப்பனே. உணவைக்கூட உன் பக்கத்திலேயே வைக்கின்றேன். நீ உண்ணாதே. யான் ஊட்டி விடுகின்றேன். 

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு )

அடியவர் 4 :- அது உங்கள் கருணை சாமி.

குருநாதர் :- அப்பனே அறிந்தும்கூட இவ்வளவு கருணை படைத்தவன் உங்களுக்கு நல்லது செய்ய மாட்டானா என்ன? கூறுங்கள் நீங்களே அப்பனே. 

அடியவர் 4:- கண்டிப்பாக சாமி ( எங்களுக்கு நல்லது செய்வீர்கள் )

குருநாதர் :- அப்பொழுது என்னைக் கேட்க வேண்டுமா அப்பனே? உங்கள் மனதில் என்னென்ன உள்ளது என்பதை எல்லாம் யான் அறியாததா? பின் எடுத்து வந்துவிட்டேன் அப்பனே. இதுபோலத்தான் அகத்தியன் அப்பனே. எப்படி, யாரை, எப்படி கொண்டு வர வேண்டும்? எங்கு வைக்க வேண்டும்? எப்படி உரைக்க வேண்டும் என்பதை எல்லாம் தெரியும் அப்பா. அப்பனே உன் வாயாலே வந்து விட்டது. கருணை படைத்தவன்தான் ( இவ் அகத்தியன் ). அனைத்து சித்தர்களும் மக்களுக்கு நன்மை செய்ய காத்துக்கொண்டுள்ளார்கள். ஆனால் மக்களோ , மாயையில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பின் அழகாகச் செப்பினால் ஆனால் சொல்வதில்லையே? அப்பொழுது என்ன செய்யலாம் மகனே? 

அடியவர் 4:- சாமி நீங்கதான் அணுவுக்கு அணுவாக இருக்கின்றீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- (குருநாதர் சொல்வது )நான் கருணை உள்ளவன் தான். ஆனால் குழந்தைகள் போல் சொல்கின்றேன். ஆனால் கேட்பதில்லை. அப்போது என்ன செய்யலாம் என்று கேட்கின்றார்.

அடியவர் 4:- சாமி எல்லோருக்கும் அசரீரியாக பேசினீங்க என்றால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும். 

அடியவர்கள் :- ( சிரிப்பு )

அடியவர் 5 :- அடித்துச் சொல்லுங்கள் (குருநாதா). 

குருநாதர் :- ( யாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை.) அதனால்தான் என் பக்தர்கள் ஆயினும் அடித்து நொறுக்குகின்றேன் அப்பனே. கஷ்டத்தை அள்ளித் தந்துகொண்டே இருக்கின்றேன். 
(நல் வழிப்படுத்துகின்றேன்)
பின் சரியா, தவறா? 

அடியவர் 4 :- நீங்கள் செய்தால் சரிதான் சாமி.

குருநாதர் :- அப்பனே அனைவரிடத்திலும் கூறு. அகத்தியன் எதைச் செய்தாலும் நன்மைக்கே என்று அனைவருக்கும் தெரிவி. 

அடியவர் :- அகத்தியர் (பெருமான்) எதைச் செய்தாலும் நல்லதற்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். 

குருநாதர் :- ஒத்துக் கொள்கின்றீர்களா என்று கேள்?

அடியவர் 4 :- ஒத்துக்கொள்கின்றீர்களா? 

அடியவர்கள் :- ( ஒரு மித்த குரலில் ) ஒத்துக்கொள்கின்றோம் ஐயா. 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் ஒரு குழந்தை தன் தந்தையை, தன் தாயை நம்பிக்கொண்டிருக்கின்றது. தாய், தந்தையும் நன்மை செய்யாமல் விட்டுவிடுவார்களா என்ன? 

அடியவர் 4 :- விடமாட்டாங்க சாமி. 

குருநாதர் :- அதே போலத்தான் அப்பனே. எனை நம்பி வந்துவிட்டீர்கள் ஓடோடி அப்பனே. யான் உங்களைக் கை விடுவேனா என்ன? அப்பனே நிச்சயம் விதியில் உள்ளதையே மாற்றித் தருவேன் அப்பனே. ஆனால் அதற்கு நீங்கள் பக்குவங்களாக, பக்குவங்கள் பட வேண்டும் என்பதே இவ்வாறெல்லாம் வாக்குகள் கூறி , எடுத்துரைத்து , பக்குவங்கள் பெற பின் நன்மைகள். அதாவது தர்மத்தைக் காக்கவேண்டும். தர்மத்தைக் காக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நிச்சயம் என் பிள்ளைகள் ஆகிவிட்டீர்கள். அதனால் தர்மத்தைக் காக்கப்பட வேண்டும். தர்மத்தை நிச்சயம் கடைப்பிடித்தால் நிச்சயம் யான் வந்து உந்தனுக்கு அதாவது கதையோடு கட்டிப்பிடித்து பின் பிள்ளையே என்று அனைத்தும் செய்து விடுவேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( நல் விளக்கங்கள் ) 

அடியவர் 4 :- தர்மத்தை ( நீங்கள் ) கடைப்பிடித்தீர்கள் என்றால் , (சாமி) அவரே வீட்டுக்கு வந்து கட்டிப்பிடித்துக்கொள்கின்றேன் என்று சொல்கின்றார். 

குருநாதர் :- அப்பனே பல வினைகளையும் நீக்குவேன். அப்பனே இவ்வுடம்பு பாவத்தால் சூழப்பட்டுள்ளது அப்பா. புண்ணியம் குறைவே. 

இதனால் பின் பாவத்தால் சூழப்பட்டதற்கு நிச்சயம் பல வருத்தங்கள், பல தொந்தரவுகள் வந்தே தீரும். ஆனாலும் கவலை விடுங்கள். இவ் அகத்தியனை நம்பி வந்து விட்டீர்கள். நல்லதே செய்வேன் உண்மைதனைக் கூட. பல வகையிலும் கூட சிறு வயதிலிருந்தே பக்திகள் கடைப்பிடிக்க வேண்டும். பின் ஒழுக்கமாக வாழ வேண்டும். நல் முறையாகவே நல் எண்ணங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். நிச்சயம் அனைவருமே (நம்) சொந்தங்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். இப்படி இருந்தால்தான் பின் சித்தனிடையே அறிந்தும் உண்மைதனைக்கூட. 

இதனால் போட்டி பொறாமைகள் , இன்னும் யான் பெரியவன் , நீ பெரியவன் என்றெல்லாம் போய்க்கொண்டிருந்தால் இறைவன் கூட,  நீதானப்பா பெரியவன். போய் சென்று கொண்டே இரு. எங்கே அப்பனே அடிபட்டு,  பின் மீண்டும் வருவானப்பா. இறைவன் எப்படியப்பா நல்லது செய்வான்? நீங்களே கூறுங்கள்.

சுவடி ஓதும் மைந்தன் :- ( நல் விளக்கங்கள் ) 

குருநாதர் :- அப்பனே அனைவருக்குமே ஒவ்வொரு குறைதானப்பா. குறையில்லாமல் மனிதன் யார் என்று கேள். உண்மைதனை இன்னும் விளக்குகின்றேன். 

அடியவர் 4 :- குறையில்லாதவர்கள் யார் ( என்று சொல்லுங்கள் அடியவர்களே). 

அடியவர்கள் :- ( ஒரு மித்த குரலில் ) எல்லோருக்கும் குறை உள்ளது ஐயா. 

குருநாதர் :- அப்பனே குறை இல்லாமல் யார் இருக்கின்றான் இவ்வுலகத்தில்?

அடியவர் 4 , அடியவர்கள் :- ( அப்படிக் குறை இல்லாமல் ) யாரும் இல்லே சாமி. 

குருநாதர் :- அப்பனே தெரிகின்றதா? அப்பொழுது குறை நீக்குபவன் யார்?

அடியவர் 4 :- தாங்கள் தான் சாமி. 
அடியவர்கள் :- இறைவன்

குருநாதர் :- அப்பனே இறைவன்தானப்பா. 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 27 February 2025

சித்தன் அருள் -1807 - அன்புடன் அகத்தியர் - சிவராத்திரி - ஈசன் பார்வதி காகபுஜண்டர் மகரிஷி உரையாடிய வாக்கு!




26/2/2025  சிவராத்திரி அன்று ஈசன் பார்வதி தேவியார் காகபுஜண்டர் மகரிஷி உரையாடிய வாக்கு. 

உரையாடிய ஸ்தலம். காக்கும் சிவன் காசி கங்கைக்கரை மீர் காட்.

பார்வதி தேவியார்:

அழகாக ஆடுகின்ற ஆட்டம் தனில் நோய்கள்!!... நோய்களை தீர்க்கும் எம் இறைவா!!! போற்றிப் பணிந்தே!! பணிந்து!! தேவியே!!! தேவியே செப்ப!!!.... நிச்சயம் என் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க நிச்சயம் மாற்றங்கள். 

எம் ஈசா!!!!! அழகாக  என் மனதில் குடி கொண்டுள்ளவனே !! பின் உன்னுள் பாதி !! பின் எந்தனுக்கும் அதாவது பின் உயிரை போன்று நிச்சயம் அனைத்தும் கொடுத்தவனே!!!!

 பின் நிச்சயம் எடுத்துரைக்க நன்று!!!

 ஒரு கேள்வியை இப்பொழுது பின் உம்மிடத்தில் உம்மிடத்தில் வைக்க போகின்றேன்!!! தேவனே !!!!தேவாதி தேவனே!!

 நிச்சயம் மனிதனை பிறக்க வைக்கின்றாய்!! 
ஆனால் ஏன் கஷ்டத்தில் கஷ்டத்தில் திரிய வைக்கின்றாய்!!????

 நிச்சயம் நிச்சயம் தேவாதி தேவனே!!! எடுத்துரைத்து எடுத்துரைக்க வேண்டும்!!

ஈசனார் :

 தேவியே!!!  நிச்சயம் அதாவது அறிந்தும் மனிதனை பிறக்க வைக்கின்றேன் அனைத்து நலன்களை கொடுத்துத்தான் பிறக்க வைக்கின்றேன். ஆனால்!? .......

அதில் அவன் தன் சரியாக பயன்படுத்தாததினால் தான் நிச்சயம் வாழ்க்கை தோல்வியில் முடிந்து விடுகின்றது!!



பார்வதி தேவியார்:

மணாளனே !!அன்பான மனாளானே!! நிச்சயம் இதை யான்  ஒத்துக்கொள்ள போவதில்லை!!

 நிச்சயம் அவ்வாறு படைத்தால்!!! ஏன்? இப்படி எல்லாம் நோய்கள் வரவேண்டும் ?? நிச்சயம் ஏன் கஷ்டங்கள் வரவேண்டும்??
 நீதானே படைத்தாயே!!!

 நிச்சயம் இன்றைய நாளில் நிச்சயம் நீ தெரிவிக்க வேண்டும்!!!



ஈசனார்:

தேவியே !!அனைத்தும் அறிந்தவள் நீ!!!

 ஆனாலும் என்னை கேள்விகளாக கேட்கின்றாயே எப்படி???

பார்வதி தேவியார்:


 நிச்சயம் தேவாதி தேவனே !! நிச்சயம் உண்மை அனைத்தும் நிச்சயம் பின் நீ செப்புவது உண்மைதான்!!!

 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட படைத்தவர் நீர் !!அல்லவா!!! நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது எடுத்துரைக்க!! அதாவது நிச்சயம் தன்னில் என் கேள்விக்கு நிச்சயம் பின் பதில் கூற!!! வேண்டும்!!



ஈசனார்:

 தேவியே !! என்னவென்று கூற !!??....அறிந்தும் இப்பொழுது எடுத்துரைக்கின்றேன்!!

 அழகாக நிச்சயம் தன்னில் பின் அனைவருமே என் குழந்தைகள் என்று தெரியும்!!!



பார்வதி தேவியார்:

 தேவாதி தேவனே !! நில்லும் !!
பின் பாடத்தை எல்லாம் நிச்சயம் தன்னில் பின் சொல்ல வேண்டாம்!!

 முதலில் யான் 
கேள்வியை கேட்டேன் அல்லவா!! அதற்கு பதில் கூற வேண்டும்!!

ஈசனார்:


தேவியே!! சொல்கின்றேன் அழகாக படைத்தேன் படைத்தேன் !! ஆனால் சிறு வயதில் என்னென்ன?? தேவைகள் குழந்தைக்கு என்று பின் ஆசைப்படுகின்றதோ?? அவை எல்லாம் யான் கொடுக்கின்றேன்!!
 மீண்டும் அதாவது கல்வி வேண்டும்  என்கிறான்!!! ஆனால் கொடுக்கின்றேன் திருமணம் என்றார்கள் அதையும் கொடுக்கின்றேன் நிச்சயம் தொழில் வேண்டும் என்று கேட்கின்றார்கள் அதையும் கொடுக்கின்றேன் பின் நிச்சயம் நோய் நொடி இல்லாமல் பின் வாழ வேண்டும் என்று கேட்கின்றேன் கேட்கின்றார் கேட்டுக் கொண்டே!!!! அவ் ஆன்மா பிறப்பெடுக்கின்றது.

 ஆனாலும் அனைத்தும் சரி!! என்று ஒத்துக் கொண்டுதான் அனுப்புகின்றேன்!!

பார்வதி தேவியார்:


தேவாதி தேவனே!! நிச்சயம் இதையெல்லாம் பின் அப்படியே ஏன்??? பின் திருமணத்தில் தோல்வி அடைகின்றார்கள்!! பின் தொழிலில் பின் அதாவது நஷ்டத்தை சந்திக்கின்றார்கள் !!நிச்சயம் அறிந்தும் இன்னும் பல பல என்று !!


ஈசனார்:


நிச்சயம் தேவியே !!கேளும். 

நிச்சயம் கல்வியில் அதாவது கல்வி கொடுக்கின்றேன் ஆனால் சரியாக பயன்படுத்துவதே இல்லை !! அதனால் தோல்வியுற்று விடுகின்றான்!!! 

இது என் தவறா??? இது!!!


நிச்சயம் பின் தொழிலும் கொடுக்கின்றேன் ஆனால் 
அங்கும் தோல்வி அடைகின்றான் ஏன்?? எதற்காக??? தேவையில்லாததை எல்லாம் நிச்சயம் செய்கின்றான் !! 

இது யார் மீது தவறு????

 மீண்டும் திருமணம் பாக்கியத்தையும் கொடுக்கின்றேன் பின் ஆனாலும் பின் என்னென்ன?? தவறுகள் செய்கின்றார்கள் என்பதையெல்லாம்!!!......

 ஆனாலும் அதில் கூட அவனே தான் தோல்வி அடைந்து விடுகின்றான் அறிந்தும் மீண்டும் பிள்ளைகளை கேட்கின்றார்கள் அதனையும் கொடுக்கின்றேன் பின் அதில் கூட நிச்சயம் தன்னில் கூட இவர்கள் ஒழுங்காக இருந்தால்தானே அப் பிள்ளைகளும் கூட ஒழுங்காக வளரும்?!?!?!!! தேவியே புரிந்து கொண்டாயா !!!

பார்வதி தேவியார்:

நிச்சயம் தேவாதி தேவனே!! இவையெல்லாம் கதைகளாக சொல்லலாமே தவிர யான் ஒத்துக் கொள்ளப் போவதில்லை!!! ஏன் எதற்கு?? நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட... அறிந்தும் எவை என்று புரிய இவையெல்லாம் பின் அதாவது யான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்!!!

நிச்சயம் என் கேள்விக்கு பதில் தாரீர்!!!


காகபுஜண்டர் மகரிஷி::

நிச்சயம் அறிந்தும் அன்னையே!!! புசுண்ட முனி செப்புகின்றேன்!! அறிந்தும் அன்னையே!! பின் தேவாதி தேவன் அல்லவா!!! கருணை மிகுந்தவன் அல்லவா!!!
அனைத்திற்கும் அதாவது அனைத்தும் சமமாக பார்க்கின்றவன் அல்லவா!!
 பின் இப்படி??? பின் அவரை போய்?? கேள்விகள் கேட்கலாமா???

பார்வதி தேவியார்::

புசுண்டனே நீர் நில்லும்!! நிச்சயம் பின் இடை இடையே வந்து.. பின் அனைத்தும் கெடுத்திடுவீர் நீர்.. நிச்சயம்... அதனால் நில்லும். 

காகபுஜண்டர் மகரிஷி.


தேவியே !! அதாவது சந்தோஷம் என் தாய் இவ்வாறு சொல்கின்றார் அல்லவா எனக்கு மிக்க மிக்க சந்தோஷமே!!!

 இருந்தாலும் உள் நுழைகின்றேன்!!

 நிச்சயம் பின் ஈசனார் அனைத்தும் எந்தனுக்கு கொடுத்தார் அல்லவா அதனால்!!!


பார்வதி தேவியார்:

 பின் புசுண்டனே !! பின் எப்படி இப்படி சொல்லலாம்??? ஈசன் மட்டும் தான் கொடுத்தாரா???

 அதாவது பின் இப்பொழுது.. நிச்சயம் யான் கொடுக்கவில்லையா?????

காகபுஜண்டர் மகரிஷி. 

பின் அன்னையே!! நிச்சயம் அன்னையில்லாமல் தந்தையா??? 

பார்வதி தேவியார்: 
ஆஹா!!!! புசுண்ட முனியே!! அழகாகவே நிச்சயம் பின் மறைக்கின்றாய் அல்லவா!!

காகபுஜண்டர் மகரிஷி. 


நிச்சயம் இல்லை தாயே!!! உண்மையில் உன் மீதும் அளவு கடந்த பாசங்களே!! ஆனாலும் அவ் பாசத்திற்காக என்னை ஏதாவது பின் நிச்சயம் திட்டி தீருங்கள்!! நிச்சயம் அறிந்தும்!!


பார்வதி தேவியார்:


 பின் பாசத்திற்குரியவனே!!! பாசம் உள்ளவனே புசுண்ட முனியே!!! எம் அருள் நிச்சயம்... கடை நாளும் உண்டு என்பதை எல்லாம் நீ அறிந்திருக்கின்றாய் அல்லவா!!!

காகபுஜண்டர் மகரிஷி: 

நிச்சயம் பின் அதாவது பின் அறிந்தும் கூட அதாவது தாயவள் திட்டி தீர்த்தாலும் பின் நிச்சயம்.. பின் தந்தைக்காக யான் இங்கு வருகின்றேன்.


அதனால் நிச்சயம் தந்தையின் கருணையை பற்றி சொல்லப் போகின்றேன். 
நிச்சயம் அவ்வாறு அறிந்தும் எதை என்று புரிந்தும் நிச்சயம் இக்காசி தன்னிலே நடந்தது. 

தேவியே நீரும் (நீங்களும்) அறிந்திருப்பீர்கள்!!!

ஆனாலும் இக் கேள்விக்கெல்லாம் நிச்சயம் பின் அதாவது தந்தை பதில் நிச்சயம் அமைதி காக்கட்டும். 

புசுண்டன் யான் செப்புகின்றேன்!!!


பார்வதி தேவியார்:


சரி புசுண்டரே!!! பின் செப்பி!!! பின் அறியும்!!!.. யான் அமைதியாக நிற்கின்றேன்!! அறிந்தும்! 

காகபுஜண்டர் மகரிஷி:


அதாவது தேவியே !! நீயே!!  ஆட்சி செய்கின்றாய் காசி தன்னில்!!

நிச்சயம் இங்கு சில வருடங்களுக்கு முன்பே அறிந்தும்  ராமன் லட்சுமணன் என்று இரண்டு பேர்!!! இவர்களைப் பற்றி சொல்கின்றேன்.

இவர்களது பெற்றோர்கள் குழந்தைகள் இல்லை!! அதாவது இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
அதாவது தந்தையை... நினைத்து நினைத்து தந்தை (ஈசனார்) மீது!! பேரன்பு  கொண்டவர்கள் இவர்களது தாய் தந்தையர்!

இதனால் எங்கு சென்றாலும் எதனை சென்றாலும்... எப்பரிகாரம் செய்தாலும் பலிக்கவில்லையே என்று நிச்சயம் இறந்து விடலாமே !! நாம் இறந்து விடலாம் என்று எண்ணி இக் கங்கை தன்னில் பின் குதிக்க!!!... நிச்சயம் ஈசன் அதாவது தர்மம் ஏந்துபவனைப் போல் வந்து ஏன் இதற்கு இப்படி ஏன் பின்... மாண்டு கொள்ள நினைக்கின்றீர்கள் நீங்கள் என்றெல்லாம்!!!

அவர்களும் ஆனாலும் இல்லை பின் நாங்கள் எங்கேயோ எல்லாம் சென்றோம்... ஈசனை வணங்கினோம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது என்று!!!

தர்மம் வேந்துபவன் போல் வேடத்தில் வந்த ஈசனும் 

நிச்சயம் குழந்தை பிறக்கும் நீங்கள் போங்கள் என்று!!!

பின் நிச்சயம் அறிந்தும்... ஈசன் கருணை மிக்கவன் என்று... அதாவது ஈசன் அதாவது... தந்தை வாயாலே!!

சரி என்று அவர்களும் சென்று விட்டார்கள் . நிச்சயம் பின்.. பிறந்து பின் அறிந்தும் அதாவது குழந்தை பின் அறிந்தும் உண்மைதனை எதை என்று கூட.. அதாவது இரண்டு குழந்தை அதாவது ராமன் லட்சுமணன் போல் என்று இருப்பார்கள் என்று!!

 பின் அதாவது தந்தையே !! (ஈசனே வரம்) ஏதாவது நிச்சயம் அதே போல் பின் உடனடியாக கர்ப்பமுற்று நிச்சயம் தன்னில் பின் ஈர் (இரண்டு) குழந்தை!!

அதற்கு அதாவது நிச்சயம் சொன்னவாறே.. அதாவது கணவன் பின் அதாவது இல்லத்தவளும் பின் பேசிக்கொண்டு நிச்சயம் பின் அதாவது கங்கை தன்னிலே உயிரை மாய்க்க சென்றோமே!!!...

அங்கு ஒருவர்  நிச்சயம் சொன்னாரே!!... நிச்சயம்.. ராமர் போல் லட்சுமணன் போல்  என்று நிச்சயம்... அவர்கள் பெயரையே வைப்போம் என்று நிச்சயம் ராமன் லட்சுமணன் என்று இரு குழந்தைகளுக்கும் பெயர் வைத்து விட்டார்கள். நிச்சயம். 

ஆனாலும் அறிந்தும் பின் சிறுவயதிலிருந்தே சிவபக்தியை கற்றுக் கொடுக்க!! கற்றுக்கொடுக்க!!
தாய் தந்தையர்!!

நிச்சயம் பின் அனுதினமும் பின் அதாவது அனுதினமும் இங்கிருக்கும்  நிச்சயம் பின் அறிந்தும் அவர்களே... நிச்சயம் தன்னில் கூட பின் உணர்ந்தும் கூட... லிங்கத்தை வைத்து அனுதினமும் வேண்டிக் கொண்டு வேண்டிக்கொண்டு...

அவ் லிங்கமும் அறிந்தும் பின் யான் சொல்வேன் அதாவது..... அகத்தியர் சொல்வார்.. அறிந்தும்!!!

(அவர்கள் வணங்கிய சிவ லிங்கத்தைப் பற்றி குருநாதர் அகத்திய பெருமான் வந்து விளக்கமாக வாக்கில் கூறுவார் காசியில் எங்கு இருக்கின்றது  என்று)

அறிந்து விட்டேன் அறிந்தும் பிறர் அறியா வண்ணம் நிச்சயம் இதனால் அனுதினமும் அதாவது நிச்சயம் பின் இருவரும் வயதுக்கு வந்தனர். நிச்சயம் அதாவது இருவரும் கூட !!

ஒருவர் அதில் அதாவது லட்சுமணன் என்பவன் அதாவது நிச்சயம் அனைவரும் நன்றாக படிக்கின்றார்கள்!! எனக்கு பின் முதல் தரத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்று !!

நிச்சயம் அறிந்தும் கூட அவ் ஆசையை நிச்சயம் அறிந்தும் பின் நிறைவேற்றினார். 

ஆனால் மற்றொருவனும் கூட ஏதும் நினைக்கவில்லை!!!... நமச்சிவாயா நமச்சிவாயா என்று இருந்து கொண்டே!! எதையும் கேட்காமல்!!

பின் இப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் அதில் ஒருவன். நிச்சயம் அறிந்தும் எதை என்றும் எடுத்துரைக்க பின் அதாவது பின் அதாவது மறைமுகமாகவே ஈசன் பின் அதாவது எந்தனுக்கு... ஒரு காதலி வேண்டும்!! பின் 
அனைவருமே!!!

 (அனைவரும் காதலிக்கின்றார்கள் திருமணம் செய்து கொண்டிருகிறார்கள் அதேபோல் எனக்கும்) பின் நிச்சயம் என்று!!

அதாவது பின் அதையும் கொடுத்தான் என் தந்தை ஈசன். 

ஆனாலும் மற்றொருவனோ எதையும் வேண்டிக் கொள்ளவில்லை!!! அறிந்தும் நமச்சிவாயா!! நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்று எப்பொழுதும்!!!

நிச்சயம் அதையும் அவனுக்கு கொடுத்திட்டான்!!! ஆனாலும் நிச்சயம் மீண்டும் வேண்டிக் கொண்டான் ஒருவன்!! ஈசனிடத்தில். அதாவது என் தந்தையிடத்தில்!!

அறிந்தும்  அதாவது மீண்டும் அறிந்தும் அதாவது மணமுடிக்க வேண்டும் இவள் தனையே என்று மணம் முடிக்க வேண்டும் என்று!!!

நிச்சயம் அதாவது தந்தை ஈசனே மணமும் அவனுக்கு முடித்து விட்டான்!!!(திருமணம் செய்துவிட்டார்) 
அறிந்தும் !!

எதை என்று பின் இன்னும் யான் சொல்ல!!!!......!?

தாயே!!!.... அறிந்தும் மீண்டும் நிச்சயம் அழகாக குழந்தைகள் வேண்டும் என்று!!!

பின் அதாவது என் தந்தையே மீண்டும் அழகாக குழந்தைகளை கொடுத்தார். 

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட!! மணத்தையும் கொடுத்தார் ஆனாலும் பின் மீண்டும் அதாவது கல்விகளில் அதாவது இன்னும் ஒரு பெரிய தொழிலை கொடு என்று கேட்டான்!!!

நிச்சயம் அதையும் என் தந்தை கொடுத்தார்!!! ஆனாலும் அனைத்தும் கிட்டியது !! ஆனால் மற்றவனுக்கு ஏதும் கிட்டவில்லை!! அதாவது இவ் விஷயங்கள் 40 வயதுக்குள்ளே  அனைத்தும் கிட்டிற்று ஒருவனுக்கு!!!

  மற்றொருவனுக்கு ஒன்றும் கிட்டவில்லை!!

 ஆனால் ஒருவன் சொன்னான் பின் அதாவது நிச்சயம் பின் அதாவது பின் நம் இருவரும் கூட நிச்சயம் இறைவனை வணங்கினோமே!!!!!! அதாவது எந்தனுக்கு மட்டும் எவ்வளவு கொடுத்திருக்கின்றான்!!!!! உந்தனக்கு மட்டும் ஏன் கொடுக்கவில்லை?? என்று நிச்சயம்!!

 ஆனாலும் மற்றொருவன் 
நமசிவாய!! நமசிவாய!! என்று!!
 சரி நீயாவது நன்றாக இரு !!என்று!! பின் அறிந்தும் உண்மைதனை கூட என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட 

ஆனாலும் நிச்சயம் அதாவது பின்
ஏசினார்கள் !!அனைவருமே இவனை ஏசினார்கள்!!
 நிச்சயம் பின் அதாவது அண்ணன் தம்பிகள் பின் அதாவது இருவருமே சேர்ந்து பூஜைக்கு செல்வார்கள்!! நிச்சயம் அனைத்தும் செய்வார்கள் ஒருவனுக்கு மட்டும் அனைத்தும் கிட்டியது!! இன்னொருவனுக்கு இல்லையே!! ஏதும் இல்லையே !! என்று நிச்சயம் அறிந்தும் கூட  அனைவரும் தவறாக நினைத்தார்கள்!! நிச்சயம் அதாவது இவந்தனுக்கு ஈசன் ஏன் கொடுக்கவில்லை? என்றால் இவன் தவறானவன் !!
அதனால் தான் ஒன்றுமே கிடைக்கவில்லை என்று!!

இதனால் தாய் தந்தையர்  கூட மனம் வருத்தமுற்றனர்!! 

மனம் வருத்தமுற்று அறிந்தும் நிச்சயம் என் பிள்ளை அதாவது பின் அனைவருமே சொன்னார்கள் ஊரார்கள் அனைவருமே!!!
 நிச்சயம் இவனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே இதற்குக் காரணம் நிச்சயம் இவன் திருடன் திருடன் என்று!!

 ஆனாலும் தாய் தந்தையோ நிச்சயம் இல்லை !!அறிந்தும் அதாவது நிச்சயம் என் மகன் அவ்வாறு தவறு செய்திருக்க மாட்டான் நிச்சயம் பின் படைத்தது இறைவன் என்று அதாவது அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட!!

ஆனாலும் ஒருவன் 
 யான் நிச்சயம் இறைவனை வணங்குகின்றேன் அவ்வாறு ஆனாலும் அமைதியுற்று!! மீண்டும் நிச்சயம்  தன்னில் கூட அவ் லிங்கத்திடம் வந்து லிங்கத்தின் அருகே வந்து நமச்சிவாயா !நமச்சிவாயா!!
யான் என்ன? உன்னை கேட்டு விட்டேன்???

பின் அறிந்தும் யான் அறிந்தும் உன்னிடம் ஒன்றுமே கேட்கவில்லையே!!!
 நமச்சிவாய நமச்சிவாயா நமச்சிவாயா என்று நீதானே !!! பின் அறிந்தும் அனைத்தும் நீதானே!!! என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் !!! எதை என்று புரிய !!!

மீண்டும் அறிந்தும் இதன் உண்மையை விளக்க !!!

பின் அனைத்தும் (லட்சுமணன் எனும் பெயர் கொண்டவனுக்கு) கிட்டியவனுக்கு கல்வியும் பின் அழிந்தது!! அறிந்தும் எதை என்று புரிய ஆனால் கல்வியை வைத்துக்கொண்டு தவறான பின் வேலைகள் எல்லாம் பின் செய்தான் இதனால் பின் அவ் (கல்வி) அறிவு மங்கியது !! 

 அதாவது அறிந்தும் எதை என்று அறிய அதாவது ஒரு பெண்ணையும் கூட காதல் திருமணம் செய்தான் அல்லவா நிச்சயம் இப்பணங்கள் பின் வந்தபின் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. 

நிச்சயம் தன்னில் அறிந்தும் எதை என்று புரிய!!!

இதனால் இல்லறத்தில் சிக்கல்கள்!! பின் மீண்டும் அதாவது..அப் பெண் சொன்னாள்!! அதாவது இல்லறத்தவள்!! சொன்னாள்!!... நிச்சயம் இவந்தன் கேடு கெட்டவன்.. அதாவது நிச்சயம் ஈசனையே ஏமாற்றுகின்றான்!!!

அதாவது பக்தி பக்தி என்று சொல்லி.. என்னை ஏமாற்றி நிச்சயம் பின் திருமணம் செய்து கொண்டு நிச்சயம் இப்பொழுது வேறொரு பெண்ணுடன் சுற்றுகின்றான். 

அதனால் நிச்சயம் வந்துவிடு!! என்று இதனால் அவராலும் தொந்தரவுகள் பின் பிள்ளைகளாலும்.. தொந்தரவுகள் பின் இழுத்துச் செல்ல இதனால் மனக்குழப்பங்கள். 

அறிந்தும் இதன் உண்மையைக் கூட அறிந்தும் மீண்டும் தொழிலில் நஷ்டங்கள் ஏனென்றால் நிச்சயம் ஏதோ பின் ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆனால் இன்னும் வளர வேண்டும் என்று... சில சில வழிகளிலும் கூட பின் சிந்தித்து தவறான வழிகளில் எல்லாம் சிந்தித்து இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஓடோடி வந்து பின் அவ் இல்லறத்தவள் அவன் பெற்றோரிடம் நிச்சயம் அறிந்தும் கூட பின்... பெற்றெடுத்தீர்களா??? பிள்ளைகளை... நிச்சயம்  பின் இப்படித்தான் இவன் செய்வானா???? என்று காறித் துப்பி !!! அறிந்தும். 

இதனால்  அவர்களுக்கும் மனக்குழப்பங்கள்!!!

நிச்சயம் தேவியே!!! புரிந்து கொண்டாயா!!! அறிந்து கொண்டாயா!!!.. அறிந்தும் எதை என்று புரிந்தும். நிச்சயம் தன்னில் கூட தன் தாய் தந்தையே அறிந்தும் இங்கு உன்னைத்தான் அறிந்தும்... இவ்வளவு கருணை படைத்தவர் எம் தந்தை!!!

அதாவது அனைத்தும் கொடுத்தார்!!! பின் ஆசைப்படுவதெல்லாம் கொடுத்திருக்கின்றார். 

ஆனால் இதில் யார் தவறு????? அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட எதை என்று விளக்கங்கள்!!!

ஆனாலும் இதற்கு கூட சில மனிதர்கள் நிச்சயம் அனைத்தும் இறைவன் தானே என்று!!!

ஆனாலும் இதற்கும் கூட
அகத்தியன் வந்து இன்னும் சில புத்திகளை புகுத்தும் பொழுது... நிச்சயம் அறிந்தும் சில மூடநம்பிக்கைகள்  ஒழியும்!!!

அப்பொழுது புரியும் உண்மை நிலை!!!

இதனால் நிச்சயம் எதை என்று புரிய அறிந்தும் எதை என்று புரிய!! அதனால் அனைத்திற்கும் தொல்லை!! கடைசியில் தாய் தந்தையரும் கூட பின் மாண்டு விட்டார்கள்! 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் எதையும் கேட்காமல் பின் ஈசனே கதி என்று இருந்தவனுக்கு( இராமன் எனும் பெயர் கொண்டவனுக்கு) நிச்சயம் தன்னில் கூட கடைசியில் ஒன்றை கேட்டான்!!! நிச்சயம் பின் என் தாய் தந்தையர் நிச்சயம்  பின் இங்கு அறிந்தும் யான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்!!

எந்தனக்காக ஒன்று செய்யும்!!! என் தாய் தந்தைக்கு உயிர் பிச்சையை கொடுங்கள் என்று நிச்சயம்!!

பின் மனம் இரங்கினார்!! தந்தை !! அதாவது ஈசன்!! பின் கொடுத்துவிட்டார்!!

ஆனால் அனைத்தையும் 40 வயதில் அள்ளி கொடுத்து விட்டார்!!!

ஆனால் அறிந்தும் இதைத்தான்... நிச்சயம் இப்பொழுதெல்லாம் மனிதர்கள் பின் வேண்டும் வேண்டும் என்று ஆசைகள் ஆசைகள் வளர்ந்து வளர்ந்து அதற்கு தகுந்தார் போல என் தந்தை கொடுக்கின்றார்!! ஆனாலும் சரியாகவே உபயோகிப்பதே இல்லை!! நிச்சயம் அறிந்தும் எதை என்று கூற!!

பார்வதி தேவியார்: 

 நிச்சயம் பின் பாசத்திற்குரியவனே புசுண்டனே!! பின் அழகாகவே நீர் சொன்னீர்!!! ஆனந்த கண்ணீர்!!! நிச்சயம் யானும் பின் அதாவது சில சோதனைகளுக்காகவே உன் தந்தையை பின் இவ்வாறெல்லாம் கேட்டேன். நிச்சயம் எந்தனுக்கும் தெரியும்.
பின் நிச்சயம் சரி!!! இன்னொரு கேள்வியையும் யான் கேட்கப் போகின்றேன் பின்!!!

ஈசனாரைப் பார்த்து பார்வதி தேவியார்!!!

பின் மணாளனே!!!! கருணை மிகுந்தவரே!!! நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அதாவது இவ்வுலகத்தில் பணம் வேண்டும் பணம் வேண்டும் என்று நிச்சயம் தன்னில் கூட கேட்கின்றார்களே!!!
அறிந்தும் நிச்சயம் பின்  அறிந்தும்... அதாவது பின் கொடுத்தும்!!!!!...... பின் ஏமாறுகின்றார்களே??? ஏன் எதற்கு??? இதற்கு நிச்சயம் பதில் வேண்டும்!!!


ஈசனார்: 

அதாவது தேவியே இவ்வளவு நேரம் புசுண்டன் எடுத்துரைத்தான்!!! தேவியே சொல்கின்றேன்!!!

நிச்சயம் அதாவது வாழ்வதற்கு பணம் பின் வேண்டும் என்று மனிதன் நினைக்கின்றான்.. அதை யான் கொடுக்கின்றேன் அழகாகவே!!!

ஆனாலும் இன்னும் பேராசைகள் ஆகின்றது.. அதாவது இவ்வளவு கொடுத்தால் பின் அதாவது அறிந்தும் இவ்வளவு வரும் என்று.

ஆனால் அவ் பேராசைகள் மூலம் அதாவது அவனே ஆசைகள் ஆசைகளில் கூட அதாவது பின் இதுவே இறைவன் கொடுத்திருக்கின்றான் என்று நினைத்து விட்டாலே இன்னும் பணங்கள் வரும். 

ஆனால் அங்கு இறைவனை மறந்து விட்டு பணத்தின் மீது ஆசைகளை கொண்டு நிச்சயம் இன்னும் பணம் வேண்டும் பணம் வேண்டும்.. எவ்வாறு சம்பாதிக்கலாம்? என்றெல்லாம் பின் நிச்சயம் செல்கின்ற பொழுது.. நிச்சயம் அறிந்தும் கூட அவ் பணத்தை மற்றொருவனிடம் கொடுக்கின்றான்..

 அவ்வளவுதான்..

 பணம் சென்றது!! சென்றது தான்!!



அறிந்தும் எதை என்று மீண்டும் வந்து நிச்சயம் என் முன்னே நிற்கின்றான்.. அதாவது எவ்வாறு என்பதையெல்லாம்.

இங்கு இதில் யார் தவறு?? சொல் தேவியே!!!!


பார்வதி தேவியார்: 


நிச்சயம் சரி!!! அவ்வாறு ஆசைகள் ஆசைகளை நீங்கள் தானே படைத்தீர்கள்!!!... நிச்சயம் இதற்கு பதில் வேண்டும்! 

ஈசனார்:

தேவியே யானா??????
ஆசைகளை படைத்தேன்?????

நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய.. அனைத்துமே!! அனைத்து ஜீவராசிகளையுமே ஒன்றாகத்தான் படைக்கின்றேன்.பின் என்னென்ன? எதை? எப்படி? வாழ வேண்டும்? எவ் வயதில் பின் மோட்சகதி அடைய வேண்டும்? 

நிச்சயம் தன்னில் கூட அனைத்திற்கும் பின் அதாவது அறிந்தும் என் குழந்தைகள் தானே.. என்று அதனால் அறிந்தும் சமமாக தானே கொடுக்கின்றேன். 
 ஏன்!?.

காகபுஜண்டர் மகரிஷி: 


பின் அன்னையே!! அன்னையே!! அப்படியெல்லாம் தந்தையை கேட்டு விடாதீர்கள்... நிச்சயம் தன்னில் கூட... அனைவரையுமே நிச்சயம் அனைத்து ஜீவராசிகளையும் கூட நிச்சயம் இயக்குபவர் நிச்சயம் தந்தையே!!

ஆனாலும் ஒரு உயிரை கொல்கின்ற பொழுது அழுவதில்லை!!! மற்றொரு உயிரைக் கொல்கின்ற பொழுது.. சந்தோசம் அடைகின்றான் மனிதன். அதாவது இது எவ்வாறு நியாயம்?????

பின் அன்னையே தெரிந்து கொண்டீர்களா??? நிச்சயம் தன்னில் கூட ஒரு உயிரை கொன்று சந்தோசம் அடைகின்றான்... பின் ஆனால் அவன் இல்லத்தில் ஏதாவது நிச்சயம் அசம்பாவிதம் நடந்து விட்டால்.. அழுகின்றான்!! இது எவ்வாறு நியாயம்???

இதுதான் மனிதனுடைய நியாயமா???


பார்வதி தேவியார்: 

நிச்சயம் புசுண்டனாரே!!! நீர் சிறிது அமைதி காக்கும்!! 

நிச்சயம் மணாளனே.. அழகாக நிச்சயம் அறிந்தும் பின் அதாவது ஏன்? எதற்கு? 
அனைத்திற்கும் காரணம் நீர்தானே??

நிச்சயம் நீர் காப்பாற்றி விடலாமே!!!!

ஈசனார்: 

நிச்சயம் தேவியே!!! அறிந்தும் சொல்கின்றேன்!! அறிந்தும் அனைவரையும் இன்னும் இன்னும் பிறக்க வைத்துக் கொண்டே இருக்கின்றேன்... அவர்கள் பின் ஞானிகள் ஆகவும்... நிச்சயம் அவர்கள் மூலம் மனிதர்களுக்கு சில சில வகைகளிலும் கூட நிச்சயம் எடுத்துரைக்க... பின் கஷ்டங்கள் கொடுத்து கொடுத்து.. பக்குவங்கள் கொடுத்து கொடுத்து.. உயர்ந்த நிலையை அடைய செய்கின்றேன்... அதன் மூலம் மக்களுக்கு தெளிவு பெற செய்கின்றார்கள் அவ் ஞானியர்கள். 

ஆனாலும் அதையும் கேட்பதில்லை!!! அதையும் கேட்காமல் இன்னும் பல பல சுவடிகளில் கூட நிச்சயம் தன்னில் கூட ஞானியர்கள் அழகாகவே எழுதி வைத்தார்கள்!!

இப்படிச் சென்றால் பின் நோய்களும் வராது!!! என்பவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!! பின் நிச்சயம் கஷ்டங்கள் வளராது!!! நிச்சயம் அனைத்தும் நடக்கும் என்று! 

ஆனால் அதைக் கூட புத்தி கெட்ட மனிதன் அறிந்தும் பின்.. அதை பின் நிச்சயம் கற்காமல் ஓடுகின்றான். 

பார்வதி தேவியார்: 

நிச்சயம் மணாளனே நில்லும்!!!!


சிவராத்திரியில் காசியில் ஈசனார் பார்வதி தேவியார் காகபுஜண்டர் உரையாடிய வாக்கு பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 22 February 2025

சித்தன் அருள் -1806 - அன்புடன் அகத்தியர் - சிவராத்திரி - குருநாதர் உத்தரவு

 






வணக்கம் அகத்தியர் அடியவர்களே !

வரும் 26/2/2025  அன்று மகா சிவராத்திரி தினத்தில் அடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்துள்ளார். அதன்படி அனைவரும் பின்பற்றுக. 

ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!

அறிந்தும் கூட அப்பனே பின் சிவராத்திரி அன்று அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பகல் வேளையில் அப்பனே நல்விதமாக அப்பனே பின் பசுக்களுக்கு அன்னத்தையும் பின் கொடுத்து அப்பனே!!!

(கோசலைகளில் அல்லது தென்படும் பசுக்கள் மாடுகளுக்கு அகத்திக்கீரை புல் கட்டுகள் வெல்லம் வாழைப்பழம் போன்றவை சிவராத்திரி பகல் நேரத்தில் வழங்க வேண்டும்)

(சிவராத்திரி)  இரவுதனில் அப்பனே பின் அதாவது சிவன் அப்பனே பின் அதாவது சிவன் தனை கூட நினைத்து அப்பனே பின்... அழகாகவே அதாவது பின் நிச்சயம் ஈசன் புகழ் பாடுவோருக்கு எல்லாம். அப்பனே இரவு தன்னில் கூட... ஏதாவது பின் உட்கொள்ள அப்பனே!!

அவை மட்டும் இல்லாமல்.. மூலிகைகளான சிலவற்றை கூட அதாவது தேநீரை கூட அப்பனே நிச்சயம் அப்பனே கொடுத்துக் கொண்டு வந்தாலே அப்பனே சில பாவங்கள்... நிச்சயம் கரையும் அப்பனே. 

(சிவாலயங்களில் சிவராத்திரி அன்று நான்கு கால பூசையை காண கூடியிருக்கும் பக்தர்களுக்கு மற்றும் சிவபுராணம் திருவாசகம் ஓதிக்கொண்டு படித்துக் கொண்டு ஓம் நமசிவாய என்று  நாமம் சொல்லி ஜெபம் செய்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் திருமுறைகள் முற்றோதுதல் செய்து கொண்டிருக்கும் சிவனடியார்களுக்கும்

துளசி, இஞ்சி.  எலுமிச்சை கருப்பட்டி  சுக்கு கொத்தமல்லி விதை மிளகு இட்ட சுக்கு காபி எனப்படும் தேநீரை வழங்க வேண்டும். 

மற்றும் சிலர் விரதம் இருப்பார்கள்.. அவர்களுக்கு பால் பழங்கள் வழங்க வேண்டும் மற்றவர்களுக்கு அன்னத்தையும் கூட வழங்கலாம்.)

அவைமட்டும் இல்லாமல் அப்பனே பின் முறைகளாகவே அப்பனே பின் ஈசனக்கு அப்பனே நிச்சயம் வில்வ இலைகளையும் கூட அப்பனே... பரிசாகவே அப்பனே... கொடுத்தால் அப்பனே நிச்சயம்... சில சாபங்களும் நீங்கும் அப்பனே....

(சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு அர்ச்சனை அபிஷேகம் செய்வதற்கு வில்வ இலைகளை கொண்டு கொடுக்க வேண்டும்)

போகப் போக சில மாற்றங்களும் கூட மெதுவாகத்தான் ஆனாலும் உடனடியாக அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய அதன் பலனை எதிர்பார்க்கக் கூடாது என்பேன் அப்பனே. 

எவன் ஒருவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பலனை எதிர்பார்த்து செய்கின்றானோ...  பின் அதற்கு மதிப்பு.. குறைவு தான் என்பேன் அப்பனே 

 இதை என் பக்தர்கள் ஏற்றுச் செய்ய நன்று என்பேன் அப்பனே!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அன்றைய தினத்தில் அப்பனே அதாவது சிவராத்திரி அன்று நால்வோர் துதிகளையும் கூட அப்பனே 

(அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர்.. தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல்)

பின் நிச்சயம் அப்பனே அதாவது என்னால் திருத்தலத்திற்கு செல்ல முடியவில்லையே.. என்று ஏங்குவோர்களும் கூட இல்லத்தில் தன்னால் இயன்ற தீபங்களை ஏற்றி அப்பனே பின் அத் தீபத்தின் வழியாக... ஈசனையும் பார்வதி தேவியையும் பின் பார்த்திட்டு.. அப்பனே பதிகங்களை ஓத ஓத.. அப்பனே சிறப்பு தரும் என்பேன் அப்பனே!!

(சிவராத்திரி அன்று ஆலயத்திற்கு செல்ல முடியாமல் இருப்பவர்கள் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகள் ஏற்றி அந்த தீபஜோதியின் வழியாக சிவனையும் பார்வதி தேவியோரையும் நினைத்துக் கொண்டு தேவாரம் திருவாசகம் பதிகங்கள் பாராயணம் செய்து வருதல் வேண்டும்)

ஆசிகள் !!ஆசிகள்! அப்பனே!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 21 February 2025

சித்தன் அருள் -1805 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி வாக்கு - 2!



அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 2 ( கோளறு பதிகம் - ரகசியங்கள் ) 

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்

1. சித்தன் அருள் - 1796 - கோவை வடவள்ளி வாக்கு 1)

நம் குருநாதர் :- ( அங்கு ஒரு அடியவரை ) அம்மையே என்ன வேண்டும்?

அடியவர் 3 :- ஒன்றும் வேண்டாம் . அப்பாவோட அருள் எப்பவும் கிடைத்தால் போதும். 

நம் குருநாதர் :- அம்மையே அனைவரிடத்திலும் கேள் என்ன வேண்டும் என்று?

அடியவர் 3 :- உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும் என்று அப்பா கேட்கின்றார்.

அடியவர் 4 :- ( பின்னால் இருந்த படி ) நல்ல பக்தியும் , நல்ல முக்தியும் வேண்டும் என்று சொல்லுங்கள். 

நம் குருநாதர் :- அவனை எழச்சொல் முதலில். முன்னே வரச்சொல். 

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு அலைகள் ) தானாகவே போய் மாட்டிக்கிட்டார். 

அடியவர் 4 :- ( சுவடியின் முன்னே வந்தார் ) 

நம் குருநாதர் :- அப்பனே திரும்பி நின்று,  அவரவருக்கு என்ன வேண்டும் என்று நீயே கேள் அப்பனே. ஏனென்றால் புண்ணியம் பெருகட்டும் அப்பனே. அறிந்தும் கூட இன்னும் நல்லவை செய்ய வேண்டும் நீ. அதனால் பின் புண்ணியத்தை யானே தேடித்தருகின்றேன். நீ செய்ய மாட்டாய் என்பேன் அப்பனே. __ என்பேன் அப்பனே. அதனால் அனைவரிடத்திலும் கேள் என்ன வேண்டும் என்று. அதுவும் ஒரு புண்ணியம்தானப்பா. யான் சொல்கின்றேன். நீ அப்படியே சொல். புண்ணியம் ஆகும் அப்பனே. புண்ணியம் வளர்த்துக்கொள் அப்பனே. இல்லத்திலும், உன் தாய்க்கும் சந்தோசம் ஏற்படும் என்பேன் நலன்களாகவே. 

==============
(அடியவர்கள் ஒன்றை நன்கு இங்கு கவனிக்கவும். என்ன வேண்டும் என்று கேட்டாலே புண்ணியம் வரும் என்றால் , சித்தன் அருள் வலை தளத்தில் அன்புடன் அகத்தியர் வாக்குகளை மக்களுக்கு நேரில் எடுத்து உரைத்தால் எவ்வளவு புண்ணியம் உண்டாகும்? அதனால் உயிர் உடலில் இருக்கும் காலம்வரை இவ்வாக்குகளை இயன்ற பொழுதெல்லாம் இவ்வுலகம் முழுவதும் பரப்புங்கள்.) 

==================

அடியவர் 4 :- நிற்பவர்களுக்கு யார் யாருக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். 

அடியவர் 3 :- யார் யாருக்கு என்ன வேண்டும் என்று ( அகத்தியர் ஐயா ) அவருக்கே தெரியும். 

நம் குருநாதர் :- அப்பனே புரிகின்றதா?ஆனால் என்னிடத்தில் கேட்கின்றார்கள் ஏன் என்று கூறு?

அடியவர் 3:- இந்த ஜீவநாடி கேட்கவே நாங்கள் எத்தனை ஜென்மத்தில் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். 

நம் குருநாதர் :- அமர்ந்திருப்பவர்கள் அனைவருமே புண்ணியவாதிகள்தான். ஆனால் அனைத்தும் நடக்கும். ஆனாலும் சிறு சிறு தவறு செய்கின்றீர்கள். அவ்வளவுதான். அதை திருத்திக்கொள்ளவே யான் வருகின்றேன். நலமாகவே அனைத்தும் சொல்கின்றேன். நிச்சயம் அதிகம் அதாவது தேர்ச்சி பெற வேண்டும் என்றால், ஆனால் சிறிய அளவிலே பின் தோல்வி அடைந்து விடுகின்றீர்கள். இதனால் அனைத்தும் நலமாக புண்ணியங்கள் மிகுந்து காணப்படுகின்றது. ஆனாலும் சிறிது சிறிது தவற்றினால்தான் நிச்சயம் எங்கேயோ போய் பள்ளத்தில் விழுந்து விடுகின்றீர்கள். அவ்பள்ளத்தில் நிச்சயம் விழாதீர்கள் என்பதற்காகவே இங்கு ஆசிகள் இப்பொழுது. 
( தனி வாக்குகள் ) 
…….
……..
பல போராட்டங்களை சந்திக்கும் பொழுதுதான் இறைவன் நேரில் காட்சி அளிக்கின்றான். 
………
……… 
தாயே , மற்றவர்களைப் பற்றி நாம் எப்பொழுது நினைக்கின்றோமோ நன்றாக இருக்க வேண்டும் என்று , நிச்சயம் இறைவன் தன்னைப் பற்றி ( நம்மைப் பற்றி ) நினைப்பான் தாயே!!!!!!!!
…….
……
( இறை வழிபாட்டில் இருப்பவர்கள் எப்படி பாவத்தை சேர்த்துக் கொள்கின்றார்கள்? ) 

( சுய , தன்னைப் பற்றி, தன் குடும்பம் பற்றி வேண்டுதல் ) இதுதான் மாயை. அதாவது இறைவனிடத்தில் தன் சுயநலத்திற்காக எதுவும் வேண்டக்கூடாது. அப்படி வேண்டினால் பாவங்கள் வந்து சேர்ந்துவிடும். கஷ்டங்கள் வந்து சேர்ந்துவிடும். நிச்சயம் சுய நலம் வேண்டாம். நிச்சயம் இறைவன் படைக்கின்றான் அனைவரையுமே. அறிந்தும் அறிந்தும் கூட இதனால் இறைவனுக்கு எப்பொழுது செய்யத் தெரியுமோ, பின் அப்பொழுது செய்வான் தாயே. கவலையை விடு. ஆசிகள் கொடுத்து விட்டான் என்று சொல்லிவிட்டேன். பின் செய்யாமலா போவான் இறைவன் ?

….
( நம் குருநாதர் இவ் தருணத்தில் உலகோர் நன்மைக்காக இவ் அடியவரை அதாவது இங்கு “அடியவர் 3” என்ற அடியவரை உரையாட வைத்து , மறைமுகமாக இயக்கி,  மகிமை புகழ் “கோளறு பதிகம்”
 ரகசியங்களை எடுத்தை உரைக்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் இவ் அடியவர் புண்ணியமும் உயர குருநாதர்  முன்பு இவ்வாக்கில் உரைத்தருளினார் என்பதை அடியவர்கள் கருத்தில் கொள்க. பல வருடங்களாக ஈட்ட இயலாத புண்ணியங்கள், நம் குருநாதர் கருணையால் , சத்சங்கத்தில் சட்டென்று நடந்துவிடும் அதிசயம் இது. இனி கவனமுடன் படியுங்கள் இவ் ஆழ் ரகசியங்களை.) 

நம் குருநாதர் :- அப்பனே நீ கேள். எனக்காக வேண்டிக்கொள் என்று. 

அடியவர் 3 :- அம்மா , எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

நம் குருநாதர் :- அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் எப்படியப்பா வேண்டிக் கொள்வாள்? (அவள்) பெற்ற பிள்ளையா நீ?  

அடியவர் 3 :- அப்படி எல்லாம் ( இவ் அம்மை ) நினைக்க மாட்டார்கள் சாமி. ரொம்ப நாள் தெரிந்தவர்கள். 

நம் குருநாதர் :- அப்பனே யான் கூட பழகுகின்றேன் அப்பனே. ஆனால் பழகிக்கொண்டே இருக்கின்றாள். ஆனாலும் உந்தனுக்காக வேண்டிக்கொண்டாளா என்று கேள்?

அடியவர் 4 :- வேண்டிக்கொண்டேன் ஐயா.

நம் குருநாதர் :- அப்பனே யான் இல்லை என்று சொல்வேன் அப்பனே. இனி மேலாவது வேண்டிக்கொள்ளச் சொல் அப்பனே. நடந்தேறும் அப்பனே. ஒன்றைக் கொடுத்தால்தான் , ஒன்றை வாங்க முடியும் அப்பனே. 

அடியவர் 3 :- சரிங்க சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே , இன்னும் என்ன வேண்டும் என்று கேள்? 

அடியவர் 3 :- இன்னும் என்ன வேண்டும்?

அடியவர் 4 :- ஒன்றும் வேண்டாம்.

அடியவர் 5 :- அப்பா எங்க கூட இருந்தால் போதும். 

நம் குருநாதர் :- ( தனி வாக்குகள்  உரைத்து அருளினார் கருணைக் கடல் ) இன்னும் என்ன வேண்டும் என்று கேள்?

அடியவர் 3 :- சாமி , எல்லோருக்கும் பக்தியையும் , புத்தியும் கொடுத்துவிடுங்கள். 

நம் குருநாதர் :- ஏன் பக்தியைக் கேட்கின்றாய்? 

அடியவர் 3 :- பக்திதான் அன்பு,  சாமி.

நம் குருநாதர் :- அப்பனே, இது எவ்வாறப்பா நியாயம்? உன் வாயில் வருவதை எல்லாம் உளறுகின்றாய் அப்பனே. 

============
( அடியவர்கள் இங்கு நம் குருநாதர் கருணைக்கடல் இவ் அடியவரைத் தூண்டி, எப்படி எல்லாம் அவ் அடியவரின் மூலம் உலகிற்கு ஒரு மகத்தான ரகசியத்தை எடுத்துரைத்து , இவ் அடியவருக்கு புண்ணியத்தை உண்டாக்குகின்றார் என்று கவனிக்கவும். உயர் புண்ணியங்கள் குருநாதர், இறைவன் மனது வைத்தால்தான் நடக்கும் என்பதற்கு இவ் உரையாடல் மிகச் சிறந்த ஒரு உதாரணம். வாருங்கள் நம் அன்பு குருநாதரின் கருணை வாக்கு மழையில் நனையலாம் ) 
==============

அடியவர் 3 :- பக்தியும், புத்தியும் இருந்தால்தானே சுவாமி அனுக்கிரகம்…

நம் குருநாதர் :- அப்பனே , புத்திக்கும், பக்திக்கும் என்ன சிறப்பு?

அடியவர் 3 :- பெரியவங்க சொன்னாங்க சாமி. நல்லபடியாக இருப்போம் (என்று). 

நம் குருநாதர் :- அப்பனே, அப்பொழுது உந்தனுக்கு மூளையே இல்லையா? அறிவே இல்லையா? அப்பனே பெரியவர்கள் சொன்னால்தான்,  அறிந்தும் கூட அப்பொழுது அவர்கள் ஓடிவிடு என்று சொல்வார்கள். ஓடிவிடுவாயா என்ன அப்பனே? சொல் அப்பனே? 

அடியவர் 3 :- சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள் சாமி பக்தி செலுத்த வேண்டும் என்று…

நம் குருநாதர் :- அப்பனே பக்தி செலுத்து என்று சொல்கின்றார்கள் அப்பனே, ஆனால் செய்கின்றார்களா என்ன அப்பனே? ஆனால் காதல்தான் செய்கின்றார்கள். 

அடியவர்கள் :- ( மௌன சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ( கருணைக்கடல் தூண்டியதோடு மட்டும் இல்லாமல் சுவடி ஓதும் மைந்தனும் அவ் அடியவரை ஊக்குவித்து உரையாடலைத் தொடர்ந்தார்கள். இதன் சுவாரசியத்தை முடிந்த அளவு அடியவர்களுக்கு பயன் பட, இங்கு நம் குருநாதர் கருணைக்கடல் அருளால் வாக்குகளாக மலர்ந்துள்ளது. ) 

நம் குருநாதர் :- அப்பனே இவர்கள் ஓரளவிற்குப் பக்தியில் தேர்ச்சி பெற்று விட்டார்கள் அப்பனே. அப்பனே அவர்களுக்கு அனைத்தும் நல்கும் என்று சொல் புண்ணியமாகட்டும் உந்தனுக்கு. 

=========
( நம் குருநாதரின் கருணையை இங்கு கவனியுங்கள். இவ் அடியவருக்கு எப்படி இறங்கி வந்து, கருணைக்கடல் புண்ணியத்தைக் மலை போலக் குவிக்கின்றார் என்று உணருங்கள்.) 
=========

அடியவர் 3 :- ( நம் குருநாதர் உரைத்தது போல்  அங்கு உள்ள அடியவர்களுக்கு உரைத்தார் இவ் அடியவர்.) 

அடியவர்கள் :- இதுவே போதும் சாமி. ( மன நிறைவு அடைந்தது  இவ் அடியவர்களுக்கு ) 

=========
(இப்போது மீண்டும் இவ் அடியவரை அன்புடன் இழுத்து , ஆட்கொண்டு மீண்டும் புண்ணியம் செய்ய வாக்கு அருளினார்கள்.)
=========

நம் குருநாதர் :- அறிந்தும் கூட அப்பொழுது நீ கேட்டிருக்க வேண்டும் அல்லவா? இவர்கள் இருவரும்தான் பக்தியில் தேர்ச்சி பெற்றார்களா என்று? இங்கு அனைவருமே இல்லையா என்று நீ ஏன் கேட்கவில்லை அப்பனே கூறு? 

அடியவர்கள் :- ( பல மௌன சிரிப்புகள் )

அடியவர் :- சாமி நிற்கின்றவர்களைத் தானே கேட்கச் சொன்னீர்கள்?

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் அகத்தியரிடம் கேட்க வேண்டும். 

அடியவர் :- அப்ப அவர்கள் மட்டும் தான் முக்தி பெற்றுள்ளார்களா சாமி? இவர்கள் எல்லாம் முக்தி பெறவில்லையா?

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட யான் சொன்ன பிறகே சொல்கின்றாய் அப்பனே. எவ்வாறு அப்பா நியாயம் அப்பனே? 

அடியவர் 3 :- நீங்க ஞானி. நீங்க முக்காலமும் அறிந்தவர்கள். உங்களுக்குத் தெரியும் சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட அதை யான் சொன்னேனா? 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

அடியவர் 3 :- எல்லோருக்கும் தெரியும் சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே என்ன தெரியும் கூறு அப்பனே அகத்தியனைப் பற்றி? அனைவருக்கும் உரை அப்படித் திரும்பி. 

( நம் குருநாதர் கருணைக் கடல்,  உயர் முதல் தரப் புண்ணியம் ஈட்ட மேலும் வழி வகுத்தார் இவ் அடியவருக்கு.) 

அடியவர் 3 :- ( சுவடி ஓதும் இடத்தில் அடியவர்களைப் பார்த்து திரும்பி உரைக்க ஆரம்பித்தார் ) அகத்தியப் பெருமான் நடக்கின்றது, நடக்கப் போவது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தி செய்து எல்லோருக்கும் புத்தியைக் கொடுப்பார். புத்தியையும் பக்தியையும் கொடுப்பார். 

நம் குருநாதர் :- அப்பனே முக்தி என்றால் என்ன? பக்தி என்றால் என்ன?

அடியவர் 3 :- தாங்களே சொல்லிவிடுங்கள் சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே நீ ஏதாவது எந்தனுக்குச் சொல்ல வேண்டும் அப்பனே. அப்பொழுதுதான் உந்தனுக்கு சொல்லுவேன்.

அடியவர் 3 :- ( அமைதி )

நம் குருநாதர் :- அப்பனே அப்படியே திரும்பி ஒரு பாடலைப் பாடு. 

=========
( திருஞானசம்பந்தர் பெருமான் உரைத்த மகிமை புகழ் கோளறு பதிகப் பாடலை பாட ஆரம்பித்தார் இவ் அடியவர். ஆனால் இவ் பாடலை பாட வைத்தது நம் குருநாதர். அடியவர்கள் இவ் பாடலில் முழு விளக்கத்தை பின் வரும் பதிவில் படித்து பொருள் உணர்க) 

https://siththarkalatchi.blogspot.com/2024/05/378.html?m=0
சித்தர்கள் ஆட்சி - 378 - திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய கோளறு பதிகம்.

=========

அடியவர் 3:- ( பின் வரும் பாடலை பாடினார் அடியவர்) 

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்    
  மிகநல்ல வீணை தடவி    
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி    
  சனிபாம்பி ரண்டு முடனே    
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட இதை அனைவரையுமே சொல்லச் சொல் அப்பனே. நிச்சயம் கிரகங்கள் அண்டாதப்பா. சொல்லிவிடு. 

அடியவர் 3 :- எல்லோரும் இந்த பாடலை சொல்லுங்கள். கிரகங்கள் யாரையும் தொந்தரவு செய்யாது.

நம் குருநாதர் :- அப்பனே சொல்லிவிட்டேன் அனைவருக்குமே. எந்தனுக்கு சொல்லவில்லை, உந்தனுக்குச் சொல்லவில்லை , இப்படிச் சொல்லவில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அப்பனே நிச்சயம் யான் சொல்லியவற்றைக் கேட்டால்தான் அடுத்த அளவில் கூட எடுத்துச் செல்ல முடியும் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே முதல் வகுப்பிலேயே தேர்ச்சி பெறவேண்டும். அப்பொழுது ஆசிரியன் என்னென்ன சொல்கின்றானோ அதை நிச்சயம் கேட்டு தேர்ச்சி பெற வேண்டும். அப்பனே அதே போலத்தான் அப்பனே. இப்பொழுது சொல்லிவிட்டேன். என்ன சொன்னேன் என்று அனைவரையும் கேள்?  அப்பனே சொல்லச் சொல் பார்ப்போம் அப்பனே. அதாவது உன் பக்கத்தில் இருக்கின்றானே, அவனை எழச்சொல்லி இதை செப்பச் சொல். 

அடியவர் 3 :- ( மற்றொரு அடியவருக்குச் சொல்லிக் கொடுத்து, அவரை இப் பதிகத்தை சொல்லச் சொன்னார். அவ் அடியவரால் சொல்ல இயலவில்லை.) 

நம் குருநாதர் :- அப்பனே அப்பொழுது  கிரகங்கள் இவன் தனை அமுக்கி விட்டது அப்பனே. எப்படியப்பா? முதலில் என்ன பிரச்சினை வரும் என்பதைக் கேள் அவனை. 

அடியவர் 3 :- முதல்ல என்ன பிரச்சினை வரும்?

அடிவர் :- ஐயாவுக்கு…

அடியவர் 3 :- உங்களுக்குத் தான் சாமி தெரியும். 

நம் குருநாதர் :- அப்பனே காதல் பிரச்சினை வரும். காதலைப் பற்றி நீயும் எடுத்துரை? 

அடியவர் 3 :- ( காதல் புரிவதில் உள்ள பிரச்சினைகளை எடுத்து உரைத்து , பெற்றோர்கள் மூலம் திருமணம் நடத்தல் நன்று என்று  அழகாக எடுத்து உரைத்தார்.) 

நம் குருநாதர் :- அப்பனே ( கோளறு பதிகம் ) இதை நிச்சயம் அவந்தனக்குச் சொல்லிக்கொடு.

அடியவர் 3:-  வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்    
அடியவர் :- வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் 


அடியவர் 3:-  மிகநல்ல வீணை தடவி    
அடியவர் :- மிகநல்ல வீணை தடவி    

அடியவர் 3:-  மாசறு திங்கள்
அடியவர் :- மாசறு திங்கள்

அடியவர் 3:-  கங்கை முடிமேலணிந்தென்
அடியவர் :- கங்கை முடிமேலணிந்தென்    

அடியவர் 3:-  உளமே புகுந்த அதனால்    
அடியவர் :- உளமே புகுந்த அதனால்    

அடியவர் 3:-  ஞாயிறு திங்கள் 
அடியவர் :- ஞாயிறு திங்கள் 

அடியவர் 3:-  செவவாய்  புதன்
அடியவர் :- செவவாய்  புதன்

அடியவர் 3:-  வியாழன் வெள்ளி
அடியவர் :- வியாழன் வெள்ளி

அடியவர் 3:-  சனிபாம்பி ரண்டு முடனே    
அடியவர் :- சனிபாம்பி ரண்டு முடனே    

அடியவர் 3:-  ஆசறு நல்லநல்ல
அடியவர் :- ஆசறு நல்லநல்ல  

அடியவர் 3:- அவைநல்ல நல்ல    
அடியவர் :- அவைநல்ல நல்ல    

  அடியவர் 3:- அடியாரவர்க்கு மிகவே.  
அடியவர் :- அடியாரவர்க்கு மிகவே.  


நம் குருநாதர் :- அப்பனே இதை நிச்சயம் 108 முறை செப்ப வேண்டும் அனைவருமே. இதை செப்பிட்டு , அப்பனே சிறு எறும்புகளுக்காவது தானம் செய்ய வேண்டும் அப்பனே. வெற்றி நிச்சயம் உண்டு அப்பனே. இதை செப்பி, அனைவரையும் செப்பச் சொல். 

அடியவர் 3:- ( இவ் பதிகத்தை அடியவர் ஆரம்பித்த உடன், அங்கிருந்த அடியவர்கள் ஒருமித்த குரலில் கருணைக்கடல் முன்னர் பாட ஆரம்பித்தனர். சத்சங்கமே ரம்யமான இனிய இசைக்களம் ஆனது அங்கு அடியவர்களின் இனிய பாடுதலால். அத்துடன் இவ் அடியவர் குருநாதர் உரைத்தவாறு அனைவரையும் 108 முறை இல்லத்தில் அவர்களை ஓதச் சொன்னார்கள். அத்துடன் ஜீவராசிகளுக்கு அன்னதானம் இடவும் சொன்னார்.) 

நம் குருநாதர் :- அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே. இதில் யார் தேர்ச்சி பெறுகின்றார்களோ , அப்பொழுதுதான் அப்பனே அவந்தனக்கு மறு வாக்கு சொல்லி, உண்மை சொல்லி உயர்த்தி விடுவேன். 

அடியவர் 3:- ( அவ்வாரே உரைத்தார் அனைவருக்கும் )

அடியவர்கள் :- அந்த 4 வரியை மட்டும் பாட வேண்டுமா? அல்லது முழுப் பாடலையும் பாட வேண்டுமா? 

=========
கேளறு பதிகம் 11 பாடல்கள் அடங்கிய தொகுப்பு. அடியவர்கள் இவ் பாடலில் முழு விளக்கத்தை பின் வரும் பதிவில் படித்து பொருள் உணர்க. 

https://siththarkalatchi.blogspot.com/2024/05/378.html?m=0 

===============

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட சாதமும், அப்பனே கூறு தனித்தனியாக வைத்து உண்ணலாமா என்று? 

அடியவர் 3 :- ( புரிந்து கொண்டார் ) கோளறு பதிகம் எல்லாமே படிக்க வேண்டும் 108 முறை.

நம் குருநாதர் :- அப்பனே இப்பொழுது சொல். குடும்பத்தில் சிக்கல் ஏற்படாது இவ்வாறு ஓதினால் என்று.

அடியவர் 3:- கோளறு பதிகம் முழுமையாக படித்தால் குடும்பத்தில் சிக்கல் ஏற்படாது. 

நம் குருநாதர் :- அப்பனே கலியுகம் என்பேன் அப்பனே. கிரகங்களின் ஆட்டம் அப்பனே அதிக அளவில் நடைபெறும் என்பேன் அப்பனே. அப்பொழுது இல்லத்திலும் கூட குழப்பங்கள். ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள். தாய் தந்தையர் அதாவது சகோதர, சகோதரிகளுக்கு இடையே சண்டைகள் ஏற்படுவதும் கூட உறுதி என்பேன் அப்பனே. இதை சொல்லிக்கொண்டே வந்தால் , அதாவது இல்லத்தில் ஒருவராவது இதைச் சொல்ல வேண்டும். 

அடியவர் 3:- குடும்பத்தில் யாராவது ஒருத்தராவது சொல்லுங்க என்று சொல்கின்றார். 

அடியவர்கள் :- 108 தடவை தொடர்ச்சியாக 
சொல்ல வேண்டுமா?

நம் குருநாதர் :- அம்மையே காசுகள் வந்து கொண்டே வந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் வேண்டாம் என்று சொல்லுவாயா தாயே? 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, சொல்லிக்கொண்டே இருங்கள் daily 108 முறை. 

நம் குருநாதர் :- அம்மையே நிச்சயம் உனைப் பார்த்தே ஒன்று கேட்கின்றேன். கடும் முயற்சி எடுத்தால் வெற்றிகள் உண்டு. தாயே இதற்கு என்ன நீ கூறுகின்றாய்? 

அடியவர் 5:- கடும் முயற்சி எடுக்கனும் ஐயா.

நம் குருநாதர் :- அம்மையே உயர் பதவிகள் வகித்தாலும் கடும் முயற்சி நிச்சயம். அதாவது தற்பொழுதெல்லாம் வெளி நாடு செல்கின்றார்கள். அதற்கு நாய் போல் பாடு படுகின்றனர். ஆனால் சுலபமாக வாழ்வதற்கு இதைதன் மீண்டும் கேள்விகளாக கேட்டுக்கொண்டுள்ளீர்கள் தாயே. எவ்வாறு நியாயம்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் ) 

அடியவர்கள் :- ( ஒரே நாளில் 108 முறை சொல்வது குறித்து உரையாடல்கள் ) 

நம் குருநாதர் :- அம்மையே சொல்லிவிட்டால் நன்று. ஆனாலும் அம்மையே அனைவரிடத்திலும் பாவம் உள்ளது. ஈசன் விடுவானா என்பது சந்தேகமே!!!!!?????

சுவடி ஓதும் மைந்தன் :- கேள்விக்குறியை போட்டுவிட்டார்….

நம் குருநாதர் :- அப்பனே இதனால் கவலைகள் இல்லை. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 19 February 2025

சித்தன் அருள் - 1804 - அகத்தியர் அருளிய சுப்பிரமண்யர் தத்துவம்!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று அகத்தியர் அருளிய சுப்பிரமண்யர்  தத்துவத்தின் சில தகவல்களை பார்ப்போம்.

​இருதயம் என்பது ஒரு குளம். அதுவே "சரவணப் பொய்கை". இக்குளம் நாடிகளாகிய வாய்க்கால்கள் மூலமாகவே ரத்தத்தை உடல் முழுவதும் பரப்புகிறது. இந்த குளத்தின் நீரே ரத்தம். ஆசாபாசங்களும், ஆணவாதிகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் இக்குளம் தூய்மையாகவே இருக்கும். ஆசாபாசங்களே இக்குளத்தில் பாசியாகப் படர்ந்துள்ளது. இவைகளை நீக்கி தெய்வ பக்தியை இதயத்தில் ஏற்றிவிட்டால் அதுவே பேரின்ப வாழ்வு. அந்த இருதய சரவணப் பொய்கையில் விளையாடுபவன் முருகன்.

இக்குளத்தை சுத்தம் செய்து நல்ல எண்ணங்கள் மூலம் தன்னை நினைப்பவனை "தன்" வண்ணமாக்குவது தெய்வத்தின் இயல்பு. நம் நினைவு ரத்தத்தையே முதலில் சேருகிறது. நல்ல நினைவுள்ளவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

இதையே ஒரு சித்தர் 

குறவன் குடிசை புகுந்தாண்டி
கோமாட்டி எச்சில் உமிழ்ந்தாண்டி 

என்கிறார்.

மானிட சரீரமே குறவன் குடிசை. குறப்பெண்ணை கைபிடித்த குறவனான முருகனை அழைத்தால் அவன் அதில் குடியேறுவான். ஆசாபாசங்களை, ஆணவத்தை அறுத்த உடல், நாமத்தை சொல்லும் நாவில் ஊரும் எச்சில் கங்கயாகிவிடுகிறது. அத்தகைய அன்பர்கள் நாவில் அவன் விளையாடுகிறான். நாமமே முருகனின் சரீரம். சப்தமே அவன் சரீரமானபடியால் நாமத்தை சொல்லும்பொழுது சப்தத்துடன் அவனை அனுபவிக்கிறோம்.

திருவடி என்பது நாதப்பிரம்மம். (நடராஜரின் இடது கை ஆள்காட்டி விரல் அவர் திருவடியை காட்டுவது, இந்த சூட்ச்சுமம் தான்). சப்த பிரம்மத்தால் (நாம ஜபம்) உலகினை கட்டி தன்னகத்தே வைத்தால் பிரம்மஞானம் உணர முடியும்.

தன் அன்பை எங்கு கொண்டுபோய் வைப்பதென்று முருகன் பதினான்கு உலகிலும் சுற்றிப் பார்த்தானாம். தொண்டர்கள் இருதயம்தான் தக்க இடம் என்று தீர்மானித்து நமது இருதயத்தில் புகுந்தானாம்.

"நான்" "எனது" என்கிற உணர்ச்சிகளை ஆண்டவனுடைய "நானாக" "உனதாக" மாற்றிவிட்டால் அது உலகம் முழுவதும் பரந்த "நான்" "உங்களுடையது" ஆக ஆகிவிடுகிறது.
ஒரு நிமிடம் கண்ணை மூடி முருகனை நினைத்து அகக்கண் திறக்கப் பெற்றால் அவர்களே மிகுந்த புண்ணியவான்கள்.

முருகன் நம் இருதயத்திலிருந்து எப்போதும் பிரம்ம ஞானம் பேசிக்கொண்டு இருக்கிறான். ஆனால், ஐவர் (பஞ்சேந்த்ரியங்கள்) அவன் பேச்சை கேட்க விடாமல் தாங்கள் பேசிக் கொண்டே இருக்கின்றனர். "முருகா" என்னும் சப்தத்தினால் அந்த ஐவரையும் (பஞ்சேந்த்ரியங்கள்) ஒடுக்கவேண்டும்.

ஜீவர்களிடமுள்ள கருணை காரணமாக தனக்கு நெற்றிக் கண் வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டாரம் முருகர்.

6 முகம், 12 ஆயுதம் ஏந்திய கைகள் :-

இவருடைய ஆறு முகங்கள் முற்றறிவு, அளவிலின்பம், வரம்பில் ஆற்றல் உடைமை, தன்வயமுடைமை, பேரருளுடைமை, இயற்கை அறிவு  என்ற ஆறு குணங்களாகும். அவர் திருமேனி அருள் உரு.

வேலாயுதம் தவிர மற்ற பதினோரு ஆயுதங்கள் ஏகாதச ருத்திரர்கள். வேல் ஞான உருவம். சேவல் கொடி நாத தத்துவம், மயில் விந்து தத்துவம். வள்ளி, தெய்வயானை இச்சா சக்தி, க்ரியா சக்தி தத்துவம்.

தேவசேனா பக்தர்கள் பகவானை தேடி செல்லும் தத்துவம். மர்க்கட நியாயம். அதாவது குரங்குக் குட்டி தன் தாயின் வயிற்றை கெட்டியாக கட்டிக் கொள்வது.

வள்ளி நாயகி, பகவானே பக்தர்களை நாடி வரும் தத்துவம். மார்ஜால நியாயம். தாய் பூனை தன் குட்டிகளை கவ்விச் சென்று பாதுகாப்பது போல.

வேல் இருப்பது ஆன்மாக்களுக்கு ஞானம் தர. அந்த ஞான அறிவை, இச்சையையும், கிரியையும் ஒழித்தால் அடையலாம்.

அகத்தியர் அடியவர்களே! அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி எல்லா அருளும் பெற்று வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1803 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை அடிவாரம்!




16/2/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம். ஹரிஹரபுத்ரா சேவா டிரஸ்ட் வளாகம். நாராயணன்தோடு .நிலக்கல்.வழி. சபரிமலை அடிவாரம்.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே என்னுடைய ஆசிகள் அனைவருக்குமே உண்டு என்பேன் அப்பனே. 

சில சில அப்பனே பின் இவ்வுலகத்தில் மாற்றங்கள் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.

அப்பனே ஆனாலும் சித்தர்கள் அப்பனே பின் யாங்களே.. வழி நடத்துவோம். 

அப்பனே  பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ் ஐயனை (ஐயப்பனை) நிச்சயம் காண வேண்டுமென்றால் அப்பனே எங்கள் அருள் அப்பனே எதை என்று பின் அறிந்தும் கூட

அப்பனே இவன் கூட அப்பனே... (சக்தி)மிகுந்த ஒரு சித்தன் தானப்பா!!!

அப்பனே பின் சித்தன் அப்பனே தெளிவடைந்தவன்!!! அப்பனே!!

இதனால் சித்தனிடத்தில் சிறிது எச்சரிக்கையாகவே (இருக்க வேண்டும்) அப்பனே.. பின் அனைவருமே!!

 சித்தர்கள் அறிந்தும் பின் அப்பனே பின் ஒவ்வொன்றாகவே விளக்குகின்றேன் (ஒவ்வொரு சித்தர்களைப் பற்றியும்) அப்பனே. 


அப்பனே பின் இவன் கருணை கொண்டவன்!! இன்னும் இன்னும் அப்பனே!! பின் அறிந்தும் கூட..

இதனால் அப்பனே எதுவும் இக் கருணைக்கு ஈடாகாது என்பேன் அப்பனே. 

அறிந்தும் இதன் உண்மைதனை கூட இப்பொழுது செப்புகின்றேன் அப்பனே.

இதனால் அப்பனே நன் முறைகளாகவே.. அப்பனே அதாவது.. இது இப்பொழுதே நடந்ததப்பா. 

அறிந்தும் இதன் தன்மையை உணர்ந்தும் கூட அதாவது அப்பனே அதாவது ஒரு 40 வருடங்களுக்கு முன்பே அப்பனே.. அறிந்தும் இவை தன் கூட அப்பனே.

இதனால் அப்பனே பின் இதை என்று கூற இங்கிருந்து  அப்பனே சில மைல் தொலைவிலே அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!

 பின் அதாவது ஒரு தாய் தந்தையர்!! அப்பனே பின் ஐயன் மீது பின் பலமாக அப்பனே பின் பக்திகள் கொண்டு வாழ்ந்து வந்தனர். 

ஆனாலும் அப்பனே அறிந்தும் இதைத் தன் கூட அப்பனே..ஐயனே!!!!... பின் அதாவது திருமணம் செய்தது கூட நிச்சயம் ஐயனை நினைத்து பின் நீதான் எங்கள் குழந்தை என்று...யாங்கள் அறிந்தும் எதிலும் ஈடுபடவில்லை என்று... நிச்சயம் அவர்கள் பின் ஐயனை நினைத்துக் கொண்டு... வருவோருக்கெல்லாம் பின் அன்னத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டே இருந்தனர்.

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு வாரி!! வாரி!! பின் வழங்கி கொண்டிருக்கும் பொழுது பலர்  நிச்சயம் அதாவது பின் அறிந்தும் பின்...அவ் பெண்மணியிடத்தில் இவ்வாறு நீங்கள் புண்ணியம் செய்கின்றீர்களே!!!!

உங்களுக்கும் ஒரு குழந்தை இருந்தால் பின் நன்று!! என்று!!!

அவர்களும்!!.. ஆனாலும்... எங்களுக்கு தேவையில்லை குழந்தை! 

எங்களுக்கு குழந்தையே இவ் மணிகண்டனே!!!... எங்கள் குழந்தை மணிகண்டனே என்று நிச்சயம் தன்னில் கூட!!

ஆனாலும் இருப்பவர்கள் எல்லாம் பின் இவர்களை பாராட்டி நிச்சயம்... இவ்வளவு அன்னத்தை அளிக்கின்றீர்களே... நிச்சயம் தன்னில் இதோடு பின் உங்கள் சேவையை முடிக்க கூடாது. 

நிச்சயமாய் பின் உங்களுக்கு குழந்தை இருந்தால் நீங்கள் பின் செய்து இவ்வாறு நீங்கள் செய்து வருகின்றீர்களே நிச்சயம் அவ்வாறே... பின் அவர்களும் செய்வார்கள் அல்லவா!!! 

(உங்கள் வாரிசுகளும் அன்னதானம் செய்வார்கள் அல்லவா அதற்காகவாவது குழந்தை இருந்தால் நல்லது என்று பொதுமக்கள்) 

நிச்சயம் என்றெல்லாம்!!


அவ் பெண்மணியும் நிச்சயம் தேவையில்லை!! அதாவது என் குழந்தையே!! ஐயனே!!!.. 



இதனால் பின் நிச்சயம் எப்படியாவது... நிச்சயம் அறிந்தும் உண்மைதனை கூட இப்படியே.. ஏதாவது ஒரு விதத்தில் கொடுப்பான் என்று நிச்சயம். (எங்கள் குழந்தை ஐயப்பன் நாங்கள் இல்லாத காலகட்டத்திலும் இந்த அன்னதான சேவையை ஐயப்பன் எப்படியாவது ஒரு வகையில் நடத்தி வைப்பார் அனைவருக்கும் அன்னதானத்தை கொடுப்பார் என்று)


ஆனாலும் போகப் போக நிச்சயம் அப் பெண்மணிக்கும் கூட வருத்தங்கள்!!.. ஆமாம் அவர்கள் சொல்லியதெல்லாம்!!! மனதில் எண்ணி குழப்பங்கள் இட்டு... நிச்சயம் தன்னில் கூட இவை தன் கூட. 

ஆனாலும் ஒரு முறை நிச்சயம் தன்னில் கூட... எதை என்று புரியாமல் கூட பின் ஓடோடி பின் அதாவது நிச்சயம் தன்னில் பின் அவ்வாறு எதை என்றும் புரியாமல் அன்னத்தை வாரி!!...வாரி!!...

ஆனாலும் பின் ஐயனோ பின்!!... ஒரு லீலையை நடத்தினான்.

அதனால் நிச்சயம் தன்னில் பின் அதாவது அனைவருக்குமே சமைத்து நிச்சயம் பின் அதாவது... அதிகாலையில் இருந்தே.. அறிந்தும் கூட நேற்றைய பொழுதில்... அதாவது உத்திரம் தினத்திலே இது நடந்தது. 

நிச்சயம் அறிந்தும் கூட இதனால் பின் அதிகாலையில் இருந்தே பின் அதாவது நான்கு மணிக்கு பின் அறிந்தும் கூட பின் அக் காலை வேளையில் இருந்தே  பின்  அன்னத்தை அள்ளி அள்ளி நிச்சயம்... நாள் முழுவதும் கூட!!!

அறிந்தும் பின் எங்கெல்லாம்... இருக்கின்றார்களோ? பக்தர்களுக்கு பின் நிச்சயம் அறிந்தும் கூட!! இதனால் இவர்கள் முடிவெடுத்து நிச்சயம் வருகின்றவர்களுக்கெல்லாம் கொடுப்போம் என்று! 

ஆனாலும் கடைசியில் அறிந்தும்.. எதை என்று அறியாமலும் கூட..

ஆனாலும் நிச்சயம் இது தீரட்டும் என்று... நிச்சயம் ஐயனே பல வழிகளிலும் கூட பல மனிதர்களை அனுப்பி அனுப்பி பின் அறிந்தும் கூட பின் மொத்தமாக தீர்ந்து விட்டது!!

(ஐயப்பன் திருவிளையாடல் அன்னதானம் நடக்கும் இடத்திற்கு ஐயப்பன் அதிகப்படியான மனிதர்களை அனுப்பி உணவை வாங்கி உண்ணச் செய்து உணவை தீரும் படி செய்து விட்டார்)



பின் இவர்களும் இப்படியா?? எவ்வாறு? இவ்வளவு மனிதர்கள் வந்தார்கள் என்று!!!

ஆனாலும் நிச்சயம் அனைத்தும் உணவுகளும் முடிந்திற்று!!

ஆனாலும் சரி!!! என்று ஆனாலும் வருவோருக்கெல்லாம் நிச்சயம் வேண்டாம் என்பதைப் போல் அறிந்தும் இதன் தன்மையைக் கூட கடைசியில்... மணிகண்டன் நிச்சயம் பின் கையேந்தினான் வந்து!!!


பின்!..  தாயே!!! தந்தையே!!... அறிந்தும் கூட ஏதாவது இருக்கின்றதா??

 யான் பசியோடு.. வந்திருக்கின்றேன். என்று நிச்சயம்!!

ஆனால் அறிந்தும்.. பாலகனாகவே மணிகண்டன் வந்து அறிந்தும் இதன் தன்மையைக் கூட.

ஆனாலும் நிச்சயம் அவர்களும்...

 ஐய்யய்யோ!!

 ஒரு குழந்தை வந்திருக்கின்றதே!!

ஆனால் இப்படி அனைத்து உணவுகளும் இன்று தீர்ந்துவிட்டதே!! என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய!!

இதனால் நிச்சயம் பின் அதாவது அவ் இல்லத்தோனும் நிச்சயம். தன் இல்லத்தவளிடம்!!..தாயே!! இவந்தனை... இக்கு குழந்தையை இங்கேயே பின் அமைத்திடு!! (உன்னிடமே இருக்கட்டும்) 

நிச்சயம் யான் ஓடோடி சென்று.. நிச்சயம் ஏதாவது சில பொருட்களை வாங்கி வருகின்றேன்.. நிச்சயம் தன்னில் கூட.... அப்பொழுது நீ சமைத்து பின் சரியாகவே இக்குழந்தைக்கும் கொடுத்து விடலாம் என்றெல்லாம். 

நிச்சயம் பின்.. நிச்சயம் குழந்தாய்!! நீ இங்கேயே இரு!!! என்று யான் சென்று வாங்கி வருகின்றேன் என்றெல்லாம் பின் இல்லத்தவனும் கூட!!

பின் ஓடோடி சென்றான்!!.... எங்கும் !!எதுவும்!!... கிடைக்கவில்லை!!!!

அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் பின் அனைத்தும் பின் (பொருட்கள்)தீர்ந்துவிட்டது என்றெல்லாம்!!! பின் பக்கத்தில் உள்ள ஊர்களிலும் கூட!!... எதுவுமே இல்லை என்று! 

ஆனாலும் அறிந்தும் பின் மீண்டும்.. பின் அதாவது இல்லத்திற்கு வந்து மனமுடைந்து நிச்சயம் தன்னில் கூட இல்லத்தவளிடம்.. பின் அதாவது  இச்சிறுவனுக்கு தருவதற்கு எதுவுமே இல்லையே!!!! எப்படி ?என்ன செய்வது??? என்றெல்லாம்!!
நிச்சயம் அங்கிருந்தே...

 ஆனாலும் வந்திருப்பது ஐயன் என்று தெரியவில்லையே!!!! அறிந்திருக்க கூட முடியவில்லையே...

இதனால்தான் நிச்சயம் இவ்வாறெல்லாம் இக்கலி யுகத்தில்... தர்மத்தின் பாதையில் செல்வோருக்கெல்லாம் நிச்சயம் ஏதோ ஒரு ரூபத்தில் பின் இறைவன் வந்தடைந்து கொண்டே இருக்கின்றான். 

ஆனால் நிச்சயம் தெரிவதில்லையே!!!... ஏன்? எதற்கு ? என்றால்... நிச்சயம் அவ் விஷயங்களுக்கெல்லாம் யான் வரும் வரும் காலங்களில் பதிலளிப்பேன். அப்பொழுது புரியும் நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் நிச்சயம்... ஐயனே வந்து நிச்சயம்... அதாவது நிச்சயம்... ஆனால் எப்படியோ ஏதாவது ஒன்றை சமைத்து விட வேண்டும்... என்று. 

பின் ஆனாலும் மணிகண்டனோ?!...... ஐயோ!! பசிக்கின்றது!!! எந்தனுக்கு பசிக்கிறது!! நிச்சயம் ஏதாவது தாருங்கள் என்று!!

அறிந்தும் இதன் தன்மையைக் கூட... ஆனாலும்  மீண்டும்

பின் நிச்சயம் எப்படியாவது நிச்சயம் அதாவது பின்... நடுநிசி அதாவது.. 12 மணி இரவு... ஆகிவிட்டது ஆனாலும் நிச்சயம்... அறிந்தும் மீண்டும் பின்... இல்லத்தவன் பின் நிச்சயம் எங்கேயாவது... நிச்சயம் யான் சென்று.. ஏதாவது கொண்டு வந்து இவந்தனுக்கு உணவை ஊட்டுவேன் என்று.. நிச்சயம் அறிந்தும் கூட. 

இதனால் பின் அதாவது.. எதையெதையோ?? எதை என்று புரிய ஆனாலும் நிச்சயம் இதை என்று புரியாத அளவிற்கும் கூட நிச்சயம் ஒரு அழகாக ஒரு பசுவும் கன்றும் கூட அவந்தனக்கு தென்பட்டது.

நிச்சயம் தன்னில் கூட சரி!!
பின் இவ் நடு இரவில் எங்கு தேடுவது????

நிச்சயம் இவ் பசுவிடம் சென்று.. நிச்சயம் அறிந்தும் கூட பின் பாலை எடுத்து நிச்சயம்... அக்குழந்தைக்கு கொடுப்போம் என்று. 

நிச்சயம் பாலை பின் அழகாகவே அறிந்தும் கூட.. அதாவது யாரும் இல்லையே என்று!!

ஆனாலும் நிச்சயம் அன்னத்தை நிச்சயம் அளிக்க வேண்டும் அனைவருக்கும்!! பின் அனைவரும் பசியாற வேண்டும் என்பதே இவனுடைய குறிக்கோளாகவே!!!

இதனால் அழகாகவே பின் அதாவது பின் பசுவையும் கன்றையும் கூட நிச்சயம் வணங்கிட்டு... அறிந்தும் கூட!!

பின்!! ஒரு பாலகன் வந்திருக்கின்றான்!! என் இல்லத்திற்கு!!!

பின்... யான் ஏதாவது தவறு செய்திருந்தால்.. மன்னித்து அருளிட வேண்டும். நீங்கள் நிச்சயம் பின்  பாலை. தாருங்கள் என்று அறிந்தும் அங்கேயே பல வழிகளிலும் கூட... எதை என்று அறிய. பசுவை வணங்கி!!!

ஆனாலும் எதை என்று அறிந்தும் கூட இதனால் அழகாகவே சரியாகவே.. பின் அதாவது இலைகளை மடித்து (பாத்திரம் போல்) பின் பாலை கறக்க!!!


ஆனாலும் அதற்குள்ளே ஓடோடி வந்து விட்டார்கள்!!

திருடன் வந்து விட்டான்! திருடன் வந்து விட்டான்! என்று!!

நிச்சயம் அறிந்தும் கூட பின் பிடியுங்கள் இவனை... இவன்தான் பின் அனைத்தும் திருடிக் கொண்டிருந்தானா!? என்று!!

ஆனாலும் நிச்சயம் அனைவரும் பல ஊர்களில் இருந்து... அறிந்தும். 

அப்பொழுதெல்லாம் நிச்சயம் பின் அறிந்தும்.. பின் ஒருவர் ஏதாவது செய்தால்... நிச்சயம் அப்படியே பரப்பி விடுவார்கள்.. பின் ஊர் ஊராகச் சென்று.. நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் நிச்சயம் இவந்தன்... இப்படி அன்னத்தை ஈந்து கொண்டிருக்கின்றானே!!!... இவன் மகா பெரிய திருடன்!!

நிச்சயம் இவ்வாறுதான் அனைவரின் இல்லத்திலும் திருடி திருடி இவன் நிச்சயம் பின் இவ்வாறெல்லாம் பின் அதாவது அன்னத்தை ஈகின்றேன் !!அன்னத்தை ஈகின்றேன் என்று நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான்.. திருடித் திருடி அனைவருக்கும் கொடுத்தானா!??? என்று!!

நிச்சயம் இவனை நல்லோன்!(நல்லவன்) என்று நினைத்தோமே என்றெல்லாம்!!

இன்னொருவன் இவனை பக்தன் என்று நினைத்தோமே என்றெல்லாம்..

நிச்சயம் அறிந்தும் கூட இதனால் பின் அதாவது நிச்சயம் அறிந்தும் கூட அதாவது ஒரு மரத்தடியில் கட்டி வைத்தனர் இவனை. 

நிச்சயம் பின் யார் யாருக்கு?? என்ன? ஏது? என்றெல்லாம் அடித்து இவனை இங்கேயே சாகடியுங்கள் என்றெல்லாம் நிச்சயம் எதை என்று புரிய. 

ஆனாலும் பின் இதை உணர்ந்தாள் (அறிந்தாள்) இல்லத்தரசி. 

பின் ஓடோடி வந்து... பின் மகனே...(பாலகன் ரூபத்தில் வந்த ஐயனை பார்த்து) நீ இங்கேயே நில்லும்!!

ஏதோ ஒரு சிக்கல் இருக்கின்றது என்றெல்லாம்... நிச்சயம் உந்தனுக்காக நிச்சயம் பின் அதாவது.. உணவு இருக்கும். 

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் யான் சென்று வருகின்றேன் என்று. 

ஆனாலும் அதற்குள்ளே நிச்சயம்... அறிந்தும் கூட கற்களை கூட அவன் மீது வீசி... பின் எதை எதையோ செய்து பின் காறியும் துப்பி நிச்சயம்... அறிந்தும் கூட. 

அப்பெண்மணியும் ஓடோடி வந்தாள்!!! அறிந்தும் கூட!! ஆனாலும் அனைவருமே பின் இப் பெண்மணியும் திருடி தான்!! நல்லோள் (நல்லவள்) போல் நடித்து.. நிச்சயம் அன்னத்தை ஈகின்றேன் என்று... நிச்சயம் எங்கே எங்கேயோ திருடி கொண்டு இப்படி செய்திட்டார்களே பின் எங்கு? அறிந்தும் எதை என்று கூட... இறைவா!! என்று!!

ஆனாலும் அப் பெண்மணி இறைவனே!!!!
பின் யாங்கள் அப்படி இல்லை... அதாவது என் இல்லதரசன் இப்படி நிச்சயம் செய்திருக்க மாட்டான்.. நிச்சயம் அறிந்தும் என்று. 

ஆனாலும் அவர்களும்  யாங்கள் பார்த்தோம்!!! அதனால் தான் கட்டி வைத்தோம் என்று!!

ஆனாலும் இல்லத்தரசியோ... ஐயனே!!! அறிந்தும் கூட!!! இப்படி ஒரு சோதனையா????

யாங்கள் என்ன குற்றம் செய்தோம்??!

பின் ஏன்?? எதற்கு இப்படி?? உன்னையே நினைத்து தவங்கள் செய்து கொண்டிருந்து உன்னையே நினைத்துக் கொண்டிருந்து.. அன்னத்தை பின் அனைவருக்கும் ஈந்தது தவறா???

அறிந்தும் உண்மைதனை கூட எப்படி?... ஏது? என்றெல்லாம்!! நிச்சயம் தன்னில் கூட பின்...

 அதாவது பின் சபரி ஈஸ்வரனே!!!!... அறிந்தும் கூட வா!!!

நிச்சயம் தன்னில் காப்பாற்ற வா!!! என்றெல்லாம்!!!

ஆனால் மற்றவர்களோ நிச்சயம் யாங்களும்... மணிகண்டனின் பக்தர்கள். 

என்ன அறிந்தும் கூட... நீங்கள் அழைத்தால் மணிகண்டன் வந்து விடுவானா???

யாங்களும் அன்னத்தை ஈகின்றோம் யாங்களும் பல பக்திகளை காட்டியுள்ளோம்.. அதனால் மணிகண்டன் உங்கள் அழைப்பிற்கெல்லாம் வரமாட்டான்... என்று..

நிச்சயம் அப்பனே இப்படித்தான் பக்தி இன்றளவு இருக்கின்றதப்பா!!!

நம்பிக்கை இல்லையப்பா!!

அப்பனே நிச்சயம்... நம்பிக்கை இருக்க வேண்டும்!!!

நிச்சயம் அறிந்தும் கூட..அவ் நம்பிக்கை அப்பனே சில பேர்களிடம் மட்டுமே இருக்கின்றது என்பேன் அப்பனே. 

பல பேர்களிடம் அப்பனே இருப்பதே இல்லை என்பேன் அப்பனே. 

ஏனென்றால் அப்பனே.....

அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்... இறைவனை நெருங்க நெருங்க அப்பனே... சில கஷ்டங்கள் வருமப்பா!!!

அக்கஷ்டங்களை எல்லாம் பின் தாண்டி வந்தால்தான் அப்பனே... நிச்சயம் தன்னில் இறைவன் சோதிப்பது அப்பனே நிச்சயம்... நீங்கள் தேர்வில் அதாவது அப்பனே பெரிய இடத்தை பின் வகிக்க வேண்டும் என்றால்... அப்பனே தேர்வில் அப்பனே நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பேன் அப்பனே. அப்பொழுதுதான்.. உயர் பதவிக்கு அப்பனே. 

ஆனால் இப்படியே சாதாரணமாகவே.... இப்படியே என்றால் அப்பனே... இறைவனிடத்தில் அப்பனே பின் செல்வது அதாவது அவ்வளவு சுலபமா???

அப்பனே ஆனால் இன்றளவு மனிதன் சுலபமாகவே என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!

ஆனால் இவர்கள் அப்பனே நிச்சயம் பல வருடங்கள்.. அப்பனே அன்னத்தையே.. அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட கொடுத்துக்கொண்டு!! கொடுத்துக்கொண்டு!!

இதனால் அப்பனே எப்படியெல்லாம்... நிச்சயம் அப்பெண்மணியும் கூட... தனி ஒருவளாகவே போராடினாள்.

நிச்சயம் விட்டு விடுங்கள்!!! பின் இன்னும்... அவனை கல்லால் அடித்தால் இறந்து விடுவான் என்று நிச்சயம். 

நீயும் இறந்து விடு!! என்று பெண்மணியை பார்த்தும் அவர்கள் நிச்சயம் இவ்வாறு திருடர்களாக நீங்கள் இருப்பதெல்லாம் எதற்கு??? நீயும் இறந்து விடு என்று! 

ஆனாலும் அப்பனே அதாவது அவர்களும் ஐயனின் பக்தர்கள் தான் அப்பனே. 

ஆனாலும் ஒருவர் கூட உணரவில்லையே அப்பனே 

அப்பனே எங்கப்பா?? தர்மம்??

அப்பனே இதுதான் அப்பனே கலியுகம் என்பேன் அப்பனே.... நிச்சயம் யோசிக்க மாட்டான் அப்பனே மனிதன் அப்பனே. 

சரியா? தவறா? என்று யோசிக்காமல் உடனடியாக பேசி விடுவான் என்பேன் அப்பனே!!

எப்பொழுதும் யோசித்துப் பேச வேண்டும் அப்பனே. 

உங்களுக்கும் கூட சொல்கின்றேன் அப்பனே. 

இது சரியா??? தவறா??? என்றெல்லாம் அப்பனே பின் ஒரு முறை அல்ல!!! பலமுறை யோசிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

நிச்சயம் அனைத்திற்கும் காரணம் ஆக இறைவன் இருக்கின்றான். 

அதனால் நிச்சயம் அறிந்தும்... இதன் தன்மையைக் கூட...

இதனால் அப்பனே ஒவ்வொருவரும் கூட யோசித்து அப்பனே நிச்சயம் பேச்சை பேச வேண்டுமே தவிர... அப்பனே ஏதாவது ஒன்றை பேசிக்கொண்டு!! உளறிக்கொண்டு!! அப்பனே அப்பொழுது பைத்தியம் தான் ஆவீர்கள் என்பேன் அப்பனே! 

அதனால் அப்பனே அதன் மூலம் கூட அப்பனே கர்மா சேர்ந்து விடும் என்பேன் அப்பனே..

பிறர் மனம் புண்படும்படி.. பேசினால் அப்பனே நிச்சயம் பலத்த கர்மா ஏற்படுத்தும் என்பேன் அப்பனே. 

நல்லவனோ??!!... அப்பனே தீயவனோ!???.. அப்பனே பின் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே!!!

அவன் அப்பனே பின் தண்டனை வழங்காதது?? அப்பனே.... நீங்களா!?!? அப்பனே நிச்சயம் பின் எதை என்று கூட வழங்கப் போகின்றீர்கள்????

அப்பனே யாங்கள் இருக்கின்றோம் அப்பனே!!!

அப்பனே பழமொழியும் உண்டு... அப்பனே பின் அரசன் அன்று தான் கொல்வான் அப்பனே..

ஆனாலும் அப்பனே யாங்கள் பார்த்து பார்த்து அப்பனே... என்ன தண்டனைகள்??? பின் எதை என்று அறிய அப்பனே!!!

ஆனால் இப்பொழுதெல்லாம் அப்பனே தேவையில்லை என்பேன் அப்பனே. 

இன்னும் அப்பனே வாக்கியத்தில் யான் சொல்கின்றேன் பலமாகவே!!!

இதனால் அப்பனே இன்னும் அப்பனே... யாருமே நம்பவில்லை பின் அதாவது அப்பனே பின் அதாவது... உண்ட வீட்டிற்கு இரண்டகம்.. இன்னும் அதாவது துரோகம் என்கின்றார்களே... பின் அவர்களும் கூட... பின் அதாவது இப்படித்தானப்பா!!! போட்டி பொறாமைகள் அப்பனே இருந்து கொண்டே... அப்பனே பின் அறிந்தும் கூட!!

அவர்கள் கூட இவர்கள் திருடர்கள் என்று... பின் ஆனால்...அவ் பெண்மணியோ நீங்கள் கூட.. பின் யாங்கள் என்ன தவறு செய்தோம்??? எவ்வளவு கஷ்டங்கள் பட்டுப் பட்டு அறிந்தும் கூட இவ்வாறு செய்தோம் என்று. 

ஆனாலும் சரி.. எங்களுக்கு யாருமே உதவவில்லை... நிச்சயம் அறிந்தும் கூட பின்.. ஐயன் தானே!!!


பின் ஐயனே!!!!!.........
உன்னை கூட அறிந்தும்.. எதை என்று கூட... குழந்தையாக யாங்கள் ஏற்றுக் கொண்டோமே!!! உன்னையே நினைத்து!! நினைத்து!!! பக்தர்களுக்காக சேவைகள் செய்தோமே!!!

எங்களுக்கு ஏன் இந்த நிலைமை ???  என்றெல்லாம்!!!...அப் பெண்மணியும் கூட!!!

ஆனாலும் பின் ஆனாலும் நடப்பதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் நிச்சயம் ஐயனே!!!!

அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும் சிரித்துக் கொண்டே வந்தான் நிச்சயம்.. அறிந்தும் பின். 

ஆனாலும் நிச்சயம் பலரும் கூட... இக்குழந்தை யார்.????

நிச்சயம் என்றெல்லாம் நிச்சயம் பல பேர்.... இவர்களுக்கு குழந்தையே இல்லையே!!!
பின் முறையில்லாமல் பிறந்து விட்டதா... என்றெல்லாம் (தவறாக பேசினர்) பல பேர்களப்பா!!!!! அப்பப்பா!!! இதுதான் வேதனைக்குரியது என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அனைத்தையும் சகித்துக் கொண்டு இருந்தான் ஐயன் என்பேன் அப்பனே. 

இதுதான் இறைவன் என்பேன் அப்பனே!!!

நிச்சயம் அப்பனே அனைத்தும் அப்பனே நீங்கள் செய்யும் தவறுகளை எல்லாம் சகித்துக் கொண்டு இருக்கின்றான் இறைவன் அப்பனே!!!

ஆனால் உடனடியாக தண்டனைகள் கொடுத்து விட்டால் அப்பனே!!! உலகத்தில் ஏதப்பா?? நியாயம்!!??

(இறைவன் தான் தீர்மானிப்பார் தண்டனைகள் எப்பொழுது எப்படி என்ன என்று!! மனிதர்களால் எது சரி எது தவறு எப்படி தண்டனை என்று வழங்கினால் அது நியாயமாகாது இறைவனுக்கு தெரியும் என்ன செய்வது என்று)



இதனால் அப்பனே மனிதன் தான் உடனடியாக கொடுப்பான்!!

ஆனால் இறைவனோ அனைத்திற்கும் சேர்த்து ஒன்றாக... எங்கு பின் அடித்தால்... பின் அடிவாங்கும் இடம் அப்பனே.. பலமாக இருக்கும் என்பதெல்லாம்.. அப்பனே. 

இதனால் ஐயன் பார்த்துக்கொண்டே!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் மாற்றத்தை எதை என்று அறிய இதனால் நிச்சயம் தன்னில் கூட... பின் தவறாகவே பேசினார்கள் என்பேன் அப்பனே ஐயனையே!!

ஆனாலும் அப்பனே இதில் கூட ஐயன் பக்தர்கள் என்பேன் அப்பனே... ஆனாலும் அப்பனே யாருக்குமே புரியவில்லையே!!!

எப்படியப்பா?? புரியும்!!! மாயை வலையில் சிக்கிக் கொண்டால்... அப்பனே இறைவன் நேரில் வந்தாலும் அப்பனே நிச்சயம்... எதை என்று அறிய அறிய.. பின் எவை என்று கூட.. பின் எவை என்று புரியாமலும் போய்க்கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே. 

அதனால் தான் அப்பனே இறைவன் பின் இறைவனை அப்பனே பின் அதாவது வணங்கினால் அப்பனே நிச்சயம்... அப்பனே ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் அப்பனே சிறிது நேரமாவது அப்பனே ஆத்மார்த்தமாகவே அப்பனே நிச்சயம்... எதையும் மனதில் நினைக்காமல் இறைவனை மட்டும் நினைத்து வணங்க வேண்டும் என்பேன் அப்பனே.

அப்பொழுதுதான் அப்பனே இறைவன் சென்று கொண்டிருக்கும் பொழுது... அப்பனே நிச்சயம் தெரியுமப்பா.

அப்படி இல்லையென்றால் அப்பனே... கடைசி வரை அப்பனே நீங்கள்... உங்கள் மனதை எங்கோ?? வைத்துக் கொண்டு!!... இறைவனை தேடு!! தேடு என்றால் அப்பனே அப்படியே தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்பேன் அப்பனே.

இதனால் அறிந்தும் கூட இதனால் அப்பனே... ஐயன் தன் சுயரூபத்தை காட்டினான். அப்பனே ஐயன்... நிச்சயம் தன்னில் கூட!!

இவை எல்லாம் நிச்சயம் பின் ஏதாவது... என்னை உங்கள் பிள்ளையாக ஏற்றுக் கொண்டீர்களே.. நிச்சயம் தன்னில் கூட என்னை... இப்படியா?? என்றெல்லாம் கட்டித்தழுவி யான் தான் ஐயன் என்று.. தன் சுய ரூபத்தை காட்டினான் நிச்சயம் அறிந்தும் கூட. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் கருணை வடிவானவன் ஐயன் என்பேன் அப்பனே. 

பின் அனைவரும் கூட ஓடி ஓடி வந்து... அப்பொழுது பின் ஐயனே!!! நீங்களா??? அறிந்தும் எதை என்று கூட எங்களை மன்னித்து விடுங்கள்!! மன்னித்து விடுங்கள் என்றெல்லாம்!!

ஆனாலும் நிச்சயம் பின் அப்படியே மோட்சத்திற்கு பின் அழைத்து சென்றுவிட்டான்..அவ் இருவரையும் கூட. 

அப்பனே இன்னும் அப்பனே ஐயனின் லீலைகள் அப்பனே சொல்லிக் கொண்டே.. இருப்பேன் அப்பனே நிச்சயம்..

இவ்வாறு சொல்லிக் கொண்டு உங்களுக்கு பக்குவங்கள் பிறந்தால்தான் அப்பனே.. அனைத்தும் உணர முடியும் என்பேன் அப்பனே. 

பக்குவங்கள் இல்லை என்றால் எதைச் சொல்லியும் பிரயோஜனமில்லை என்பேன் அப்பனே. 

முதலிலே அவை நடக்கும் இவை நடக்கும் என்றெல்லாம் அப்பனே அதனால் அப்பனே அனைத்து சக்திகளும் மனிதரிடத்திலே இறைவன் கொடுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே.

அவை சரியாக இயக்க அப்பனே முதலில் அப்பனே அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. 

சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

பின் பெரிய பெரிய படிப்பிற்கு அப்பனே பெரிய பெரிய பின் யோகங்கள் அப்பனே பின்.. அறிந்தும் கூட அப்பனே பின் செல்ல அப்பனே நிச்சயம்... முதன்மை பாடத்தை இரண்டாம் பாடத்தை எல்லாம் அப்பனே நீங்கள் கற்று வந்தால் தான் அப்பனே... அடுத்தடுத்த உயர் பதவிகளும் கூட வகிக்க முடியும் என்பேன் அப்பனே. 

மனிதன் இப்பொழுது என்ன எண்ணுகின்றான்??? என்றால் அப்பனே உடனடியாக.. அப்பனே மேற்பதவிக்கு சென்று விட வேண்டும் என்று!!!

அப்படி எல்லாம் ஆகாதப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

யாங்கள் கொடுத்த தேர்வில்... அப்பனே முதலில் நீங்கள் மதிப்பெண்கள் பெற்று அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட சரியான மதிப்பெண்கள்.. அதிகமான மதிப்பெண்கள் பெற்று.. அப்பனே நிச்சயம் வந்தாலே...யாங்களே வாக்குகள் சொல்வோம் என்பேன் அப்பனே. 

ஆனால் நீங்கள் அனைவருமே பூஜ்ஜியம் தான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் ஒரு அப்பனே இரண்டு அப்பனே நிச்சயம் சதவீதம் கூட.. எடுக்கவில்லையே?? அப்படி எப்படி அப்பொழுது... எப்படியப்பா??? உங்களை மறு வகுப்பிற்கு யாங்கள் அழைத்துச் செல்ல முடியும்????????????

அப்பனே இன்னும் சொல்கின்றேன் அப்பனே மூடநம்பிக்கைகளில் இருந்து விடாதீர்கள். 

அதனால்தான் சித்தர்கள் வந்து வந்து அப்பனே நிச்சயம் !!!


ஆனால் இன்றையளவில் அப்பனே சித்தர்களை பின் அதாவது இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் ஏமாற்றி!! ஏமாற்றி!!! காசுகளுக்காகவே அப்பனே பின் எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் அவை தன் கடைசியில் அடித்தால்.. நோய்களாகவே நிச்சயம் குடும்பத்திற்காகவே அவனவன் செய்த அவர்கள் பின் தண்டனைகள் நிச்சயம் அவனவன் சரியான பாடத்தை நிச்சயம் அவனவனே அனுபவிப்பானப்பா!!

அவ்வளவுதான் அப்பனே 

ஆசிகள்!! ஆசிகள்!! அப்பனே அனைவருக்குமே ஆசிகள் என்பேன் அப்பனே!!


(சேவா அமைப்பு நடத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு) நல்விதமாகவே அப்பனே ஐயனின் அருள்களைக் கூட நீங்கள் பெற்று அப்பனே முன் ஜென்மத்தில் இருந்தே அப்பனே பின் ஐயனின் அருள்களை பெற்றவர்கள் தான் என்பேன் அப்பனே..அது இச் ஜென்மத்திலும் தொடர அப்பனே.. சில மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்துவது உறுதியப்பா. 

கவலையை விடுங்கள் ஆசிகள்!! ஆசிகள்!!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!... அன்னதான பிரபு சபரிநாதன் மணிகண்டன் ஐயப்பன் மற்றும் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பெருமான் ஜீவநாடியில் வந்து வாக்குரைத்த இடம் ஹரிஹர புத்திரா அன்னதான சேவா அமைப்பு... இந்த இடத்தில் தான் குருநாத அகத்திய பெருமான் கூறிய சம்பவம் நடந்தது.


 இந்த அமைப்பினை பற்றி விபரங்கள். 

குறிப்பு: விளம்பர நோக்கத்திற்காக அல்ல அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக!!!

மணிகண்ட சேவா ஆசிரமம் என்றும் அழைக்கப்படும் ஹரிஹரபுத்திர சேவா அறக்கட்டளை, மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பாதை வழியாக புனித மலைக் கோயிலான சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் உன்னத நோக்கத்துடன் 2017 இல் பதிவு செய்யப்பட்டது. 

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் நிலக்கல் அருகே எருமேலி-பம்பா காட் சாலையில் அமைந்துள்ள பல செயல்பாட்டு மையமான மணிகண்ட சேவா ஆசிரமம், தங்குமிட சேவைகள் மற்றும் சுத்தமான சுகாதார வசதிகள் உள்ளிட்ட சுகாதாரமான தங்குமிடங்களை வழங்குகிறது. ஆசிரமத்தின் அதிநவீன சமையலறை தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும், தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இலவச உணவு மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குகிறது. இரண்டு மாத கால வருடாந்திர யாத்திரை முழுவதும் சராசரியாக 8000-10,000 பக்தர்களுக்கும், ஐந்து நாள் மாதாந்திர பூஜை நாட்களில் தினமும்  4000-6000 பக்தர்களுக்கும் ஆசிரமம் உணவு வழங்குகிறது.

ஹரிஹர புத்திரா சேவா டிரஸ்ட் .Narananthodu, Thulappally(P.O, Perunad, Kerala 686510

வலைத்தள முகவரி 

https://www.hariharaputhrasevatrust.org/

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!~

சித்தன் அருள்.....தொடரும்!