​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 4 February 2025

சித்தன் அருள் - 1794 - அன்புடன் அகத்தியர் - கும்பமேளாவில் அழுக்காணி சித்தர்!








29/1/2025 மௌனி அமாவாசை கும்பமேளா அன்று திரிவேணி சங்கமத்தில் அழுக்காணி சித்தர் ஈசனை தொழுது ஆடி பாடி உரைத்த வாக்கு. 

உருண்டையை உருட்டுகின்ற ஈசா!! போற்றி!!

(பூமி பந்தை சுழல வைத்து பிரம்மாண்டத்தை ஆளுகின்ற  ஈசா!!போற்றி)

பணிந்து செப்புகின்றேன் அழுக்காணி!!!

நின்று நின்று கும்மியடி!!!
கும்மியடி பெண்ணே கும்மியடி நின்று கும்மியடி!!

ஆனந்தத்தில் கும்மியடி!! வைகுண்ட நாதனை கண்டு விட்டோம் என்று கும்மியடி!!!

கும்மியடி!! கும்மியடி!!
கருணை வடிவானவனை கண்டுபிடித்தோம் என்று கும்மியடி!!

கும்மியடி !! கும்மியடி!! ஆனந்தத்தில் நின்று இங்கு கும்மியடி!!!

வருவோருக்கெல்லாம் ஆசிகள் தந்து ஈசனின் இன்னும் பரிபூரண ஆசிகள் தந்து பார்வதி தேவியும் மகிழ்ச்சியுடன் கும்மியடி!! கும்மியடி!! பெண்ணே!! பெண்ணே!!

ஆனந்தம்!!! ஆனந்தம்!!
சித்தர்கள் ஆனந்தம்!! ரிஷிகள் ஆனந்தம்!!
முனிவர்கள் ஆனந்தம்!!
தேவாதி தேவர்கள் ஆனந்தம்!!
இந்திரனுக்கும் இந்திரனுக்கும் ஆனந்தம் ஆனந்தம் கும்மியடி தம்மில் கும்மியடி!! தம்மில் கும்மியடி!!


எந்த ரூபத்தில் வந்தாலும் தம்மில் கும்மியடி!!! மனிதன் வடிவத்தில் வந்து கும்மியடி!!

ஆனந்தக் கண்ணீரில் நனைகின்றோம் சித்தர்கள் யாங்கள் கும்மியடி தம்மில் கும்மியடி!!!

உலகத்தில் நின்று காத்தருளும் கும்மியடி!!! இணைந்து இன்னும்  வாழ்க்கையில் பின்னும் வெற்றிகள் தரும் ஈசனாரை பார்த்து கும்மியடி!!!!

கும்மியடி !! கும்மியடி!! தேவாதி தேவர்களும் இங்கு வந்து ஈசனை தேடி தேடி ஆசிகள் பெற்று!!!
 கும்மியடி!! கும்மியடி!!

மனிதனே சோம்பேறித்தனம் பட்டு இருந்து  அங்கே எப்படி செல்வோம்??? என்று!!

கும்மியடி!! கும்மியடி!!
இந்திரனுக்கும் மேலானவர்கள் எவர்? என்று தெரிந்து கொள்ள கும்மியடி!!

சித்தர்கள் யாங்கள் அனைவரும் இங்கு வந்து சந்தோஷத்துடன் களித்தோம்!!!

இறைவனையும் கண்டோம் கண்டோம்!! தெளிந்தோம்!! தெளிந்தோம்!!

இறைவனை யார் யார் என்று மனிதனுக்கு கூட தெரிந்து கொள்ள முடியவில்லையே.

கும்மியடி! தம்மில் கும்மியடி! 
அனைவரும் இணைந்து பின் கும்மியடி!!

அடி என்று இங்கே என்று எதனை அடி? கும்மியடி என்று யான் சொன்னேனே!!
அனைத்திலும் கும்மியடி!!
அணிந்து உள்ளம் கொண்டவருக்கும் தீய எண்ணங்கள் நீக்கும் திறன் கொண்டவருக்கும் இவ் கங்கை நதியில் நின்று கும்மியடி!!!

கும்மியடி!! கும்மியடி!! ஆனந்த கண்ணீரில் கும்மியடி!!!

பற்று அற்று அற்றவுடன்.. பற்றி நின்று கும்மியடி!!
இணைந்த கைகளால் கும்மியடி!!!

ஊர்ந்த கைகளால் கும்மியடி!!! என்றும் இணைந்து கும்மியடி!!!

பாவங்களை போக்குபவனை கும்மியடி!!
கும்மியடி கும்மியடி!!
புண்ணியங்கள் தரட்டும் கும்மியடி!!!

ஈசனாரும் பார்வதி தேவியும் நின்றிட்டு அழகாக அனைவருக்கும் ஆசிகள் கொடுத்து பாவத்தை நீக்கியும்!!!
சிலர் பின் கர்மத்தை அறிந்தும் கூட....

பின் புண்ணியத்தை புகுத்தியும் கும்மியடி!!
கும்மியடி!!


சிலர் பின் இறப்பதற்காகவே இங்கே வந்து இறக்கிறோம் என்று பின் நீரில் அப்படியே போயிட்டவர்களையும் கூட பின் ஈசன் பின் கட்டிக் கொண்டு கொடுத்தான் கும்மியடி!!!

மனிதருக்கு இன்னும் புரியவில்லையே!!!

ஆனந்தக் கண்ணீரில் யாங்கள் நனைகின்றோம் 
கும்மியடி!!!

மனிதன் பின் இறைவன் யார்? என்று புரியாத வரை சந்தோஷம் இல்லை கும்மியடி!!!

சந்தோஷம் இல்லை கும்மியடி!!! சந்தோசம் இல்லை கும்மியடி!!

ஏன் அறிந்தும் கூட துன்பம் வருவது எதனால் என்று அறிய முடியாததை கும்மியடி...

அறிந்த பின்பு உணர்ந்த பின்பு இறைவன் என்று யாரென்று தெரிந்து கொண்டு பின் பின் துன்பமே இல்லை என்று கும்மியடி!!!

கும்மியடி!! கும்மியடி!!

ஆனந்தம்!; ஆனந்தம்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

9 comments:

  1. வணக்கம் கும்ப மேளாவில் பல சித்தர்கள் இறைவனை போற்றுவது நல்ல விசயமே அதேசமயம் மனிதனை குறை சொல்வதற்கும் அவர்கள் தவறவில்லை ஏன் இந்த அவல நிலை நல்ல மனிதர்கள் எத்தனையோ பேர் இந்த பூமியில் அல்லல் பட்டு அவலப்பட்டு இருக்கும் போது அவர்களை காத்தருளாது இருந்து கொண்டு பொதுவாக அனைத்து மனிதரையும் குறை கூறவதில் என்ன தாத்பரியம் இருக்கிறது.இந்நிலை மாறுமா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மணி அவர்களே, கடந்த சில நாட்களாக தங்களின் ஆதங்கத்தை எதிர்மறை கருத்துகளாக பதிவு செய்து கொண்டு வருகிறிர்கள்..

      மனிதனின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மனிதன் மட்டுமே காரணம், ஏற்கனவே பல பிறவிகளில் செய்த நற் செயல்களின் விளைவுகளை நல்ல ஆரோக்கியமாக அல்லது வசதி வாய்ப்பாக அனுபவிக்கும் அதே மனிதன் செய்த பாவத்தின் பலனை பிரச்சினைகளாக அனுபவதித்தே ஆக வேண்டும்.

      பிரச்சினைகளே மட்டுமே கவனம் செலுத்தி தன்னையும் வருத்தி தன்னை சான்றோரையும் வருத்தும் மனிதனை கண்டு அதில் இருந்து மீள கருணை உள்ளதோடு அகத்தியர் ஐயா பல புண்ணிய வழிகளை காட்டுகிறார்,

      (அசைவத்தை தவிர்பது, அனுதினமும் வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு கொடுப்பது, அகத்தியர் ஐயா கூறிய ஆலயங்களுக்கு செல்வது)

      அதை மனதார செய்யுங்கள் சீக்கிரமே நல்ல மாற்றம் வரும்.. வாழ்த்துக்கள்.

      ஓம் அகத்தீசாய நமக 🙏

      Delete
    2. இறைவா நீயே அனைத்தும்.
      இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

      அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் திருவடிகள் சரணம்

      வணக்கம். பின் வரும் வாக்கை உங்களுக்கான வாக்காகப் படிக்க, உங்களுக்கு நடக்க உள்ள விபரீதங்கள் புரியும். இந்த தளத்தைப் பிற தளம் போல நினைத்துப் பதிவுகள் இடுவது சற்று அதி கவனம் தேவை. சித்தர்களால் நேரடியாகக் கவனிக்கப்படும் இணையத்தளம் என்ற பயம் ஒவொருவர் மனதிலும் அவசியம் வேண்டும். சித்தர்கள் இறங்கி அடித்தல் தாங்க இயலாது.
      =========================================================

      சித்தன் அருள் - 1540 - அன்புடன் அகத்தியர் - திரயம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம். நாசிக்
      https://siththanarul.blogspot.com/2023/12/1540.html

      துன்பத்திற்கு காரணம் நீயாக இருந்து அப்பனே அனைத்தும் ஏற்படுத்திக் கொண்டு இத் துன்பம் போக வேண்டுமென்றால் இறைவனிடம் வருவதா? அப்பனே யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே.

      அதனால் முதலில் அப்பனே எதையென்றும் அறிய அறிய துன்பம். வருவது எதனால் ??? என்பதை கூட யோசிக்க வேண்டும். அப்பனே !!!

      பின்பு இறைவனை யும் கூட குறை சொல்ல கூடாது. அப்பனே இறைவனை குறை சொன்னால் அப்பனே நிச்சயம் சக்திகள் எதை என்றும் அறிய அறிய எப்படி எல்லாம் அடிக்கும் என்பதைக்கூட யான் சொல்கின்றேன் அப்பனே!!!! பின்பு சித்தர்களை குறை கூறுவது அப்பனே!!!!

      அப்பனே ஒருவன் இங்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே இவ் உலகத்தில்.
      அகத்தியன் என் நண்பன் தான் !!! அனைத்தும் தெரியும் என் நண்பனிடம் யான் பேசுவேன் என்றெல்லாம் பொய் சொல்லி அப்பனே மக்களை ஏமாற்றி திரிந்து கொண்டிருக்கிறான் அப்பனே!!!!

      ஆனால் அப்பனே நினைத்துக்கொள் !!!!

      இவ்வாக்கு அவந்தனைப் போய் சேரும்!!!!

      நோய்கள் உண்டு என்பதை நிச்சயம் யான் தெரிவித்து விட்டேன் அப்பனே!!!

      எதையென்று அறிய அறிய!!! கோபப்படுவது !!! ஆணவமாக பேசுவது யான் தான் குரு என்று சொல்வது!!!! அப்பனே கத்திக்கொண்டிருக்கின்றான். அப்பனே!!!

      இவ் வாக்குகள் நிச்சயம் அவனை போய் சேரும்!!!!!

      யானே எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய அதனால் அப்பனே. வேண்டாம் அப்பனே!!!

      பொய் சொல்லியது நிறுத்துங்கள் அப்பனே !!!! போதும் என்பேன் அப்பனே !!!; மக்களை ஏமாற்றியது!!!

      அப்பனே இப்படியே ஏமாற்றிக் கொண்டிருந்தால் நீயும் ஏமாற்றப்படுவாய் அப்பனே

      சொல்லிவிட்டேன்!!!அப்பனே

      தண்டனைகள் பல மாக உள்ளது. என்பேன் அப்பனே வரும் காலத்தில் அப்பனே!!!!

      கலியுகம் அழியும் யுகம் என்பதையெல்லாம் யான் நிச்சயம் எடுத்துரைத்துக்க் கொண்டே இருக்கிறேன்.அப்பனே

      ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
      சர்வம் சிவார்ப்பணம்!!!!!

      Delete
    3. இறைவா நீயே அனைத்தும்.
      இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

      அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் திருவடிகள் சரணம்

      சித்தன் அருள் - 1483 - அன்புடன் அகத்தியர் - சிவ சக்தி சித்தர்கள் விவாதம் புரிந்த வாக்கு!
      https://siththanarul.blogspot.com/2023/10/1483.html

      காகபுஜண்ட மாமுனிவர்:-

      புஜண்டன் பேசுகின்றேன்.

      மனிதா நிச்சயம் மற்றவர்களை கூட பின் குறை சொல்வதை நிறுத்து!!! அப்படி நிறுத்தாவிட்டால் நிச்சயம் அழித்து விடுவோம் ஒரு நொடி போதும். மற்றவர்களை ஏன் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றாய்?????? ஏனடா???? நிச்சயம் அறிந்தும் அறிந்தும் மறுமுறை நிச்சயம் பின் அறிந்தும் கூட உன்னை நிச்சயம் எப்படி பின் நம்தனை அதாவது எதை என்று கூட அறிந்தும் கூட எப்படி பிழைப்பது என்பதை கூட நீ உன்னை நிச்சயம் உன்னை அறி !!!! பின் உன்னை அறிந்து விட்டால்தான் நீ மற்றவர்களை பற்றி பேச வேண்டும்!!! அப்படி இல்லை என்றால் நிச்சயம் யானே வருகின்றேன் பூலோகத்தில் வந்து!!!!!

      ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
      சர்வம் சிவார்ப்பணம்!!!!!

      Delete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமக 🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete