​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 29 July 2023

சித்தன் அருள் - 1375 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ஆடிமாத வாக்கு!





28/7/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு-வாக்குரைத்த ஸ்தலம் : திருமலை திருப்பதி

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!! 

அப்பனே நலன்களாக எம்முடைய ஆசிகள்!!!! 

அவைமட்டும் இல்லாமல் அப்பனே நாராயணனுடைய ஆசிர்வாதங்கள் பரிபூரணம் என்பேன்!!! அப்பனே!! 

ஏன் எதற்கு??? எவையென்றும் அறிய அறிய அப்பனே இவ் (ஆடி) மாதத்தில் எதை என்றும் அறிய அறிய அப்பனே மிகப்பெரிய கிரகங்களும் கூட அப்பனே எவை என்று கூட அப்பனே பின் அனைத்தும் அதாவது வளிமண்டலத்தில் உள்ள அனைத்துமே அப்பனே செயலிழக்கும் திறன்!!....

அதனால்தான் அப்பனே எதை என்று கூற இவ் மாதம் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே தம் தன் பின் முன்னோர்களையும் கூட எவை என்றும் அறிய அறிய இதனால் பின் எதிர்மறையான அனைத்தும் எதிர்மறையாக போகும் இவ்மாதம்!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் தான் முன்னோர்களை நன்கு வணங்கி எதை என்றும் அறிய அறிய ஏனென்றால் பின் ஒவ்வொரு ஆன்மாவும் கூட இறைவனிடத்தில் சரணடையும்!!!!!

ஆனாலும் சில ஆன்மாக்கள் சரணடையாது!!!!

இதனால் இவ் மாதத்தில் பின் திரிந்து கொண்டிருக்கும்!!!!( ஆத்மாக்கள்) 

யாராவது!!!...........????

( பித்ரு தர்ப்பணம் செய்து தணிப்பார்களா?? என்று) 

எதை என்றும் அறிய அறிய எதை என்று புரிய புரிய என்றெல்லாம் இதனால் இவ் மாதத்தில் நல்விதமாகவே பின் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பின் தாகத்தை அவ் ஆன்மாவிற்கு தீர்க்க நிச்சயம் நல் மாற்றங்கள் உண்டு!!!!

இதனால்தான் எதை என்று அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் பூமாதேவிக்கும் கூட நிச்சயம் இவ் மாதம் சாலச் சிறந்தது!!!!!

இவ் மாதத்தில் நிச்சயம் பூமாதேவிக்கு அதாவது பிற ஆலயங்களுக்கு அதாவது அம்பாள்!!! ஆலயங்களுக்கு சென்று நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் அவள்தனக்கு விரும்பியதெல்லாம் உடுக்க ஆடை!!! பின் இன்னும் என்னென்ன பின் அதாவது சிறு குழந்தைக்கு அதாவது எதை என்று அறிய அறிய குழந்தைக்கு எவ்வாறு? அழகு பார்க்கின்றோமோ!!! அவ்வாறு பின் அம்மன் தலத்திற்கு சென்று நிச்சயமாய் அழகு பார்த்தால் நிச்சயம் பூமாதேவியும் குளிர்வாள்!!!!

(இந்த ஆடி மாதத்தில் அம்பாள் குடிகொண்டுள்ள கோயில்களுக்கு பூ வளையல், குங்குமம், மஞ்சள், இனிப்புகள், பட்டுப்பாவாடை, கொலுசு, மணி மாலைகள், என தேவியை குழந்தையாக கருதி இவையெல்லாம் சார்த்தி வழிபட்டால் பூமாதேவி குளிர்வாள்)

எதை என்றும் அறிிய அறிய ஏனென்றால் கலியுகத்தில் இன்னும் இன்னும் மாற்றங்கள் தான் அழிவுகள் தான் என்றுதான் சென்று கொண்டிருக்கின்றது!!!

அதனால் எவை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் பெரியோர்கள் எதை என்று கூட பல வகையிலும் கூட வகுத்து விட்டனர்!!!!! அவையெல்லாம் மறைந்து கொண்டு வருகின்றது!!!

எப்பொழுதெல்லாம் மறைந்து கொண்டு வருமோ??!...

அப்பொழுதெல்லாம் பின் கஷ்டங்கள் நிறைந்து கொண்டு வரும்!!!
 இதனால் தான் அறிந்தும் அறிந்தும் பின்!!!

இப்பொழுது பின் நாராயணன் கூட அமைதியாக நிற்கின்றான்!!! அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்!!!!

அதாவது அவந்தன் ஓர் கையில் பார்த்தால் பின் ""அனைத்தும் எடுத்துக்கொள்ளுங்கள்!!என்று !

மீண்டும் எதை என்றும் அறிய அறிய நிச்சயம் அவை எவை என்றும் புரிய புரிய பின் அனைத்தும் எடுத்துக்கொண்டு சரியாக வாழ்ந்தால் தான் பின் நிச்சயம் இன்னும் உயர்வுகள்!!!!!

அப்படியில்லை என்றால் மறு கையில் மீண்டும் பிடுங்கிக் கொள்வான்!!!

இதுதான் அதனால்தான் இறைவன் தான் அனைத்திற்கும் காரணம் அதாவது அனைத்தும் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றான்!!

இன்னும் இன்னும் கூட!!

ஆனால் அதை மனிதனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை!!! இதுதான் எவை என்றும் அறிய!!! இறைவனின் பலன்கள்  இன்னும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதிகரித்துக் கொண்டே செல்லும்!!!

ஆனாலும் அப்பனே மனிதனின் கர்மாக்கள் இன்னும் அதிகரித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது!!!

இதனால் அனைத்திற்கும் காரணம் எவை என்றும் அறிய அறிய அதனால் இவ் ஆடி மாதத்தில் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய பின் நல்விதமாகவே ஒருமுறை அதாவது எவை என்று கூட பின் பூமாதேவி ஆனவள் சற்று ஓய்ந்து இருப்பாள்!!!!!

எதை என்றும் அறிய அறிய இதனால் அனைவரையும் பார்ப்பாள்!! இதனால் எப்படி எதை என்று கூட அறிந்து அறிந்து பெண்களை எவை என்று கூட தெய்வமாகவும் பின் அம்பாளாகவும் நிச்சயம் வணங்கினால்!!! அவ் பூமாதேவி அதாவது அம்பாள் நிச்சயம் மனமகிழ்ந்து!!!!.......

இதன் தத்துவத்தையும் கூட ஒரு நாள் நிச்சயம் உரைப்பேன்!!!!
எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!

ஏனென்றால் வருங்காலத்தில் நிச்சயம் பூகம்பங்கள்!! எவை என்றும் அறிய அறிய இன்னும் எரிகற்கள் எவை என்றும் புரியாமல் கூட நிச்சயம் மனிதனின் அழிவுகள் சென்று கொண்டே இருக்கின்றது!!!

அவ் அழிவுகள் எதையென்று அறிய அறிய தடுக்கப்பட வேண்டும்!!!!

ஏனென்றால் முன்பே எதை என்றும் அறிந்து அறிந்து பெரியோர்கள் எவை என்றும் புரிந்தும்  புரியும் அளவிற்கும் கூட சில சுவடிகளில் அழகாக எழுதி வைத்தனர்!!!!

ஆனால் மனிதன் பின் நாம் தான் அனைத்திற்கும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம்!!...........

அவ் சுவடிகளை எல்லாம் அழித்துவிட்டு நிச்சயம் மனிதன் தன் போக்கில் போய்க் கொண்டு இருக்கின்றான்!!!

இறைவன் என்று ஒன்று இருப்பதையே மறந்து விடுகின்றான்!!!

அதனால்தான் போ!!!! என்று சொல்லி இறைவன் கடைசிவரை போகச் சொல்வான் !!!

ஆனால் கடைசியில் ஒரு குட்டை (தலையில் குட்டி) வைத்து தலையில் மீண்டும் கஷ்டத்தை கொடுத்து பின் மீண்டும் இறைவனிடத்தில் வரச் செய்வான்!! இதுதான் நிச்சயம்!!

அதனால் முதலிலே இறை பலத்தை பிடியுங்கள்!! போதுமானது!!

எவை என்றும் அறிய அறிய அவ் இறை பலத்தை பிடித்துக் கொண்டால் அனைத்தும் வரும்!!!!

ஆனால் முதலிலே தன் மனம் போன போக்கிலே அனைத்தும் வரும்!! ""யான்தான் !! என்று சொல்லி போய்க் கொண்டே இருந்தால் கடைசியில் அனைத்தும் வரும் ஆனால் கடைசியில் அனைத்தையும் இறைவன் பிடுங்கி கொள்வான்!!!

இதை நிச்சயம் எதை என்றும் அறிய அறிய இவை தன் பொதுவாகவே எவை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் நிச்சயமாய் எவை என்றும் அறிந்தும் அறிந்தும் இதனால் தான் சொல்கின்றேன்!!!

எவை என்று கூட இப்பொழுது கூட நீங்கள் பார்த்தீர்களே நாராயணனை!!!

நாராயணனை பார்த்துவிட்டு பின் கோபுர வாசலில் வெளியே எவை என்றும் அறிய அறிய முற்காலத்தில் ஒருவன் பிச்சை ஏந்தி கொண்டிருந்தான்!!!!ஆனாலும் எதற்காக என்றெல்லாம் தெரியாது!!

ஆனால் பின் நாராயணன் மீது பற்று !!! நாராயணா!! கோவிந்தா!!!! என்றெல்லாம் நிச்சயம் இவந்தனுடைய பின் வழிகளாகவே!!!! 

ஏதாவது கொடு!!!

இல்லையென்றால் உன்னிடத்தில் என்னை அழைத்துக் கொண்டே இரு!!! எந்தனுக்கு சொந்த பந்தங்கள் நீதானப்பா!!! நாராயணா!! கோவிந்தா!! என்றெல்லாம்!!!

ஆனாலும் காசுகள் கொடுத்தால் வாங்கி விட மாட்டான்!!! ஆனாலும் உணவுகள் கொடுத்தாலும் வாங்கி விட மாட்டான்!!!

நிச்சயம் பின் நாராயணன் பார்த்துக் கொள்வான்!!! இவ்வுயிர் நாராயணனுக்கு சொந்தம்!! எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் அனைவரும் கூட நாராயணனை பார்த்து பின் வெளியே வருவார்கள்!! அறிந்தும் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் வருபவர்களை எல்லாம் பேய்!! பிசாசு!! நாய்!! அதாவது விலங்கு என்றெல்லாம் கூறிக் கொண்டே இருப்பான் அவன்!!!

ஆனாலும் பின் அவர்களெல்லாம் ஏதோ இவன் தான் பைத்தியக்காரன் என்று பின் நம்மை!!.......!!?? எதையென்றும் என்றும் அறியாத அளவிற்கு கூட!!!!

இதனால்  அனைவரையுமே நாய்!! எவை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியாமல் இதனால் பேய்!! பிசாசுகளே!! பேய் பிசாசுகளே!!! என்றுதான் மனிதனை அழைப்பான்!!!

ஆனால் மனிதனோ!!! கண்டு கொள்வதில்லை!!

ஆனால் அழைத்தவனே நிச்சயமாய் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் எதை என்றும் புரிந்தும் கூட புரியாமல் கூட அமைதி காத்தான்!! 

இதனால் பின் பல ஆண்டுகள் சென்றது!!!!

ஆனால் பின் அவ் மனிதனோ அனைவரையுமே பேய் பிசாசுகள் பேய் பிசாசுகள் என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தான்!!

ஆனால் நிச்சயமாய் அறிந்தும் அறிந்தும் பின் நாராயணன் கவனத்திற்கு!!

ஆனாலும் நாராயணனும் பார்த்து கொண்டிருந்தான்!! ஆனாலும் நாராயணனும் வந்தான் இவனிடத்தில்!!

ஆனாலும் நாராயணனை பார்த்தான் இவன். ஆனாலும் பின் இவனை அதாவது நாராயணனை என்ன சொல்வது என்று புரியவில்லை!!!!

அனைவரையுமே பேய் பிசாசுகள் என்று கூறி விட்டோம்!!!!

இவந்தனை பார்த்தால் என்ன சொல்வது??? என்று கூட அப்பொழுதுதான் யோசித்தான்!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட இவந்தன் முகம் ஆனால் பிரகாசித்தது!! 

ஆனால் வந்தது நாராயணன் என்று!!!.....தெரியவில்லை. 

ஆனாலும் இவன் மனதில் ஒன்றும் இல்லை!! ஆனால் அனைத்தும் தெரியும். ஆனால் பின் மாயை எதை என்றும் அறிய அறிய அதனால் எவை என்றும் புரியாமல் நாராயணன் கூட அவந்தனை அதாவது பின் மறைத்து வைத்து விட்டான் மூளை வேலை(மதி மயக்கி) செய்யாமல்!!

ஆனாலும் யோசித்தான்!!!!! அனைவரையுமே சொன்னோமே!!!!!

இவனை எப்படி?? சொல்வது என்று கூட யோசித்துக் கொண்டிருந்தான்!!!!

ஆனாலும் சரி !!என்று நாராயணனும் பின் மறைமுகமாக இருந்து எவை என்று கூட.....

ஓ!!!!! மனிதனே!!! அனைவரையுமே பேய் பிசாசுகள் என்று அழைத்துக் கொண்டு இருந்தாய்!!!! என்னை ஏதாவது பின் அழை!!!! 

அழை!!!  அழை!!! என்று கூற!! 

ஆனாலும் அழைக்கவில்லை ஆனாலும் பின் வாய் திறந்தான்!!!! 

அனைவரையுமே இப்படித்தான் அழைத்துக் கொண்டிருந்தேன்!!! ஏனென்றால் அங்கு நாராயணன் குடி கொண்டிருந்தானே அப்பொழுது பல தீய எண்ணங்களோடு வந்து எவை என்று கூட எவை என்று தெரியாமலே வணங்கிக் கொண்டிருந்தார்கள்!!!

அதனாலதான் பேய்!! பிசாசுகள்!! நாய்!! என்று எதை எதையோ சொல்லிக் கொண்டிருந்தேன்!!!

ஆனாலும் என்னை பார்த்து பைத்தியக்காரன் என்று சொன்னார்கள்!!!

ஆனால் கடைசியில் அவர்கள் பைத்தியக்காரர்கள் என்று உணரவில்லையே!!!! என்று நிச்சயம் அதாவது இவந்தன் பின் நாராயணனிடம் எடுத்துரைக்க!!!!!

நிச்சயம் நாராயணன் நகைத்தான்!!!! பின் எதை என்றும் அறிய அறிய 

ஏன்??? நகைக்கின்றாய்?? என்னை பார்த்தால் பைத்தியமா என்று இவந்தன் கேட்க!!!

நாராயணன் அவனை பார்த்து பின் நிச்சயம் நீ பைத்தியக்காரன் தான்!! ஏனென்றால் நாராயணன் அதாவது நாராயணனே சொல்கின்றான்!!! எதை என்றும் அறிய அறிய நாராயணன் அதாவது நீ அழைத்து கொண்டிருக்கின்றாயே கோவிந்தா!!! நாராயணா!!! என்று நிச்சயமாய் அவந்தனும் எதை என்றும் அறிய அறிய... அவந்தனிடத்தில் இருந்தே நீ பிச்சை எடுத்து கொண்டிருக்கின்றாயே!!!! இது நியாயமா?? என்று!!!

ஆனாலும் அவந்தன் சொன்னான்!!! யான் பிச்சை எடுக்கவில்லை!!! யார் எதைக் கொடுத்தாலும் வாங்கவும் இல்லை!!!! யார் எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய இதனால் எதை கொடுத்தாலும் யான் வாங்கி விடவில்லை!!!

ஆனாலும் பின் தண்ணீர் மட்டும் அதாவது குளத்தில் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியப் புரிய பின் அதனை அருந்தினேன் என்று!!!!

ஆனாலும் அதனால் நாராயணன் கேட்க!!! ஏன்? நீ எதை என்றும் அறிய அறிய அது கூட ஒரு பிச்சை தானே!!! ஏன்? பின் தண்ணீரும் கூட அதாவது உட்கொண்டு எதை என்றும் அறிய அறிய சில பழங்களையும் கூட நீ உட்கொண்டதை யான் பார்த்தேன் என்று நாராயணன் கூற!!!!

பின்பு அவந்தன் ஒரு முழி முழித்தான்!!!!!!!!! 

இவ்வாறு !!! இவந்தன் யார்?  என்பதை கூட இவந்தன் நோக்கினான்!!!! அதாவது கண்களுக்கு புலப்படவில்லை!!!

ஆனாலும் பின் கோபுரத்தை பார்த்து நாராயணா!!!!  கோவிந்தா!!!! யார் இவன்???  என்று நிச்சயம் அதாவது வந்தது நாராயணன் என்று தெரியாமல்!!!!!ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட  எவையென்றும் புரிய புரிய இதனால் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய!!! 

சரி!!!  மீண்டும் உந்தனுக்கு என்ன தேவை??? என்று நாராயணன் கேட்க!!!! 

அவ் மனிதன் எந்தனுக்கு ஒன்றுமே தேவையில்லை ஓர் முறை இவ் நாரயணனை தரிசிக்க வேண்டும் !!!அவ்வளவு தான் !!! அதற்காக தான் இங்கு பின்பு குடி கொண்டு!! எவையென்று அறிய அறிய என்று கூட!!!! 

ஆனாலும் நாராயணனும் கூட அதற்காக தானே இருக்கின்றாய்!!!! அப்பொழுது வருகின்ற போகின்றவர்களை எல்லாம் ஏன் பேய்!! பிசாசுகள் இன்னும் எதையெதையோ நாய், என்றெல்லாம் கூறி கொண்டிருக்கின்றாய்??????

நாராயணா!!! நாராயணா!!! என்று கூறி கொண்டிருந்தாலே அவந்தன் உன் கண்களுக்கு புலப்பட மாட்டானா??????  என்று எண்ண!!!!! 

ஆனாலும் யான் இங்கேயே இருக்கின்றேன் ஆனாலும் உள்ளே செல்பவர்கள் எல்லாம் எதையெதையோ செய்து விட்டு எவை என்றும் அறியாமலே எதை என்றும் தெரியாமலே பின் வணங்கி கொண்டிருக்கின்றார்கள்!!! பக்தி என்பது என்னவென்று கூட தெரியாமல் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

நாராயணன் யார்? எப்படி கொடுப்பான்? என்பதையும் கூட தெரியாமல் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்!!! அதனால் தான் பேய் பிசாசு நாய் என்பதையெல்லாம் அழைத்துக் கொண்டிருக்கின்றேன்!! என்றெல்லாம்.

ஆனாலும் நாராயணனே தெரியாமல் கேட்டான்!!!

எப்படி?? எப்படித் தான்?? நிச்சயம் வணங்க வேண்டும் என்று நீ கூறு என்று!!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அவ் மனிதன் நிச்சயமாய் மனதில் எதுவும் இருக்கக் கூடாது அதாவது கவலைகள் இருக்கக் கூடாது சொந்த பந்தங்களை பார்க்க கூடாது பின் நாராயணா!!!! அனைத்தும் நீ தான் சொந்தம் நாராயணா  நீ என்ன கொடுக்கின்றாயோ அதை கொடு!!! என்று யார் ஒருவன் நிச்சயம் நாராயணனை பார்த்து கேட்கின்றானோ அவந்தனை தான்  யான் மனிதன் என்று சொல்வேன்!!!

ஆனால் இதுவரையில் யாருமே சொன்னதில்லை அதனால் தான் திட்டி தீர்த்தேன் பேய் பிசாசுகளே என்றெல்லாம்!!!!!

சரி உந்தனுக்கு என்ன தேவை??? பின் நாராயணன் கேட்க!!! 

அவ் மனிதனோ!!!!! நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பின் நீ யார்?? என்னை கேட்பதற்கு??? நீ உன்னால் எதை என்றும் அறிய அறிய தந்து விட முடியுமா?? என்ன அனைத்தும் கூட!!!

நாராயணன் தான் தந்திட முடியும்!!!  ஆனால் பல ஆண்டுகளாகவே இங்கே பின் எவை என்று அறிய அறிய நாராயணனுக்காக ஏனென்றால் அனைவருமே நாராயணனை பார்க்கின்றார்கள் !!

ஆனால் என்னிடத்தில் வரவேண்டும் நாராயணன்!!! என் மனதில் ஒன்றும் இல்லை எவை என்று கூட சொந்த பந்தங்களும் இல்லை எதை என்று கூட எதற்கும் ஆசைப்பட்டதில்லை அதனால் ஏன் இவ் அவலம்!!!! என்னை எதை என்று அறிய அறிய யான் எதையும் கேட்டதில்லை எதை என்றும் அறிய அறிய என்று அவன் கூற!!!

நிச்சயம் எதையும் கேட்கவில்லையே என்று!!... பின் தவறு நீ கூறியது என்று நாராயணன் கூற

ஏன் எதையும் கேட்பதில்லை என்று கூற!! எவை என்று கூட அன்பு எவை என்று கூற பின் நாராயணனை பார்க்க வேண்டும் என்று கூறினாயே அதுவும் ஆசை தானே என்று நாராயணன் கூட !!!

பின்பு திகைத்தான்!!! அவ் மனிதன்!! எவை என்று கூட!!

அப்பொழுது நாராயணன் மீது அன்புகள் செலுத்த கூடாதா??? என்ன??!

நிச்சயம் செலுத்தாதே!! என்று நாராயணன் கூற!! 
அவந்தனுக்கு (நாராயணனுக்கு) தெரியும் எவை என்றும் அறிய அறிய எப்பொழுது உந்தனுக்கு கண்ணுக்கு தெரிய வேண்டுமென்று கூட!!

அதனால் அவந்தனே எதை என்றும் அறிய அறிய நிச்சயம் வருவான் என்று கூற!!! 

ஆனால் யோசித்தான் அப்பொழுது அவ் முதியவன் எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய பின் முதியவனும் எவை என்றும் அறிய அறிய பின் வயதும் ஆகி விட்டது!!!  நாராயணனை எண்ணி!! எண்ணி!!  ஆனால் சிறு தவறு செய்து விட்டோமே!!!  என்றெல்லாம் அன்பு கூட இறைவன் மீது வைக்க கூடாதா???? நாராயணா உன் மீது வைக்க கூடாதா!??? 

அதாவது தெரியாத ஒருவன் சொல்லி விட்டானே!!!!  ஆசைகள் வைக்க கூடாது என்று கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தான்!!!!

இப்பொழுது எதை என்றும் அறிய அறிய அவந்தனுக்கும் எவை என்று அறிய அறிய ஆனாலும் எதை என்று புரிய புரிய மீண்டும் எவை என்றும் அறிய அறிய பின் எதை என்றும் கூட அதனால் மீண்டும் நாராயணன் கேட்டான்!!!

இவ்வாறே இருக்கின்றாயே ஏன் உன்னை நாராயணன் பல வழிகளிலும் கூட உயர்த்தி இருக்கலாம் ஏன் உயர்த்தவில்லை??? என்றெல்லாம்!!!!

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய அவந்தனுக்கும் பின் பைத்தியம் போல் ஏன் இப்படி எல்லாம் எதை என்று கூட!!!

இவன் யார்???  என்றெல்லாம் எதை என்றும் அறிய அறிய அருகில் உள்ள ஒரு கோலை எடுத்து நாராயணன் தலை மீதே தலை மேலே ஓங்கி அடித்தான்!!! எதை என்றும் அறிய அறிய இதனால் அன்புடனே எவை என்றும் அறிய அறிய பின் நாராயணனும் பெற்றுக் கொண்டான் பின் அதாவது உள்ளே இருந்தவன் பின் அவதாரத்தில் தெரிய வைத்தான்!!!!!

பின் நாராயணா!!!!! உன்னையா!!! அடித்தேன்!!! என்றெல்லாம்!!!!!

நாராயணனும் நிச்சயம் எதை என்று கூட என் மீது அன்புகள் பன்மடங்கு காட்டினாய் அதனால் உன்னை ஒருபொழுதும் யான் நிச்சயம் எவை என்றும் அறிய அறிய எப்பொழுதும் எதையும் பேசவில்லை இவ் அன்பிற்காகவே வந்து நிச்சயம் உன்னிடம் அடி வாங்க வேண்டும் என்றே வந்தேன்!!!

நீயும் அடித்து விட்டாய் இதுதான்!!! அன்பு !!!

எவை என்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்றும் புரிய புரிய அதனால் இறைவனிடத்தில் வந்தால் எதையும் கேட்கக் கூடாது!!! இறைவனுக்கு தெரியும் அனைத்தும் எவை என்றும் அறிய அறிய இதைத்தான் யான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்!! நலமாகவே பல வழிகளிலும் கூட எதை எதை என்று அறிய அறிய தாய் தந்தையருக்கு தெரியும் தன் பிள்ளைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் கூட

இதனால் நிச்சயம் உயர்ந்த பக்தியும் கூட எவை என்றும் அறிய அறிய இருந்தாலே நிச்சயம் இறைவன் கூட மண்டியிட்டு வணங்குவான்!!

இதுதான் எவை என்று அறிய அறிய எதை என்றும் புரிய புரிய அதனால் எக்குறைகளும் இல்லை எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய 

அதனால் பக்திகள் ஓங்கி நிற்க வேண்டும்!!! அறிந்தும் அறிந்தும் கூட இதனால் பக்திகளே நிச்சயம் ஒரு நாள் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்!!!

ஆனால் எவை என்றும் அறிய அறிய நீ அனைத்திலும் வெற்றி பெற்று விடலாம் ஆனால் பக்தி பின் நிச்சயம் வெற்றி பெற இயலாது என்பேன் பல சோதனைகள் பல வழிகளிலும் வரும் எவை என்றும் அறிய அறிய அவற்றை எல்லாம் கடந்தால் பக்தியில் வெற்றி பெற்று விடலாம்!!!

ஆனால் பக்திகள் வெற்றி பெற்று விட்டால் நிச்சயம் இறைவன் தன் பக்கத்தில் எதை என்றும் அறிய அறிய உணராமலே இதை யான் பல வாக்கியத்திலும் சொல்லிவிட்டேன் மறைமுகமாகவே அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் எவை என்றும் அறிய அறிய தேர்வில் எவை என்று கூற வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் ஆனால் ஒரு நாள் பறிபோய்விடும் இவையெல்லாம் ஆனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய ""பக்தி செல்வம் "' இவ்வுலகத்தில் சிறந்தது என்பேன் அப்பனே!!!!

இவ் பக்தி செல்வத்தை யார் ஒருவன் சரியாக கடைப்பிடித்து வெற்றி கொள்கின்றானோ அவந்தனுக்கு இப் பெரும் உலகம் அடிமையாகிவிடும் எவை என்றும் அறிய அறிய!!!

இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அவ் முதியவனும் அப்பனே இப்பொழுது பின் இவ் தேசத்திலே பிறந்து பெரிய தொண்டு ஆற்றிக்கொண்டே இருக்கின்றான்!!!! அப்பனே இப்பிறவிலும் கூட பெருமானின் பாக்கியம் கிடைத்துக் கொண்டே தான் இருக்கின்றது அப்பனே!!

அதனால் ஆசைகள் எவை என்றும் அறிய அறிய அன்புகள் உயர்ந்தவை எவை என்றும் அறிய அறிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே

இதனால் பின் எவை என்றும் அறிய அறிய அனைத்தும் கொடுப்பது இறைவன் தான் அப்பனே நம்மிடையே ஒன்றும் இல்லை எதை என்றும் அறிய அறிய இதனை சரியாக புரிந்து கொண்டாலே உயர்வுகள் அப்பனே நல்விதமான ஆசிகள் அப்பனே அனைவருக்குமே எதை என்று புரியப் புரிய அப்பனே!!!!!

ஆசிகள்!!!  ஆசிகள்!!!

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheewaraya Namaha

    ReplyDelete