​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 7 July 2023

சித்தன் அருள் - 1358 - அன்புடன் அகத்தியர் - குருநாதரின் திருப்பதி வாக்கு!






12/5/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் திருமலை திருப்பதி

ஆதி பரமேஸ்வரனை பணிந்து செப்புகின்றேன் வாக்குகள் அகத்தியன்.

அப்பனே நலமாகவே எம்முடைய ஆசிகள்.... நல்முறையாக  பெருமானும் பின் தாயாருடனே நிச்சயம் பின் அனைவரையும் கூட ஆசிர்வதித்து விட்டு நல்விதமாகவே ஆசிகள் அப்பனே!!!!!!

எதையென்றும் அப்பனே இன்னும் இன்னும் ஏற்றங்கள் அப்பனே வாழ்க்கையில்.... ஆனாலும் நலமாகவே எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் ஞானங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே அமைதி பொறுத்திருந்தால் வெற்றி உந்தனுக்கு கூட நிச்சயம் எதை என்றும் அறியாமலே!!

அப்பனே நல்விதமாகவே அமைதி காத்து இருந்தால் அப்பனே என்ன தர வேண்டுமோ அதை யான் தருவேன் அப்பனே....

நலமாகவே அம்மையே எதை என்றும் அறிய அறிய அனைத்திற்கும் காரணமாக விளங்குவது அப்பனே எதை என்று அறிய அறிய பின் அன்பு!!!

இதனால் அப்பனே இவற்றைக் கடந்து எதை என்றும் அருகாமையில் கூட அப்பனே இறைவன் நிச்சயம் இறைவன் நின்றிருந்து பார்த்திட்டு நல்விதமாக ஆசிகள் அனைவரையும் கூட அப்பனே!!!!

பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே ஒவ்வொருவரையும் கூட ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து அப்பனே பின் யாருக்கு எதை தர வேண்டும்? என்றெல்லாம் நாராயணன் அப்பனே நினைத்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே நலமாகவே!!!!! 

அதனால் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே இவ்வுலகத்தில் வருவோர் போவோர் என்றெல்லாம் இருப்போர் என்றெல்லாம் அப்பனே அனைவருக்கும் கூட எதை கொடுத்தால் அதாவது எத்தகுதி உடையவருக்கு எதை கொடுத்தால் நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை எல்லாம் இருக்கின்றான் இறைவன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே அதனால் அவை தா!!! இவை தா!!! என்றெல்லாம் அப்பனே சொல்வதற்கு கேட்பதற்கு ஆகாது!!!!

அப்பனே எவை என்று அறிய அறிய மனிதன் அதாவது இறைவன் மனிதனைப் போ!!!.....என்று அதாவது எப்படி எப்படியோ அனுப்பி வைக்கின்றான் இவ்வுலகத்தில்!!!!

ஆனாலும் இறைவனுக்கு மாறாகவே மனிதன் நடக்கும் பொழுது தான் துன்பத்தில் ஆழ்ந்து நிற்கின்றான் மனிதன் அப்பனே இதனை என்றும் கூட!!!!

அதனால் அப்பனே முதலிலே அதாவது இளம் வயதிலேயே இறைவனைப் பிடித்து அப்பனே நிச்சயம் பக்திகள் காண்பித்தால் அப்பனே ஆனாலும் சில கஷ்டங்கள் வந்தாலும் அப்பனே நிச்சயம் இறைவன் பக்கத்தில் இருந்து காப்பாற்றுவான் என்பதை எல்லாம் ஏற்கனவே யான் உரைத்திட்டேன் அப்பனே நலமாகவே!!!!

அதனால் அப்பனே கலியுகத்தில் அப்பனே நிச்சயம் அப்பனே துன்பங்கள் அதிகரிக்குமப்பா!!!! 

ஆனாலும் அப்பனே துன்பங்கள் அதிகரிக்க அதிகரிக்க நோய்களும் மன குழப்பங்களும் பைத்தியன் போல் வாழ்வான் மனிதன் திரிந்து அங்கு போகலாமா?? இங்கு போகலாமா ?? எதனால் நன்மை ஏற்படும்?? எதனால் உயர்ந்து விடலாம் என்பதை எல்லாம் மூடநம்பிக்கையில் நுழைவான் அப்பா!!!!

இதனால் அழிவுகள் எதை என்றும் அறியாமலே அப்பனே..... அதனால் தான் அப்பனே யாங்கள் வந்து நல்லோர்களுக்கு அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருக்குமே அப்பனே ஒரு சந்தர்ப்பம் கொடுத்து அப்பனே நிச்சயம் மாற்றுவோம் அப்பனே இவ்வுலகத்தை!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இப்பொழுதும் கூட நாராயணன் நலமாகவே ஆடிப்பாடி எவை என்று அறிய அறிய வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே

( நம் குருநாதர் இவ்வாக்கினை தரும் பொழுது நான்கு மாத வீதியில் திருப்பதி திருமலையில் தினமும் மாலையில் 6 மணிக்கு நடக்கும் சகஸ்ர தீப அலங்கார சேவை முடிந்தவுடன் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் பல்லக்கு சப்பரத்தில் ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க யானைகள் பக்த பரிவாரங்கள் சூழ நான்கு மாட வீதியை சுற்றி வரும்பொழுது வாக்குகள் கொடுத்துக் கொண்டு இருந்தார் இதனை குறிப்பிட்டு ஆடி பாடி வருகின்றான் நாராயணன் என்று வாக்கில் கூறுகின்றார்)

இப்படி எதனால் வலம் வருவது என்பதை எல்லாம் அப்பனே மற்றவர்களுக்கு நிச்சயம் அப்பனே ஏணியாக இரு!!!!!

இவ்வாறு ஏணியாக இருந்தால் அப்பனே இறைவனே உன் இடத்தில் வந்து அப்பனே ஆடல் பாடலோடு அப்பனே உந்தனுக்கு அனைத்து ஆசிகளும் கொடுத்து அப்பனே உயர வைப்பான் அப்பனே இதுதான் உண்மை என்பேன் அப்பனே!!!

ஆனால் மனிதனின் நிலைமை அப்பனே பின் தடுமாற்றம் அடைந்ததாகவே உள்ளது ஆனாலும் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏழுமலையான் எதை என்றும் அறிய அறிய ஏழுமலையை பற்றியும் அப்பனே ஏற்கனவே ஒவ்வொரு மலையிலும் கூட ஒவ்வொரு கிரகத்தின் தன்மை எதிரொலித்து எதிரொலித்து அவை தன் பின் எங்கு படிகின்றது?? என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே வரும் காலங்களில் யான் தெரிவித்துக் கொண்டே இருப்பேன் அப்பனே!!!

சாதாரணமானதில்லை!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே இறைவன் ஏன் இங்கு நிற்கின்றான்??? அப்பனே!!!!! 

நிற்பதற்கு....ஏன்??? எதை என்றும் அறியாமலே அப்பனே பின் ஓர் எவை என்றும் அறியாமல் அதனால் அப்பனே பின் எதனால் நிற்கின்றான்????? அப்பனே!!!!

அனைவருக்கும் ஆசிகளா???? 

(அனைவருக்கும் ஆசிகள் கொடுப்பதற்கா ஏழுமலையான் நின்று கொண்டே இருக்கின்றான்??)

இல்லை ஏன் இங்கு வந்து நிற்க வேண்டும்???????

என்பதையெல்லாம் வரும் காலங்களில் நிச்சயம் இங்கேயே( திருமலை திருப்பதியில்) உரைப்பேன் அப்பனே பலமாகவே!!!!!!!

அதனால் அப்பனே இங்கு கிரகங்கள் பட்டு எதிரொலித்து எங்கெல்லாம் அப்பனே பின் அதாவது அண்ணாமலை இன்னும் அப்பனே என்!!! என்னுடைய தலம் கும்பகேஸ்வரர் கோயில் (கும்பகோணம்) அதாவது எதை என்றும் அறிய அறிய இன்னும் பத்மநாபசுவாமி( திருவனந்தபுரம்) அப்பனே பாபநாசம்( திருநெல்வேலி) எதை என்றும் அறிய அறிய இன்னும் காஞ்சியில்( காஞ்சிபுரம்) அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே ஏகன்( ஏகாம்பரேஸ்வரர்) அப்பனே இன்னும் இன்னும் எங்கெங்கெல்லாம் எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் நிச்சயம்......எவ்???? மலையில் ( எந்தெந்த மலையில் என்னென்ன ரகசியங்கள் உள்ளது) எவ்? எவ்? என்ன  ரகசியங்கள் உள்ளது என்பதை எல்லாம் நிச்சயம் வெளிக்கொண்டு வருவேன் அப்பனே!!!!!

நிச்சயம் நல் முறையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்ந்தால் அப்பனே வெற்றிகள் நிச்சயம் அப்பனே!!!!

ஆனால் அப்பனே மனிதன் போன போக்கிலே போய்க்கொண்டு எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறியாமலே அதாவது மனது மனிதன் அனைத்தும் ஒன்றே அப்பனே!!!! இதனைப் பற்றியும் வரும் காலங்களில் அப்பனே தெரிவிக்கின்றேன் அப்பனே!!!!

மனதை எவை என்று கூட செம்மைப்படுத்தினாலே போதுமானது செம்மைப்படுத்துவதற்கு பல வழிகளிலும் கூட திரிய வேண்டும்!! அலைய வேண்டும்!!! அப்பனே!!! 

எதையென்று கஷ்டங்கள் பட வேண்டும் என்பேன் அப்பனே!!! எவை என்று அறிய அறிய கடைசியில் பார்த்தால் அப்பனே இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு வரும் பொழுது தான் அப்பனே எதை என்று கூட மனம் செம்மையாகின்றது என்பேன் அப்பனே!!!!!

ஆனாலும் அவ் செம்மையாகுவதற்கு இறைவனே காரணம் என்று தெரிவதில்லை என்பேன் அப்பனே!!!

அதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அதனால் மனிதனுக்கு பல கஷ்டங்கள் வரும் பொழுது கூட எவை என்றும் அறியாமலே அனைத்தும் தாங்கிக் கொண்டு இறைவன் ஒருவனே எதை என்றும் அறிய அறிய அப்பனே காப்பாற்றுவதற்கு என்றிருந்தால் அப்பனே நிச்சயம் அனைத்தும் செய்வான் இறைவன் அப்பனே!!!!

நிச்சயம் இறைசக்தி எங்கெல்லாம் எதை என்றும் அறிந்து அறிந்து காணப்படுகின்றது?? என்பதை எல்லாம் வரும் காலங்களில் நிச்சயம் எடுத்துரைப்பேன் அப்பனே அனைவருக்குமே!!!!!!

இதை தெரிந்து கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்று நன்முறையாக வாழுங்கள் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் இயலாதவர்களுக்கு நல்விதமாக உணவுகளை ஈயுங்கள் !=!=அப்பனே நிச்சயம் பின் வாயில்லா ஜீவராசிகளுக்கும் கூட அப்பனே நீரை இடுங்கள் ( தண்ணீர் தானம்) இன்னும் அவைகளுக்கு என்னென்ன தேவையோ அவைகளுக்கும் கூட கொடுங்கள் அப்பனே!!!!

நிச்சயம் அப்பனே அழிவுகளில் இருந்து யாங்கள் நிச்சயம் பாதுகாப்போம் எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!!

அழிவு என்பது அப்பனே பின் இறப்பதல்ல!!!!!  என்பேன் அப்பனே 

எவையென்று அறிய அறிய அப்பனே மனிதன் இருக்கும் பொழுதே பல கஷ்டங்கள் அதாவது இன்னல்கள் பல துன்பங்கள் படுவது தான் அழிவு என்பேன் அப்பனே!!!அப்பொழுது பார்!!!!! 

இப்பொழுதே!!! மனிதன் அப்பனே சாகாமலே அழிவு பின் அதாவது அழிந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே!!!!

சாகுவது எதை என்று அறிய அறிய பிறப்பது எதை என்று அறிய அறிய இதற்கெல்லாம் அப்பனே விதிவிலக்குகள் அப்பனே எதனால் என்பதையும் கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் மாற்றங்களோடு அப்பனே வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே நலமாக ஆசிகள் ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswarya Namaha

    ReplyDelete