​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 4 March 2017

சித்தன் அருள் - 603 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தனத்தை வைத்து விட்டதாலேயே (தானம் செய்ததாலேயே) ஒருவனின் பாவங்களெல்லாம் கணப்பொழுதில் தீர்ந்துவிடாது என்பது, உண்மையான ஞான வழியில் வருகின்ற மனிதனுக்கு தெரியும்.  உண்மையாக, உண்மையாக, உண்மையாக, உண்மையாக, உண்மையாக, உண்மையாக, உண்மையாக, இருக்கின்ற ஆத்மாக்களுக்கு பலமுறை கூறியிருக்கிறோம். நாங்கள் இந்த ஒலையில் வாக்கினை கூறினாலும், கூறா விட்டாலும் எப்பொழுதும் தாய் பறவை தன் குஞ்சுகளை எப்படி காக்கிறதோ, அதைப்போல நாங்கள் இறைவனருளால் காத்துக்கொண்டிருக்கிறோம். எனவே அஃதொப்ப மெய்யான ஆத்மாக்கள் கலக்கம் கொண்டிட வேண்டாம்.

3 comments:

  1. ஓம் ஸ்ரீ அகத்தியரே சரணம்....

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யா துணை

    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  3. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete