​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 15 March 2017

சித்தன் அருள் - 612 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே மாயை, அறியாமை இருக்கிறது. விதி கடுமையாக இருக்கிறது என்றால் என்ன செய்ய வேண்டும்? ஒரு குழந்தைக்கு தன்னால் நடந்துபோக முடியவில்லை என்றால் தாயின் இடுப்பிலே ஏறி அமர்ந்து கொள்ளவேண்டும். தாய் என்ன கூறுகிறார்களோ அதை செய்யவேண்டும். அப்படி செய்தால் அந்தக் குழந்தைக்கு நலம் நடக்குமா? நடக்காதா? (நிச்சயமாக நடக்கும் ஐயனே). "நான் தாயை நம்பமாட்டேன், தந்தையை நம்பமாட்டேன். என் வழியில்தான் செல்வேன். எதெல்லாம் என் மனசாட்சிக்கு ஒத்துவருகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த சுவடியில் வருவது சித்தன் வாக்கு. எனக்கு பிடிக்காத கருத்தெல்லாம் வரும்பொழுது அவையெல்லாம் பித்தன் வாக்கு" என்று இருவிதமான மனோபாவத்தில்  இங்கு வந்தமர்ந்தால் எப்படியப்பா விதி அவனைவிட்டு விலகும்?

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete