​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 18 March 2025

சித்தன் அருள் - 1816 - அகத்தியப்பெருமானின் சமீபத்திய வாக்கு!


எத்துணை நல்லது செய்தும் ஒருவனுக்கு ஏதோ விதத்தில் ஒரு தண்டனை கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்றால், இறைவன் அவன் புண்ணிய கணக்கை நோக்கி, அவன் கர்மாவை அனுபவிக்க வைத்து, கர்ம கழிவை ஏற்படுத்துகிறார் என்று அர்த்தம். ஒருவன், எத்தனை தவறு செய்திடினும், மனம் மகிழ்ந்து வசதியாக வாழ்கிறான் என்றால், அவனுக்கான தண்டனை கடுமையாக ஆகிக்கொண்டு இருக்கிறது என்று உணர்க.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete