​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 4 March 2025

சித்தன் அருள் - 1811 - அறிவிப்பு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமான் உத்தரவுடன் அடியேன் சிகிர்ச்சைக்கு செல்வதால், ஒரு சில காலங்களுக்குப்பின் உங்கள் அனைவரையும், சித்தன் அருளில் சந்திக்கிறேன். இன்றுவரை அகத்தியப் பெருமான் கூறி இங்கு வெளியிட்ட நல்ல விஷயங்களை மறுபடியும் வாசித்து, நினைவை புதுப்பித்து மகிழ்ந்து இருங்கள். நல்லதே நடக்கட்டும்! சந்திப்போம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.
 
சித்தன் அருள்.....அகத்தியரிடம் ஒப்படைப்பு!

Monday, 3 March 2025

சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!









வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் தனி நபர்களுக்கு உரைக்கும் வாக்குகளிலும் பல்வேறு ரகசியங்களை உரைக்கின்றார்.

அதில் தனிப்பட்ட விஷயங்களை தவிர்த்து விட்டு பொதுவாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் 

இன்னும் மனிதர்களுக்கு தெரியாத தெய்வ ரகசியங்களை இயற்கை மருத்துவ குறிப்புகள் எல்லாம் குருநாதர் வெளிப்படுத்தும் பொழுது அவை அனைவரும் அறிந்து கொள்வதற்கும் பதிவு செய்யப்படுகின்றது!

சமீபத்தில் விஷ்ணு பக்தர் ஒருவருக்கு அவருடைய புண்ணியத்தின் பலனாக காசியில் குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகளை உரைத்த பொழுது!! கூறிய 

நாராயண ரகசியம்!!

அப்பனே நல்விதமாக ஆசிகள் அப்பா!! இறைவன் அருளால்தான் நீ செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாய் என்பேன் அப்பனே. 

இனிமேலும் நாராயணன் உன்னை நகர்த்துவான் (இயக்குவார்) என்பேன்
அப்பனே!! நாராயணன் அருள் பரிபூரணம்!!


அப்பனே நாராயணன் அருள்  பரிபூரணமாக இருக்கின்றது !!!

அப்பனே நிச்சயம் இவை என்று அறிய அறிய நிச்சயம் ஏழுமலையான் உன்னை அழைப்பான் என்பேன் அப்பனே!!!

அப்பொழுது அப்பனே சந்திரனின் அப்பனே எவை என்று கூட இன்னும் அதிகரிக்கும் பொழுது.. இன்னும் அப்பனே மனநிலைகள் அப்பனே பின் எவ்வாறு என்பது கூட மாற்றம் ஏற்படும் என்பேன் அப்பனே. 

அப்பனே பின் நிச்சயம் பின் சந்திரன் உன்னை அங்கு அழைப்பான். 

அப்பனே நிச்சயம் சந்திரனும் நாராயணனும் அப்பனே சுக்கிரனும் அனைவரும் ஒன்றே!!!

அப்பனே சந்திரனும் கூட சுக்கிரனும் கூட அப்பனே ஒன்றாக இணைந்தது தான் அப்பனே நாராயணனே!!! 

அப்பனே சந்திரனும் சுக்கிரனும் இணைந்தது அப்பனே புதன்!!

அப்பனே புதன் தான் அப்பனே பின் எவை என்று அறிய அப்பனே நிச்சயம் பின் பெருமான்(ள்).

(புதன் கிரகத்தின் அதிபதி மகாவிஷ்ணு) 

அப்பனே இவ்வாறு நிச்சயம் இருக்கும் பொழுது நாராயணன் அருள் பரிபூரணமாக இருக்கும் பொழுது கவலைகளை விடு நன்மைகளாகவே முடியுமப்பா!!

இதனால்தான் அப்பனே மனிதர்களை புண்ணியம் செய்யுங்கள் புண்ணியம் செய்யுங்கள் என்றெல்லாம் சித்தர்கள் செப்பிக் கொண்டே இருக்கின்றார்கள்!!

தாம் தன் செய்த புண்ணியங்களுக்கு ஏற்பது யாங்கள் சித்தர்கள் அழகாகவே வந்து காத்து அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வோம் என்பேன் அப்பனே. 

ஆசிகள்!! ஆசிகளப்பா!!

குஜராத்தைச் சேர்ந்த ஒரு அகத்தியர் பக்தர் ஒருவருக்கு குருநாதர் கூறிய 

 ஏக முக ருத்ராட்ச ரகசியம்

பக்தர்: குருவே ஒருமுக ருத்ராட்சம் என்ற பெயரில் முந்திரி பருப்பு வடிவத்தில் இன்று சமூகத்தில் உலகம் எங்கும் வியாபித்து இருக்கின்றது. ஒரு முகம் ருத்ராட்சம் உருண்டை வடிவில் இருப்பது எங்கு கிடைக்கும்???

அப்பனே எதை என்று அறிய அறிய உந்தனுக்கு அதெல்லாம் தேவையில்லை என்பேன் அப்பனே!!

யான் எங்கு இருக்கின்றது என்று சொல்லிவிடுவேன் ஆனாலும் நீ அங்கு செல்ல மாட்டாய் என்பேன் அப்பனே. 

அதனால் யான் சொல்லியும் செய்யவில்லை என்றால் அதுவும் பாவமாக ஏற்படும் என்பேன் அப்பனே!!!

(குருநாதரிடம் ஒரு விஷயத்திற்காக கேட்டு அதை குருநாதர் சொல்லி அதை பின்பற்றாவிட்டால் பாவங்கள் ஏற்படும்) 

ஆனால் நிச்சயம் சொல்வேன் ஆனால் நீ செய்யப் போவதில்லை என்பேன் அப்பனே அதனால்.. எத்தனை முகம் ஆனாலும் சரி ஏதாவது ஒரு ருத்ராட்சத்தை பயன்படுத்து மீதியை யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே. 

குருவே நான் ஒருமுக ருத்ராட்சத்தை அணிய விரும்புகின்றேன் அது எங்கு கிடைக்கும்??

குருநாதர் அகத்திய பெருமான். 

அப்பனே அதை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர... நிச்சயம் அது யார் கையிலும் இல்லையப்பா!!

(இதுவரை உண்மையான ஒரு முக ருத்ராட்சம் எவருக்கும் கிடைக்கவில்லை) 

அப்பனே எவை என்று அறிய அறிய அப்படி இருந்தாலும் அப்பனே ஈசனே அதை மறைத்து விடுவான் என்பேன் அப்பனே. 

ஏனென்றால் பின் அதை அதாவது அவ் ருத்திராட்சம் கைக்கு வந்து விட்டால் இவ்வுலகத்தையே வசியப்படுத்தி விடலாம் என்பேன் அப்பனே.

ஒரு அடியவருக்கு குருநாதர் கூறிய வாக்கில் அவரது குடும்பம் முழுவதும் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டிருக்கின்றது அதற்கு தீர்வாக குருநாதர் கூறிய வழிமுறைகள். 

அப்பனே நல்முறையாக இல்லத்தில் பைரவனை வளர்ப்பது சிறந்தது. 

வீட்டில் கருங்காலி கட்டையை ஏதாவது ரூபத்தில் வைத்து விடு அப்பனே

அப்பனே ஏலக்காய் பச்சை கற்பூரம் அப்பனே கிராம்பு இவற்றை நசுக்கி (பொடியாக்கி) அப்பனே வெற்றிலை பாக்கில் வைத்து தன்னிடத்தில் வைத்துக் கொண்டால் இவையெல்லாம் வராதப்பா!!! துணியில் சுற்றி எடுத்து கொண்டு செல் அப்பனே!!

(ஏலக்காய் பச்சை கற்பூரம் கிராம்பு இவற்றை பொடியாக்கி வெற்றிலை பாக்கில் வைத்து மடித்து ஒரு சிறிய துணியில் கிழி போல சுற்றி வெளியே செல்லும் பொழுதும் தொழில் மற்றும் எல்லா காரியங்களுக்கும் செல்லும் பொழுதும் தன்னுடன் வைத்துக்கொண்டு சென்றால் கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் அண்டாது..

தினமும் இவற்றை மாற்றிக் கொள்ளலாம்.. ஆற்றிலோ குளத்திலோ இவற்றை எறிந்து விட வேண்டும்)

அது மட்டும் இல்லாமல் பேய் விரட்டிம் மூலிகையும் கூட வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே

அது மட்டும் இல்லாமல் அடிக்கடி உணவில் வெண்பூசணியை சேர்த்துக் கொண்டே வந்தால் அப்பனே கண்திருஷ்டி அண்டாதப்பா!!!

உடலில் நோய் நொடிகள் வராமல் உடல் சீராக இருப்பதற்கு குருநாதர் ஒரு அடியவருக்கு கூறிய ரகசியம் 

அப்பனே ஏதாவது பழமையான சிவாலயங்களுக்கு சென்று அவ் லிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்து அந்த நீரை குடித்து வந்தாலே போதுமானதப்பா...

அப்படி இல்லை என்றால் அப்பனே பஞ்ச லோகத்தினால் ஆன சிவலிங்கத்தை வீட்டில் பூஜித்து அவ் லிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்து அந்த நீரை அருந்தி வரவேண்டும் என்பேன். அப்பனே இதனால் பல குறைகள் தீரும் என்றும் அப்பனே..

உடலில் யூரிக் ஆசிட் அதிகப்படியாக உற்பத்தி ஆவதால் உடல் பருமன் மற்றும் சோர்வு ஏற்படுவதற்கு குருநாதர் ஒரு அடியவருக்கு கூறிய மருத்துவ ரகசியம் 

அப்பனே நல்முறையாக அனுதினமும் உணவில் சுரைக்காயை சேர்த்துக்கொள் அப்பனே. இதை தன் உணவில் சேர்த்து வந்தாலே இதற்கு நல்ல தீர்வு கிட்டும் என்பேன் அப்பனே... அனுதினமும் நிச்சயமாக நீ சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. நிச்சயம் அனைத்தும் மாறும் அப்பனே.

குருவே நான் சுரைக்காய் சாப்பிட்டால் ஜலதோஷம் ஏற்படுகின்றது குருவே !!

அப்பனே நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய அறிய அவை தன் (சுரைக்காய்) கூட எடுத்துக் கொண்டே வா!!

அப்பனே கவலைகளை விடு!!!

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட இதற்கு (ஜலதோஷத்திற்கு) பதிலாக பின் திரிகடுகம் எடுத்துக் கொள்!!;;

ஒரு அடியவர் சில தவறான தீய பழக்கத்தினால் அவருடைய வயிற்றில் பிரச்சனை உறக்கமின்மை கல்லீரல் வீக்கம் அடிக்கடி கட்டுப்பாடு இன்றி சிறுநீர் கழித்தல் போன்ற குறைபாடுகள் இருக்கின்றது.. அதற்கு குருநாதர் கூறிய தீர்வு 

அப்பனே முதலில் பாகற்காய் சாற்றினை தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வர வேண்டும் என்பேன் அப்பனே இதனால் பல கழிவுகள் நச்சுக்கள் உடலில் இருந்து வெளியேறும் என்பேன் அப்பனே. முதலில் இதைச் செய்..அப்பனே....உன் பழக்கங்களை எல்லாம் உடனடியாக நிறுத்து அப்பனே!!!!...

ஒரு பெண் அடியவருக்கு மாந்திரீகத்தால் சில தேவையில்லாத உணவுப் பொருட்கள் கொடுத்து அது உடலில் சேர்ந்து விட்டது அது அவருக்கு பல வகையிலும் துன்பத்தையும் தூக்கமின்மை துர் சொப்பனங்கள் அதாவது கெட்ட கனவுகள் உளர்ச்சோர்வையும் நல் முறையாக பக்தியை செலுத்த முடியாமல் செய்தும் பல கஷ்டங்கள் அந்த பெண்மணிக்கு.. குருநாதர் அகத்திய பெருமான் இதற்கு கூறிய தீர்வு 

அம்மையே அனுதினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அதாவது ஒரு மாதம் தொடர்ந்து முள்ளங்கி சாற்றினை பருகி வரவேண்டும்!!!

இதனால் சில சில பின் எவை என்று அறிய அறிய பிற அழுக்குகளும் கூட பின் உடலில் எதை என்று கூட தானாகவே வெளியேறும் அம்மையே தொடர்ந்து இதை நீ நிச்சயம் பருகி வர வேண்டும் என்பேன்!!

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி அவருடைய இளம் வயது மகனும் இதே உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் இருவரும் உடல் பருமன் உடையவர்கள் குருநாதரிடம் உடன் பருமன் மற்றும் மிக ரத்த அழுத்தத்திலிருந்து (blood pressure)மீண்டு வர இதற்கான தீர்வினை கேட்டபொழுது

இதனால்தான் அனைவருக்குமே சொல்லிக் கொண்டிருக்கின்றேன் கோபம் கொள்ளாதீர்கள் கோபம் கொள்ளாதீர்கள் என்று... எதை என்று நிச்சயம் கோபத்தையும் கூட நீ கட்டுப்படுத்த வேண்டும் அம்மையே.. அனுதினமும் தியானங்களை மேற்கொள்ள வேண்டும் அம்மையே.. பின் அமைதியாக இரு!!
 நிச்சயம் தன்னில் கூட. 

அம்மையே பின் நிச்சயம் நடைபயிற்சியை விட்டு விடாதே!!!!

அனைவருக்குமே சொல்கின்றேன் அறிந்தும் கூட இதனால்.. நிச்சயம் அமைதியாக இருங்கள். 

குருவே கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு வழி தாருங்கள் 

அம்மையே யான் சொல்லிவிட்டேன் அம்மையே ஏற்கனவே.. இருந்தாலும் அம்மையே கற்களில் மீது நட!!

(கூழாங்கல் அதாவது ஆற்று படுகையில் இருக்கும் உருண்டை கற்கள் மீது அனுதினமும் காலில் செருப்பு அணியாமல் 20 நிமிடம் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.. இதனைப் பற்றி குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் தெரிவித்து இருக்கின்றார்!

சிலருக்கு நரம்பு பிரச்சனை உடல் பருமன் பிரச்சினை உயர் ரத்த அழுத்தம் உடல் வலி கால் வலிகளுக்கு குருநாதர் தீர்வாக இதனைப் பற்றி தெரிவித்து இருக்கின்றார்

 இதனால் ரத்த ஓட்டம் சீராகி உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். தற்போது பூங்காக்களிலும் இதுபோன்று கற்களைக் கொட்டி நடை பயிற்சியை மேற்கொள்கின்றனர்)

குருவே உலகத்தில் தற்போதைய காலகட்டத்தில் இன்னும் பல பேர் பிளட் பிரஷர் நோயால் அவதியுறுகின்றனர்

அறிந்தும் கூட இதற்கு சிறந்த பின் அதாவது நிச்சயம்... மிதிவண்டி மிதித்தல் நிச்சயம் தன்னில் கூட ஓடுதல்!! நடத்தல்!!

குருவே உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து கொள்ளலாமா 

தாராளமாக செல்லலாம்!!

உயிர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு எந்த? மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் குருநாதா!!!

அம்மையே நிச்சயம் ஒரு வாரம் என் தொடர்ந்து நிச்சயம் தன்னில் கூட பின் முள்ளங்கி எனும் சாற்றை வெறும் வயிற்றில் அருந்தி வா... சில கழிவுகள் உள்ளே இருக்கின்றது அதை முதலில் வெளியே அனுப்ப வேண்டும். 

இதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் குருவே 

முதலில் இதைச் செய்யுங்கள் இதன் பிறகு உங்களுக்கே தெரிந்து விடும் என்பேன். 

குருவே என்னுடைய மகனுக்கு இளம் வயதிலேயே இந்த உயர் ரத்த அழுத்தம் வந்து விட்டது இதற்கு தீர்வு வேண்டும் அருளுங்கள்!!

(அவருடைய மகன் துரித உணவு எனப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு கடைகளில் கிடைக்கும் உணவு வகைகளை செயற்கை உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் உடையவர்)

அப்பனே நீ உண்ணுவதெல்லாம் நிறுத்த வேண்டும்.. பின் கீரை வகைகளை உட்கொள்ள நன்று!!!

அதாவது அப்பனே பொன்னாங்கண்ணி கரிசலாங்கண்ணி காசினிக்கீரை மணத்தக்காளி எனும் மூலிகைகளையும் கூட கொள்ளு எனப்படும் அப்பனே எதையென்று அறிய அறிய யான் ஏற்கனவே தெரிவித்து விட்டேன் அப்பனே பல உரைகளிலும் கூட!!

பச்சை காய்கறிகளையும் கூட கீரைகளையும் கூட அப்படியே உண்ண வேண்டும் அப்பனே நல்விதமாகவே. 

இதனால்தான் சொல்கிறேன் அப்பனே சில செயற்கையானதை உணவுகளை விட்டுவிடு அப்பனே!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் எதை என்று புரிய... அனைத்தும் எண்ணெயில் தான் உள்ளதப்பா!!! அவையெல்லாம் என்பேன் அப்பனே!!! இதற்கு தன் எண்ணையையும்  குறைக்க வேண்டும் என்பேன் அப்பனே!!(எண்ணெய்களில் பொறித்த வறுத்த உணவுகள் oily foods)

சரியாகவே அப்பனே சில காலம்.. பின் அதாவது தேங்காய் எண்ணெய்... அப்பனே சமைத்து உண்ணுதல் அதிசிறப்பு தரும்!!

குருவே நாங்கள் தேங்காய் எண்ணெயில் பழக்கம் இல்லை இயற்கையாக ஆட்டி எடுக்கும் கடலை எண்ணெயை பயன்படுத்தலாமா??

அப்பனே இதையும் உட்கொள்ளலாம். 

குருவே உடல் முழுவதும் சுத்தப்படுத்துவதற்கும் உடலில் உள்ள குறிப்பாக வயிறு பகுதிகளில் தேவையில்லாத கொழுப்புகளை வெளியேற்றுவதற்கு என்ன செய்வது???

அப்பனே அறிந்தும் கூட ஒன்றைச் சொல்கின்றேன்!!! அதிகாலையிலே எழுந்து முருங்கை இலைகளை கூட கசக்கி அப்பனே அதாவது பின் நல்விதமாகவே அப்பனே நிச்சயம் அப்படியே நிச்சயம் கரைத்து அப்பனே பின் அருந்த நன்று!!! என்பேன் அப்பனே.. இதை நாளை பொழுதிலிருந்தே இவன் செய்ய வேண்டும். (முருங்கை இலைகளை சுத்தப்படுத்தி அரைத்து அதை வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும்) 

குருவே என்னுடைய மகளுக்கும் தோலில் கைகளில் தோல் உரிதல் அலர்ஜி பிரச்சினை இருக்கின்றது 

அப்பனே இதற்கும் காரணம் எண்ணைய் தானப்பா!!! உணவில் எண்ணெயை குறைத்துக் கொண்டாலே நோய்கள் வராதப்பா. செயற்கையை நாடி நாடி அனைத்தையும் மனிதர்கள் நோய்களை வரவழைத்து கொள்கின்றார்கள் என்பேன் அப்பனே!!

யான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட புற்று மண்ணை.. உடம்பில் பின் அதாவது ஐந்து நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள்.. பூசி ஊறவைத்து நிச்சயம் தன்னில்.. கூட... அவை மட்டும் இல்லாமல் வேம்பு (வேப்பிலை அரைத்து உடலில் பூசி) இலைகளையும் கூட பின் நன்முறையாகவே அறிந்தும் கூட அதை தன் கூட ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் பின் உடம்பில் பின் அதாவது.. கசக்கி அதாவது பின் அதாவது ஊறவைத்து நிச்சயம் தன்னில் கூட சில மூலிகைகளால் ஆன.. பொடிகளை!!

 (ஏலக்காய் பச்சை கற்பூரம் கிராம்பு பொடி துளசி பொடி வில்வ பொடி வேப்பிலை பொடி பயத்த மாவு கடலை மாவு பூலாங்கிழங்கு உள்ளிட்ட ஸ்நான பொடி) 

நீரில் விட்டு நீராடி வந்தாலே நிச்சயம் பின் நீராடி வந்தாலே போதுமானது. 

பின் இதை ஏற்கனவே உரைத்தேன்... நிச்சயம் தன்னில் கூட அவை மட்டும் இல்லாமல் சூரியன் பின் அதாவது சூரிய வெளிச்சத்தில் நிச்சயம் அதாவது அனுதினமும் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டே வந்தால்.. இதனால் நிச்சயம் தன்னில்  கூட மாற்றங்கள் ஏற்படும் என்பேன்... அதிகாலையில் எதை என்று சூரியன் முன்பு நின்றால்  அம்மையே!!! சூரியனின் வெளிச்சத்தில் இருந்து வரும் சக்திகள் தோலில் படும் பொழுது அவை மாறும்!! என்பேன்!! அதிகாலையில் சூரியனை பார்த்து நின்று வந்தாலே போதுமானது. அம்மையே அதுமட்டுமில்லாமல் இது அனைத்து நோய்களுக்கும் பின் தீர்வு. 

சொல்லிவிட்டேன். 

குருவே!!! என் மகளுக்கு அடிக்கடி கண்திருஷ்டி தோஷம் ஏற்படுகின்றது!! இதற்கு தீர்வினை தாருங்கள்!! 

யான் ஏற்கனவே அதாவது வெள்ளை பூசணிக்காயை கூட.. நல்விதமாக அதாவது அனுதினமும்... முடியாவிடிலும் வாரத்திற்கு மூன்று நாட்கள் ஆவது.. நிச்சயம் தன்னில் கூட பின் இதை தன் அதாவது அதன் சாற்றினை... அதாவது அப்பனே வெள்ளை பூசணி யின் சாற்றை அருந்தி வர சிறப்பு தரும்  என்பேன்.

யான் கூறியதை கடைபிடித்தாலே போதுமானது என்பேன் அப்பனே...குறைகளே வராதப்பா .. நிச்சயம் தன்னில் கூட...... ஆனாலும்  யான் சொல்லியதை.. சில விஷயங்களை கூட அதாவது சிலவற்றைக் கூட மறந்து விடுகின்றார்கள் கடைப்பிடிப்பதில்லை அப்பனே.. அதனால்தான் நிச்சயம் நீண்ட வாக்குகள் யான் செப்புவதில்லை அப்பனே... இதனால் இதை செய்திட்டு வந்தால்.. என்னென்ன? ஏது? என்றெல்லாம் பின் யான் செப்பி உயர வைப்பேன் அப்பனே..

ஆசிகள்!! ஆசிகள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 1 March 2025

சித்தன் அருள் -1809 - அன்புடன் அகத்தியர் - சிவராத்திரி - ஈசன் பார்வதி காகபுஜண்டர் மகரிஷி உரையாடிய வாக்கு-2!





சிவராத்திரி காசியில் ஈசனார் பார்வதி தேவியார் காகபுஜண்டர் மகரிஷி உரையாடிய வாக்கு பாகம் 2 

பார்வதி தேவியார்: 

நிச்சயம் மணாளனே நில்லும்!!!

அதை நீங்கள் கற்க வைக்கலாமே???!!! என்று!!

ஈசனார்:

ஆனாலும் பின் அனைத்தையும் ஒரு நேரத்தில் யான் உணர வைக்கின்றேன்! தேவியே!!!!

ஆனாலும் நிச்சயம் தேவியே!!! அனைத்தும் மனிதனிடத்தில் கொடுக்கின்றேன்...

ஆனால் அதை வைத்துக் கொள்வதும் நிச்சயம் வைத்துக் கொள்ளாததும் மனிதனுடைய கர்மாவே!!!!

ஆனால் இங்கு கர்மா பற்றி யான் பேசவில்லை!!! அதனைப் பற்றி பின் மைந்தன் அகத்தியன் அழகாக எடுத்துரைக்கும் பொழுது அறிவியல் மூலமாகவே தெரிந்து கொள்வீர்கள்! 

 ஏன்? எதற்கு? இவையெல்லாம் என்று!!!

நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் கூட!!!

காகபுஜண்டர் மகரிஷி: 

தந்தையாரே!!! நிச்சயம் அனைத்தும் உண்மை!! அறிந்தும் இன்னும் எவ்வாறு? ஞானிகள்!!!

 மக்கள் நிச்சயம் எதன்??? பின்னாலே செல்கின்றார்கள் என்று பார்த்தால்!!?!?!?! எதன்  பின்னால் செல்கின்றார்கள் என்றால் நிச்சயம் மாயையின் வழியே!!!

பார்வதி தேவியார்: 

பின் நில்லும்!!! நில்லும்!!! புசுண்டனாரே!!!

நிச்சயம் கூட அவ் மாயையும் கூட நிச்சயம் ஏற்படுத்தியவர் இவர்தானே!!!! அதாவது உன் தந்தை ஈசன் தானே!!!

கேளும் நீயும் கூட!!!
நிச்சயம் தன்னில் கூட!!!

காகபுஜண்டர் மகரிஷி: 

அதாவது தாயே!!! அறிந்தும் நிச்சயம் எதற்காக ?? மாயையை நிச்சயம் அறிந்தும் ஏற்படுத்தி இருக்கின்றார் என்றால் !!!......
நிச்சயம் அதாவது... இரவு என்றால் பகல்... நிச்சயம் பின்  நன்மை தீமை..

 ஏன் பின் அதாவது நிச்சயம் தன்னில் அறிந்தும் எதை என்று புரிந்து பின் நடந்து இவை தீர நிச்சயம் தன்னில் கூட பகலெல்லாம் உழைத்து விட்டு இரவில் இரவு தன்னில்  யோசிக்கவே!!! நிச்சயம் தன்னில் கூட பின் உறங்குகின்ற பொழுது... இதனால் அப்பொழுது யோசித்து விட்டால் நிச்சயம் மனிதன் உயர்ந்தவன் ஆகிவிடலாம். 

(இரவில் உறங்குவதற்கு முன் நன்மை எது தீமை எது உண்மை எது மாயை எது என்று யோசிக்க வேண்டும் அப்படி யோசித்தால் உண்மை நிலை புரிந்து உயர்ந்து விடலாம்)

ஆனால் யோசிப்பதில்லையே!!!

அதனால்தான் பின் எம் தந்தையும் இரவும் பகலும் கூட!!!
 (படைத்திருக்கின்றார்) 

பின் ஆனாலும் மனிதன் இன்னும் கூட புத்திகள் இல்லாமல் சுற்றி ! சுற்றி!!
அறிந்தும் எதை என்றும் புரிய!!!

அதனால்தான் நிச்சயம் பின் பக்தர்களையும் கூட!!! 

அவர்களுக்கு அள்ளி கொடுத்து ஆனந்தத்தில் சில பக்குவங்களை புகுத்தி நிச்சயம் நின்றால்!!! அனைத்தும் மாறும்.. கலியுகம் அறிந்தும்.. அறிந்தும் அறிந்தும். 

ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் இதன் உண்மையை கூட!!

இதனால் மனிதனை விட்டுக் கொண்டே இருந்தால் இன்னும் நிச்சயம் நோய் பின் அறிந்தும் எதை என்று அறிய சில சில நுண்ணுயிர்களையும் கூட மனிதனே ஏற்படுத்தி இருக்கின்றான். 

பார்வதி தேவியார்:

பின் அறிந்தும் ஏன்? எதற்கு? இவை தன் கூட மனிதனின் கண்டுபிடிப்புகள்!!!

ஆனால் இதனையும் பின் அழித்து விட்டால் அறிந்தும் உண்மை நிலை எவ்வாறு? என்று புரிகின்றதா???

காகபுஜண்டர் மகரிஷி: 

நிச்சயம் பின் தாயே!!!

அதாவது என் தந்தை நிச்சயம் எவ்வளவு பின் அறிவாளி!!!! அறிவாளிகளை எல்லாம் பயன்படுத்தி பின் அதாவது அறிவாளிகளாக நிச்சயம் பின் நல் புத்திகளை கொடுத்து நிச்சயம் தன்னில் கூட உலகத்திற்கு அனுப்புகின்றான். 

பின் அதாவது அவ் புத்தியை சரியாக பயன்படுத்துவதே இல்லை 

அதனால்தான் அழிவுகள். 
புத்தியை அதாவது ஏன்? எதற்கு? வரும் காலங்களில் அழிவுகள் என்றால்... மனிதன் பின் நுண்ணுயிரிகளை கண்டுபிடித்துள்ளான். 

(மனிதனே மனிதர்களை அழிக்க சில செயற்கையான கிருமிகளை உருவாக்கி வைத்துள்ளான்)

அதை எப்படியாவது பின் அதை விட்டால்!?!?!?!?!?

 ஆனால்... அதைக் கூட ஓரிடத்தில் வைத்திருக்கின்றான்!.

நிச்சயம் பின் அதாவது இதை தன் சோதனை!!

 (மனிதர்களிடத்தில் பரப்பி) 

செய்து பார்ப்போமா??? என்று!!

ஆனாலும் நிச்சயம் அவனை அங்கேயே தட்டி நிச்சயம் பைத்தியக்காரனாக ஆக்கி அறிந்தும் எதை என்றும்!!!

(செயற்கையாக கிருமிகளை உருவாக்கி மனிதர்கள் மீது ஏவி விட்டு சோதனை செய்து பார்க்க நினைத்த மனிதனை அடித்து அவனை பைத்தியம் போல் ஆக்கிவிட்டார்)



புரிகின்றதா ஏன்? எதற்கு? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!

அறிந்தும் அறிந்தும் பின் நிச்சயம் பின் என் தந்தையார் கருணை மிகுந்தவர்!!!

அனைத்தும் கொடுக்க வல்லவர்.

எதை என்று ஏன்? நிச்சயம் தன்னில்  கூட.. பின் தந்தையானவர் அனைத்துமே கொடுக்கின்றார்.. நிச்சயம் தன்னில் கூட!!!

 அதாவது மனிதன் அனைத்தும் செய்துவிட்டு மீண்டும்.. தந்தையை வந்து தொழுகின்றான்!! இது எவ்வாறு நியாயம்??

அறிந்தும் மீண்டும் அழிக்கின்றான்!!.

இதனால் நிச்சயம்... நிச்சயம் நிச்சயம் தாயே!! தாயே!! நிச்சயம் சில திருத்தலங்கள் இருக்கின்றது...

அங்கு செல்ல நிச்சயம்.. செல்லச் சொல் பார்ப்போம்!! நிச்சயம் தண்டனைகள் உண்டு!!

பின் அதாவது அதே திருத்தலத்தில் கூட பாவம் கரைந்து புண்ணியம் !!! அறிந்தும் கூட. 

(பாவம் செய்த மனிதர்கள் சில திருத்தலங்களுக்கு செல்ல முடியாது அவர்கள் செய்த பாவம் அங்கு செல்ல அனுமதிக்காது.... அவர்களுக்கு தண்டனை உண்டு! 

அத்தகைய திருத்தலங்களுக்கு சென்றால் பாவங்கள் தீரும் புண்ணியம் ஏற்படும்... ஆனாலும் ஆலயங்களுக்கு செல்வதற்கும் புண்ணியங்கள் வழி விட வேண்டும்)

பார்வதி தேவியார்'

நில்லும்!!! நில்லும்!! பின் நிச்சயம் அன்பான மணாளனே.... அறிந்தும் பாவம்!! பின் எப்படி? நிச்சயம் புண்ணியம்!!! எப்படி மனிதனுக்கு ஏற்படுகின்றது??

நிச்சயம் விளக்கமாக எடுத்துரையுங்கள்!!!

பின் மணாளனே!!! இதற்காகவது பதில் அளி!!
அனைத்தும் சொல்லவில்லை!!! இதோ புசுண்டன் இருக்கின்றானே..!!!!!!!
பின் அடிக்கடி உள் நுழைந்து நிச்சயம் தன்னில் கூட... என் மனதை கூட மாற்றி விட்டான். 


காகபுஜண்டர் மகரிஷி: 

பின் தாயே!! தாயே!! நிச்சயம் அப்படி எல்லாம்.. கூறாதீர்கள்... பின் உங்களுக்கும் நிச்சயம் நீங்களும் கூட கருணை உள்ளவர்தான்.. பின் அதாவது தந்தை ஏதாவது கொடுத்தாலும் நீங்கள் தடுத்து பின் நிறுத்தி நிச்சயம்... இதோ !! இதோ!! நிறுத்து!! நிறுத்து!! என்கின்றீர்கள் அல்லவா !!!!

நிச்சயம் உங்களுக்கு இணை யார்??? என்று பின்!!


பார்வதி தேவியார்: 

எதை எடுத்தாலும் நிச்சயம் புசுண்டரே.. ஏதாவது ஒன்றை சொல்லி விடுகின்றாய்... பின் நிச்சயம் அறிந்தும்... இவை என்று அறிய அறிய இன்னும் பின் அதாவது நிச்சயம் பின் அன்பானவரே!!! எடுத்துரை!!!

பின் பாவம் என்ன?? புண்ணியம் என்ன???


ஈசனார்:

நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... பாவம் புண்ணியம் ஏன் ? எதற்கு? என்பவை எல்லாம்... அதாவது இவையெல்லாம் பின் அகத்தியனே!!! ஏற்கனவே மீண்டும் எடுத்துரைத்து விட்டான். 

மீண்டும் நிச்சயம் யான் எடுத்துரைக்கின்றேன்.

இங்கு பாவம் புண்ணியம் என்பதையெல்லாம் நிச்சயம் பின் அதாவது இட்டு இட்டு... அதாவது ஒருவனுக்கு நிச்சயம் தன்னில் கூட... யான் எதுவுமே கொடுப்பதில்லை நிச்சயம் அதாவது பாவம் புண்ணியம்... பிரம்மா அழகாகவே இட்டு அனுப்புகின்றான். 

ஆனாலும் பிரம்மாவோ!!???

இரு!!

யான் அனுப்புகின்றேன்.. இவன் என்னென்ன செய்கின்றானோ??? அதற்கு தகுந்தாற்போல் ஏற்கனவே மிச்சம் இருக்கின்றதே (முற்பிறவிகளில் செய்த பாவங்கள் புண்ணியங்கள்) அதை அனுப்பிவிடு!!! என்று!!

 ஆனால் பின் யான் மனதில் எண்ணி எண்ணி !! நன்றாக அனுப்புவேன்!!!
 பாவம் புண்ணியம் எதுவுமே இல்லாமல்... !!

யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று!!!

ஆனால் அவன் வளர வளர.. அவன் செய்கின்ற செயல்கள் என்னவென்று??? கூற... !?!?!

அதனால் பிரம்மாவும் வந்து அறிந்தும்... ஈசனாரே!!! பார்த்தாயா?? என்று!!!

நிச்சயம் பின் இங்கு யான்!?!?!?!?!?!....

அறிந்தும் அதனால்.. கருணை கொண்டவர்களே இங்கு தோல்வி அடைந்து விடுகின்றார்கள்... அறிந்தும் உண்மைதனை கூட!!
(அதாவது ஈசன் தன்னை தானே கருணை கொண்டு அனைத்தும் மனிதர்களுக்கு செய்தாலும் மனிதர்கள் அதை புரிந்து கொள்ளாமல் தவறான வழியில் நடப்பதை கண்டு அந்த இடத்தில் அவர் தாம் தோல்வியுற்றதாக எண்ணிக் கொள்கின்றார்)

இதனால் மீண்டும் பிரம்மாவே!!! மீண்டும் உள் புகுத்தி!!!!
அதனால் அறிந்தும் மாற்ற வல்லான்!!!

விதியையும் கூட பின் சென்று சென்று பிரம்மாவும் கூட அறிந்தும்... சுற்றிக்கொண்டே!! சுற்றிக்கொண்டே!! புவி தன்னில்.. அறிந்தும் பின் அதாவது சுற்றிக்கொண்டே!!!!!!

நிச்சயம் தன்னில் கூட பின் கண்களால் பார்த்தால் நேர்கோடு (விதி தலையெழுத்து) ஆகும் என்றெல்லாம்!!!!

நிச்சயம் அப்படி பின் குனிந்து  சென்றால்????
(விதியை.. எழுதி மனிதர்களை எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்று பூமியில் வந்து பிரம்மா சுற்றிக்கொண்டு அனைவரையும் பார்க்கும் பொழுது புண்ணியங்களை செய்து கொண்டிருந்தால் பாவங்களை செய்யாமல் இருந்தால் தலையெழுத்தை மாற்றி நேர்கோடாக மாற்றி விதியே மாறும்.

ஆனால் மனிதர்கள் புண்ணியங்களை செய்யாமல் பாவங்களை செய்து கொண்டிருப்பதால் பிரம்மா நேரடியாக யாரையும் பார்க்காமல் தலை குனிந்து செல்வதால்... யாருக்கும் விதி மாறுவதில்லை இந்த உண்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை)

 அதனை அறிந்தும் உண்மைதனை கூட எடுத்துரைக்க ஆள் இல்லையே!!!!!

ஆள் இல்லையே!! தேவியே!!!

கேளும் !கேளும் !இன்னும் இன்னும்!!

பார்வதி தேவியார்:

நிச்சயம் பின் இவ்வாறெல்லாம் அறிந்தும் நிச்சயம் இதை என்று புரியும் வண்ணம் கூட சரி!!!

அழகாக பின் மகிழ்ச்சி!! அறிந்தும் இன்னும் ஏன் எப்படி? மனிதனை காக்க போகின்றாயா??? இல்லையா???

நிச்சயம் கூறும் மணாளனே!!!

ஈசனார்: 

நிச்சயம் காத்துக் கொண்டே இருக்கின்றேன். 

ஆனால் அவனவன் செய்கின்ற செயலால்தான் நிச்சயம் பின் அவனே நிச்சயம் தோல்வியடைந்து என்னிடம் வருகின்றான் மீண்டும். 

அவந்தனுக்கும் ஏதாவது ஒன்றை செய்து செய்து அனுப்புகின்றேன். 

மீண்டும் அத்தவறுகளையே செய்து கொண்டு..!!!

 இறைவன் கண்டு கொள்ளப் போகின்றானா??
(செய்யும் தவறுகளை எல்லாம் இறைவன் காணவா?? போகின்றான் என்று)

 என்றெல்லாம் நிச்சயம் வந்து வந்து!!!

ஆனாலும்.. இருப்பினும் நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறாகவே சென்று கொண்டிருந்தால் பின் அறிந்தும் உலகம் அறிந்தும் எதை என்று கூற!!!

இன்னும் இன்னும் அறிவியல் வழியாகவே பின் நம் மைந்தன் அகத்தியன்.. உரைக்கின்ற பொழுது தெரியும். 

இவ்வுலகத்தில் என்னென்ன ஏது? எங்கு பிளவுகள்??

இன்னும் சூரியன் சந்திரன் எங்கு?? அறிந்தும் பூமி பின் இரண்டாக பிளக்கும் போது யார் மீது? தவறு என்பதை எல்லாம் நிச்சயம் அகத்தியன் வரும் வரும் வாக்குகளில் பின் எடுத்துரைக்கும் பொழுது பின் புரியும் தேவியே!!!

அதற்காக நிச்சயம் தன்னில் அவனவன் செய்த பின் அதாவது பாவமும் பின் புண்ணியமும்!!

ஏன் எதற்கு நிச்சயம் தன்னில் கூட அதாவது தாய் தந்தையை மதியுங்கள். என்று. பின் விளக்கமாகவே பின் ஞானிகள்!!

யான் படைத்த ஞானிகள் பின் கூறிவிட்டார்கள்..

ஆனால் நிச்சயம் இல்லையே மதிக்கவில்லையே!! கேட்கவில்லையே..!! மதிக்கப் போவதில்லையே..!!!

இன்னும் எதை என்று ஒழுக்கமாக வாழுங்கள்!! என்று அழகாக யான் படைத்த ஞானிகள்...

ஆனாலும்  இல்லையே!!!

கோபம் கொள்ளாதீர்கள்!! பிறரை பற்றி குறை சொல்லாதீர்கள்...!! அன்பாக இருங்கள்!!. என்று!!!

ஆனால் இன்னும் இன்னும் பின் எத்தனை ஞானிகள் பின் வந்தால்  இவர்களை காக்க முடியும் ???!? என்று தெரியவில்லை!!!

ஆனால் இன்னும் யான் பெரியவன்.. அவன் சிறியவன்... இன்னும். மத கலவரங்கள்!!... இன்னும் இன்னும் என்னென்ன?! ஏமாற்று வேலைகள் என்னென்ன??

ஆனால் மனிதன் வாழ்கின்றானோ ??? என்னவோ???

ஆனாலும் சரியான ஏமாற்றுக்காரன்.. அதுவும் கூட!!!

அதாவது இறைவன் பின் அதாவது அழகாக யான் நிற்கின்றேன்..

ஆனால் இறைவன் பார்க்கவா? போகின்றான் என்று மனிதன் மனிதனையே ஏமாற்றுகின்ற பொழுது!!!....

பார்வதி தேவியார்: 

நில்லுங்கள் அறிந்தும் எதை என்று நிச்சயம் என் மணாளனே.. மணாளன் தானே  பின் அதாவது நீர் தானே படைத்தீர்!!

இப்படியா???

ஈசனார்: 

நிச்சயம் பின் நில்லும்!! நிச்சயம் யான் படைத்தேன்!! ஆனால் நிச்சயம் இப்பொழுது மனிதன் செய்கின்ற தவறுகளுக்காக யான் தலை குனிகின்றேன். 

நிச்சயம் இங்கு யான் தான் தலைகுனிய வேண்டும்!!

ஆனாலும் நிச்சயம் அதாவது தண்டனைகள் அதிகப்படுத்தினால் தான் நிச்சயம் மனிதன் திருந்துவான். 

வரும் காலங்களில் தண்டனைகள் அதிகமாக தான் யான் கொடுக்கப் போகின்றேன்... நிச்சயம் அப்பொழுது தான் நிச்சயம் மனிதன் திருந்துவான். 

கருணை உள்ளவனாக இருந்தால் இன்னும் இன்னும் அறிந்தும் எதை என்று அறிய. 

இதனால் நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய!!

பார்வதி தேவியார்:

 நிச்சயம்... அதாவது இன்றைய காலகட்டத்தில் மணாளனே அறிந்தும் நோய்கள் அதிகமாக உள்ளது!!

அதற்கு ஏதாவது பதில் உரைக்கலாமே நீங்கள்!!!

ஈசனார்: 

நிச்சயம் தேவியே!!! அறிந்தும் ஆனால் நோய்கள்.. எதற்கு வருகின்றது என்று பார்த்தால்!!

நிச்சயம் யான் அழகாக உடலை கொடுத்து அனுப்புகின்றேன்!!

ஆனாலும் என்னென்ன தவறுகள்?? செய்து செய்து அவ் உடம்பை பாழாக்குகின்றான். மனிதன். 

இதனால் தான் நிச்சயம் நோய்களே வருகின்றது!!

அதாவது பின் நிச்சயம் அறிந்தும் சரியாக இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை எல்லாம்... இன்னும் இதிகாசங்களில் ஞானிகளால் பின் தள்ளி!! (எழுதி அனுப்பி) தள்ளி.. நிச்சயம் பின் ஏற்படுத்தினேனே!!!

ஏன் இவை அறிந்தும் கூட!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட...

என்னுடைய வாகனமானது 
(நந்தி யான காளை பசுமாடுகள்) அனைவரும் அறிந்தும் எதை என்று அறிய அறிய... கொல்கின்றார்களே!!!!.. இதற்கு பின் நிச்சயம் புற்று நோய்கள்... பின் அதிலிருந்து நிச்சயம் அதிகமாக பரவும் வரும் காலத்தில்!!

அதனால் பின் நிச்சயம் அதை யான் நிறுத்தி விடுவேன்!!! எப்படி ?ஏது? நிறுத்துவது என்பதை எல்லாம் யாம் அறிவோம்!!

ஆனாலும் மனிதன்.. அதை நிச்சயம்!!.... அதில் கூட நுண்ணுயிரிகள் இருக்கின்றது பின் அதாவது கழுத்தில்!!!

(பசுமாடுகளின் உடலில் நுண்ணுயிரிகள் இருக்கின்றது குறிப்பாக கழுத்து பகுதிகளில்)

அதை வெட்ட!!... அறிந்தும் கூட அது பரவி பரவி மனிதனை கொன்று கொண்டே இருக்கின்றது!! அதிகமாக !! அதிகமாக!!

நிச்சயம் பின் வாயில்லா ஜீவராசிகளை எப்பொழுது கொல்கின்றார்களோ!?! அதாவது என்னுடைய உயிர்களை எப்பொழுது கொல்கின்றார்களோ!?!?!

அப்பொழுதெல்லாம் மனிதனுக்கு நோய்கள் வந்து கொண்டே இருக்கும்... இதை இதிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது!!

எங்கு சென்றாலும் எத்திசையில் சென்றாலும் தப்பிக்க இயலாது!!

என்னிடத்தில் வந்தாலும் தப்பிக்க இயலாது!!

அதனால் பின் அழகாகவே பின் உனக்கு.. என்ன தேவையோ அதை யான் கொடுத்துக் கொண்டே மனிதனுக்கு..

அதாவது தேவியே!!!

நிச்சயம் மனிதனைப் பார்த்து சொல்கின்றேன்.. அழகாக உந்தனுக்கு அதாவது நீ என்ன கேட்கின்றாயோ? அதை யான் கொடுக்கின்றேன். அதை சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் ஒரு குறையும் இல்லை.

தவறாக பயன்படுத்தினால் அதை உந்தனுக்கு கொடுத்தேனே!!!.... அதுவே அழகாக உந்தனுக்கு பதில் சொல்லும். 

அறிந்தும் உண்மைதனை கூட... இதை தெரிந்து கொண்டால் நன்று. 

நிச்சயம் தன்னில் கூட!!!

அன்பானவளே!!! அழகானவளே!!! புரிகின்றதா?!

பார்வதி தேவியார்: 

நிச்சயம் எதையெதையோ கேட்க வந்தேன்.... ஆனால் எதை எதையோ.. என் மூளையை கசக்கி மனதையும் கூட மாற்றி பின் கேள்விகளை கேட்க விடாமல் செய்து விட்டீர்கள். 

ஈசனார்: 

நிச்சயம் தேவியே!!

நிச்சயம் அனைத்தும் அறிந்தவள் நீ... நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய

காகபுஜண்டர் மகரிஷி:

 நிச்சயம் பின் அழகாக இன்றைய நாளில் அறிந்தும்...

தேவாதி தேவனே!!! பரிசுத்தமானவனே!!!! வெற்றிகளை கொடுப்பவனே !! தாயே!! மகிழ்ச்சி!!

நீங்கள் இருவரும் பேசியதில் மகிழ்ச்சி!!!

ஆனாலும் யானும் இடையிடையே நுழைந்து குழப்பியும் விட்டேன். 

பார்வதி தேவியார்:

இல்லை இல்லை என் மைந்தன் நீ.. அதனால் நிச்சயம் நல்லதை தான் சொல்வாய் நீ!!! என்பதையெல்லாம் பின் அதாவது...நீ பல உலகங்களை பார்த்தவன்!!

இன்னும் உலகத்தைப் பற்றி மக்களுக்கு தெரிவி!!!

புசுண்டனாரே!!!! பல உலகங்கள் இன்னும் இருக்கின்றதல்லவா நிச்சயம் அதனைப் பற்றி தெரிவி!!! மனிதர்களுக்கு!!

அதாவது தெரிவித்தால் மூடநம்பிக்கைகளிலிருந்து நிச்சயம் வெளியே வந்து விட்டால் அனைவரும் பிழைத்துக் கொள்வார்கள்.

காகபுஜண்டர் மகரிஷி: 

நிச்சயம் தாயே!!! பின் வணங்குகின்றேன்!!! வரும் காலத்தில் மனிதனுக்கு செப்புகின்றேன் பல வழிகளிலும் கூட மூடநம்பிக்கைகளை ஒழிக்கின்றேன் நிச்சயம் பின் 

அதாவது... தலை வணங்குகின்றேன். 
தந்தையே!! தாயே!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!