​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 18 September 2020

சித்தன் அருள் - 916 - ஆலயங்களும் விநோதமும் - காளமேகப் பெருமாள், திருமோகூர், மதுரை!


தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலில் அமிர்தம் கடைகின்றனர். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்கள் தேவர்களுக்கு தொல்லை தருகின்றனர். அசுரர்களின் தொல்லை தாங்கமுடியாமல் தேவர்கள் பெருமாளிடம் சென்று முறையிடவே, பெருமாளும் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களை காத்தருளினார். பெருமாள் மோகினி அவதாரம் எடுத்ததால் இவ்வூர் திருமோனவூர் என்றிருந்து, பின்பு திருமோகூர் என்று அழைக்கப்படுகிறதுமதுரையிலிருந்து ரயில் நிலையத்திலிருந்து, பதிமூன்று கிலோமீட்டர் தொலைவில் காளமேகப்பெருமாள் கோவில், திருமோகூர் அமைந்துள்ளது.

சக்கரத்தாழ்வார், சுதர்சனர் அம்சம். அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு காட்சி தருகிறார்.

மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுகிறது இங்கு மட்டுமே.

சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது.

மந்திர எழுத்துக்களுடன் உள்ள சக்கரத்தாழ்வரின் பூஜிக்கப்பட்ட யந்திரம் தொழில் விருத்தியையும் எதிரிகளை வெல்லும் திறனையும் கண் திருஷ்டியை நீக்கும் வல்லமையுடையது என்பதும் ஐதீகம்.

இங்குள்ள பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர். வைகுண்டத்திற்கு வழிகாட்டி அழைத்து சென்றவர்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

பொதுவாக, பெருமாள் கோவில்களில், தீர்த்தம், சடாரி, துளசி போன்றவை சன்னதியிலிருந்து பிரசாதமாக வழங்கப்படும். இங்கும் அவை கொடுக்கப்படுகிறது.

முன்னொருகாலத்தில், இந்த கோவிலானது, மண்மறைந்து போனது. எப்பொழுதோ மண்ணுக்குள்ளிருந்து சிலை கிடைக்கவே, அது பெருமாளா அல்லது சிவபெருமானா என்கிற ஐயப்பாடு வரவே, ஊரிலும், ஊரை சுற்றிய கிராமத்திலும் இதைப் பற்றி விசாரித்திருக்கின்றனர். அனைத்து கிராமத்தினரும், ஒரு வயதான, கண் பார்வை இழந்த, சலவைக்காரரை போய் விசாரிக்கும்படி கைகாட்டினார்.

பக்கத்து கிராமத்தில் இருந்த அவரை கண்டுபிடித்து, விவரத்தை கேட்க, அவரோ, தனக்கு முற்றிலும் கண் பார்வை போய்விட்டபடியால் சிலையை பார்த்துக் கூறுவது கடினம் என்றார். இருப்பினும், ஒரு விஷயம் செய்து கொண்டு வருவதாயின், பதில் கூறுகிறேனென்றார்.

அவரது சிறு வயது முதலே பெருமாள் கோவில் வஸ்திரங்களை, இலவச சேவையாக, துவைத்து கொடுத்து வந்திருந்தார். பெருமாளுக்கு உடுத்தியிருந்த வேஷ்டியின் நறுமணம், அவர் உணர்வில் அன்றும் தங்கியிருந்தது.

ஆதலால், பெருமாளுக்கு, அபிஷேகம் செய்து, ஒரு துண்டால் துவட்டி கொண்டு வரச்செய்து, துண்டை பிழிந்து, அந்த தீர்த்தத்தை அருந்தியபொழுது, "அடடா, இது பெருமாள் கோவில் விக்கிரகம் அல்லவா!" என்று உரைத்தார். அன்றுடன், அர்ச்சகருக்கும், ஊர் பெரியவர்களுக்கும் இருந்த சந்தேகம் தீர்ந்தது.

இது தனக்கு சேவை செய்த சலவைக்காரனை பெருமை படுத்துவதற்காக, பெருமாள் நடத்திய நாடகம்.

ஆனால், இன்றும், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்துகிற பொழுது, துண்டினால் துவட்டி, அதை பிழிந்து தீர்த்தமாக கொடுப்பார்கள். இது கிடைப்பதற்கு மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................தொடரும்!

6 comments:

  1. Om lobha mudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  2. பத்மநாபா புருஷோத்தமா வாசுதேவா வைகுண்டா மாதவா ஜனார்த்தனா ஸ்ரீ சக்கரபாணி ஸ்ரீ காளமேகப் பெருமாள் பாதமே சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமக

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ மாதாலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  4. நமச்சிவாய ஓம் நமச்சிவாய அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete