​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 17 September 2020

சித்தன் அருள் - 915 - ஆலயங்களும் விநோதமும் - கவி கங்காதீஸ்வரர் கோவில், சிவகங்கா, பெங்களூரு, கர்நாடக மாநிலம்!


கவி கங்காதீஸ்வரர் கோவில், சிவகங்கா, பெங்களூருவிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தூரத்திலும், தும்கூரிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

சிவகங்கா மலையையே சிவலிங்கமாக கருதி வழிபடுகின்றனர். இந்த மலையில் மூன்று இடங்களில் கோவில்கள் அமைந்துள்ளது.

1. அடிவாரத்திலிருந்து சற்று உயரத்தில் கங்காதீஸ்வரர் கோவில். குடவரை கோவில், சற்று பருமனான சிவலிங்கம். (மலையின் கீழ் பாகம்).

2. மலையில் 40 நிமிடம் ஏறிச்சென்றால் ஒரு சிவன் கோவில். மலை மேலிருந்து ஓடிவரும் கங்கை நீர் கோவிலுக்கு உள்ளே பாறையின் அடியில் ஓடி செல்லும். அங்கும் சிவபெருமான் லிங்க ரூபத்தில் அமர்ந்துள்ளார். (மலையின் நடு பாகம்).

3. மலையின் உச்சியில் அம்பாள், நந்திதேவர் இருவருக்கும் சன்னதி உள்ளது. (மலையின் உச்சி பாகம்).

சரி! இங்கு நமெக்கென என்ன உள்ளது?

குடவரை கோவிலில் உச்சிகால அபிஷேக, பூஜையின் பொழுது, அபிஷேகத்துக்கு நெய் வாங்கிக்கொடுத்தால், பூஜை முடிந்தபின் அதையே நமக்கு பிரசாதமாக தருவார்கள். அந்த நெய் அபிஷேகத்துக்குப்பின், வெண்ணையாக மாறியிருக்கும். நெய், வெண்ணையாகிற அதிசயத்தை இங்குதான் காண முடியும். அந்த பிரசாதம் எந்தவிதமான நோயையும் குணப்படுத்தும்!

மலையின் நடுவில் உள்ள கோவிலில், கங்கை நீர், பாறைக்கு அடிவழியாக ஓடுகிறது. சப்தம் கேட்கலாம். காண முடியாது. அந்த பாறையில் ஒரு ஓட்டை உள்ளது. அதன் வழியாக கையை உள்ளே நுழைத்தால், அப்படி செய்பவர் புண்ணியம் செய்தவராக இருந்தால், கங்கை தாவி அவர் கையில் ஏறிச் செல்வாள். நாம் அதை தீர்த்தமாக அருந்தலாம். எந்த உடல் பிரச்சினையும் உடனே தீரும். ஒருவர் தன்னைத்தானே நல்லவரா, புண்ணியம் செய்தவரா என சோதனை செய்து கொள்ள சிறந்த இடம்.

மேலும் இந்த மலையில் அகஸ்தியர், கண்வ முனி, கபிலர் போன்றவர்கள் உருவாக்கிய புண்ணிய தீர்த்தங்களும், உள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................தொடரும்!

4 comments:

  1. Aum Shree Agastheeshaya Namaha

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ மாதா லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  3. ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    அற்புதம் ஐயா

    படிக்கும் போதே பரவசம் ஐயா
    🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. சிவாய நம சிவாய நம சிவாய நமஹ சிவாய நம சிவாய நமஹ ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ

    ReplyDelete