​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 12 September 2020

சித்தன் அருள் - 910 - ஆலயங்களும் விநோதமும் - பாம்பாட்டி சித்தர் கோவில், புலியூர் விலக்கு, மதுரை!


இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!

என உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்பே (மூச்சு), சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார். உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார். அவர்தான் பாம்பாட்டி சித்தர்!

சங்கரன் கோவிலும், மருதமலையும் தானே இவர் சமாதி இடம், மதுரை எப்படி? என்ற கேள்வி எழலாம். அது ஒரு மிகப்பெரிய காதை. அதை வேறொரு தொகுப்பில் பார்க்கலாம்.

பாம்பாட்டி சித்தர் கோவில் புலியூர் விலக்கு, என்கிற கிராமத்தில், மதுரையில் அமைந்துள்ளது. மீனாக்ஷி அம்மையின் கோவில், கிழக்கு வாசலில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

பாம்பாட்டி சித்தர், தனக்கு இடப்பட்ட உத்தரவை நிறைவேற்ற, தன் உடலை ஓரிடத்தில் கிடத்தி விட்டு, பரகாய பிரவேசம் செய்த இடம். அவர் உடலை 18 தேவதைகள் காவல் காத்தது. அத்தனை தேவதைகளுக்கும் அங்கு சன்னதி உள்ளது. மிக மிக பசுமை நிறைந்த இடம்.

சரி! இங்கு நமக்கு என்ன உள்ளது?

இகபரத்தில் உள்ளவர்கள், இங்கு ஒரு பசுநெய் விளக்குபோட்டு, 108 முறை "ஓம் நமசிவாயா" என ஜெபித்து அதை காணிக்கையாக அவருக்கு கொடுத்து, தேவைகளை கூறினால், உடனேயே அந்த விஷயங்கள் கைவல்யமாவதை காணலாம். அத்தனை அற்புதமான ஸ்தலம்.

சித்த மார்க்கம், ஆன்மீக மார்கத்தில் உள்ளவர்கள், உயர்ந்த நிலைகளை கேட்டால், உபதேசமாக அவை அங்கு அருளப்படும்.

சிவலிங்கத்தை தலை கீழாக புரட்டிப்போட்டு, அதை ஒரு நாற்காலி போல் பாவித்து பாம்பாட்டி சித்தர் அமர்ந்து த்யானம் செய்த இடம். அதன் வழி, மிக உயர்ந்த தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய இடம். அந்த சிவலிங்கம் தற்போதும் அப்படியே தலைகீழாக, இன்றும், அங்கு உள்ளது என்பதுதான் ஆச்சரியம்! அதை காண்பதே இறை அருளை பெற்றுத்தரும்!

ஒரு முறை தரிசனம் செய்தாலே, அதர்வண வேத பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின், விலகிவிடும், அற்புத ஸ்தலம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் .................. தொடரும்!

6 comments:

  1. ஓம் ஸ்ரீ மாதாலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  2. Good Information.Namaskar.

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ஓம் பாம்பாட்டி சித்தர் துணை

    நன்றி ஐயா தங்களின் பதிவவுக்கு

    ReplyDelete
  5. நல்ல தகவல் நன்றி ஐயா ஓம் அகத்தியர் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete